tag:blogger.com,1999:blog-25413542023176517172024-02-22T11:31:49.748-08:00பேராசிரியர் க.கைலாசபதி-80பேராசிரியர் க.கைலாசபதி ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் மறுதலிக்க முடியாத ஒரு பிரதிமையாக இன்று வரை தொடர்கிறார்.தமிழ் ஆராய்ச்சி உலகும்,அறிவுலகும் இன்றுவரை கொண்டாடும் தமிழ் அறிஞர்.angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-58906020363595022842012-12-09T00:33:00.002-08:002012-12-09T00:33:46.478-08:00பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவணம்- 30ஆண்டு நினைவு தினம் இன்று!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<h1 style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 15px; line-height: 20px; margin: 0px 0px 5px; padding: 0px;">
பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவணம்- 30ஆண்டு நினைவு தினம் இன்று!</h1>
<span id="date" style="background-color: white; color: #666666; font-family: Arial, san-serif; font-size: 10px; line-height: 18px;">Published on December 6, 2012-1:56 pm · No Comments</span><span style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px;"></span><div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
<a href="http://www.thinakkathir.com/wp-content/uploads/2012/12/kalaisapathy.jpg" style="color: #191f75; text-decoration: initial;"><img alt="" class="alignleft size-thumbnail wp-image-44606" height="150" src="http://www.thinakkathir.com/wp-content/uploads/2012/12/kalaisapathy-150x150.jpg" style="display: inline; float: left; margin: 20px 20px 20px 0px; padding: 1px;" width="150" /></a>சோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய மனித குலத்தின் இலட்சியத்தை <span id="more-44605"></span>தமது எழுத்தாலும், நடைமுறையாலும் செயற்படுத்த முனைந்த கைலாசபதி பற்றி சிந்தித்த போது மேற்குறித்த வரிகள் நினைவில் நிலைத்து நிற்கின்றன.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
இருபதாம் நூற்றாண்டு பெற்றுத் தந்த தலை சிறந்த ஆய்வு அறிஞர்களில் கைலாசபதியும் ஒருவர். கால் நூற்றாண்டு தமிழியல் வரலாற்றில் தனித்துவமான ஆளுமைச் சுவடுகளைப் பதித்த அவர் பத்திரிகையாளர், எழுத்தாளர, விமர்சகர், விரிவுரையாளர் – பேராசிரியர், முதலாவது யாழ் வளாகத் தலைவர், கலைப்பீடாதிபதி என பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை தன்னகத்தே கொண்டிருந்தார். இத்தகைய சமூதாயம் சார்ந்த அவரது ஆளுமைகளே அவரை சிறந்ததொரு முன்மாதிரியாக கொள்கின்ற போக்கு வளர்வதற்கு காரணமாக அமைந்தது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கைலாசபதியின் எழுத்துக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன என்பது உண்மையே. ஆயினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்க பதிப்பொன்று இதுவரை வெளிவராமை சிந்தனைக்குரியதே. அவ்வாறே கடந்த காலங்களிலும் இன்றைய நாளிலும் கைலாசபதியின் பங்களிப்பு குறித்த ஆக்கபூர்வமான முழு நிறைவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் பிரசுரமாகியுள்ளன என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை முற்போக்கு மார்க்ஸிய முகாமைச்சார்ந்த அறிஞர்களாலேயே எழுதப்பட்டவை. இவ்வெழுத்து முயற்சிகள் பெரும்பாலும், இலக்கியகதியில் கைலாபதியின் எழுத்துக்கள்; செலுத்தும் முக்கியத்துவத்தையும் அவற்றின் தாக்கங்களையும் இவர்கள் செவ்வனே உணர்ந்து எழுதியுள்ளனர். குறுகிய வரம்புகளை கடந்து தேசிய சர்வதேசிய நோக்கில் அவ்வாய்வுகள் வெளிவந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
இலக்கிய வரலாற்றினை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஒரு உண்மை தலைத் தூக்குவதை காணலாம். அது தான் இலக்கியத்திற்கும் சமூதாயத்திற்கும் இடையிலான உறவுக் குறித்த பிரச்சனையாகும். இலக்கியத்தின் நித்தியத்துவம் குறித்து காலத்திற்கு காலம் வாதப் பிரதிவாதங்கள் தோன்றிய வண்ணமே உள்ளன.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கலை இலக்கியம் என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்தது எனவும் அது தெய்வ திருவுடைய கலைஞரால் படைக்கப்படுகின்றது எனவும் பிரமைகள் கற்பிக்கப்படுகின்றன. இப்பார்வையானது, ஒரு புறத்தில் பரந்துப்பட்ட வெகுஜனங்களையும் மறுப்புறத்தில் இலக்கிய கர்த்தாவையும் வைத்து நோக்குகின்ற வெகுசஜன விரோத பண்பாடாகும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
இன்னொரு புறத்தில் தேசிய, பிரதேச, இன, மொழி, சாதி, மத அடையாளங்களைக் கொண்டு மனிதகுல விடுதலைக்கு எதிராக பாவிக்கின்ற கபடத்தனங்கள் இலக்கியத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன. “கல்தோன்றி மன்தோன்றா காலத்திற்கு முன்னரே வாலோடு தோன்றியது முத்தத் தமிழ்” , “குறித்த இனம், சாதி பற்றிய படைப்புகளை அவர்களால் மட்டுமே உருவாக்க முடியும்” போன்ற வாதங்களை உற்று நோக்குகின்ற போது இவ்விலக்கிய போக்கின் தாக்கங்களைக் காணமுடிகின்றது. பராம்பரிய மரபுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை தமது வர்க்க நலன்களுக்கு ஏற்றவகையில் விளக்கமளிக்கின்ற பண்டிதர்கள் ஒரு புறத்தில் ஆர்பரித்து நிற்க,மறுப்புறத்தில் பாராம்பரிய மரபுகள் யாவும் ஆதிக்க சக்திகளின் நலனையே பிரதிப்பலிக்கின்றன என அவற்றை மறுத்து தூய பாட்டாளி வர்க்க கலைக்கோட்பாட்டை முன்வைக்கின்ற அதி தீவீரவாதிகள் இன்னொரு புறத்தில் ஆர்பரித்து நிற்பதே யதார்த்தமகிவிட்டதோர் சூழலைக் காணக் கூடியதாக உள்ளது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கலை இலக்கியம் என்பது சமூதாயத்திலிருந்து தோன்றி அது சமூதாயத்தை மேம்படுத்துகின்றது என்ற இலக்கிய போக்கானது மனிதனையும் அவனது செயற்பாடுகளையும் ஆக்கப்ப+ர்வமான திசையில் இட்டுச் செல்கின்றது. “மனிதர் உணவை மனிதர் பறிக்கும்” வழக்கத்தை மாற்றி புதிய சமூதாயத்தை நிர்மாணிக்கும் எண்ணுக்கனகற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பத்தி ஜீவிகள் இன்னும் இத்தகையோரின் போராட்டகளில் வலிமை மிக்க ஆயுதமாக கலையும் இலக்கியமும் விளங்குகின்றது என்பது மக்கள் இலக்கிய கர்த்தக்களின் நிலைப்பாடாகும்.அநத வகையில் இவ்வணியினர் பராம்பரிய மரபுகளை ஒடுக்கும் வர்க்க மரபுகள் ஒடுக்கப்படும் வர்க்க மரபுகள் என கண்டறிந்து அவற்றினை சமூகமாற்றப் போராட்டத்திற்கு ஏற்றவகையில் ஒழுங்கமைத்துக் கொள்ளும் அணுகு முறையை இவர்கள் முன்மொழிகின்றனர்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கைலாசபதி இந்த மூன்றாவது அணியினையே சார்ந்து நின்றார். அவர் வாழ்ந்த காலப்பகுதில், நமது கலாசாரம், பண்பாட்டு, பாரம்பரியம், இலக்கியத்தில் மக்கள் சார்பு பண்பு என்பன கடும் சோதனைக்குட்பட்டிருந்த காலமாகும். இத்தகைய காலச் சூழலில் தமது எழுத்தால் செயற்பாட்டால் மக்கள் சார்பு இலக்கிய கோட்பாட்டினை நிலை நாட்டியதில் கைலாசபதியின் பங்களிப்பினை முக்கியமானது. எனவே கைலாசபதியின் இலக்கிய, அரசியல் கொள்கை நடைமுறை, அதன் செல்வாக்கு என்பவற்றினை ஆராய்தல் வேண்டப்படுவதாகும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கைலாசபதி 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்ப+ரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் இளையத்தம்பி கனகசபாபதி. தாயாரின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. யாழ்பாண சமூகத்தை சேர்ந்த கைலாசபதியின் பெற்றோர்கள் தமது தொழில் நிர்ப்பந்தம் காரணமாக மலேசியாவில் சில காலம் வாழ்ந்தனர். இவரது தந்தை அங்கு படவரைஞராகப் பணிப்புரிந்தவர்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கைலாசபதி மலேசியாவில் விக்டோரியா இன்ஸ்டிடிய+ட்டில் தமது ஆரம்ப கல்வியை கற்றார். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் 13வது வயதில் இலங்கைக்கு திரும்பினார். பின், தமது இடைநிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்று, பட்டப் படிப்பினை இலங்கை பல்கலைகழகத்திலும் (பேராதனை வளாகம்) கற்றார்.பேராதனை பல்கலைக்கழகத்திலயே தமது முதுமாணி பட்டத்தினையும் பெறறார். பின்னர் கலாநிதி பட்டத்தினை இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம் பல்கலைகழகத்தில் முடித்தார்.<br />ஐகலாசபதிக்கு யாழ். இந்துக் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மார்க்சியத் தத்துவ அறிமுகம் கிடைத்தது. அத்தத்துவத்தின் ஒளியிலேயே அவர் தமக்கான சமூக நோக்கையும் உலக கண்ணோட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றார். “வளரும் பயிரை முளையிலேர தெரியும்” என்பதற்கமைய பள்ளி பருவம் முதலே தமக்கான பார்வையை தெளிவாகவும் தீட்சண்யத்துடனும் வளத்துக் கொள்கின்றார். இது குறித்து கைலாசபதிக்கு மார்க்சிய தத்துவார்த்த பார்வையை வளம்படுத்தியவர்களில் ஒருவரான மு. கார்த்திகேசனின்; பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத்தக்கது.“எனது வகுப்பு மாணவர்களில் பலர் பரலோகம் செல்வதற்காகச் சூளுவான வழியைக் கண்டுப் பிடித்தார்கள். அவர்களிடம் தேவாரம், திருவாசகம், பைபில், குர்ஆன் இருக்கும். அவர்களுள் வித்தியாசமாக ஒரு மாணவன் இருந்தான். அவன் சமூக விஞ்ஞான நூல்களை வைத்துக் கொண்டு ப+லோகத்தை பார்க்கத் தலைப்பட்டான். அவர்களோ வானம் பார்த்த பரலோக வாதியானார்கள். இவனோ பரலோகம் பார்த்த சமூகவிஞ்ஞானியானான். அந்தச் சுட்டி மாணவன் தான் கைலாசபதி.”<br />கைலாசபதி தமது பாடசாலை பருவத்திலே சிறுகதை, கவிதை, நாடகம், இசை என பல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்ததுடன் பல ஆக்கங்ககளையும் எழுதியுள்ளார். அக்காலத்தில் தமிழ்மணி, இந்துசாதனம், சுரபி, யுகம், வீரகேசரி முதலிய இதழ்களிலும் அவரது ஆக்கங்கள்; பிரசுரமாகியுள்ளன. இவர் எழுதிய நாடகங்கள் பல இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இவ்வகையில் கைலாசபதியின் பல பரிசோசனை முயற்சிகளினூடாகவே தமக்கான விமரசனத் துறையை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கைலாசபதி பல்கலைகழகத்தில் மாணவராக கற்கைநெறியை தொடர்ந்திருந்த காலத்தில் பேராசிரியர்கள் க.கணபதிபிள்ளை,வீ.செல்வநாயகம், சு.வித்தியாணந்தன் முதலாலோனரிடம் கற்க கூடியதும் அவர்களுடன் சேர்ந்து சமூக செற்யாடுகளை முன்னெடுக்க கூடியதுமான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றார்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
1957 ஆம் ஆண்டு தமிழை சிறப்பு பாடமாக கொண்டு பயின்ற கைலாசபதி முதலாம் வகுப்பில் சித்தியடைந்தார். இந்த தகைமையை பயன்படுத்தி அவர் வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றோ அல்லது வேறு நிருவாக துறைசார்ந்த பதவிகளிலோ பிரகாசித்திருக்க முடியும். கைலாசபதி அவ்வாறு செய்யவில்லை. மறாக தனது துறைக்கான களமாக பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.; தினகரன் பத்திரிகையில் முதலில் உதவி ஆசிரியராகவும் பின்னர், மிக குறுகிய காலத்திலேயே பிரதம ஆசிரியியராகவும் நியமிக்கப்பட்டார்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
1961 இல் கைலாசபதி பத்திரிக்கை துறையிலிருந்து விலகி பேராதனைப் பல்கலைகழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றார். இந்த சூழலை கைலாசபதி தமது தமிழியல் ஆய்வுத் துறை விருத்திக்கு சாதகமானதோர் களமாக பயன்படுத்திக்; கொண்டார்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
1963 ஆம் ஆண்டளவில் தமது கலாநிதி பட்டபடிப்பிற்காக புலமைப் பரிசில் பெற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கழகத்திற்கு சென்றார். இக்காலத்தில் அவரது மார்க்சிய பார்வையை வளம்படுத்தியதில் பேராசிரியர் ஜார்ஜ் தொம்சனுக்கு முக்கியமானவர்.இவரது மேற்பார்வையின் கீழ் Tamil Heroic Poetry என்ற ஆய்வேட்டினை சமர்பித்தார். தக்க ஆதாரங்களுடனும் சமூதாய கண்ணோட்டத்துடனும் சங்க செய்யுள்களை கிரேக்க வாய்மொழி இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி, அப்பாடல்களின் பரவுத் தன்மை, மக்களின் எழுத்தறிவு, அவற்றின் உள்ளடக்கம், வடிவம் என்பனவற்றினை ஆதாரமாகக் கொண்டு சங்ககால செய்யுள்களை வாய்மொழி இலக்கியம் என நிறுவினார். இவ்வாய்வு முயற்சி, தமிழில் சங்க இலக்கியம் குறித்து புதிய பார்வைகளும் ஆய்வுகளும் தோன்ற ஆதர்சனமாக அமைந்தது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
இதே காலப்பகுதியில் (1964) தனது மாமன் மகளான சர்வமங்களத்தை திருமணம் செய்துக் கொள்கின்றார். இருவருக்கும் சுபமங்களா (1968), பவித்ரா(1968) ஆகிய இரு புதல்விகள் உள்ளனர். கைலாசபதியின் ஆய்வு சார்ந்த பணிகளுக்கு திருமதி சர்வமங்களத்தின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. iகாசபதியின் ஆய்வுப்பணிகளுக்கு சர்வமங்களம் எத்தகைய பங்களிப்பினை நல்கியுள்ளார் என்பதை அவரது வார்த்தைகளில் காண்பது பயன்மிக்கது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
“ கைலாசுக்கு சோர்வு என்பதே கிடையாது. புத்தகம் படிப்பார். நண்பர்களுடன் இலக்கிய விவாதம் செய்வார். இரவிரவாக எழுதுவார். ஒரு மணி இரண்டு மணிக்கு முன்னர் அவர் படுத்ததில்லை. நல்ல ஒரு மாணவரைப் போல இடைவிடாது உழைத்தார். அடுத்த நாள் காலை ஒரு பரீட்சை எழுத வேண்டும் என்பதுபோலவே நடந்துக்; கொள்வார். அவர் இரவிரவாக எழுதியதை அது ஆங்கிலமாக இருந்தால் நான் தட்டச்சு செய்து வைப்பேன். அது தமிழ் என்றால் அதை நான் நல்ல எழுத்தில் திருப்பி எழுத வேண்டும். அத்துடன் வேலை முடியாது. திருப்பி படிக்கும் போது புதுபுது எண்ணங்கள் முளைக்கும். என்னிடம் sorry sorry என்று மன்னிப்புக்கேட்டபடி நட்சத்திரகுறி போட்டு வேறு ஒற்றையில் A,B,C என்று எழுதி வைப்பார். நான் அவற்றையெல்லாம் கட்டுரையில் சேர்த்து திரும்பவும் எழுத வேண்டும். ஆரம்பத்தில் ஆறு பக்க கட்டுரையாக இருந்தது முப்பது பக்கமாக மாறிவிடும்.”</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கைலாசபதியின் வீட்டில் எப்போதும் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கூடுவது வழக்கம். அவர்களுக்கான விருந்துபசாரங்களை செய்வதிலும் சர்வமங்களம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார் என்பதனையும் பலர் பதிவு செய்துள்ளனர்;. அத்துடன் கைலாசபதி தமது இறுதி காலத்தி;ல் பாரதி பற்றி நூல் எழுதும் முஙயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார். அவ்வாறே அவரது சீன பயணத்தின் பின்னர் நீர்வை பொன்னயன், இ.முருகையன், எம். ஏ நுஃமான் ஆகியோருடன் இணைந்து லுசுன் பற்றி நூதெலழுதும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றதுபல்கலைகழக சார்ந்த பணிகளுடன் மட்டும் கைலாசபதி தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் பல்கலைகழகத்திற்கு அப்பாலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணைக்குழு (1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழு> இலங்கை பல்கலைகழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம்(1971-74), இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு(1973) என பல பணிகளை மேற் கொண்டுள்ளார்.<br />1974 இல் யாழ்.பல்கலைகழக வளாகம் ஸ்தாபிக்கப்பட்ட போது அதன் முதலாவது வளாகத் தலைவராக பேராசிரியராக நியமிக்கப்பட்டவர் கைலாசபதி. யாழ். பல்கழகம் உருவாக்குவதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாரோ அவ்வாறே அது உருவாகிய பின்னர் அதன் இலக்கினை அடைவதற்காகவும் தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டார்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
1977 இல் கைலாசபதிக்கு தமது வளாகத் தலைவருக்கான பதவி காலம் முடிந்ததுடன் அவர் அதே பல்கலைகழகத்தில் பேராசிரியராக கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தோல்வியடைந்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது. இக்காலத்தில் கைலாசபதி தாங்வென்னா துன்பங்களை அனுபவித்துள்ளதை திருமதி. சர்வமங்களம், செ. கணேசலிங்கன் முதலானோரின் குறிப்புகளில் காணக் கூடியதாக உள்ளது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
மேலும், கைலாசபதி இந்திய பல்கலைகழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் மற்றும் அயோவாப்> கலிபோரினியப் பல்கலைகழகளிலும் வருகை தரு அதிதி பேராசிரராக கடமையாற்றியுள்ளார். இத்தகைய ஆளுமை உள்ளீடுகளை கொண்டிருந்த கைலாசபதி 1982 இல் டிசம்பர் மாதம் ஆறாம் திகதி தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். இவரது இழப்பு இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கைலாசபதி பாடசாலை மாணவராக இருக்கும் காலம் முதலே பல வகை நூல்களை வாசிக்க தலைப்பட்டிருந்தார். அக் காலத்தில் பொதுமக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தாரின் வெளியீடுகளான ‘கம்பரசம்’, ‘ஆரிய மாயை’, ‘தீ பரவட்டும்’, ‘நாடும் ஏடும்’, ‘நிலையும் நினைப்பும’;, ‘பரமசிவனுக்கு பகிரங்க கடிதம்’, ‘பரந்தாமனுக்கு பகிர்ந்த கடிதம்’ முதலிய நூல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டிருந்தார். அவ்வாறே, பாரதிதாசன் , புதுமைபித்தன், ரகுநாதன், மு.வரதராஜன் சுத்தானந்த பாரதி, ச.து.சு. யோகியார். முதலியோரின் ஆக்கங்களை வாசிப்பதிலும் கூடிய ஆர்வம் காட்டி வந்திருப்பதை கவிஞர் இ.முருகையனின் நினைவுக் குறிப்புகளில் காண முடிகின்றது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
மேலும் கைலாசதிக்கு பாடசாலை மாணவராக இருந்த காலத்தில் தமிழில் எவ்வாறு தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டாரோ அவ்வாறே ஆங்கில மொழியிலும் புலமை மிக்கவறாக காணப்பட்டார். சில ஆங்கில இலக்கிய விமர்கர்களின் நூல்களை வாசிப்பதில் அவர் தீவிர கவனமெடுத்துள்ளார் என்பதை அவரது எழுத்துக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக எலியற், எஃப்.ஆர்.லீவிஸ், சிசில் டேய் லூயி, ஸ்ற்றீஃபன், ஸ்பென்டர், முதலிய விமர்சகர்களும் டி.எச். லோறன்ஸ், பேணாட் ஷோ, ஜேம்ஸ்ஜோஸ், வேஜினியா வ+ல்ஃப், ஷேக்ஸ்பியர், மாக்ஸிம் கார்க்கி மாயாகோல்ஸ்கி, ஏஸ்ட்ராவ்கி, பெட்டோஃபி, லூசுன், பெர்ட்டோல் பிரெஸ்ட், நெருடா முதலிய படைப்பாளிகளும் கைலாசபதியினால் வாசிக்கப்பட்டவர்கள் என்பதனை அவரது எழுத்துக்களின் ஊடாக அறிய முடிகின்றது. இவ்வாறு வாசிப்பதில் மட்டுமன்று அதனை நண்பர்கள் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடுவதிலும்; கைலாசபதி ஆர்வம் காட்டியிருந்தார.; நண்பர்களுக்கு எழுதுகின்ற கடிதங்கள், ஒருவகையில் அவை கூட ஒரு சமூதாயம் சார்ந்ததாக இலக்கியம் குறித்த உரையாடலாகவே அமைந்துள்ளது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
1953 இல் பதுளையை சேர்ந்த தனது கல்லூரி நண்பனுக்கு எழுதிய கடிதம் பொறுத்து என். கே.ரகுநாதன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
“சொந்தவிவகாரங்கள் ஏதுமில்லை. படித்த இலக்கிய புத்தகங்களிலிருந்து குறிப்புகள், விஷேட ரசனைகள், பல புத்தகங்களைப் பற்றி அறிமுகக் குறிப்புகள்- ஆங்கில நூல்கள் உட்பட சிங்காரம் சொல்வார்: நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, விரைவில் முடித்துக் கொண்டு ஏதாவதொரு குறைப்புத்தகத்தைப் படிக்க ஓடி விடுவாராம். கடிதங்களிலும் அந்தப் புத்தகம் கிடைத்துள்ளது: இந்தப் புத்தகம் வாங்க வேண்டும்: படித்த பின் அதையிட்டு எழுதுகின்றேன்- இப்படியெல்லாம், பிற்கால இலக்கிய ஆதர்சனங்களுக்கு அப்போது அடிகோலினார் போல் தெரிகிறது”</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
இவ்வாறு பல்வேறு நூல்களை கற்று தேர்ந்த கைலாசபதி வாழ்விலிருந்து அந்நியப்படவிடாமலும் தொலைத்தூர தீவுக்குள் ஒதுங்கி விடாமலும் தன் கரித்திர தூரிகையை நகர்த்தி சென்றுள்ளமைஅவரது சிந்தனைத் தெரிவினை காட்டுகின்றது. தான் பெற்ற அறிவை மாறி வருகின்ற சூலுக்கு ஏற்ப, தமிழ் மரபுக்கு ஏற்ப பொருத்தி பார்த்து எமது சூழலுக்கான விமர்சப் பார்வையொன்றை உருவாக்கி, புத்தகவாத சிந்தனைக்கப்பால் நடைமுறைக்கான செயற்திறனை வலியுறுத்துகின்ற பண்பை அவரது எழுத்துக்களில் காணக் கூடியதாக உள்ளது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
கைலாசபதி பின்னாட்களில் ஆற்றல் வாய்ந்த விமர்சராக ஆய்வளராக பிரபல்யம் அடைந்ததனால் அவரை விமர்சகராக ஆய்வாளராக பார்க்கின்ற நிலையே உள்ளது. அப்பார்வை ஒரு விதத்தில் சரியானதும் கூட. அதே சமயம் அவர் தமது ஆரம்ப காலங்களில் கவிதைகள், சிறுகதைகள், சிலவற்றினையும் எழுதியுள்ளார். சுமார். 40 நாடகங்கள் எழுதியுள்ளதாக அறிய முடிகின்றது. அவரது பெரும்பாலான நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. நத்தார் பெருநாளையொட்டி ‘கல்லறைக்கு எதிரில்’ என ஒரு நாடகம் ஆக்கினார். அவ்வாறே புதுமை பித்தனின் ‘கபாடபுரம்’ கைலாசபதியினால் நாடகமாக்கப்பட்டுள்ளன. ‘குரல்கள’; என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார். என கவிஞர் இ.முருகையர் குறிப்பிடுகின்றார்.<br />இவ்வாறே அவர் நாவல் எழுதும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார். அக்காலத்தில் பொருளாதார நோக்கத்திற்காக யாழ்ப்பாணத்தவர் பலர் மலேசியாவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் அவர்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள் குறித்து நாவல் எழுதும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்ததாக அறிய முடிகின்றது. அத்துடன் பாரதி பற்றியும் தனிநூல் எழுதும் முயற்சிலும் ஈடுபட்டிருந்ததை கைலாசபதி பற்றி வெளிவந்த குறிப்புகளில் காணமுடிகின்றது.பேராசிரியரின் வெளிவந்த நூல்கள்;:<br />
(முதற் பதிப்பு வெளிவந்த ஆண்டின் அடிப்படையில்)<br />
தமிழில்<br />
இரு மகாகவிகள் (1962)<br />பண்டைய தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966)<br />தமிழ் நாவல் இலக்கியம்(1968)<br />ஒப்பியல் இலக்கியம்(1969)<br />அடியும் முடியும் (1970)<br />கவிதை நயம் (இ.முருகையனுடன் இணைந்து எழுதியது),(1970)<br />இலக்கியமும் திறனாய்வும் (1972)<br />பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் (1973)<br />மக்கள் சீனம் காட்சியும் கருத்தும்( திருமதி சர்வமங்களம் கைலாசபதியுடன் இணைந்து எழுதியது), (1979)<br />சமூகவியலும் இலக்கியமும் (1979)<br />திறனாய்வுப் பிரச்சனைகள் (1980)<br />நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்(1980)<br />இலக்கியச் சிந்தனைகள் (1983)<br />பாரதி ஆய்வுகள்(1984)<br />ஈழத்து இலக்கிய முன்னோடிகள்(1986)<br />சர்வதேச அரசியல் நிகழ்வுகள் 1979-1982 (1992)<br />முன்னுரைகள் (2004)<br />நாவலர் பற்றி கைலாசபதி (2005)<br />
ஆங்கிலத்தில்:<br />
Tamil Heroic Poetry (1968)<br />The Relation of Tamil and Western Literature ( 1984)<br />On Art and Literature (1986)<br />On Bharathi (1987)<br />
உலக வரலாற்றில் மனித சமூகங்களின் வளர்ச்சியோடும் சமூக சிந்தனைகளின் உயர்ந்த பரிமாணமாகவும் மாக்சியம் 19ஆம் நூற்றாண்டுகளிலே ஐரோப்பியாவில் பிறப்பெடுத்தது. இத்தத்துவமானது மனித வாழ்வு, அவற்றுக்கிடையிலான உறவு குறித்து விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை முன்வைத்து. ~~அது முழுமையானதாகவும் ஒருமையானதாகவும் உள்ளது. மூடநம்பிக்கை, பிற்போக்குவாதம், முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்கிச் செல்லாத ஒரு இணைக்கப்பட்ட உலக கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்கு வழங்குகின்றது. அந்தவகையில் அத்துவமானது சமூக வளர்ச்சியையும் அதன் பக்க விளைவான சமூக இயக்கங்கள் குறித்தும் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நோக்கில் ஆய்வுக்குட்படுத்தியதுடன் கருத்து முதல்வாத சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி விஞ்ஞான பூர்வமான சிந்தனையை மனித குலத்திற்கு வழங்கியது. அதன் பின்னணியில் உழைக்கும் மக்களினதும் அவர் தம் இயக்கங்களினதும் விடுதலை மார்க்கமாக வர்க்கப் போராட்ட திசைவழியை காட்டி நின்றது. அந்த வகையில் மார்க்சிய சித்தாந்தமானது உண்மையானதாகவும் இருப்பதனால் அது மிகுந்த வலிமை கொண்ட கோட்பாடாகவும் அமைந்து காணப்படுகிறது. உலகில் இதுவரை கால தத்துவங்கள் யாவும் உலகை பகுதியாகவோ முழுமையாகவோ விபரித்து நிற்க, மார்சியம் தான் அதனை மாற்றியமைப்பதற்கான உந்து சக்தியை மனித குலத்திற்கு வழங்கியது. கைலாசபதி மார்க்சியத்தையே தமது உலநோக்காக கொண்டு தமது ஆய்வு முயற்சிகளையும் சமூக செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தார். இந்தப் பின்னணியி;ல் அவரது எழுத்துச்துறைச்சார்ந்த பங்களிப்புகளை பின்வருமாறு வகுத்துக் கூறலாம்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
1. இலக்கியத்திற்கும் கமூகத்திறிகும் இடையிலான உறவை மார்க்சிய உலக கணணோட்டத்தின் துணைக்கொண்டு அறிந்ததுடன், தமது இலக்கிய ஆய்விற்கு கமூகவியல் அணுகுமுறையையே ஆதாரமாக கொண்டிருந்தார். ஓவ்வொரு காலத்திலும் நிலவுகின்ற சமூதாய அமைப்பின் தன்னையை பொறுத்தே அச்சமூகத்தில் நிலவுகின்ற கலை இலக்கியம், பண்பாடு, மதம், ஆகியனவும் அமைந்துக் காணப்படும். சமூகமைப்பின் மாற்றத்திற்கு ஏற்ப இவவம்சங்களும் மாறும் என்பதனை தமிழ் இலக்கியம் பொறுத்த ஆய்வில் கோட்பாட்டு அடிப்படையி;;ல் வெளிப்படுத்திய முதல் தமிழ் அறிஞர் கைலாசபதி ஆவார். பழந்தமிழ் இலக்கிய பரிச்சியமும் நவீன இலக்கிய நோக்கும கொண்டிருந்த கைலாசபதி, தமிழாராய்ச்சி என்பது பழைய இலக்கண இலக்கியங்களை கற்று பழமையை பேனுவது, சமூகத்தின் எண்ணற்ற ஒடுக்குமுறைகளை மூடி மறைத்தல் எனும் புன்iமைகளைத் தாண்டி தமிழ் இலக்கியத்தினையும் அதன் மாற்றத்தையும் வரலாற்று அடிப்படையிலும் யாவற்றுக்கும் மேலாக மாற்றத்தின் இயக்கவியலை பொருள் முதல்வாத சிந்தனையின் அடிப்படையிலும் கிரகித்துக் கொண்டமையுமே அது சார்ந் ஆய்வுகளை வெளிக் கொணர்ந்தமையுமே கைலாசபதியின்; முக்கியமான பங்களிப்பாகும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
2. இலக்கிய வரலாற்றை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மையை அறிந்துக் கொள்ள முடிகின்றது.தூய அழகியல்வாதிகள் இலக்கியத்தில் தூய்மை, அழகியல் என்ற பிரமாஸ்த்திதை;தை உபயோகித்து மக்கள் இலக்கிய படைப்புகளையும் இலக்கிய கர்த்தாக்களையும் தாக்க முனைவது தற்செயல் நிகழ்ச்சியல்ல. இவர்களது கூப்பாடுகளையும் கண்டனங்களையும் சற்று கூர்ந்து நோக்குகின்ற போது சமூகத்தில் வாய்ப்பும் வசதியும் பெற்ற மாந்தர்களின் குரலாகவே இவை அமைந்துள்ளதைக் காணலாம். மக்கள் இலக்கியம் என்றுமே அழகியலை நிராகரிக்கவில்லை. கவிதைப் பொறுத்து குறிப்பிடுகின்ற போது உள்ளடக்கம் ஒரு மனிதனின் உயிர் என்றால் உருவகம் அதன் உடல் என்பார் கைலாசபதி. ஒரு தூய அழகியல்வாதியின் கலைப் பற்றிய பார்வையும் மக்கள் இலக்கியகர்த்தாவி;ன் அழகியல் பற்றிய பார்வையும் அடிப்படையில் முரண்படானதாகும் என்பதை எடுத்துக் காட்டிய கைலாசபதி அவை எவ்வகையில் தமது வர்க்க நலன்களை பிரதிப்பலித்து நிற்கின்றது என்பதனையும் கோட்பாட்டு அடிப்படையில் நிறுவினார். காலம் காலமாக நீண்டுள்ள இந்த விவாதத்தில் மக்கள் இலக்கியத்தின் அழகியல் சார்பாக அவர் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவையாகும்.3. கலை இலக்கியத்தை வெறுமனே தனித்த துறையாக நோக்காது அதனை ஏனைய துறைகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை கைலாசபதி வலியுறுத்தினார்;. இலக்கியத்தின் உலக பொதுமையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்த கைலாசபதி இலக்கியமும் அதன் விளைநிலமாகிய சமூதாயமும் உலக பொதுவான நியதிக்குள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஒப்பியல் ஆய்வின் அவசியத்தை விலியுறுத்தினார். பல தல இலக்கியங்களிலிருந்தும் தேசிய இலக்கியங்களிலிருந்தும் உலக இலக்கியம் உருவாகின்றது என்ற மார்க்சின் கோட்பாட்டை ஆதாரமாக கொண்டு தமிழியல் அத்தகைய சாத்தியப்பாடுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதை ஆதாரங்களுடடன் எடுத்துக் காட்டுகின்றார். ஒப்பியல் ஆய்வின் மூலமே குறிப்பிட்ட இலக்கியத்தின் தனித்துவத்தினையும் அதன் பொதுமையையும் எடுத்துக் காட்ட முடியும் என்பதை சிறப்பாகவே கைலாசபதி உணர்ந்திருந்தார். தமிழில் ஒப்பியல் நோக்கு வளர்வதற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பேராசிரியர்கள் சுந்தரம்பிள்ளை, வையாபுரிபிள்ளை என்றால் அதன் பின் இத்துறையில் சாதனை செய்தவர் கைலாசதியாவார் எனக் கூறின் தவறாகாது. பொதுவாகவே கைலாசபதியின்; ஆய்வுகளில் ஒப்பியல் ஆய்வு என்பது முனைப்புற்றுயிருப்பினும் அவரது ‘இரு மகாகவிகள்’ , ‘ஒப்பியல் இலக்கியம்’ “Tamil Heroic Poetry ”ஆகிய நூல்களே அவரது ஒப்பியல் இலக்கிய ஆய்வுக்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். பொதுவாகவே கைலாசபதியின ஆய்வுகள் தமிழ் சமூதாயத்தின் வாழ்க்கை கூறுகளில் அரசியல், பொருளியல், மெய்யியல், சமூகவியல், அழகியல், அறிவியல் முதலிய துறைகளை தமதாக்கி அதன் ஒளியிலேயே தமிழ் இலக்கியம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் காண்கின்றோம். அந்தவகையில் தமிழிலே ஒப்பியல் இலக்கிய ஆய்வினை மார்சிய நோக்கில் ஆய்வு செய்த தமிழ் அறிஞர்களில் சைலாசபதி முன்மையானவர் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
4. தேசியம் என்ற சிந்தனையானது பல தளங்களில் இயங்கி வந்துள்ளதை அவதானிக்கலாம். தேசியம் மனித குலத்தின் நாகரிகமான பக்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற போது அதனை பிற்போக்கான தேசியம் எனவும் அது வளர்ச்சிகச்காகவும் சமத்துவ சமூகவமைப்பிற்காகவும் செயற்படுகின்ற போது முற்போக்கான தேசியம் எனவும் வறையரை செய்கின்றோம். அந்தவயையில் ஐம்பதுகளில் இலங்கையில் தோன்றிய தேசியமானது நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல், பொருளாதார, கலாசாரப் பண்பாட்டு பாராம்பரியம் என்ற உணர்வை தோற்றுவித்திருந்தது. இதன் பின்னணியில் இலங்கையில் மண்வாசைன மிக்கப் படைப்புகளும் சமகா பிரச்சனைகளும் இலக்கியத்தின் பாடுப்பொளுளாகின. இந்த சூழலில் தமிழில் பரந்தப்பட்ட மக்கள் இலக்கியத்தை புறக்கணித்து நின்ற மரபுவாதிகளுக்கு எதிராகவும் அதேசமயம் இலங்கையை இந்திய வணிக இலக்கியங்களுக்கான சந்தையாக பாவித்த கபடதனங்களுக்கு எதிராகவும் உறுதியான தத்தவார்த்த போராட்டத்தை நடாத்த வேண்டிய தேவை இருந்தது. இத் தத்துவார்த்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் கைலாசபதி முதன்மையானவர். இதன் பின்னணி;யில் கைலாசபதி எழுதிய ‘ஈழத்து இலக்கிய முன்னோடிகள்’ ‘நாவலர் பற்றி கைலாசபதி’ ஆகிய நூல்களும் தேசிய இலக்கியம் குறித்து எழுதிய கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும். அவ்வாறே தேசிய இலக்கியம் தொடர்பில் முக்கிய கவனமெடுத்த கைலாசபதி அதனை சர்வதேச பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்துனே இணைத்துப் பார்த்தார். இதன் காரணமாகவே பாரதியை தேசிய இலக்கியத்தின் முன்னோடியாக அவரால் காணமுடிந்தது. ‘ஓரே உலக’ இலக்கியத்திற்கு தேசிய இலக்கியம் எத்தகைய பங்களிப்புகளை வழங்க முடியும் என்பதனையும் கைலாசபதியால்; எடுத்துக் காட்ட முடிந்தது.<br />கலை இலக்கியம் அரசியல் வரலாற்றுக் காலக்கட்டங்களில் மனிகுலத்தின் வளர்ச்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் செயற்பட்ட சந்தர்ப்ங்களை ஆய்வு அடிப்படையில் கைலாசபதியின்; எழுத்துக்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. சமூதாய அமைப்பின் மேட்கட்டுமானத்தில் ஒன்றாக அமையும் இலக்கியம் சமூதாயத்தை விபரிப்பதாக மட்டுமன்று அது சமூதாயத்தை மாற்றும் கருவியாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை ஊடாக தமது எழுத்து சார்ந்த பங்களிப்பினை வழங்கியவர் கைலாசபதி. அவரது எழுத்துக்களில் சிலாகித்து பேசப்படுகின்ற ஓர் அம்சம் தான் அவரது எழுத்து நடையாகும். தமது கருத்துக்களை தெளிவாக முன்வைக்கின்ற அதேசமயம் வாசகனை ஈர்த்தெடுக்கும் ஆற்றலும் கைலாசபதியின் எழுத்து நடைக்கு உண்டு. எண்ணுகணக்கற்ற சொற்களை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவ்வாறே அவரது எழுத்துக்களில் காணப்படும் பிறிதொரு சிறப்பு அம்சம், அவர் எடுத்தாள்கின்ற மேற்கோள்களாகும். ஆய்வு நெறி ஒழுங்கு என்பது வரையறுக்கப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்ற வரைறையை கொண்டிருந்த போதினும் அதற்கு அப்பால் விரிவான தகவல்கள் வழங்குவது கைலாசபதியன் நூல்களில் பொதுவாக காணப்படுகின்ற பண்பாகும். கைலாசபதியின்; நூல்களை வாசிக்கின்ற போது அவை தொடர்பான முழு நிறைவான தேடலை மேற்கொள்வதற்கு ஆதர்சனமாக அமைந்திருக்கும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்;வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார். கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வௌ;வேறுவகையில் கைலாசபதி உதவியுள்ளார். இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. “பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே” என்ற வ. ஐ. ச. ஜெயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்ப+ர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. அதனை மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்கள் புரிந்துக் கொள்ளும் விதமும் தமதாக்கி கொள்ளும் விதமும் தனித்தன்னை வாய்ந்ததாக இருக்கும், இருக்கவேண்டும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, san-serif; font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
<strong><span style="font-size: small;">பாரதி தீட்சண்யா</span></strong></div>
</div>
angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-34214920872161654952012-12-06T09:50:00.001-08:002012-12-06T09:50:44.469-08:00 கைலாசபதி அவர்களின் முப்பதாவது நினைவு தினம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="line-height: 20px; margin-bottom: 19px;">
<b><span style="font-family: Latha, sans-serif; font-size: 14px;">பேராசிரியர் கைலாசபதியின் அரசியல் நோக்கும் பங்களிப்பும்: சில குறிப்புகள்</span></b></div>
<div style="line-height: 20px; margin-bottom: 19px; text-align: right;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 12px;">- லெனின் மதிவானம்</span></div>
<div style="line-height: 20px; margin-bottom: 19px;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 12px;">இன்று கைலாசபதி அவர்களின் முப்பதாவது நினைவு தினம்</span></div>
<div style="line-height: 20px; margin-bottom: 19px; text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 12px;"><img align="left" alt="kailsapathy" border="0" height="266" hspace="3" id="Bild2319" src="http://www.thenee.com/assets/images/kailsapathy.png" title="kailsapathy" vspace="4" width="258" />கைலாசபதி குறித்த ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் காணலாம். ஆயினும் அன்னாரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான தேசிய, சர்வதேசிய அரசியல் குறித்த அவரது பார்வையும்; அவரது பங்களிப்புக் குறித்த முழுநிறைவான ஆய்வுக்கட்டுரைகள் வெளிவராமை துரதிஸ்டமான ஒன்றே.</span></div>
<div style="line-height: 20px; margin-bottom: 19px; text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 12px;">அமரர் சுபைர் இளங்கீரன்; கைலாசபதியின் அரசியல் என்ற கட்டுரையை எழுதியுள்ளார் என்ற போதிலும் அது ஒரு அறிமுக கட்டுரையாகவே அமைந்திருந்தது என்ற வகையில் இவ்விடயம் குறித்து எழுத வேண்டியது சமகால தேவையாகும். கைலாசபதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கலை இலக்கிய பேரவை நான்கு நூல்களை வெளியிட்டது. (பன்முக ஆய்வில் கைலாசபதி - கட்டுரை தொகுதி, கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் - சி.கா செந்திவேல், பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துக்களும் - சுபைர் இளங்கீரன், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) - க.கைலாசபதி) இவற்றுள் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) என்ற நூல் கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வையை அறிந்து கொள்வதற்கு துணையாக அமைந்துள்ளது. இவவாறன சூழலில் பேராசிரியரின் அரசியல் பங்களிப்புக் குறித்து போதுமா அளவு ஆய்வுகள் வெளிவந்ததாக தெரியவில்லை. அவை தொடர்பான ஆய்வுகள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும்.<br /><br />பேராசிரியர் பகிரங்கமான அரசியல்வாதியாகவோ அல்லது கட்சி உறுப்பினராகவோ காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஆரம்ப காலங்களில் கம்ய+னிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதனை சுபைர் இளங்கீரன் நினைவுக் கூறுவார். மறுபறத்தில் பேராசிரியரின் செயற்பாடுகளும் சிந்தனைகளும் இந்துக் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்து இறக்கும் வரையில் நேர்மை மிக்க பொதுவுடமைவாதியாக இருந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.<br /><br />பேராசிரியரின் பத்தி எழுத்துக்களும் ஆய்வுகளும் எப்போதுமே உழைக்கும் மக்களின் தன்மானம் கலந்த மூச்சுக் காற்றினை பிரதிப்பலிப்பதாகவே அமைந்திருக்கின்றன. கோடிக்கனக்கான மக்களின் விடுதலைக்கான தத்துவத்தை தமது சுயநலன்களுக்காக கைவிட்டவர்கள்;;;;- அவ்வாறு வி;டப்பட்டபின்னர் சமூகத்தில் தமக்கான அங்கீகாரமும் தேவையும் ஏற்படுகின்ற போது அவர்கள் தமது தவறை தமக்கேற்றவகையிலான சித்தாந்தமாக மாற்றி நியாயப்படுத்துகின்றனர். இந்தப் பின்புலத்தில், சுயநலத்தினை ஆதாரமாகக் கொண்ட பொருளியல் வேட்கை, மனித குலத்தை கூறுபோடும் சாதியமைப்பு, பென்னை இழிவு செய்யும் பாதக கொடுமைகள், கலாசார வக்கிரங்கள் இவற்றுக் எதிரான போராட்டங்களுக்கான பலமான கோட்பாட்டுத் தத்துவத்தை உருவாக்குவதில் பேராசிரியரின் பணி விலைமதிப்பற்றது.<br /><br />மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுப்பட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு தொழிலாளர்கள்-விவசாயிகள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும்.</span></div>
<div style="line-height: 20px; text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif; font-size: 12px;"> உழைக்கும் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்றபோது கட்சி ஸ்தாபனம் குறித்தும் அதனடியாக எழுகின்ற கட்சி இலக்கியம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகின்றது. கட்சி இலக்கியம் என்பது பாட்டாளி வர்க்க கட்சியை முதன்மைப்படுத்தியே படைப்பாக்கப்பட வேண்டும் என்பது அதன் நியதியாகும். கட்சியின் போராட்டங்களை சரியான திசை மார்க்கத்தில் முன்னெடுத்து செல்வதற்கான தளம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இத்தகைய மக்கள் எழுச்சிக்காகவும் புரட்சிகர பணிக்காகவும் பரந்துபட்ட மக்களை விழிப்பு கொள்ளச் செய்வதும் அணிதிரட்டுவதும் கட்சி இலக்கியத்தின் பிரதான இலட்சியமாகும். மாறாக கட்சியை மிகைப்படுத்திஇ கட்சி உறுப்பினர்களை புனிதர்களாக காட்ட முனைவது கட்சி இலக்கியமாகாது. அதே சமயம் கட்சியில் உள்ள சிறுசிறு முரண்பாடுகளை பிரதானமாக்கி அதனை வெகுசனத் தளத்திற்கு கொணர்ந்து கட்சியை சிதைப்பதும் கட்சி இலக்கியமாகாது. மாக்ஸிம் கோர்க்கியின் ‘தாய்’ யங்மோவின் ‘இளமையின் கீதம்’இ நிக்கொலாய் ஒஸ்றோவஸ்க்கி ‘வீரம் விளைந்தது’ முதலிய படைப்புகள் கட்சி இலக்கியத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பேராசிரியரை பொறுத்தமட்டில் கட்சி இலக்கியம் பற்றி தாயகம்(1970களின் நடுக் கூற்றில்) சஞ்சிகையில் எழுதிய கட்டுரை இதனை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது.<br /><br />பேராசிரியருக்கு கட்சிசார்ந்த கட்சிசரா பொதுவுடமைத் தோழர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். உதாரணமாக மு கார்த்திகேசன், கே.ஏ. சுப்ரமணியம், சுபைர் இளங்கீரன், நீர்வை பொன்னயன், என்.கே. ரகுநாதன் டொமினிக் ஐPவா, கே.டானியல், பிரேம்ஜி, செ. கணேசலிங்கம் என இப்பட்டியலை நிட்டிச் செல்லலாம்.<br /><br />1960களில் வடக்கில் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான பேராட்டத்தை கம்ய+னிடஸ்;டுகளும் ஏனைய ஜனநாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்தனர்.<br /><br />சகல ஓடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் முற்போக்கான அம்சங்களில் ஒன்றாகும். மறுப்புறத்தில் தழிழ் பிற்போக்கு சக்திகள் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு சிங்கள பெருந்தேசிய வாதம் மட்டுமே காரணமானது எனக் கொண்டு அதற்காக மட்டும் போராடுவதே பிரதானமானது என செயற்பட்ட போக்கானது, ஒருவகையில் ஐக்கியப்பட வேண்டிய சிங்கள நேச சக்திகளையும் விரோதியாக பார்த்ததுடன் தமிழ் மேட்டு குடியினரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முனைகின்ற பண்பாகவே இப்போக்கு அமைந்திருந்தது.<br /><br />அந்தவகையில் இவற்றுக்கு மாறாக இடம் பெற்ற மக்கள் போராட்டங்கள் எழுச்சிகள் அவர்களுக்கு அருவருக்கதக்கதாயிருந்ததுடன் அவர்களின் மூக்கை சிணுங்க வைத்ததில் வியப்பொன்றுமில்லை. இத்தகைய பேராட்டத்தில் சாதியம், அதன் தோற்றம், தமிழர் சமூதாயத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேராசிரியர் அவர்கள் ஆழமான கட்டுரைகளை எழுதினார். கவிஞர் இ.முருகையனின் கோபுரவாசல் நாடகம் பற்றி எழுதி கோபுரவாசலும் புலைப்பாடியும், “போராட்டமும் வரலாறும”; ஆகிய கட்டுரைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவையாகும்.<br /><br />இவ்வாறறே 1960 களில் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட சர்வதேச ரீதியான தத்துவார்த்த முரண்பாடுகள் பிளவுகள் இலங்கை பொதுவுடமை இயக்கத்திலும் தாக்கம் செலுத்த கூடியவையாக அமைந்து காணப்பட்டன. பாராளுமன்ற பிரவேசத்தினூடாக உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டினை இரஸ்சியாவும், புரட்சிகர வர்க்க போராட்டத்தை வலியுறுத்திய சீனாவும் இரு வேறுபட்ட முகாம்களாக பிரிந்து தத்துவார்த்த போராட்டங்களை நடாத்தின. இலங்கையில் மொஸ்கோ சார்பு அரசியல் நிலைப்பாட்டை பிரேம்ஜி ஞானசுந்தரம், டொமினிக்ஜீவா, கா.சிவத்தம்பி முதலானோர் ஆதரித்திருந்தனர். சீனத்தரப்பு புரட்சிகரமான அரசியல் நிலைப்பாட்டை நீர்வை பொன்னயன், கே.டானியல், என்.கே. ரகுநாதன், சுபைர் இளங்கீரன், முகமது சமீம், சுபத்திரன், யோ.பெனடிக்பாலன், செ.யோகநாதன் முதலானோர் ஆதரித்திருந்தனர். இந்தப்பிரிவில் பேராசிரியர் சீனத்தரப்பையே ஆதரித்திருந்தார் என்பதை அவரது சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய தத்துவார்த்த போராட்டங்கள் இடம்பெற்றிருந்த காலத்தில் கைலாசபதி கலாநிதி பட்டத்திற்காக புலமை பரிசில் பெற்று இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைகழகத்தில் கற்றுக் கொண்டிருந்தார். இக் காலச் சூழலில் பேராசிரியரின் தெளிவான தீர்க்கமான அரசியல் நிலைபாட்டினை உருவாக்குவதில் பேராசிரியர் ஜார்ஜ் தொம்சனுக்கு முக்கிய இடமுண்டு. இத்தகைய நிலைப்பாட்டினை ஏற்றிருந்த பேராசிரியர் அதனை பகிரங்கப்படுத்திக் கொள்ளவில்லை. அவ்வம்சமும் அக்காலத்தின் தேவையாக இருந்தது.<br /><br />மக்கள் இலக்கியத்தில் நாட்டங்கொண்டு முற்போக்கு சங்கத்தில் அங்கம் வகித்த சகலரும் மார்க்சியவாதிகள் அல்லர். அதேசமயம் மார்க்சிய சிந்தனையை ஏற்றுக் கொள்ளாதவர்களும் சில முற்போக்கு இலக்கிய படைப்புகளை படைத்துள்ளனர். அவ்வாறே பலவிதமான அரசியல் சித்தாந்த நிலைப்பாடுகளுக்கு மத்தியிலும் அவர்களுடனான நேச முரண்பாட்டை பகை முரண்பாடாக மாற்றிக் கொள்ளாதது பேராசிரியரின் தீட்சண்யமிக்க அரசியல் பார்வைக்கு தக்க எடுத்துக்காட்டாகும். அவர் இறுதிவரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்திருந்தார். அவ்வாறே மல்லிகை சஞ்சிகையிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.<br /><br />இத்தகைய ஐக்கிய முன்னணி கோட்பாட்டை நடைமுறையிலும் தமது எழுத்திலும் பின்பற்றிய பேராசிரியர் மார்க்சிய விரோத எழுத்தாளர்களுக்கு எதிராக தீவிரமாக போராடினார். மு. தளையசிங்கம், க.நா. சுப்ரமணியம் தொடர்பில் இவரது எழுத்துக்கள் முக்கிமானவையாகும்.<br /><br />இலங்கை அரசியல் வரலாற்றில் இடதுசாரி அடையாளங்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் சிலர் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவதற்கும் தமது அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்வதற்கும் அத்தத்துவத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். தமது சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்ட பினனர்; பிற்போக்கான வியாபார நோக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டது மட்டுமன்று ஒரு காலத்தின் தாங்கள் எந்த வர்க்கத்திற்கெதிராக போராடினார்களோ அந்த வர்க்கத்தினருடன் சமரசம் செய்து கொண்டு கூடிக் குழாவுவது மாத்திரமன்று அந்த வர்க்கத்தினருக்கு சாமரை வீசி சேவகம் செய்வதை இலங்கை இடதுசாரி வரலாற்றில் காணக்கூடியதாக உள்ளது.<br /><br />இத்தகைய சிதைவுகள் குறித்து பேராசிரியர் தமது புனைப்பெயரில் எழுதிய கட்டுரையில் கூறுகின்ற பின்வரும் வரிகள் முக்கியமானவை ~~இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளைவிடத் தொடங்கிய காலம் முதல் ரொக்;சியவாதம் உடன்பிறந்தே கொல்லும் வியாதிபோல் இடதுசாரி இயக்கத்தின் ஏகோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றது. ரொக்;சியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின் அது இடதுசாரி இயக்கத்திற்குள் ஊடுருவியுள்ள முதலாளித்துவக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என்று சரியாகக் குறிப்பிட்டார். புpலிப் குணவர்த்தனா முதல் கொல்வின் ஆர் டி சில்வா வரை ரொட்சிசவாதிகள் இலங்கையில் நமக்குக் காட்டி வந்து நிற்கும் சாதனை என்ன? பேச்சில் அதிதீவிரவாதமும் நடைமுறையில் படுமோசமான சரணாகதியுமாகும். இவ்வகையில் இலங்கை இடதுசாரி வரலாற்றில் நவீன திரிபுவாதமாக அமைந்த ரொட்;சிய வாதம் குறித்தும் அதன் வர்க்கத்தன்மை, விளைவுகள் குறித்தும் கைலாசபதி சுட்டிக்காட்ட தவறவில்லை.<br /><br /> அவ்வாறே, மார்க்சிய விரோத எழுத்தாளர்கள் என்றுமே முற்போக்குவாதிகளாக இருந்ததில்லை என்பதில் தெளிவானதோர் நிலைபாட்டினையெ கொண்டிருந்தார் என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதொன்றாகும். மார்க்சியக் கோட்பாட்டை யதார்த்த சூழலுக்கு ஏற்வகையில் பொருத்திப் பார்த்து அந்த தளத்தில் உறுதியான இலக்கியம் படைக்க வேண்டும் என்பதில் பேராசிரியர் தெளிவானதொரு நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதற்கு மேற்குறித்த விடயங்கள் சான்றாக அமைகின்றன.<br />இவிவிடயம் ஒருபுறமிருக்க, பேராசிரியரின் அரசியல் நிலைப்பாட்டினை அது சார்ந்த நடைமுறையின் குறுகிய வரம்புக்குள் நிலைநிறுத்தி தமது அரசியல் லாபத்திற்கும் சுயனலத்திற்காகவும் பயன்படுத்துவோர் சிலர் அவரை தமக்கேற்ற வகையில் மறுவாசிப்பு செய்துக் கொள்வது தற்செயல் நிகழ்ச்சியல்ல<br /><br />எங்கள் நாட்டு இடதுசாரி அரசியிலில் ஒரு சாபக்கோடு, யாராவது ஒரு படிப்பாளியை அல்லது உயர் பதவியிலிருப்பவரை, அவர் எங்களோடுதான் நிற்கிறார்! என்று சாயம் ப+ச முற்படும் தந்திரோபயம். கைலாசபதியின் மார்க்ஸிய நிலைப்பாட்டினைக் களங்கப்படுத்துவதற்கு இப்படியும் இடைய+றுகள். கைலாசபதி போஸ்டர் ஒட்ட வரவில்லை. எங்களுடன் வாங்கில் இருந்து பிளேன் டீ குடிக்கவரவில்லை. என்று அவரைச் சிறுமைப்படுத்தக் கூடாது. அது உரைகல் அல்ல. மார்க்சிச அணி பெரும் பரப்பைக் கொண்டது. தொழிலாளர், விவசாயிகள், புத்திஜீவிகள், நடுத்தரவ வர்க்கத்தார் இப்படி. கைலாசபதி;: ஒரு புத்திஜீவியின் பங்குக்கு அதிகமாகவே தன் பணியை ஆற்றியவர். ( ரகுநாதன் என்.கே. கட்டுரையாசிரியர், 1996, எங்கள் நினைவுகளில் கைலாசபதி, மல்லிகைப்பந்தல் யாழ்ப்பாணம், ப. 46.)<br /><br />பேராசிரியர் கைலாசபதி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தவர். அவர் எப்போதும் எழுதிக் கொண்டேயிருப்பவர். அரசியல் கட்சிகள், சிறு அரசியல் குழுக்கள் நடாத்தும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் கேட்டால் நடைமுறை அரசியல், சீர்கேடுகள் கருத்துக்கள் பற்றி எழுதி வழங்குவது அவரது முக்கிய பண்புகளில் ஒன்றாக அமைந்திருந்தது. என என்.கே. ரகுநாதன் நினைவு கூறுவார். பேராசிரியரின் இத்தகைய பண்புகளை மறுத்து அவர் தம்முடன் மாத்திரமே உறவுக் கொண்டிருந்தார் எனவும் அவர் எடுத்த முடிவுகள் யாவும் எமது அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றே எடுத்தார் என பிரகடனப்படுத்துவதும,; இத்தகைய கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு கைலாசபதியின் தவறுகளுக்கு மேற்குறித்த நபர்களின் கூட்டு முடிவுகளுக்கும் உறவு கற்பிக்கின்ற இரா.இராமசுந்தரம் போன்றோர் அவரது சிந்தனைகளை குறுகிய வரம்புக்குள நிலை நிறுத்துவது அவர் வழியுறுத்தி நின்ற தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளிடையிலான ஐக்கிய முன்னனி கோட்பாட்டை நிராகரிப்பதாக அமையும்.<br /><br />; கைலாசபதி கலை இலக்கியம் தொடர்பாக எவ்வாறு பல விடயங்களை கற்றுத்தேர்ந்தாரே அவ்வாறே அரசியல் விடயங்களையும் அவர் தொடர்ந்து படித்து வந்தார். இது தொடர்பில் நண்பர்களுடன் விவாதித்து தெளிந்த நிலைப்பாட்டினை உருவாக்குவதிலும் பேராசிரியரின்; பணி கணிசமானது. இது தொடர்பில் செ. கணேசலிங்கனின் பின்வரும் கூற்று முக்கியமானது.<br /><br /> ~~எப்பொருள் பற்றியும் எவருக்கும் வேண்டும். விபரங்கள் எந்தெந்த நூல்களில் கிடைக்கும் அந்நூல்களை எங்கே அல்லது எவரிடம் பெறலாம் என்பதை எளிதில் கூறிவிட வல்லவர் கைலாசபதி. அவர் பலதுறை நூல்களையும் இரவு பகலாகச் சோர்வின்றிப் படிப்பவர். அண்மையில் வெளியான இலக்கிய விமர்சன நூல் தொடக்கம், புதிதாக வந்த யுத்த நாவல்கள் வரை ஒன்றுவிடாமல் தேடிப்படித்து விடுவபர்.<br /><br />கலை இலக்கியத்தோடு உலக அரசியல் நிகழ்ச்சிகளையும் ஆழ்ந்து கவனிப்பவர். நண்பர்களிடையே அரசியல் விமர்சனம் செய்வார். வங்காளத்திவ் ஜோதிபாசு பொலீஸ் பகுதி அமைச்சரானார் என்று அவரிடம் தெரிவித்தால் வரலாற்றில் இடதுசாரிக் கூட்டாட்சிகள் ஏற்பட்டு பொலிஸ் பகுதியையும் நிர்வாகித்த கூட்டாட்சிகள் யாவற்றையும் கையிலே விரல் மடித்து ஒவ்வொன்றாகச் சொல்லி எதிர்காலம்பற்றியே விளக்கம் கூறிவிடுவார்.<br /><br />அந்த வகையில் சர்வதேச அரசியல் என்கின்ற போது பேராசிரியர் மேலோட்டமான அவதானிப்பை கொண்டிருக்கவில்லை. வரலாற்று பார்வை வர்க்கச் சார்பு என்ற வகையில் உற்று நோக்கி அதன் ஒளியிலே சர்வதேசம் பற்றி கருத்து கூற தலைப்பற்றிருப்பதைக் காணலாம்.<br /><br />செம்பதாகை பத்திரிகையில் சர்வதேசவிவகாரங்களை ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வந்தது போன்றே இலங்கை விவகாரங்களையும் வேறு ஒரு தனிப்பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதிவந்தார். இரண்டுமே புனை பெயர்களில் எழுதப்பட்டமையால் செம்பதாகை ஆசிரியர் குழுவோடு தொடர்பானவர்களுக்கு வெளியே எவருக்கும் இவற்றை கைலாசபதியே எழுதுகிறார் என்பது தெரிந்திருக்கவில்லை. இன்று அவரது சர்வதேச விவகாரங்கள் தொடுக்கப்பட்டுள்ளமையால் அறிய முடிவது போல உள்ளுர் விடயங்களில் அவரது கருத்தைப் பலரும் அறியாமல் போய்விட முடிகிறது. குறிப்பாக தமிழ் தேசியம் தொடர்பான அவரது நிலைப்பாட்டை அறியாமலே அவர் முற்றாகவே தமிழ்த்தேசியத்தை நிராகரித்தார் என சொல்லியும் எழுதியும் வருகிற போன்கு காணப்படுகிறது.<br /><br />சிங்கள தரகு - பெரு முதலாளிவர்க்கக் கூட்டாக இருந்தபடி அமெரிக்க மேலாதிக்க சார்பும் இஸ்ரேல் சோசலிச ஆதரவும் உடையதாக இருந்த வலதுசாரி தமிழ்த் தேசியத்தை கைலாசபதி தொடர்ந்தும் மேற்படி உள்ளுர் விவகாரம் பற்றி எழுத்துக்களில் கண்டித்து, அம்பலப்படுத்தி வந்திருக்கிறார். அதேவேளை எழுபதுகளில் பிற்பாதியிலிருந்து தனது மறைவுவரை எழுச்சிபெற்றுவந்த இளைஞர்களது விழிப்புணர்வை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்று ஆதரித்து எழுதிவந்தார். அப்போது இளைஞர் இயக்கங்களிடையே மார்க்சியத் தேடலும், லெனினது சுயநிர்ணயம் குறித்த ஆழ்ந்த கற்றலும், சோஷலிச நாட்டமும், இவை பற்றிய ஜனநாயக ப+ர்வமான விவாதங்களும் காணப்பட்டன. அத்தகைய இடது சாரித் தமிழ்த்தேசியச் சொல்நெறியை அவர் ஆதரித்து வளர்த்தெடுக்கவல்ல எழுத்தாக்கங்களை தெடர்ந்து செம்பதாகையில் பதிவு செய்துள்ளார். பின்னாலே வலது சாரி தமிழ்த்தேசியமே மேலாதிக்கம் பெற்ற போதிலும் அவரது மறைவு வரை அதை முறியடித்து இளைஞர் எழுச்சியின் இடது சார்பான தமிழ்த் தேசியம் முன்னேற முடியும். எனும் நம்பிக்கை இருந்து வந்தது.<br /><br />இத்தகைய உள்ளுர் விவகாரம் சார்ந்த பக்கம் தொகுத்து வெளியிடப்படாமை பெரும் துரதிஷ்டமாகும். அது வெளிவராதவரை அவர் தமிழ்த்தேசியத்தை முழுதாகவே நிராகரித்தார் என்ற தவறான பார்வையும் நீடிக்கவே செய்யும். அதன் வரவு காலத் தேவையாகும். கைலாசபதியை மதிப்பிடுவதற்காக மட்;டுமல்லாமல் தமிழ்த்தேசியத்தின் இரு வழிப்பாதை மோதுகையின் தோற்றமும், எழுச்சியும் - வீழ்ச்சியும் பற்றி அறிந்து கொள்ளவும் அது அவசியமானதாகும்.<br /><br />இலங்கையில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று எழுபதுகளில் தழிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன்காரணமாக தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.<br /><br />பிரதான முரண்பாடு என்பது பிரதானமற்றதாகச் செல்வதும் பிரதானமற்றது பிரதானமாக மாறுவதும் வரலாற்று நியதி. இந்த முரண்பாடுகளின் தாற்பரியத்தை உணராதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிடும் என்பது யதார்த்த நியதி. இந்தவகையில் இன்று நேர்மையுடன் மக்களுடன் செயற்பட்டு வருகின்ற முற்போக்கு மாக்சி;யர்கள் தமது கடந்தகாலம் குறித்து ஆரோக்கியமான சுய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது</span></div>
</div>
angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-50623414449777611672012-06-01T22:37:00.001-07:002012-06-01T22:37:34.520-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<h1 style="background-color: white; border: 0px; color: #333333; font-family: 'Yanone Kaffeesatz'; font-size: 2.4em; font-weight: 400; margin: 15px 0px 20px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
ஒரு புலமைத்துவ ஆளுமையாக மட்டுமல்ல இயக்க சக்தியாகவும் விளங்கியவர் பேராசிரியர் க. கைலாசபதி : ந. இரவீந்திரன்</h1>
<div class="fb-tweet" style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; height: 30px; line-height: 12px; margin: 0px; outline: 0px; overflow: hidden; padding: 0px; vertical-align: baseline; width: 632px;">
<div class="tweet-this" style="border: 0px; float: left; font-size: 1em; margin: 2px 0px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<iframe allowtransparency="true" class="twitter-share-button twitter-count-horizontal" frameborder="0" scrolling="no" src="http://platform.twitter.com/widgets/tweet_button.1337330192.html#_=1338615129235&count=horizontal&id=twitter-widget-0&lang=en&original_referer=http%3A%2F%2Finioru.com%2F%3Fp%3D27810&size=m&text=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95.%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%3A%20%E0%AE%A8.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20-%20Tamil%20News%20online%20Articles%3A%3A%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%3A%3A%20Website&url=http%3A%2F%2Finioru.com%2F%3Fp%3D27810&via=DeluxeThemes" style="border-width: 0px; font-size: 1em; height: 20px; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline; width: 112px;" title="Twitter Tweet Button"></iframe></div>
<div class="fb-this" style="border: 0px; float: left; font-size: 1em; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<iframe allowtransparency="true" frameborder="0" scrolling="no" src="http://www.facebook.com/plugins/like.php?href=http%3A%2F%2Finioru.com%2F%3Fp%3D27810&layout=standard&show_faces=false&width=450&action=like&colorscheme=light" style="border-style: none; font-size: 1em; height: 30px; margin: 0px; outline: 0px; overflow: hidden; padding: 0px; vertical-align: baseline; width: 450px;"></iframe></div>
<div class="clear" style="border: 0px; clear: both; font-size: 1em; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
குமரன் புத்தக இல்லம் 2011 செப்ரெம்பர் மாத முடிவில் லெனின் மதிவானம் எழுதியிருந்த “ பேராசிரியர் க. கைலாசபதி: சமூகமாற்றத்திற்கான இயங்காற்றல்” என்ற நூலினை வெளியிட்டது. மிகுந்த கருத்தியல் சிதைவுகளுக்குள் அல்லாடும் இன்றைய இலங்கை மற்றும் தமிழியல் சூழலில் காத்திரமிக்க சமூகப் பங்களிப்பிற்குரிய ஆளுமையான கைலாசபதியின் கருத்தியல் தெளிவைத் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தியமைக்காக க. குமரனுக்கும் லெனின் மதிவானத்துக்கும் முதற்கண் நன்றியை தெரிவிக்க வேண்டும்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
சென்ற நூற்றாண்டின் நடுக் கூற்றிலிருந்து ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள்( 1955-1982) மிகுந்த முனைப்புடன் சமூகமாற்றத்திற்காக எழுத்தாற்றலைப் பிரயோகித்தவர் க. கைலாசபதி(5.4.1933-6.12.1982). மக்கள் போராட்ட களங்களோடு ஊடாடி, மக்கள் சக்தி விடுதலைத் திசைமார்க்கத்தில் வீறுட் எழுச்சிக் கொள்ள வழிப்படுத்தும் கொமிய10னிஸ்ட் கட்சியுடன் உறவுப10ண்டு, தன் அறிவை நடைமுறை அனுபவங்கள் வாயிலாக பட்டைத் தீட்டி செழுமைப்படுத்தி முன்னேறியவர் கைலாசபதி. அத்தகைய அவரது வளர்ச்சியில் அந்தக் காலக்கட்டத்தில் இலங்கைச் சமூகமும் இலங்கை தமிழ் மக்களும் தீர்க்கமான வரலாறு படைக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தமையை அவதானத்திற்குட்படுத்துதல் அவசியம்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
லெனின் மதிவானத்தின் மேற்படி நூல் வீறுமிக்க அந்நக் காலத்தையும் அதன் வெளிப்பாடான ஆளுமையாக கைலாசபதி விளங்கியவாறினையும் துலக்கமாக காட்டி நிற்கிறது. கைலாசபதியின் வாழ்வும் வகிபாகமும் நூல் முழுமையும் தெளிவுப்படுத்தப்படடதோடு அமையாது, பின்னிணைப்பில் அவரது முக்கியத்துவமிக்க இரு கட்டுரைகளையும் லெனின் மதிவானம் தந்துள்ளார். “ஈழத்து தமிழ் இலக்கியம்” எனும் தலைப்பில் கைலாசபதியால் 1955 இல் எழுதப்பட்ட (தமிழகத்தில் வெளியான “சாந்தி” இதழின் முதலாவது ஆண்டு நிறைவு மலர்) கட்டுரை, முந்திய பண்டித மரபை மறுமலர்ச்சிக் கட்டமாய் வளத்து முற்போக்கு இலக்கிமாக வீறுகொள்ள உந்தித் தள்ளும் வளர்ச்சி நிலைக்கு ஏற்புடையதாக ஈழத்து தமிழ் இலக்கிய செல்நெறி கனிந்தமையைக் காட்டுவது. முற்றொரு கட்டுரையான “உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பின்னணியும் பின்நோக்கும்” என்பது 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியச் சதியை அம்பலப்படுத்தியது.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
அந்த உலக தமிழாராய்ச்சி என்பது பயனுறுதிமிக்க ஆய்வியலாக அன்றி பிற்போக்கு சக்தியின் அரசியல் செயற்பாடாகவே அமைந்தது. ஏற்கனவே தரப்படுத்தலினால் புகையத் தொடங்கிய இனப்பகைத் தீ, இந்த மாநாட்டில் அரங்கேறிய இனவாதச் செயற்பாடுகளினால் கனன்று எரிந்து 1983 இனக் கலவரத்தோடு நாடு தழுவிய உள்நாட்டு யுத்தமாக பரிணமித்தமையை அறிவோம். அவ்வாறு அழித்தொழிப்பு யுத்த சங்காரத்தில் மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றலைத் தற்காலிகமாய்த் தடுத்து நிறுத்துவதற்கு பிற்போக்குவாதிகள் வாய்ப்பினைப் பெற்ற எண்பதுகளின் தொடக்கத்தில் கைலாசபதியின் மறைவு நேர்ந்து விட்டதை அறிவோம்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இவ்வாறு, முற்போக்கு இயக்கம் எழுச்சியுற ஆரப்பித்து- பிற்போக்குவாதம் அதற்கெதிரான தடையை முடுக்கிவிட இயலுமாகிய கட்டம் வரையில் தமிழயல் பணியாளராகவும் முற்போக்கு போராளியாகவும் வாழ்ந்தவர் கைலாஸ். மேNலு காட்டிய “சாநதி” இதழ்க் கட்டுரையில் பிரேம்ஜி, எச். ஏம்.பி. மொஹிதீன், கே. டானியல், ‘புதுமை லோலன்’ ஆகியோர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் முன்னிணி வகிப்பதைக் கைலாஸ் கூறியுள்ளார். கூடவே, “நமது சமுதாயத்தின் முரண்பாடுகளை உணர்ந்து, பொருளாதார மாற்றத்துக்காக உழகை;கும் அரசியலி;ல் நம்பிக்கைக் காட்டும் இக்குழுவினர் பல காரணங்களால் போதிய அளவு இலக்கிய சிருஷ்டிககளில் ஈடுபடவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் மூலம் எதிர்காலத்தில் நல்லதொரு இலக்கியப் பரம்பரையை இவர்கள் உண்டுபண்ண முடியும்” என்ற நம்பிக்கையைக் க.கை. வெளிப்படத்துவார்(மேற்படி நூல்,ப.89).</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
“சரித்திரக்கதியில்” மறுமலர்ச்சிக் கட்டத்தை எட்டிய ஈழத்து தமிழ் அதிலிருந்து விடுப்பட்டு முன்னேறி(முற்போக்கு இலக்கிய அக்கங்களை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே) மறுமலர்ச்சியின் பயனை அடைய முடியும் எனக்கூறி, அந்தக் கட்டுரையில் அதற்கான நம்பிக்கையையும் தெரிவித்ததிலிருந்தது போலவே முற்போக்கு இலக்கிய இயக்கம் பின்னர் கனங்காத்திரமான படைப்புகளை வெளிப்படுத்தியிருந்தமையை அறிவோம். ஈழத்து இலக்கியச் செல்நெறி அவ்வகையிலான பண்பு hPதியான மாற்றத்தை எட்ட வேண்டும் எனத் தனது 22வது வயது இளம் பராயத்தில் வலியுறுத்திய கைலாஸ், அந்தப் பணியைக் கையேற்று இயங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன்(இ.மு.எ.ச.) இணைந்து இயங்கிய பங்களிப்பாளராகவும் செயற்பட்டார்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
கைலாசின் இத்தகைய இயங்காற்றலை வெளிப்படுத்தும் லெனின் மதிவானத்தின் நூல் 8 அத்தியாயங்களை உடையது. (1) வாழ்க்கைப் பின்னணி, (2) எழுத்துக்கள், (3) பத்திரிகைத்துறை,(4) பல்கலைக்கழகம், (5) அரசியல்,(6) இலக்கிய அமைப்புகள், (7) விமர்சனங்கள், (8) நிறைவுரை என்ற தலைப்புகளின் கீழ் பருந்துப் பார்வையில் க. கை. யின் பன்மைப்பரிமாணத்தைக்காட்டி. மேற்கொண்டு ஆழமாக அவரைத் தேடு;ம் ஆர்வத்தை லெனின் மதிவானம் ஏற்படுத்தி விட்டுள்ளார்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
பின்னிணைப்புகளில் “கைலாசபதி பற்றிய முக்கிய தகவல்கள்” தரப்பட்ட பின்னர் “கைலாசபதியின் எழுத்துக்கள் வெளிவந்த பிரசுரங்கள்” பற்றிய விபரம் இடம்பெற்றுள்ளது. இவை , கைலாசின் பங்களிப்பையும் அவற்றை எத்தகைய களங்கள வாயிலாக வெளிப்படுத்pனார் என்பதையும் உணரத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. “உலகத் தமிழாராய்ச்சி…”, “ஈழத்து தமிழ் இலக்கியம்” எனும் மேலே குறித்த இரு கட்டுரைகள் பின்னிணைப்பில் அடுத்து இடம்பெறுவன் எழுதப்பட்ட காலவரிசை அடிப்படையில் அவை முன்பின்னாக மாற்றித் தரப்பட்டிருக்க வேண்டும்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
புpன்னினைப்பில் இறுதியாக தரப்பட்டுள்ளக் கட்டுரை “ சோஷலிசத்திற்கான பாதைப் பற்றி பேராசிரியர் கைலாசபதி” என்பது லெனின் மதிவானத்தால் வேறு சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டு, “மலையகம் தேசியம் சர்வதேசம்” என்ற அவரது தொகுப்பு நூலில் இடம்பெற்றிருந்த கட்டுரையாகும். ஊண்மையில் அந்தக் கட்டுரை இந்நூலுக்குரிய கட்டமைப்பில் நிறைவுரை என்ற பகுதிக்கு முன்னதாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தக் கட்டுரை கட்சி பத்திரிக்கையான “செம்பதாகை” இல் புனைப்பெயரில் சர்வNதுச விவகாரங்கள் பற்றி ஒரு பக்கத்தில் கைலாஸ் எழுதிய பத்தி எழுத்து குறித்து எழுதப்பட்ட தாகும். இதேபோல புனைபெயரில் அதே செம்பதாகையில் மற்றொரு பக்க பத்தி ஏழுத்தில் உள்நாட்டு விவகாரங்கள் குறித்த “ கருத்டதும் கண்ணோட்டமும்” க.கை. இனால் எழுதப்பட்டுள்ளது; இப்போது அதனை ஆய்வுக்குட்படுத்தி லெனின் மதிவானம் “இலங்கையில் உலமயமாக்கலின் ஊடுறுவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி” என்ற கட்டுரையை எழுதியுள்ளார். ( இது அண்மையில் வெளிவரவுள்ள லெனின் மதிவானத்தின் ‘ மலையக இலக்கியத்தின் சில பரிமாணங்கள்’ என்ற நூலில் இடம் பெறுகின்றது). “சோஷலிசத்திற்hகன பாதை பற்றி கைலாசபதி” பற்றிய கட்டுரைக்கு முன்னதாக இந்த உள்நாட்டு விவகாரம் குறித்த கைலாசின் பார்வையை ஆய்வக்குட்படுத்தும் கட்டுரையும் இடம்பெறும் போது இந்நூல் மேலும் முழுமைபெறும். குண்டிப்பாக அவசியபடவள்ள அடுத்த பதிப்பில் இந்தமாற்ற்ஙகளைக் காண இயலும் என நம்பலாம்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
11</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இன்று எமக்கு கிடைத்துள்ள “பேராசிரியர் கைலாசபதி : சமூக மாற்றத்திதுக்கான இயங்காற்ற்ல்” என்ற லெனின் மதிவானத்தின் நூல் வழங்கும் கருத்துக்கள் மற்றும் கிளர்த்தும் விவாதங்கள் அடிப்படையில் சில விடயங்களை அலசுவது அவசியமானதாகும். கைலாசின் பங்களிப்பை வெளிப்படத்தும் இதே வேளையில் அவர் மீதான அபாண்டமான குற்ற விமர்சனங்கள் எத்தனை து}ரம் ஆதாரமற்றன என்ற விடயத்தையும் அம்பலபடுத்துவதாய் இந்நூல் அமைந்துள்ளது. கால- தேச நிலவரங்களின் பிரத்தியே தன்மை குறித்த அக்கறையின்றி மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் பிரயோகித்தவர், வர்க்கப்பிரச்சனையை மட்டும் கவனத்தில் கொண்டு தேசிய- தலித்தியப் பிரச்சனைகளைபவ் புறக்கணித்தவர், பல்கலைகழகத்திற்கு வெளியே உள்ள ஆய்வாளர்களைப் பொருட்படுத்தாதவர் என்பன க.கை. மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களாகும்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
காலமாற்றத்தோடு வெளிப்படும் புதிய கருத்துகளை அங்கரித்து வளர்க்கும் போது, பல்கலைக்கழுகத்துக்கு வெளியே உள்ள ஆய்வாளரiயும் இனங்கண்டு வளர்க்கும் பண்பு எவரiயும் விட அதிகமாய் கைலாசிடம் உண்டு. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக “பாரதியின் மெய்ஞ்ஞானம்” நூலும் அதன் ஆசிரியர் ந.இரவீந்திரனும் உள்ளன(ர்). “ பாரதியிடம் பிற்போக்கான ஆன்மீகப் பார்வை காணப்பட்டாலும் அவரது சமூகப் பார்வை புரட்சிகரமானது” எனும் கருத்து பலரiயும் போல க.கை. இடமும் ஆரம்பத்தில் இருந்தது; அவரது நெறிப்படுத்தலில் “ பாரதி: பன்முகப்பார்வை” க்காக ந. இரவீந்திரன் “ அரசியல் இலக்கியமும் பாரதியும்” என்ற தலைப்பில் ஆய்வை Nமுற்கொண்ட போது தன்னால் வழிகாட்டப்படும் அந்த மாணவன் முன் வைத்த கருத்து தனது முந்திய முடிவுக்கு மாறானது என்ற தயக்கம் ஏதுவுமின்றி, அந்தப் புதிய கருத்தை ஏற்றுக் கொண்டு, அதனை விரிவுப்படுத்தி பாரதியின் ஆன்மீக நோக்கு குறித்து தனி நூல் எழுத அந்த மாணவனை ஆற்றுப்படுத்தினார்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
புhரதியின் அரசியல் இலக்கியத்துக்கான அடிப்படை உலக நோக்கு ஆன்மீகத் தளத்தினு}டாக வெளிப்பட்ட இயங்கியல்-பொருள் முதல் வாதம் என்பது அவரால் நெறிப்படத்தப்பட்ட மாணவனின் ஆய்வு முடிவாக இருந்தது. கருத்து முதல்வாத நிலை நின்று கடவள் அனைத்தையும் தீர்பார் என்ற நம்பிக்கையில் இயங்கும் ஆன்மீகவாதியாக அல்லாமல் ஆன்மீகத் தளத்தையும் புரட்சிகரமான உலக நோக்குக்கு மாற்றிய பாரதியின் ஆளுமையை ஏற்றுக் கnhள்வதற்கு தடையற்றவகையில் கைலாசின் ஆளுமை மார்க்சிய தெளிவுடன் வியாபித்திருந்தது. இத்தனைக்கும், “ அரசியல் இலக்கியமும் பாரதியும்” என்ற அந்த ஆய்வை மேற்கொண்ட மாணவன் பல்கலைகழகத்திலன்றி பலாலி ஆசிரிய கலாசாலையின் ஆசிரியப் பயினுராகப் பயின்று கொண்டிருந்தவன்; வெறும் பத்தாம் வகுப்புடன் பயிற்றப்படாத ஆசிரியராகி பயிற்றபட்ட ஆசிரியராவதற்கு பலாலி அசிரிய கலாசாலையை அடைந்தவன். “பாரதியின் மெய்ஞ்ஞானம்” வாயிலாக ஆய்வாளர்கள் மத்தியில் கவனம்பெற்று பின்னர் கல்வியில் முன்னேறுவதுடன் பல நூல்களையும் ந.இரவீந்திரன் எழுதுவதற்கு இவ்வகையில் அடித்தளமிட்டவர் கைலாசபதி.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
முhர்க்சியவாதியாக பரிணமிக்காத பாரதியினால் இயங்கியல்- பொருள்முதல்வாதப் பார்வையை வரிக்க முடிந்தமையை ஏற்றுக் கொண்டது போன்றே சமூகப் பிரச்சனைகளை தனியே வர்க்கபேதம் சார்ந்து மட்டும் பார்க்கும் ஒருமுனைவாதத் தவறுக்கு ஆட்படாது தேசிய-சாதி பேதங்கள் சார்ந்து அணுகித் தீர்வுக்கான போராட்டங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் க.கை. பெற்றிருந்தார். “சாதி முறை தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற பதாகையுடன் எழுச்சியுற்ற 1966 ஒக்ரொபர் 21 மார்க்கத்திலான சாதி தகர்ப்பு போராட்டத்தை க.கை. உறுதியாக ஆதரித்திருந்தார். தொடரும் அதன் முன்னெடப்புக்கான அமைப்பாக தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் முதலாவது மாநாட்டு மலரில் க.கை. எழுதியிருந்த கட்டுரை இவ்விடத்தில் மிகுந்த கவனிப்புக்குரியது. தீண்டாமைத் தகர்புக்கான அந்தப்போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்தும் போது, சாதியப் பிரச்சனையானது வெறும் மதப்பிரச்சனையாக இல்லாமல், அடிப்படையில் தேசிய பிரச்சனையாக உள்ளது என்று காட்டியிருந்தார். இன்று 40 வருடங்கள் கடந்த பின்னர் சாதி முறைமையை குறித்தும் தேசிய பிரச்சனை பற்றியும் புதிய தளங்களை எட்ட முடிந்தள்ளது. தொடர்ந்த ஆதாரங்களும் பல்வேறு நடைமுறை அனுபவங்களும் கைலாசின் அந்த அடிப்படைக் கருத்தை விருத்தி செய்யும் இடத்துக்கே வளர்த்தெடுத்து வந்துள்ளது.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இனமரபுக் குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவடைந்து உருவான ஐரோப்பியச் சமூக மாற்றங்களின் வரலாறு போன்று எமது சாதியச் சமூக அமைப்பு மாற்றங்கள் நடந்தேறவில்லை. சாதி என்பது எந்த சமயத்தின் கண்ட பிடிப்போ சதியோ பாவச் செயலோ அல்ல. எனக்கான ஏற்றத் தாழ்வுச் சமூக உருவாக்கம் இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாய் பிளவடைந்து ஏற்படவில்லை; விவசாய வாய்ப்பை பெற்ற மருதத் தினைக் குரியதான இனமரபுக் குழு ஆளும் சாதியாகி, நிலத்தோடு பிணைக்கப்பட்ட தீண்டாதோர் எனும் ஓடுக்கப்பட்ட சாதிகளாயும், கைத்தெழில் சாதிகளாய் இடைச்சாதிகளாக்கப்படுதலாயும் ஏனைய திணைகளுக்குரிய இனமரபுக்குழுக்களை மாற்றிய சாதி வாழ்முறை எமக்கான பிரத்தியேகத் தன்மை உடையது. ஆத்தகைய புதிய வாழ்க்கைக் கோலமாகிய சாதி முறைமைக்கான கருத்தியலை வடிவமைக்கும் சாதியாக பிராமணர் உருவாகினரேயன்றி பிராமணசட சதியால் சாதி வாழ்முறை தேன்றி விடவில்லை. கருத்’து வாழ்க்கை கோலத்தைக் கட்டமைப்பதற்கு முன்னதாக, வாழ்முறை வெளிப்பாடாகவே கருத்து பிறக்கிறது!</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
சாதிமுறையின் தோற்றம்- வளர்ச்சி பற்றி பல்வேறு கருத்தியல் தளங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகளைத் தொகுத்து மார்க்சிய அடிப்படையில் அணுகும் போது மார்க்சியப் பிரயோகத்தை செலுமைப்படுத்தும் அவசியத்தை வலியுறுத்தம் பதிய பரிமாணங்களையும் வந்தடைந்தள்ளோம். ஒரு புறம் மார்க்சியத்தின் போதாமை காரணமாக சாதிப்பிரச்சனையை தலித்தியவாதபடபார்வையிலேயே அணுகவும் தீர்க்க முயற்சிக்கவும் இயலும் என்ற எத்தனிப்புகள் முன்னெடுக்கப்பட்டு தோற்றுவிட்டமையை தலித் சிந்தனையாளர்கள் கூட இன்று ஏற்கம் நிலை உருவாகியுள்ளது. மறுப்புறம், வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டும் போதும் – சாதிப்பிரச்சனைத் தானே தீரும்; சாதியத்துக்கு எதிரான விசேடித்த போராட்டங்கள் வேண்டியதில்லை என்று இந்தியாவில் மார்க்சியர்கள் முன்னெடுத்த வறட்டுவாத நிலைப்பாட்டிலிருந்து மீண்டு, இன்று மார்க்சியர்கள் சாதிமுறை கறித்த ஆய்வுகளிலும் செயற்பாடுகளிலும் இறங்கியுள்ளனர்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இதன் பேறாக இரட்டைத் தேசியக் கோட்பாடு தொடர்பான விவாதத்தை இன்று இந்திய ஆய்வுத் தளத்தில் அரும்பு நிலையில் காணக்கூடியதாக உள்ளது. இது சிறு பொறியாக உள்ளதாயினும், விரைவில் பெருந்தீயாக எழுந்து சிந்தனைத் தளத்தில் தேங்கிப் போன பழைய குப்பைகள் பொசுங்கி சாம்பலாகிவிட, புதிய வீச்சுடன் மார்க்சியப் பார்வையும் நடைமுறையும் உலகை மாற்றக் களமிறங்கும் என நம்பலாம். மார்க்சிய அணிகள், முன்னோடிகளது வசனங்களை மீறவியலாத புனித அருள் வாக்குகளாக கருதி விடாமல் மார்க்சிய-லெனினய சிந்தனை முறை வழிப்பட்டு எமக்குரிய பிரத்தியேக சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளத்தெடுத்துப் பிரயோகிக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இதற்கான தடைகள் இந்தியாவில் நிறைந்துள்ளன. முன்னர் அம்பேத்கர் தலித் இயக்கத்தை முன்னெடுத்தபோது மார்க்சியர்கள் அதனைத் தமக்குரிய பணியாகக் கருதி நட்பு சக்தியாக்கத் தவறி வர்க்கப் பிரச்சனையை மட்டும் பார்த்ததால் எந்தளவு அகநிலைத் தவறு இருந்ததோ, அதேயளவு சாதிவாதம், மதவாதம், ஆரிய- திராவிட இனவாதம் என்பனவற்றைத் து}ண்டிய ஏகாதிபத்தியச் சதி என்கிற புறநிலைத் தாக்கமும் இருந்துள்ளது.( இலங்கையில் இனவாதமே போதுமான பிளவுபடுத்தல் சதி ஆயுதமாக இருந்தமையால் மார்க்சியர்கள் அனைத்துச் சாதிகளையும் ஐக்கியப்படுத்தி கொண்டு சாதிய இழிவுக்கெதிராகப் போராட சாத்தியமாயிற்று).</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
அத்தகைய சாதியத் தகர்ப்பு போராட்டங்கள் வர்க்கப் பார்வையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போது ஒடுக்கும் வெள்ளாளச் சாதியை எதிரியாகக் கட்டமைக்கவில்லை; “ சாதியமுறை தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற முழக்கத்தில் முன்னேறிய தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் வெள்ளாளர்களில் இடதுசாரி உணர்வாளர்கள் மட்டுமன்றி, சாதிய இழிவுகள் ஒடுக்கப்பட்டோரை மட்டுமன்றி தம்மையும் அவமானப்படுத்துவதென கண்டு வெட்கப்பட்ட அனைத்து நல்லெண்ணங்கொண்ட ஜனநாயக சக்திகளையும் ஐக்கியப்படுத்தியிருந்தது. அதன் உச்சநிலைப் போராட்டமாக நிலப்பிரபுத்துவ கெடுப்பிடியில் பிராமண உடைமையாகவும் வெள்ளாள ஆதிக்க கொடுமுடியாகவும் விளங்கிய மாவிட்டப்புரக் கோயில் பிரவேசப் போராட்டம் அமைந்தது. இந்மதத்தை தகர்ப்பதற்கு அவசியமில்லாமலே , அதன் சாதிய இழிவை ஒழிக்க இயலும் என்பதை அந்தப் போராட்டம் உலகுக்கு எடத்துக் காட்டியிருந்தது.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
மாறாக இன்று இந்தியாவில் தலித்தியவாதம் தொடர்ந்தும் பிராமண- மற்றும் ஆளும் சாதிகளை எதிரிகளாய்க் கட்டமைப்பதோடு இந்துமதத்தை தகர்ப்பதே பிரதான பணியெனக் கூறி போராட்டச் சக்திகளை பிளவுப்படுத்தி இலக்கின்றி சிதறடித்து சமூகமாற்ற நடவடிக்கைகளுக்கு துரோகமிழைத்து வருகிறது. ஆன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிளவுப்படுத்தல் சதிக்கு தன்னை அறியாமல் அம்பேத்கர் இடமளிக்க நேர்ந்ததில் சுதந்திரப்போhரட்டங்களை முன்னெடத் பிராமணத் தேசியத்தின் தவறே பிரதானமானதாக இருந்தது. இதனைக் கண்டுக் கொள்ளாமல் கம்ய10னிஸ்ட்டுகள் அரவணைக்க வேண்டிய அம்பேத்கரை எதிரியாக்கியமையில் சுய விமர்சன hPதியாக ஏற்ற வேண்டிய தவறு இன்று உணரப்பட்டுள்ளது. இந்தியத் தேசியம் பிராமணத் தலைமையில் உயர்சாதி நலன்களை உறுதிப்படுத்த முனையும் போது தலித் தேசியம் எதிர் நிலைப்பாடு கொள்ளும் வகையில் இரட்டைத் தேசிய பிளவு நிதர்சனமாய் உள்ளமையை அன்று புரிந்துக் கொள்ள தவறிய போதிலும் இன்று கம்ய10னிட்டுகள் தலித் விடுதலைக்கான சரியான திசைவழியிலான போராட்டங்களை இந்தியாவில் முன்னெடுத்துவரக் காண்கின்றோம்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இந்த முயற்சியுடன் கைக்கோர்க்கத் தவறி, தலித்தியவாத சக்திகள் போராட்ட மார்க்கமின்றி தறிகெட்டழியும் இலக்கற்ற வழிக்கு ஆட்படுத்த முயலுகையில் உண்மையில் ஏகாதிபத்தியமாய் பரிணமிக்கும்உலகமயக் கூட்டினை உடையதான இந்திய சாதி வர்க்க ஆதிக்க கும்பலுக்கே பணிசெய்கிறவர்கள் ஆகிறார்கள். இவ்வகையில் மாறிவரும் உலகச் சமநிலை மாற்றம் பற்றிய புரிதலின்றி மார்க்சியம் பேசும் சிலரும் தலித்தியவாத நிலை நின்று இந்து மதத் தகர்ப்பே சாதியொழிப்புக்கு வழிகோலும் என்ற தறிகெட்டழியும் தர்க்கங்களை முன்வைப்பவர்களாயிருக்க காண்கின்றோம். முன்னர் தலித் தேசிய நிதர்சனத்தைக் காணத்தவறி பிராமணத் தேசியத்தின் வாலாக இருந்தது போல, இன்று மற்றொரு முனைக்குத்தாவி தலித் தேசிவாத முடக்கத்துக்கு ஆளாகிறார்கள்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
உண்மையில் இரட்டை தேசியத்தின் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு, விடுதலை பிளவுப் படாது என்ற அடிப்படையில் அனைத்தும் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய தீர்வுத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமே அன்றி ஒரு முனைவாத தவறுகளில் ஒன்றிலிருந்து மற்றதற்கு தாவுவது பயனற்றது; மட்டுமன்றி, எதிரிக்கு உதவுவது. முக்கள் விடுதலையில் தலித் விடுதலை தவிர்க்கவியலாத அங்கம் என ஏற்பவர் ஆளும் சாதித் தேசிய வடிவமாயுள்ள இந்துமதம் சார் அம்சங்களில் மக்கள் விடுதலைக்குரிய கூறுகளை இனங்கண்டு அவற்றோடு ஐக்கியப்பட்டு, ஆதன் ஆதிக்கவாத நிலைப்பாட்டை தகர்ப்பதற்கு முனைய வேண்டும். முhவிட்டபுரக் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இக்குணாம்சம் வெளிப்பட்டது. இவ்வகையில் இரட்டைத் தேசிவாத கோட்பாட்டை மார்க்சிய அணிகள் விவாதிக்க முன்வராதிருப்பதில் இந்திய மேலாதிக்கவாத ஊடுறுவல் செயற்படாமல் இல்லை( மார்க்ஸ், லெனின் ஆகியோரது வசனங்களில் சிறைப்படும் மார்க்சிய-லெனினிச சிந்தனைப் பாங்கற்ற அகநிலைவாத தவறுடன் இணைத்து இந்தப் புறநிலைத் து}ண்டலைக் காண வேண்டும்).</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
எமக்கான தேசிய இனப்பிரச்சனை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விளங்கிக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய வகைப்பட்ட மொழிசார் தேசியம் என்பதோடு முடிந்து விடவில்லை. முஸ்லிம் தேசியம் இந்திய விடுதலைப் போராட்டக் காலத் தொடக்கத்தில் கவனங்கொள்ள அவசியமான பிரச்சனையாக எழுந்து மொழிக்கும் அப்பால் தேசியப் பிரச்சனையில் மதத்துக்குரிய பாத்திரத்தை வலியுறுத்தியது. முப்பதுகளில் திராவிடத் தேசியம் பெரியாரால் முன்னிறுத்தப்பட்ட போது இனத்தேசியம் கவனிப்புக் குரியதானது; இது பின்னர் இந்திய தேசியத்தினுள் மொழிசார் இனத்தேசியங்களின் சாத்தியத்தை இயலுமானதாக்கியது. முன்னரே, இந்தியத் தேசியம் எழுச்சியுறத் தொடங்கிய கையோடு ஜோதிராவ்ஃப10லே, அயோத்திதாசர் போன்றோர் இந்தியத் தேசியம் அடிப்படையில் பிராமணத்தேசிய எழுச்சிக்கான அவசியத்தை தொட்;டுக் காட்டினர். ஏதிர்தேசிய எழுச்சிக்கான அவசியத்தை தொட்டுக்காட்டினர். அப்போது அரும்பு கொள்ளத் தொடங்கிய தலித்கருத்தியல் முப்பதுகளில் அம்பேத்கரால் தலித்தேசிய இயக்க நடைமுறையாக வளர்க்கப்பட்டது.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
ஆக, எமது தேசியப் பிரச்சனை மிகுந்த சிக்கல் பண்புடையது. இடதுசாரி பண்புடனான இல்கைத் தேசியத்துடன் ஐக்கியப்பட்ட மக்கள் விடுதலைத் திசை மார்க்கத்துக்குரிய ஒடுக்கப்பட்ட மக்களின் சாதித்தகர்ப்புப் போராட்டத்ததை இலங்கையில் கம்ய10னிட்டுகள் முன்னெடுத்த போது தலித் பண்புடன் எதிர்த்தேசிய வடிவம் கொள்ள அவசியமில்லாமல், அதுவே வரலாற்றின் பிரதான செல்நெறியாக அன்று இருந்தது. ஆளும் வெள்ளளத் தேசியமாக குறுகிய இனவாத முடக்குவாத நோய்க்கூறுடனான ஈழத்தமிழ் தேசியம் அதனோடு ஐக்கியப்பட முன்வராமல் எதிர் மனப்பாங்கை கொண்ட போதிலும் அது எதிர்த்தேசிய வடிவம் உடையதல்ல. இந்தியாவில் போன்று ஆளும்(பிராமண- வெள்ளாள) சாதித் தேசியங்களுக்கு எதிர்த்தேசியமாய் இங்கே ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் அமையாமல் போனமையில், இலங்கையில் மார்க்சியர்களது சரியான நிலைப்பாடு மட்டுமன்றி விNசுடித்த பண்பு வேறுபாடுகளும் காரணமாக அமைந்திருந்தமை கவனிப்புக்குரியன(இலங்கையிலும் தமிழனத் தேசியம் குறித்த சரியான பார்வை எட்டப்படவதில் காலதாமதம் ஏற்பட்ட தவறு இருந்ததாயினும,; சிங்களப் பேரினவாதம் தமிழ்த் தேசியத்தை ஒடுக்க முனைந்த போது அதற்கு எதிராக தலித் தேசிய எதிர் நிலைப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களும் சரி, கம்ய10னிஸ்ட்டுகளும் சரி இயங்கவில்லை).</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இத்தகைய இரட்டைத் தேசிய- தமிழினத் தேசியப் பிரச்சனையில் கைலாசபதி தனது நிலைப்பாட்டை முழுமையாக வெளிப்படத்த மன்னர் மறைந்துவிட்டபோதிலும், இன்று நாம் வந்தடையும் திசை மார்க்கத்திலேயே அவரது பயணிப்பு அமைந்திருந்தது என்பது தெளிவு. இதனை லெனின் மதிவானத்தின் இந்த நூலும் தமிழ்த்தேசியம் குறித்த கைலாசபதியின் பத்தி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட (மேலே குறித்த) கட்டுரையும் எடுத்துக்காட்டுகின்றன.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
111<br style="border: 0px; font-size: 1em; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;" />இப்படிச் சொல்லும் போது பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியை முன்னிறுத்தி வேறு சாத்தியம் குறித்து பேசுகின்றவர்கள் இருக்கின்றனா எனும் யார்த்தம் புறக்கணிப்புக்குரியதல்ல. இரட்டைத் தேசியம் குறித்த விவாதங்கள் கா.சி. அவர்களோடு கலந்துரையாடப்பட்ட போதிலும் அதனைக் கவனத்தில்லெடுக்கவோ அது தொடர்பில் கருத்துக் கூறவோ கா.சி. முன் வந்ததில்லை. மாறாக, ஈழத்தமிழ் தேசியம் முற்றிலும் ஆளும் சாதித்தேசியமாக அதற்கான பாசிச வடிவ முன்னெடுப்பில் வளர்ந்து வந்த போது அதனை அவர் ஆதரித்து எழுதியும் பேசியும் வந்தார். அந்தக் கட்டத்தில் கைலாஸ் இருந்தால் கூட தமிழினத்தேசியத்தை(அதன் ஆதிக்க சாதித் தேசியப் பண்பு பற்றிய புரிதல் கொள்ளாமல்) தவிர்க்கவியலாதவகையில் ஏற்றிருப்பார் எனக் கூறுவோர் உளர்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
‘செம்பதாகை’ பத்தி எழுத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் ‘வியாபாரக் கூட்டணி’ ( தமிழர் விடுதலைக் கூட்டணியை இப்படிதான் கைலாஸ் சுட்டினார்) இரத்தம் சிந்தா யுத்தமான அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்ட பாணி குறித்துக் கடும் கிண்டல்களுடனும் கண்டனங்ககோடும் கைலாஸ் எழுதியது பற்றி லெனின் மதிவானம் தனது கட்டுரையிலும் நூலிலும் காட்டியுள்ளார். அந்த வியாபாரக் கூட்டணியின் பிற்போக்கு தனங்களுக்கு எதிராக மார்க்சிய அக்கறையோடு இளைஞர் இயக்கங்கள் எழுச்சி பெற்று வந்தமையை க.கை. ஆர்வத்துடன் ஆதரித்து எழுதி வந்தார். அந்த இடதுசாரித்துவ இளைஞர் எழுச்சி நீடிக்க இயலவில்லை; துப்பாக்கி ஏந்திய அமிதலிங்கமாக( அமிரால் ஆசையோடு தம்பி என்று அழைக்கப்பட்ட) பிரபாகரன் தமிழனத் தேசியத் தலைமையை அபகரித்து முன்னெடுத்த பிற்போக்கு யுத்த முன்னெடுப்பு எவ்வகையிலும் அமிரிலிருந்து வேறுப்பட்டதில்லை என்பதை கைலாசபதி காணத் தவறியிருக்க மாட்டார்(சிவத்தம்பியால் காணவியலாமல் போனதற்கான காரணம் உலகமறிந்த ரகசியம்). துப்பாக்கி எந்தாத பிரபாகரனாக இருந்த அமிரின் சர்வதிகாரப் பாசிசப் போக்குகள் பற்றி அவர் தனது பத்தி எழுத்தில் பதிவு செய்துள்ளார். காந்திவாத ஜனநாயக வேடம் ப10ண்ட முன்னோடித் தலைவரை பாசிசவாதியாக இனங் கண்டவருக்கு நேச சக்திகளாக தமிழ்த் தேசியம் அரவணைத்திருக்க வேண்டிய இடதுசாரிகளைக்கொன்றொழித்த இராணுவத் தலைவரின் வெளிப்படையான பாசிச நிலைப்பாட்டை இனங்கண்டிருக்க இயலாதா?</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
கைலாசபதியும் சிவத்தம்பியும் ஐம்பதுகளின் நடுக் கூறிலிருந்து எழுச்சி பெற்ற முற்போக்கு இயக்கத்தின் வெளிபாடுகள்; அது வீறுடன் முன்னேறிச் காதனைகள் பல நிகழ்த்த ஏற்ற சிந்தனைக் கரூவ10லங்களை வழங்கியவர்கள். புதிய தளவிரிவாக்கங்களைச் சாத்தியமாக்கியவர்கள். அதன் காரணமாகவே கைலாசபதி தொடர்ந்து இருந்திருப்பின் கா.சி;. போல மாற்றச் சிந்தனைக்கு ஆட்பட்டிருப்பார் எனப் பலரும் கருத இடமேற்படுகிறது. இருவரும் மார்க்சியச் செல்நெறியில் ஒரே திசைவழியில் பயனிப்பைத் தொடங்கிய போதிலும் ஒரு தசாப்த்தத்தில் பிளவொன்றைக் கண்டவர்கள். இருவருமே மார்க்சியப் பார்வையைத் தொடர்வதாக வெளிப்பார்வைக்குப்பட்ட போதிலும், இருவேறு கருத்தியல் நிலைப்பாடுகளுடனேயே வளர்ந்தவர்கள்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இந்தப் பிளவுக்கு அடிப்படையாக அமைந்தது பாட்டாளிவர்க்க இயக்கச் செல்நெறியானது சேவியத்- சீன முகாம்களாகப் பிளவுப்பட்டதில் அடங்கியுள்ளது. சோவியத் கம்ய10னிஸ்ட் கட்சி முதாளித்துவத்துடன் சமாதான சகவாழ்வு பற்றிப் பேசி வலது விலகலைத்தொடங்கிய போது சீனத்தரப்பில் மார்க்சியத்தைப் பாதுகாக்கும முனைப்பு ஆரம்பத்தில் வெளிப்பட்டது. காலப்போக்கில் சீனத்தரப்பில் வன்முறை வழிப்பாட்டுக்கு ஆட்படுவது உள்ளிட்ட இடதுவிலகல் ஏற்படுவதைத் தவிர்க்கவியவில்லை. கலாசாரப் புரட்சி அவ்வகையில் வளர்ந்த போது அது சீன கம்ய10னிஸ்ட் கட்சியால் இடைநிறுத்தப்பட்டதை அறிவோம். இத்தகைய மாற்றச் செல்நெறிக்கு பிறகு 1981 இல் சீன பயணம் சென்று திரும்பிய க.கை. சீனாவில் அறுபதாம் ஆண்டுகளின் பிற்கூறில் முனைப்படைந்த அதிதீவிர இடதுவிலகலில் இருந்து மீள்வதற்காக முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கைகள் குறித்து எழுதியிருந்தார்(அதன் போது வலது சாய்வுக்கான வாய்ப்புகள் பற்றிய எச்சரிக்கையும் விடுத்திருந்தார்).</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இது போன்ற எந்தத் தேடலும் தெளிவும் கா.சி. அவர்களுக்குத் தான் பின்தொடர்ந்த சோவியத் ய10னியன் பற்றி இருந்ததில்லை. தனது விமர்சனங்கள் அனைத்தையும் இலங்கை மற்றும் தமிழியல் தளம் சார்ந்து மட்டுமே மேற்கொண்டார். இலஙகையில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டரசாங்கத்தில்(1970-1977) இணைந்திருந்த சோவியத் சார்பு கம்ய10னிஸ்ட் கட்சியோடு ஒட்டியிருந்தவர் கா.சி.; அக்காலத்தில் இனமுரணை தீர்க்க இருந்த வாய்ப்புகளைத் கைவிட்டதோடு மோசமான சிங்களப் பேரினவாதத் தவறுகளை அந்தக் கூட்டரசாங்கம் மேற்கொண்டது. அந்த ஆட்சிக்காலத்தில் அதுதொடர்பில் எந்த விமர்சனங்களுமின்றி கட்சியோடு இழுப்பட்டபின்னர், படுதோல்வியடைந்து நிராயுதபாணியாகிவிட்ட நிலையில் யாழ்பாண மேலாதிக்க ஆளும் சாதித் தேசிய பண்புடையதான ஈழத்தமிழ்த் தேசியத்திடம் சரணடைந்தார் கா.சி.; மட்டுமன்றிப் பாமன்னிப்புக்கோரி, இடதுசாரிகள் தவறு செய்து விட்டார்கள் – முற்போக்கு இயக்கம் பிழைகள் செய்துவிட்டது எனத்தடம் புரண்டார்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இதன் தொடர்ச்சியாக பின்நவீனத்துவம் சார்ந்த சலனங்களுக்கு ஆ;பட்டார்; மார்க்சிய நிலைப்பட்டு காதியத் தகர்ப்பு, பௌண்விடுதலை. தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எனும் போராட்டங்களைக் காண இயலாதவரானார்; பிளவு படாத விடுதலை அங்கங்களாய் இவற்றைக் கருதி, இவற்றுக்காகப் போராடு;ம் சக்திகளை ஐக்கியப்படுத்தும் குறிகோளுடன் ஆதரிப்பதாய் இருக்க வேணடிய நிலைப்பாட்டிலிருந்து விலகினார்; உலகமயமாதல் மற்றும் பின்நவீனத்துவ நிலைநின்று போராடும் மக்கள் சக்கியைப் பிளவுப்படுத்தும் வகையில் காதியவாதம்(தலித்தியம்), பெண்ணியவாதம், இனத்தேசியவாதம் என்பவை ஒன்றையொன்று எதிர்க்கும் தளத்தில் இருக்கும் வகையில் அவையொவ்வொன்றையும் ஆதரித்தார். மார்க்சியத்திலிருந்து முற்றிலும் விலகிய இத்தகைய ஒருமுனைவாத முனைப்புடைய கருத்தியலையே இறுதிக் காலத்தில் சிவத்தம்பி கொண்டிருந்தார்; முன்னாள் மார்க்சிய கருத்தியலின் அனைத்துப் பண்புகளையும் சீர்து}க்கி ஆய்ந்து முடிவுகாணும் பண்பின் சில சாயல்கள் மட்டும் அவ்வப் போது அவரது ஆளுமையை வெளிப்படத்தியது-பாதுகாத்தது.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இத்தகைய சலனங்களுக்கு க.கை. ஆட்பட அவசியமில்லாத அரசியல் செல்நெறியுடையதாக அவர் பின்பற்றிய அரசியல் அணி அமைந்திருந்தது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் சாதிவெறியர்களதும் அரசியந்திரத்தினதும் ஆயுத ஒடுக்கு முறைக்கு உள்ளான போது, வன்முறை வழிபபாட்டுக்கு எவ்வகையிலும் இடமளிக்காமல், அதேவேளை கட்சி முடிவு அடிப்படையில் அவசியமான ஆயுத வழிபட்ட பதிலடியை வழங்கிய சீன சார்பு கம்ய10னிட் கட்சியை க.கை. ஆதரித்து பின்பற்றினார். அந்தக் கட்சி கூட்டரசாங்கத்தில் தவறுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடாத்தியது; சுயநிர்ணயம் பற்றிய தேடலை இனமுரண்கூர்மையடைந்த போது தாமதமின்றி முன்வைத்தது. அந்தவகையில் எழுபதுகளில் முனைப்படைந்து வந்த வலதுசாரி பிற்போக்கு பாசிசஈழத் தமிழ் இனத்தேசியம் இழைத்த தவறுகளை அம்பலப்படுத்தியவாறே அதனை முறியடித்தவாறு என்பதுகளின் தொடக்கத்தில் எழுச்சியுற்று வந்த இடதுசாரி ஈழத்தமிழினத் தேசியத்தை வரவேற்க க.கை. யினால் இயலுமாயி;ற்று; பின்னர் ஏன் பாவமன்னிப்புக் கோரும் அவசியம் கைலாசபதிக்கு ஏற்படப் போகிறது?</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இவ்வாறு ஒப்பீட்டுக்கு உள்ளாக்குவது சில தவறான முடிவுகளுடனான எதிர்வுக் கூறல்களை நிராகரிப்பதற்கேயன்றி, எமக்கான பாதையை வகுத்து வழங்கிய இருபெரும் பேராசிரியர்களில் ஒருவரை வழிப்பாட்டுக்குள்ளாக்கி, அதை வலுப்புடுத்தவதற்காக மற்றவரைக் குறைமதிப்பீடு செய்வதற்காக அல்ல. பேராசிரியர் கா. சிவத்தம்பி தனது ஐம்பது வருட செயற்பாட்டில் முன்பாதியில் மார்க்சிய நிலைப்பாட்டில் மகத்தான பங்களிப்புகளை நல்கியுள்ளார்; பின் பாதியில் மார்க்சியத்தில் இருந்து விலகிய போதிலும் தலை சிறந்த தமிழ் அறிஞராக பங்களிப்ப நல்குவதற்கு ஏற்றதாக முந்திய மார்க்சிய அறிவு உதவியவகையில் காத்திமான தமிழியலாளராக கா.சி.இனால் திகழ முடிந்தது. அந்த வகையில் மார்க்சிய விலகல் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கற்பதற்காக களமாக இந்த ஒப்பீடு அமைய இயலுமேயன்றி கா.சி.யைக் கொச்சைப்படுத்த அவசியமில்லை- முடியக் கூடியதுமல்ல.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
அதேபோலவே, கைலாசபதி வழிபாடும் எவ்வகையிலும் அவசியமற்றதாகும் இரட்டை தேசியம் பற்றிப் புதிதாக பேச முனையும் போது கைலாசுடன் போட்டால் தான் அது நின்ற பிடிக்கும் என்பதோ, எமது சிந்தனை வெளிப்பாடுகள் அவர் பெயரைப் பராயணம் பண்ணித்தான் கவன ஈர்ப்பும் பெறவியலும் என்பதோ இல்லை. மார்க்சியச் சிந்தனை இத்தகைய பலவீனங்களுக்குரியதல்ல. மாறும் சமூக வளர்ச்சிப் போக்கில் புதிய தள விரிவாக்கத்துக்கு இடமளித்து மாற்றங்களை உள்வாங்கியவாறு புத்தாக்கம் பெறும் சிந்தனை முறையே மார்க்சியம் என்கிறவகையில் இரட்டைத் தேசியக் கோட்பாடு தன்னளவிலேயே தாக்கம்பெறும். ஆதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்யாத போதிலும் அதற்கான அடியெடுத்துக் கொடுக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை உடையவராக கைலாசபதி இருந்தார் என்பது ஒரு அவசியமான பதிவு.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<a href="http://inioru.com/wp-content/uploads/2012/05/KailasbyLenin.jpg" style="border: 0px; color: #111111; font-size: 1em; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration: none; vertical-align: baseline;"><img alt="" class="alignleft size-full wp-image-27811" height="577" src="http://inioru.com/wp-content/uploads/2012/05/KailasbyLenin.jpg" style="border: 1px solid rgb(238, 238, 238); display: inline; float: left; font-size: 1em; margin: 0px 10px 10px 0px; outline: 0px; overflow: hidden; padding: 2px; vertical-align: middle;" title="KailasbyLenin" width="392" /></a>ஆக, தேசிய இனப் பிரச்சனையை இனவாத யுத்தமாயும், காதியப் பிரச்சனையை தலித்வாதமாக்கி நட்பு நிலையில் ஐக்கியப்பட வேண்டிய அடிநிலைச் சாதிகளிடையே மோதலை ஏற்படுத்தியும் உலகமயமாதல் சூழலுக்குரிய பின்நவீனத்துவம் அடையாள அரசியலை முன்னிறுத்திய போக்கு தோல்வியுற்று, அவை எத்தகைய முன்னேற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்ற அனுபவங்களுடாக இன்றைய வரலாறு கடந்துக் கொண்டிருக்கிறது. வர்க்கப் பார்வையில் பிரச்சனைகளை அணுகும் மார்க்சிய அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இயங்காற்றலே தீர்வுகளை எட்ட உதவும் என்பதை கைலாசபதியின் வாழ்வும் பிந்திய வரலாறும் எடுத்துக்காட்டாகியுள்ளது. இருபதாம் ஆண்டுகளிலிருந்து தொடக்கம் பெற்ற சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை தேறறம் பெற்ற நாற்பதாம் ஆண்டிலிருந்து இலங்கை கம்ய10னிஸ்ட் கட்சி முன்னெடுத்து வந்தது; அதன் உச்ச வடிவமாக அறுபதுகளில் எழுச்சியுற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்துடன் தனது நடைமுறையையும் சிந்தனையையும் இணைததுக் கொண்ட கைலாஸ் தனது சமூக இயங்காற்றலைத் தொடங்கிய காலததிலிருந்து இலங்கை கம்ய10னிஸ்ட் கட்சியுடன் உறவுக் கொண்டு, புதிய சிந்தனை வீச்சுகளை வெளிப்பட இயலுமானவரானார்.<br style="border: 0px; font-size: 1em; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;" />வரலாறு வர்க்கங்களுக்கிடையேயான மோதல்களினதும் மாற்றங்களினதும் செல்நெறி மட்டுமல்ல, முன்னேறிய இனமரபுக் குழு ஆளும் சாதித்தேசமாக சமூக பண்பாட்டு ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளராகி ஏனைய இன மரபுக்குழுக்களை இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதித்தேசங்களாக மாற்றி அவற்றிடையே நடந்து வந்த போராட்டங்கள் – மாற்றங்கள் வாயிலாகவும் இயங்கிவந்துள்ளது. முன்னதான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த ஐரோப்பிய சமூகத்தில் கூர்மையான அரசியல் புரட்சிகள் சமூக மாற்ற<br style="border: 0px; font-size: 1em; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;" />வடிவமாக இருந்த போது, பின்னதாய்க் கவனம் பெறும் சாதிச் சமூகத்தில் பண்பாட்டுப் பரட்சியே சமூகமாற்ற வடிவமாக அமைந்துள்ளது. இலங்கைச் சமூகம் காதியத்தகர்ப்புப் போராட்டத்தை மார்க்சிய வழிகாட்டலில் முன்னெடுத்த வரலாற்றுச் செல்நெறியின் சிந்தனை வெளிப்பாடாக முகிழ்ந்த கைலாஸ், பக்திபேரியக்கத்தை சமூக அமைப்பு மாற்றத்துக்குரிய இயக்கு சக்தி எனக் காட்டியதன் வாயிலாக இதற்கான அடியெடுத்துக் கொடுத்தார். இவ்வகையில் மார்க்சியத்தின் எமக்கான பிரயோகத்தை இலங்கை மார்க்சியர்கள் தலைமையேற்று நடாத்திய போராட்டங்களை முன்னிறுத்தி தமிழியல் வெளிப்படுத்திய கைலாசபதி, இரட்டை தேசியம்- பண்பாடுப் புரட்சி வடிவங்கள் பற்றிய புதிய பரிமாணங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தார் என்பது அழுத்தி உரைக்க வேண்டிய அம்சமாகும். மிக சுருக்கமா நூலொன்றில் இவற்றைத் தொட்டுக்காட்டி விரிவான ஆய்வுத் தளங்களுக்கு லெனின் மதிவானம் “ பேரரிரியர் கைலாசபதி: சமூக மற்றத்துக்கான இயங்காற்றல்” எனும் இந்நூல் வாயிலாக அடிகோலியுள்ளார்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 1.5em; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
(முற்போக்கு கலை இலக்கிய மன்றம் 9.10.2011 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்த “ பேராசிரியர் கைலாசபதி: சமூகமாறறத்திற்கான இயங்காற்றல்” நூல் விமர்சன அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்துருவாக்கம்)</div>
</div>angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-24305679679585931512010-12-11T21:39:00.001-08:002010-12-11T21:39:41.752-08:00பேராசிரியர் கைலாசபதியும் இலக்கிய அமைப்புகளும் : லெனின் மதிவானம்<h1><br /></h1> <p style="text-align: justify;"><a href="http://inioru.com/wp-content/uploads/2010/12/kailasapathy.jpg"><img class="alignleft size-full wp-image-18677" title="05fl_kailasapathy" src="http://inioru.com/wp-content/uploads/2010/12/kailasapathy.jpg" alt="" width="237" height="250" /></a>1950 களுக்கு பி;ன்னர் தான் இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இக்கால சூழலில் ஆசியா – ஐரோப்பா மற்றும் உலகலாவிய ரீதியிலே தொழிலாளர் வர்க்கம் சார்ந்த உணர்வுகளும் போராட்டங்களும் வலிமை பெறத் தொடங்கின. பாஸிசத்திற்கு எதிராக பலமான மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்றிருந்தன.</p> <p style="text-align: justify;">1930 களில் ஸ்பானியர்கள் உள்நாட்டு யுத்தத்திற்கு எதிராக போராடியதுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாகி ஆயிரக் கணக்கான மக்கள் சமத்துவமான சமூதாய அமைப்பை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இக்காலப்பின்னனியில் ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் பல விடுலை இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தன. இவ்வாறே ஆசியாவிலும் குறிப்பாக சீனா இந்தோNசியா முதலிய நாடுகளில் ஜப்பானிய பாஸியத்தை எதிர்த்து வீறு கொண்ட போராட்டங்கள் தோன்றி மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.</p> <p style="text-align: justify;">பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைந்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். சிலர் பாஸிச வெறியாளர்களாரல் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டார்கள். தன் மரண வாயிலில் நின்றுக் கொண்டும் மனித குலத்தின் நாகரிகத்தை நம்பிக்கையுடன் மட்டுமல்ல கூடவே கர்வத்துடனும் தன் எழுத்துக்களின் ஊடாக பதிவு செய்த ஜீலியஸ் பூசிக்கின் பின்வரும் வாசகம் இக்காலத்தே எழுந்த மக்கள் இலக்கிய கர்த்தாக்களின் உணர்வுகளை அழகுற எடுத்துக் காட்டுகின்றது. </p> <p style="text-align: justify;"> இன்பத்திற்காகவே பிறந்தோம். இன்பத்திற்காகவே வாழ்நகிறாம். இன்பத்திற்காகவே போராடினோம். அதற்காகவே சாகின்றோம். துன்பத்தின் சாயலானது இறுதி வரை எம்மை அணுகாதிருக்கட்டும் இவ்வகையான இலட்சிய பீடிப்பும் இலக்கிய தாகமும் கொண்ட எழுத்தாளர்கள் உலக இலக்கியத்தில் தோன்றிக் கொண்டிருந்தாரகள். இதன் பிரதிபலிப்பை நாம் இலங்கை தமிழ் இலக்கிய செல்நெறியிலும் காணக் கூடியதாக உள்ளன.</p> <p style="text-align: justify;">இக்காலப்பகுதியில் இலங்கை அரசியல் வரலாற்றினை பொறுத்தமட்டில் நாற்பதுகளின் இறுதியிலும் 50 களிலும் பொதுவுடமை இயக்கமானது வீரியத்துடன் செயற்படத் தொடங்கியது. 1953 இல் சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளும் ஒன்றினைந்து மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவ்வியக்கம் ஏற்படுத்திய கலாசார பண்பாட்டுத் சூழலில் தோற்றம் பெற்றதே முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளையும் கொள்கைகளையும் முன்னெடுப்பதில் இவ்வணியினருக்கு முக்கிய பங்குண்டு. இதன் பின்னணியிலே மக்கள் சார்பான இலக்கியங்களும் இலக்கிய கோட்பாடுகளும் தொற்றம் பெறலாயின.</p> <p style="text-align: justify;">1950 களுக்கு பின்னர் இலங்கை இலக்கியத்தில் புதியதோர் பரிமாணத்தை தரிசிக்க கூடியதாக அமைந்திருந்தது. இலங்கையில் தேசிய இலக்கியம் எனும் குரல் எழுந்தது. தேசியம், தேசிய கோட்பாடு என்பன தத்துவார்த்த போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக இலங்கை மண்ணுக்கே உரித்தான பிரச்சனைகள் இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. இது குறித்து கைலாசபதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.</p> <p style="text-align: justify;">ஷஷதேசியப் பின்னணியில் வளரும் சமுதாயத்தின் போக்கை அனுசரித்து வாழ்க்கைக்கு கலைவடிவம் கொடுக்கவும் சரித்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கவும் திறமையிருந்தால் சிறந்த – உலக இலக்கியத்தில் இடம்பெறத்தக்க உயர்ந்த சிறுகதைகளைப் படைக்க எமது எழுத்தாளாரால் முடியும் என்றே நம்புகிறேன். பொழுதுபோக்கிற்காக எழுதுவதா அல்லது பொது நலத்திற்காக எழுதுவதா என்னும் முக்கியமான கேள்வி இன்றைய எழுத்தாளர் பலரையும் எதிர்நோக்கி நிற்கிறது. இது புதிய கேள்வியன்று.</p> <p style="text-align: justify;"> வௌவேறு வடிவத்திலும் உருவத்திலும் இலககிய சிருஷ்டி கர்த்தாக்களை விழித்துப் பார்த்த கேள்விதான். ஆனால் இன்று மிக நெருக்கடியான நிலையிலே இக்கேள்வி எழுத்தாளரை நோக்கிக் கேட்கப்படுகிறது. ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் தமது கலாச்சாரப் பாரம்பரியத்தையுணர்ந்து நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலையெய்தவும் மூட்டும் அன்புக் கனலோடு எழுத முடியுமா முடியாதா என்பதைப் பொறுத்திருக்கிறது எதிர்கால இலக்கிய வாழ்வும் தாழ்வும்’</p> <p style="text-align: justify;">இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதாகும்,. ஒரு நாட்டின் பூலோக பண்பாடு பொருளாதாரம் அரசியல் முதலிய அம்சங்கள் சமூக வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. அவ்வகையில் பிரதேசம், மண்வாசனை என்ற அடிப்படையில் எழுகின்ற இலக்கியங்களை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பாரக்கின்ற போது குறுகியவாதகமாக படலாம். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னனியில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தம் சாதனங்களாகவும் அவை அமைத்துக் காணப்படுகின்ன. மறுப்புறமாக அவை தேசிய எல்லைகளை கடந்து சென்று சர்வதேச இலக்கியமாகவும் திகழ்கின்றன.</p> <p style="text-align: justify;">இவ்வாறுதான் ரசிய புரட்சியின் முன்னோடியாக திகழ்ந்த மாக்ஸிம் கோக்கியும் , இந்திய தேசியவிடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பாரதியும் இன்னும் இத்தகையோரும் எமக்கும் அரசியல் இலக்கிய முன்னோடிகளாக திகழ்கின்றனர்.</p> <p style="text-align: justify;">இ.மு.எ.ச நிறுவப்பட்ட காலத்தில் கைலாசபதி; பேராதனை பல்கலைகழக மாணவராக இருந்தார். அவர் இத்தகைய இயக்கத்தின் தோற்றத்தை உள்ளுற வரவேற்றதுடன் காலப்போக்கில் அதனால் கவரப்பட்டு அதன் நிகழ்வுகளிலும் பங்கேற்றார். அத்துடன் அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானதுடன் இ.மு.எ.ச வின் யாப்பு, கொள்ளை வகுத்தல் முதலிய செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுப்பட்டார். 1957 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த இ.மு.எ.ச வின் முதலாவது பேராளர் மாநாட்டில் பிறநாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்குபற்றினர். இம்மநாட்டில் உலக புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் உரையை மொழிப்பெயர்த்தவர் கைலாசபதி.</p> <p style="text-align: justify;">01. இம்மநாட்டில் மக்கள் கலை இலக்கிய கோட்பாடு குறித்த விவாதங்கள் தோன்றியுள்ளன. யாதார்த்தவாதம் ,சோசலிச யதார்த்த வாதம் குறித்த விவாதங்கள் இடம்பெற்றபோது அத்தகைய அனுபங்களையும் உள்வாங்கி நமது சூழலுக்கான இலக்கிய கோட்பாட்டை உருவாக்கியதில் இ.மு.எ.ச முக்கியபங்குண்டு. ‘கியூபாவின் ஜூலை 26 இயக்கமும், நிகாரகுவில் சான்டினிஸ்டா முன்னணியும் தங்களது போராட்டங்களில் வெல்ல முடிந்ததற்கு ஏற்கனவே இருந்த தேசிய விடுதலைப்போராட்ட மரபை அவை முன்னெடுத்து சென்றது ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யாரோ கூறியது போல, அவர்கள் தங்களது புரட்சிகளை ஸ்பானிய மொழியில் நடாத்தினர்: ரசிய மொழியில் அல்ல. மார்ட்டியும், சான்டினோவும் அவர்களது ஆன்மீக முன்னோடிகள். சமீபத்திய வெனிசுலா புரட்சியிலும் இது நடந்துள்ளது. தலைவர் ஹியூகோ சாவேசுக்கு சைமன் பொலிவார், சைமன் ரோட்ரிக்;ஸ் ( பொலிவாரின் ஆசிரியர்) மற்றும் எஸ்குயேல் ஜமாரா ஆகியோரின் சிந்தனைகளுக்கு எப்படி புததுயிர் அளிப்பது என்பது தெரிந்திருந்தது’( மார்த்தா ஹர்னேக்கர், தமிழில்: அகோகன் முத்துசாமி, (2010), இடதுசாரிகளும் புதிய உலகமும், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.75)</p> <p style="text-align: justify;">இவ்வகையில் சோசலிச யதார்த்தவாதம் குறித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட போது அது அன்றைய சூழலில் இலங்கைக்கு பொருத்தமற்றதொன்றாகவே காணப்பட்டது.; பண்பாட்டுத்துறையில் சமூகமாற்ற்ததிற்கான போராட்ட வடிவமானது மண்வாசனை இலக்கியம் அமைந்திருப்பதனையும் அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியாகவே தேசிய இலக்கியம் அமைந்திருப்பதனையும் வரலாற்று அடிப்படையிலும் சமூதாய நோக்கிலும் உணர்ந்து செயற்பட்டமையே இ.மு.எ.ச.த்தின் முக்கியமான சாதனையாகும். அவ்வியக்கத்தில் இத்தகைய கோட்பாடுகளை உருவாக்குவதில முன்னணியி; செயற்பட்டவர் கைலாசபதி; என்பதை ஆய்வாரள்கள் சுட்டிக் காட்டுவர்.</p> <p style="text-align: justify;">அத்துடன் இ.மு.எ.ச.த்தின் பணிகளை தமது மாணவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் சென்றதுடன் அவர்களை இவ்வியக்கத்தில் சேர்ப்பதிலும் முக்கிய கவனமெடுத்துள்ளதையும் அறிய முடிகின்றது.</p> <p style="text-align: justify;">இவ்வகையில் செயற்பட்டுவந்த இ.மு.எ.ச மானது 1960 களின் ஆரம்பத்திலேயே அது சித்தாந்த ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் சிதைய தொடங்கியது என்பதனையும் கவனத்திலெடுக்க வேண்டும். இலங்கையின் பொதுவுடமை இயக்கத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளும் பொதுவுடமை இயக்கத்தை பிளவுக்குள்ளாக்கியது. இ.மு.எ.ச. பல தேசிய ஜனநாயக சக்திகளை தன்னகத்தே கொண்டிருந்த போதினும் அவ்வியக்கத்தில் அங்கம் வகித்த பலர் இடதுசாரி கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள்.மேற்படி பிளவும் அணி பிரிதலும் இ.மு.போ.எ.ச.த்தையும் பாதித்தது. அதன் தலைமை பொறுப்பினை ஏற்றிருந்தவர்களின் போக்கு இவர்களை சித்தாந்;த ரீதியாக சிதைத்து பின் இயக்க ரீதியான சிதைவுக்கு வழிவகுத்தது.</p> <p style="text-align: justify;">மனுக்குல விடுதலைக்கான பரந்துப்பட்ட ஐக்கிய முன்னனிப் போராட்டத்தில் இவ்வியக்கத்தின் பலம் பலவீனம் குறித்து ஆழமான ஆய்வொன்றினை காய்த்தல் உவத்ததலின்றி செய்தல்; காலத்தில் தேவையாகும்.</p> <p style="text-align: justify;">இ. மு. போ. எ. ச வீறுக்கொண்டெழுந்த காலத்திலும், பின்னர் அதன் தளர்வுற்றக் காலத்திலும் இவ்வியக்க செயற்பாடுகளில் கைலாசபதி பங்கெடுத்தார். தன்னால் முடிந்த மட்டும் அதனை முற்போக்கான திசையில் வைத்திருப்பதற்கே அவர பெரும் முயற்சியெடுத்திருந்தார்.</p> <p style="text-align: justify;">இத்தகைய இ.மு.எ.ச.த்தின் சிதைவுக்கு பின்னர் அன்றைய காலத்தின் தேவையை அடியொட்டி உருவாக்கபட்டதே தேசிய கலை இலக்கிய பேரவையாகும். அதன் வெளியீடாக தாயகம் என்ற சஞ்சிகையும் வெளிவந்தது. கைலாசபதி தேசிய கலை இலக்கிய பேரவையின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதுடன் தாயகம் சஞ்சிகைக்கும் கட்ரைகள் எழுதினார். ‘பாரதி பன்முக ஆய்வு’ என்ற தொணிப்பொருளில் நடைப்பெற்ற இலக்கிய அமர்வுகளில் அவரது கட்டுரைக்கும் மற்றும் இறுதி அமர்வையும் (சுகயீன முற்றிருந்ததால்) தவிர ஏனைய சகல அமர்வுகளுக்கும் அவரே தலைமையேற்று நாடாத்தியதுடன் கட்டுரைகளை நெறிப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றி வந்துள்ளதை அறிய முடிகின்றது. இவ்வமைப்பின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார் என்பதற்காக அதில் அங்கம் வகித்திருந்தார் என வலிந்துக் கூறுகின்ற அபத்தமாகும். பின்னாட்களில் இவ்வமைப்பில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் அவற்றினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களும் அதி தீவிரவாத சிந்தனைகள் யாவும் இவ்மைப்பு தனது பாதையிலிருந்து தடம் புரண்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் இ.மு.எ.ச. எப்படி இயங்கியதோ அதே பாணியில் தான் இன்று இவ்வமைப்பு இயங்கிக் கொண்டிருபபதை காணலாம். வருடந்தோறும் கைலாசபதிககு விழா எடுத்துக் கொண்டே கைலாசபதியின் அடிப்படைகளிலிருந்து விலகியுள்ளமையும் சகல தேசிய ஜனநாயக சக்திகளின் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளை மேற்கொள்ளவதாலும் இப்பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இப்போக்கானது உழகை;கும் மக்கள் குறித்த எவ்வித கரிசனையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட அதித புத்திஜீகளின் சுயரூபத்தைக் காட்டி நிற்கின்றது.</p> <p style="text-align: justify;">அவ்வாறே கைலாசபதி மலையக கலை இலக்கிய பேரவையுடனும் தொடர்புக் கொண்டிருந்தார். அதன் செயலாளரான அந்நனி ஜீவாவை நெறிப்படுத்தியதுடன் அவ்வமைப்பின் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.</p> <p style="text-align: justify;">ஒருவருடைய முயற்சிகள் போராட்டங்கள், எப்படியிருந்தாலும் அவர் பற்றிய மதீப்பீடுகளை செய்ய நோக்கங்களை மட்டும் பார்க்க கூடாது. அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளையும் நோக்க வேண்டும். இந்த வகையில் கைலாசபதியை பொறுத்தமட்டில் இலக்கிய அமைப்புகளுடன் கொண்டிருந்த தொடர்பானது ஒரு நாகரிகமானதொரு சமூதாயத்திற்காகவும், புதியதோர் தென்றலுக்காகவும், தமது செயற்பாடுகளை, ஆக்க இலக்கிய முயற்சிகளினூடாக முன்னெடுத்து வருவதாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் தாம் உறவுக் கொண்டிருந்த இலக்கிய அமைப்புகளினூடாக முற்போக்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.</p> <p style="text-align: justify;">உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.</p> <p style="text-align: justify;">இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்;வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார்.</p> <p style="text-align: justify;">கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வௌ;வேறுவகையில் கைலாசபதி உதவியுள்ளார்.</p> <p style="text-align: justify;">இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. ‘பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே’ என்ற வ. ஐ. ச. ஜெயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.</p> இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. ஆதனை மார்க்சிய முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் விளங்கிக் கொள்ளும் விதமும் தமதாக்கிக் கொள்ளும் விதமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும், இருக்கவேண்டும்angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-62184519235857056942010-10-23T13:52:00.001-07:002010-10-23T13:52:27.830-07:00பண்டைய தமிழ் சமூகம் மற்றும் சரித்திரத்தின் பிரதானமான மறுசிந்தனைகளுக்கு கைலாசபதியே காரணம்.<p style="line-height: 20px; text-align: left;"><b><span style="font-family: Latha; font-size: 14px;">பண்டைய தமிழ் சமூகம் மற்றும் சரித்திரத்தின் பிரதானமான மறுசிந்தனைகளுக்கு கைலாசபதியே காரணம்.</span></b></p> <p style="line-height: 20px; text-align: right;"><span style="font-family: Latha; font-size: 12px;">ஆக்கம்: கேசவன் வேலாயுதர்</span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;"><img id="Bild772" src="http://www.thenee.com/assets/images/kailasapathy.jpg" alt="kailasapathy" title="kailasapathy" align="left" border="0" vspace="0" width="237" height="250" hspace="0" />கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த முக்கிய திருப்பமாக சங்க இலக்கியங்கள் எனப் பிரசித்தி பெற்ற தமிழ் இலக்கியத் தொகுப்புகள் பலவும் மறக்கப் பட்ட நிலையிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் இதுவரை காலமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த தமிழ் இலக்கிய நெறிமுறைகள் யாவும் தலைகீழாக மாற்றம் பெற்றன. ஆயினும் தமிழ் நாட்டிலும் அத்தோடு இலங்கையிலும்(தற்போது ஸ்ரீலங்கா) ஓரளவுக்கு பழைய சைவ இலக்கியத் தொகுப்புகள் தொடர்ந்தும் பிரியத்துடன் போற்றப்பட்டு வந்தன. இது ஆரம்பகால தென்னிந்தியக் கலாச்சாரம் மற்றும் சரித்திரத்தை விளக்கும் புதியதோர் அத்தியாயத்தின் ஆரம்பத்தினை நிரூபித்தது. ஒரு உண்மையான புரட்சியாகத் தமிழ் மொழியினை ஏனைய செம்மொழிகளான சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுடன் சேர்த்துக் கொள்ளும் வழியமைந்தது.</span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;">இச்சிறப்பு வாய்ந்த செய்கையின் விளைவாக எப்படியாயினும் பண்டைய தென்னிந்தியாவின் வெட்கமற்ற சிறப்புகளின் ஒவ்வொரு ஆக்கக்கூறுகளையும் கொண்ட தேசிய எழுத்தாளர்களின் பாரம்பரிய அடையாளம் உருவாயிற்று. இந்நடைமுறையினால் சரித்திரத்தின் கடந்த காலம் நிகழ்காலத்தை விடச் சுருங்கியதுடன் சான்றுகள் யாவும் ஒரு தொல்லையாக ஒரு பொறுப்பாக ஆகின. எழுத்துக்களின் மாற்றம் அதன் சூழலுக்குத் தக்க வகையில் கேள்விப்படாத ஒன்றாயிற்று. ஓரு சரித்திர ஆசான் தீவிரமான ஆராய்ச்சியின் வெளித்தோற்றத்தை அல்லது இலக்கிய விமர்சனத்தை எழுதியிருந்தால் அது சில ஒப்புமையான இலக்கிய நயத்தைக் காட்டியிருக்கும். ஆனால் அவைகள் மிக அதிகமான காட்டிக் கொடுப்பனவாகவே உபசரிக்கப் பட்டதுடன், சரியான அறிவுசெறிந்த விமர்சனங்களையும் சந்திக்கத் தவறிவிட்டன.</span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;">ஒருவர் கனகசபாபதி கைலாசபதியின் பணிகளுக்கு காட்டவேண்டிய அளவுகடந்த பற்றுதலுக்கு சமீபமான பின்னணிக்கு இது முற்றிலும் எதிரானது. சங்க இலக்கியங்களின் கண்டுபிடித்தலுடன் கொண்டுவரப்பட்ட புரட்சியானது ஒருவகையான பழமைசார்ந்ததும், பண்டைய இலக்கிய ஆராய்ச்சிகளின் பயனாக ஆரம்பிக்கப்பட்ட தீவிர சிந்தனைகளுக்கும் அதன் அடிப்படையிலான சமூகப் படிப்பினைகளுடனும் பொருத்தப் படுகிறது. அநேகமாக பண்டைக்கால தென்னிந்திய சரித்திரக் கற்கைகளுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ள கல்விமான்களான இலங்கையைச் சேர்ந்தவர்களான கைலாசபதி, அதேபோல கார்த்திகேசு சிவத்தம்பி அல்லது சுதர்ஸன் செனவிரத்ன மற்றும் இத் தொகுப்பின் ஆசிரியர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்களாவார்கள். ஏனெனில் முற்றிலும் சங்க இலக்கியம் சாராத இலட்சியங்களின் பாரம்பரியத்துக்கு இவர்கள்தான் வாரிசுகள். கைலாசபதி ஆற்றியுள்ளவை ஓரளவே பழமை சாராதவை. 1968 ல் அவரது நூலான ‘வீர கவிதைகள்’ பிரசுரமானபோது அது சொல்லியது நரம்புகளை உறைய வைக்கும் தமிழக்;கால வீரர்களின் மகிமையை.”சங்கம் கவிதைகள் என்கிற தலைப்பு ஒரு தவறான சொல்வழக்கு” என்கிற ஓரளவு அதிர்ச்சியான அறிவிப்புடன் அவர் தனது நூலை ஆரம்பித்திருக்கிறார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை அதன் கட்டமைப்புக்குள் ஆராயும் போது வாய்வழி இலக்கிய நுட்பங்களைப் பயன்படுத்தி அவை விளக்குவது வீர கவிதைகளின் சிறப்பான உணர்வுகளை என்று காண்பிக்க முயன்றுள்ளார்.</span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;">எச்.எம் மற்றும் என்.கே.சாட்விக் ஆகியோரின் வியத்தகு பணியினால் உருவான “இலக்கிய வளர்ச்சி” நூலின் நினைவூட்டல் குறிகளையும் மற்றும் ரியோத்ரோனிக் ,கிரீக், ஐஸ்லாந்து,சல்வேனியா, சமஸ்கிருதம், சுமெரிய, ஆபிரிக்க, வாய்வழி கவிதை ஆய்வுகளின் முடிவுகளையும் எடுத்துக் கொண்டால் கைலாசபதி செயல்முறைப் படுத்தியிருப்பது தமிழ் கவிதைகளின் அடிப்படையிலான வாய்வழிக் கதாபாத்திரங்களையே. ஹோமரின் காவியங்களை ஆராய்ந்த மில்மான் பாரி என்பவரது ஆராய்ச்சி முடிவுகளையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். வீர கவிதைகளின் கற்கைகளில் அவை “உலகளாவிய கோட்பாட்டு” அந்தஸ்தினைக் கொண்டவை. சாட்விக் மற்றும் பாரியின் ஆராய்ச்சிகள் ஒருமுகமாக உதவியிருப்பது பண்டைய கவிஞர்கள் மற்றும் கவிதா பாரம்பரியங்கள் அத்தோடு அவர்களின் சமூக நடைமுறைகள் என்பனவற்றோடு இக் கவிதைகள் எழுதப்பட்ட கால மனஉணர்வுகளையும் விளங்கிக் கொள்ள கைலாசபதிக்கு உதவியுள்ளன. </span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;">கைலாசபதியின் முடிவுகள் தென்னிந்தியத் தமிழின் பெருமைக்கு மிகவும் அதிகம் என்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் கைலாசபதியின் நூலானது பல வருடங்களாகத் தென்னிந்தியாவில் இருட்டடிப்புச் செய்யப் பட்டிருந்தது. அவருக்கு 49 வயதானபோது புலமைத்துவ உலகம் அவரை இழந்துவிட்டது. பேராசிரியர் கைலாசபதியின் நினைவுப்பெட்டகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் அவரது 25ம் வருட நினைவஞ்சலியின் போது மீளாய்வு செய்யப் பட்டது. கைலாசபதியின் நெருங்கிய சகாவான கார்த்திகேசு இந்திரபாலாவினால் முன்வைக்கப்பட்ட இந்நூலில் குறுகிய சுயசரித வரைபுகளுக்கு அப்பாற்பட்ட புகழ்பெற்ற கல்விமான்களினால் ஐந்து கட்டுரைகளும் மற்றும் ஒரு பகுதி கைலாசபதியின் முதல்தர நூலாகிய தமிழ் வீர கவிதையின் சுருக்கிய வடிவமாகவும் உள்ளது. பண்டைய தென்னிந்திய வரலாற்று எழுத்தாண்மையில் சமகாலப் பகுதியினர் யார் யார் என்கிற உண்மையையும், கைலாசபதிக்கு நினைவாஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருக்கும் எழுத்தாளர்களின் பெயர்களின் எண்ணிக்கையும் உள்ளது.</span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;">ஆசிரியரின் அறிமுகத்தில் கைலாசபதியைப் பற்றிய மிகவும் தனிப்பட்டதான ஆனால் விளக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் அதைத் தொடர்ந்து சுருக்கமான விளக்கத்துடன் தற்போதுள்ள தகவல்களுடனும், இந்த விடயத்திற்கு தேவையான பெறக்கூடிய சகல பணிகளையும் உள்ளடக்கிய பண்டைய தென்னிந்திய வரலாறு மற்றும் திருத்தப்பட்ட மரபுவழி பற்றி படம் போடப்பட்ட மகிமைமிக்க பண்டைக்கால தமிழகவரலாறு இப்போது கிடைக்கக் கூடியதாகவுள்ளது. முந்திய கொண்டாட்ட நடைமுறைகளுக்குத் திரும்பும் வழமையான முயற்சிகள் இந்நிலையிலும் உண்டு. இந்த அருமையான வெளிப்பார்வையைத் தெடர்ந்து தொகுப்பு தணிக்கை செய்யப் பட்ட கைலாசபதியின் தமிழ் வீர கவிதையுடன் ஆரம்பிக்கிறது. கைலாசபதியின் சொந்த ஆக்கமான பழந்தமிழ் இலக்கியம் இந்தப்பகுதியில் இடம் பெற்றிருப்பதும் ஆச்சரியமான விடயம். ஒன்றோ இரண்டோ கேள்விகள் அந்தக் குறிப்பிட்ட பகுதியைப்பற்றி எழக்கூடும். அது பழந்தமிழரைப் பற்றிய ஒரு ஆய்வுத் தொகுப்பு. கைலாசபதியின் வழித்திரிவான வேலைகளை அது உண்மையில் எடுத்துக் கூறவில்லை. புத்தகத்தின் வேறு எந்தப் பாடமும் வாசகருக்கு அந்த முன்னோடி எழுத்தாளர் செய்தவைகளால் உண்மையில் ஒரு சுகந்த அனுபவம் கிட்டியிருக்கக் கூடும். விசேடமாக மூன்றாவது (கவியும் கவித்துவ பாரம்பரியமும்) நான்காவது (வாய்மொழிச் செய்யுள் உருவாக்கும் உத்தி) அல்லது ஆறாவது (வீரர்களின் உலகம்) அதில் சேர்;க்கப்பட்டுள்ள தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலையின் பகுதியினையும்பற்றிய கலந்தாய்வினை விட்டுவிடுவது சரியான காரணமாகாது.</span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;">கே.இராஜனின் “தமினி வரைபுகள் மற்றும் குகைப் பதிவுகள்: தமிழ் நாட்டிலுள்ள பிரமிப் பதிவுகள்” என்கிற கட்டுரை, தமிழ் பிரமி அல்லது குகை வரி வடிவுகள் என அறியப்படும் தமிழ்நாட்டின் வெட்டெழுத்துக்களைப் பற்றிய ஒரு விரிவான கற்கையாகும்.அதன் முழுமையை எடுத்துக் கூறுவதற்கிடையில் இராஜன் மட்கல உடைசல்களில் பொறிக்கப் பட்டுள்ளவைகளை கல்வரைபுகளின் காலகட்டத்திற்கு ஏற்ற இடத்தில் பயன்படுத்தியிருப்பது, அந்தக் கட்டுரைக்கு குறிப்பிடத்தக்க பலத்தைக் கொடுத்துள்ளது. எப்படியாயினும் எழுத்தாளனின் முடிவுகளை ஒருவரால் முழவதுமாக ஏற்றுக்கொள்ள இயலாதிருக்கிறது, உதாரணத்துக்கு பண்டைய வரலாற்றுக் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்த முந்தைய சமூகத்தைப் பற்றி அவர் விமரிசிக்கும் அவரது கருத்தை. மௌரியான் அல்லது வட இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட வரிப்படிகளின் பதிவுகளுக்கு மற்றும் ஆழமான உட்பதிவுகளைக் கொண்ட பிரக்ரிட் போன்றவைகளுக்கு மேலும் சான்றுகள் தேவை, முக்கியமாக வற்புறுத்தப்படும் சாட’சியங்களுக்கு எதிராக. பிரதிகளின் தமிழ் தோற்றத்தைக் காட்டுவதில் ஒருவகை அதீத ஆர்வத்துடன் கூடிய சுவை தென்படுகிறது, அதாவது கைலாசபதி சார்ந்து நின்ற உணர்வுகளுக்கு எதிரான சிலவற்றில்.வை.சுப்பராயலுவின் ஆராய்ச்சி ஏட்டில் “விசாகி மற்றும் குவிரான்: தமிழ் பிரமி வெட்டெழுத்துக்களின் வரலாற்று நடைமுறை” எடுத்தியம்புவது பதக்கத்தின் மறுபக்கத்தை. அது அவரது முந்தைய கட்டுரையான மட்கல வெட்டெழுத்துக்களுடன் சேர்த்து வாசிக்கப் படவேண்டும்,அது தமிழ் வெட்டெழுத்தியலில் அனுபவம் மிக்க மூப்பரான ஐராவதம் மகாதேவனின் தொகுக்கப்பட்ட கட்டுihப் பாகங்களில் காணப்படுகிறது. விட்டுக்கொடுப்புகள் இல்லாத விரிவான கவனிப்பு,முறையான பகுப்பாய்வுகள், பிரச்சினைகளை அணுகும் நடுநிலமை, ட்டுரை முழுவதும் காணப்படும் துறைமைத்திறம் என்பன சுப்பராயலுவின் மற்றைய எழுத்துக்களில் காணப்படுவது போன்றே இதிலும் விளக்கமளிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது.</span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;">அவரைப் பொறுத்தமட்டில் அவரது முடிவுகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க நடைமுறை, வெட்டெழுத்துக்களில் காணப்படும் பெயருள்ள ஆட்களை இனங்காணவும் பயன்பட்டிருக்கிறது. “பிரகிருது பேசிய வியாபாரிகள்தான் பிராமி வரிவடிவுகளை தமிழ் தேசத்தில் அறிமுகப்படுத்தத் தொடங்கிய ஆதி முதல் கருவிகள்” மௌரியர் ஆட்சிக்காலத்தில் மகதாப் பிராந்தியத்திலிருந்து கி.பி. 3ம் நூற்றாண்டளவில் பிரமி எழுத்துக்களின் முழுவடிவம் கிடைக்கப்பெற்றபின் உடனடியாக நடந்திருக்க வேண்டும். சுப்பராயலு மேலும் தீவிர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார், அது வியாபாரிகள் தமது இடையீட்டில் எழுத்தறிவை பரப்புவதற்குப் பயன்படுத்தியது.கையிலுள்ள பிரச்சினைகளின் நடைமுறைகளின் நோக்கத்துக்கு மறுபுறமாக ஒரு குறிப்பு. கே.இந்திரபாலா தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்தும் பிரச்சினையைக கையாளுகிறார்.இந்திரபாலா விவாதிப்பது தமிழ் அடையாளத்தின் இருப்புகளை இனம், அரசியல், அல்லது மத அடையாளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு.தமிழ் தன்னை அடையாளம் காட்டும் தனிச்சிறப்பை வேறு மொழிபெயர் Nதுசங்களிலும் ஏற்படுத்தியிருக்கிறது. இருந்த போதும் தெளிவாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்பேசும் பிராந்தியங்களில் பண்டைய வரலாற்றுக்கால ஆவணங்களில் தமழ்கூறும் நல்லுலகம் எனக் கூறப்பட்ட அடையாளம் காணப்பட்ட ஒரு தமிழ் பேசும் இனக்குழுவும் கிடைக்கவில்லை.</span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;">இந்த உலகம் நிச்சயப் படுத்திக் கொள்ளவேண்டியது யாதெனில் வித்தியாசமான இனக்குழுவினரின் தாயகம், அரசியல் பிரிவுகள் மற்றும் பல்வேறு மதநம்பிக்கையுள்ள மக்கள் என இவையாவும் தமிழின் அடையாளத்தை ஒருங்கிணைக்கும் வழியாக நிற்கப் போவதில்லை.இந்த வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து மாற்றி, பழங்குடித் தடைகள் யாவற்றையும் கடந்த ஒரு பெரிய குழு பண்டைத் தமிழ் வரலாற்றில் தமிழ் மொழியை தங்களை இனங்காட்டும் அடையாளமாகக் கொண்டிருந்திருக்கிறது. ஒரு சகாப்தத்தினை மாற்றியமைக்கும் ஒரு பிரிவின் பிரதிநிதிகளாக அவர்கள் கருதப்படுவதும் மற்றோர் காரணம். ஒரு தகுதிவாய்ந்தகண்ணோட்டத்தில் பண்டைய வரலாற்றுத் தமிழ்க்காலக் காட்சியின் வெளித்தோற்றம் ஆர். சம்பாலட்சுமியினால் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பிரச்சனைகளை வௌ;வேறு தரங்களில் ஆராய்வதோடு மட்டுமன்றி ஆய்வின் முடிவுகளைத் தொகையிட்டு பண்டைய தென்னிந்திய நடைமுறைகளை நம்பகமான சித்திரம் போல தன் வேலைகளில் எடுத்துக் கூறியுள்ளார். சிறப்பியல்பான ஒரு பணிவு அவரது கோரிக்கைகளில் உள்ளது.(அவர் கூறுவது: “ஆய்வுகளினால் பெறப்படும் அதியுயர் முக்கியத்துவமான அந்தக்கால தமிழ் சமூகத்தின் புதிய நுண்ணறிவுகளைத் திரும்பவும் மாற்றுவதற்காக எந்தக்கோரிக்கையும் எழுப்பப் படவில்லை”.) எப்படியாயினும் தமிழ்சமூகத்தின் பண்டைய சரித்திர காலப் பகுதியின் முந்திய காலப்பகுதியிலும் அதுமுதலான ஆரம்ப இடைக்காலப் பகுதியிலும் தோற்றம் கொண்ட உருமாற்றத்தை விளக்குவதற்கு மாற்றீடு செய்யக்கூடிய புதிய வெளித்தோற்றத்தை அறிமுகம் செய்யும்படி அவர் அழுத்தம் பிரயோகிக்கிறார். அவர் இதைச் செய்ய விரும்புவது, பண்டைய சமூகங்களைப் பற்றிய சமீபத்திய கற்கைகளின் செயல்முறைநுட்ப முன்னேற்றங்களினாலும் மற்றும் வரலாற்றியல் புவியியல் சேர்ந்த அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க மறுவாசிப்பு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டதையும் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக. தமிழ் ஆhவலர்கள் தமிழ் கலாச்சாரத்தின் பெருமையைப் பற்றி வாதிடுவதற்கான வழிகளில் ஒன்றாக சமஸ்கிருதம் மற்றும் இந்தோ – ஆரிய செல்வாக்கினைத் திராவிடன் என்ற பொருளில் மறுத்துரைக்கிறார்கள். வீ.சிவசாமியின் கட்டுரை “பிராமணர்கள் மற்றும் யாகர்கள்: வைதீக எண்ணங்களின் பரவல்” அதற்குக் குறிப்பிடத் தக்கதோர் திருத்தம். அவர் வழங்குவது தமிழ்நாட்டில் காணப்படும் வைதீக எண்ணங்களினதும்,செயற்பாடுகளினதும் ஐயத்துக்கு இடமில்லாத சான்றுகள். எம்.ஜீ.எஸ். நாராயணன் வேத – சாத்திர – புராண மூலகங்களை மூன்று தசாப்தங்களுக்கு முன்பே பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டிருந்தாலும்,இந்தக் கட்டுரை இந்தச் சூழ்நிலையில் மிக முக்கியமாக வழங்கியிருப்பது தமிழ் நாட்டு சமூக கலாச்சாரங்களுக்கு உண்மையான பாராட்டுகளை.இது சார்பாக அதன் முடிவுவரை பணியாற்றிய கைலாசபதியின் நினைவுகளுக்கு இக்கட்டுரை ஒரு புகழாரம். </span></p> <p style="line-height: 20px; text-align: justify;"><span style="font-family: Latha; font-size: 12px;">புத்தகத்தின் முடிவில் நான்கு இணைப்புக்கள் உள்ளன.பட்டினப்பாலை மற்றும் புறநானூற்றிலிருந்து ஒரு பாடல் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு.எழுத்துக்களும் மொழிபெயர்ப்புமான மூன்று தமிழ் - பிரமி குகை ஆவணங்கள்.பி.ரி.சிறினிவாச ஐயங்காரின் சங்ககாலப் புராணக்கதையின் மொழிபெயர்ப்பு, மற்றும் வனமார்பவன், தேவநம்பியா ஆகியோரைப் பற்றிய ஒரு குறிப்பும் உள்ளது. இவை யாவும் தொடர்பு பட்டவை.ஆயினும் வனமார்பவனின் தமிழ்பாடலை அசோகன் தேவநம்பியாவுடன் சமப்படுத்தி விவாதமொன்றுக்கு யாரும் அவ்வளவு தூரத்துக்கு போக இயலாது. அத்தோடு சமீபத்திய எழுத்துக்களுக்கான தெரிவு செய்யப்பட்ட ஒரு நூற்பட்டியலும் உள்ளது.அது மிகவும் உதவியானதாகவும், கைலாசபதியின் எழுத்துக்களுக்கு பொருத்தமான ஆதார நூற்பட்டியலாகவும் உள்ளது.பண்டைத் தமிழ் சரித்திர சமூக இயல்பினுக்கு கவனிக்கப் படவேண்டிய மறுசிந்தனைகளுக்குப் காரணமான ஒரு முன்னோடியின் ஞாபகத்துக்குப் பொருத்தமான ஒரு புகழ்மாலையைச் சூட்டுவதில் இந்நூலின் ஆசிரியர் மிகத் திறமையாகச் செயலாற்றியுள்ளார்.</span></p> <span style="font-family: Latha; font-size: 12px;">(நன்றி : Frontline )<br />தமிழில் எஸ்.குமார்</span>angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-57124115241618005832010-09-27T10:33:00.000-07:002010-10-23T14:01:07.787-07:00படைப்பிலக்கியத்திற் கொள்கையும் நடைமுறையும் – க. கைலாசபதி<h2 class="title">படைப்பிலக்கியத்திற் கொள்கையும் நடைமுறையும் – க. கைலாசபதி</h2> <div id="stats"> <span></span><span></span><span><br /></span></div> <!-- thamizmanam.com toolbar code Part 2, starts. Pathivu toolbar v1.1 (c)2005 thamizmanam.com --> <script language="javascript" type="text/javascript" src="http://services.thamizmanam.com/toolbar.php?date=11/10/2009&posturl=http://thulaa.net/home/archives/6&cmt=0&blogurl=http://thulaa.net/home&photo=http://thulaa.net/home/wp-content/plugins/tbToolbar/images/default.png"> </script><div class="entry clearfloat"><style> .tabheadingtext { font: bold 11px Verdana, Arial, Helvetica, sans-serif; background-color:#BEDAF8; color:#003366; text-align:center; padding: 3px; float:left; width: 300px; float:left }.input { border: 1px solid #006; background: #ffc;}.input:hover { border: 1px solid #f00; background: #ff6;}.button { border: 1px solid #006; background: #669966;}.button:hover { border: 1px solid #f00; background: #eef;}label { display: block; width: 150px; float: left; margin: 2px 4px 6px 4px; text-align: right;}br { clear: left; } </style><!-- ping Tamilmanam Starts --> <form name="blog_submit" method="post" action="http://tamilmanam.net/blog_home_update.php?url=http://thulaa.net/home&posturl=http://thulaa.net/home/archives/6"><br /></form> <!-- thamizmanam.com toolbar code Part 2, ends. Pathivu toolbar (c)2005 thamizmanam.com --> <!-- blogdesam.com toolbar code Part 2, starts. Pathivu toolbar v1.1 (c)2005 thamizmanam.com --> <script language="javascript" type="text/javascript" src="http://services.blogdesam.com/toolbar.php?date=11/10/2009&posturl=http://thulaa.net/home/archives/6&cmt=0&blogurl=http://thulaa.net/home&photo=http://thulaa.net/home/wp-content/plugins/tbToolbar/images/default.png"> </script><!--warning test --> <!-- blogdesam.com toolbar code Part 2, ends. Pathivu toolbar (c)2005 thamizmanam.com --> <p>எண்ணற்ற வடிவங்களிலும் உருவங்களிலும் ஆராய்ச்சிக்கு விரோதமான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக எமது இலக்கிய உலகிலே தனியாட்சி செய்து வந்திருக்கின்றன. இவற்றை அறவே அகற்றிப் புறநிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடைய கருத்துக்களை வளர்த்தல் வேண்டும். இவ்வாறு வளர்த்தல் செயலாதலின், செய்கை இன்றியமையாததாகிறது. விஷயங்களின் அடிமுடி தேடிப் பெறும் அறிவு கேவலம் ‘ஞான’மாக மட்டுமன்றி ‘உலகினை மாற்றவும்’ ஊக்கத்துடன் உதவ வேண்டும். அது மட்டுமல்ல. நாம் ஆர்வத்துடன் தேடிக்கொள்ளும் அறிவு சரியானதா அன்றித் தவறானதா என்பதை நிச்சயிக்கவும் நடைமுறையே தலை சிறந்த மார்க்கமாகும். ஏனெனில் சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கும் போது எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை என்று பொதுவாகக் கூறலாம். எவை தோல்வியடைகின்றனவோ அவை தவறானவை என்பதிலும் தப்பில்லை. இயற்கையை எதிர்த்துப் போராடி அதனை வென்றடக்குவதிலேயே இது சிறப்பாகப் பொருந்துவதாயினும் சமுதாய இயக்கங்கட்கும் ஏற்புடையதே.</p> <p>ஆனால் இயற்கையுடன் நடத்தும் போராட்டத்திலும் சரி, அல்லது சமுதாயப் போராட்டத்திலும் சரி, இவ்வளவுகோல் யாந்திரீக மயமாய்ப் பரீட்சித்துப் பார்க்கக் கூடியதொன்றன்று. ஏனெனில் சில வேளைகளில் சரியான கருத்துக்களும் வெற்றி பெறுவதில்லை. தோல்வியும் அடைகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த குறைபாட்டினால் அன்று. புறக் காரணங்களினாலாகும். ஆயினும் நடைமுறையில் தவறுகள் திருத்தப்பட்டுச் சரியான கருத்துக்கள் வெற்றி பெறுகின்றன. இவ் வளர்ச்சி முறையைச் சுருள்வட்டத்துக்கு ஒப்புமை கூறுவர் சிலர். விஞ்ஞானக் கருத்துக்களில் தோய்ந்து நவ கவிதைகள் பல பாடியுள்ள முருகையன் இப் பொருளையே அடியும் முடியும் என்ற கவிதையிற் பாடுகிறார். நீண்ட அப் பாடலிற் சில பகுதிகளை மாத்திரம் இங்கே காட்டுவோம்.</p> <blockquote><p>இக்காலத் தியல் கொண்டு கணக்குப் போட்டோம்<br />ஏதிர்காலப் போக்குகளை முன் அறிந்தோம்<br />முற்கால மர்மத்தை ஒதுக்கி நீக்கி<br />முன்னேற லானோம் நாம்–முடிவில்லாமல்<br />அப்பாலும் அப்பாலும் நெடிது செல்ல<br />அதற்கப்பால்—அதற்கப்பால் திகைத்து நின்றோம்.<br />நிற்காமல் மிக மெதுவாய்ப் பின்னும் செல்வோம்<br />நிகழ்ச்சிகளின் திருவடியைக் காண எண்ணி.<br />எதிர்காலப் போக்குகளை அறிதலன்றி<br />இயன்றவரை அதை மாற்றும் போராட்டத்தும்<br />விதவிதமாய் முயலுகிறோம். விரும்பத்தக்க<br />விளைவுகளும் பெறுகின்றோம்….</p> <p>எட்டும் இனி என நினைத்தோம்; ஐந்தடிக்குள்<br />இருக்கும் என்று சென்றாலோ… இன்னும் சற்று<br />மட்டும் ஒரு சிறிது செலின், கைகளுக்குள்<br />வசப்படுதல் நிசம் என்று நிச்சயித்தோம்.<br />கிட்டுவது போல் இருந்து கிட்டாதாகி<br />கிடையாத தோற்றரவோ என ஐயற்று<br />நெட்டுயிர்த்தோம். ஆனாலும் மீண்டும் மீண்டும்<br />நிமிர்ந்தெழுந்து மறுபடியும் நகரலானோம்.</p></blockquote> <p>நீந்தப் பழகுவதற்குத் தண்ணீரில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. நீச்சல் அறிவு முழவதும் நேரடி அனுபவத்திலிருந்தே உண்டாகிறது. ஆனால் பல சமயங்களில் ’இயலாது’ ‘முடியாது’ என்ற ஐயறவுகளெல்லாம் தோன்றுவது இயற்கை. விடாப்பிடியாகத் தொடர்ந்து முயல்வதே இறுதி வெற்றிக்கு வழி. அயல்நாட்டுப் பழமொழியொன்று கூறுவது போல ‘தோல்வி என்பது வெற்றியின் தாய். இடறி விழுதல் அறிவில் எழுதல்’ என்பதாகும்.</p> <p>புறநிலை உலகத்தைப் பார்த்து அதன் பண்புகள் சிலவற்றை வருணித்தால் மட்டும் போதாது என மேலே காட்டினோம். ‘சுத்த இலக்கியவாதிகள்’ சிலர் தாம் நவீன உலகைக் கண்டவாறே வருணிப்பதாகக் கூறுவர். அதாவது எழுத்தாளனது ‘அரசியல்’ ‘பொருளியல்’ கருத்துக்களின் தலையீடு இன்றி ‘புறநிலை’ உலகை நேர்மையுடன் படைப்பதாகப் பெருமைப்படுவர். ஆனால் அவ்வாறு கூறுவதே ஒருவகையான அரசியற் கண்ணோட்டந் தானே. ஆண்மையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய தந்திரபூமி புறவுலகைப் புரிந்துகொள்ள மாட்டாத ‘சுதந்திர’ எழுத்தாளரது பிரலாபமாகவே முடிந்தது. மற்றோர்களைப் பார்க்கச் சிறந்த முறையில் உலகின் இயல்பை உணர்ந்து, தனது துன்பத்துக்கும் தன் போன்ற பிறரது துன்பங்களுக்;கும் நிவாரணங் காணக்கூடிய கஸ்தூரி நடைமுறைக்கும் ‘ஆன்மீக’த் தத்துவங்களிற் சரண் புகுவது பமைய பிரமஞானம். இன்றும் எத்துணை வலிமையுடையதாய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தந்திரபூமியை சி.பி. சினோ எழுதிய <span style="color: rgb(0, 60, 94);"><span style="font-family:Bamini,sans-serif;"><span style="font-family:Times New Roman,serif;">Corridors of Power </span></span></span>என்ற ஆங்கில நாவலோடு ஒப்புநோக்கினால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பல விஷயங்களைத் தெளிவுபடுத்துவதாயிருக்கும். அதிலும் பாலியல் வருகிறது. ஆனால் ஆன்மீகப் பாத்திரங்கள் புகலிடம் தேடும் போலி முடிவுகள் அதிற் காணப்படா. இந்திரா பார்த்தசாரதியின் பாஷையிற் சினோவின் இந் நாவலுக்குப் பெயரிடுவதானால் அதிகாரபூமி என்று சொல்லிக் கொள்ளலாம். அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் உள்ள பிணைப்பை ‘உள்ளிருந்து’ உயிர்த் துடிப்புடன் சித்தரிக்கிறார் ஆசிரியர் சினோ. ஆங்கே தத்துவ விசாரத்துக்கு இடமேயில்லை. Mechanics of Power எனப்படும் அதிகாரத்தின் இயக்கப்பாடுகளை இயன்றவரை புறநிலை உண்மையாகக் கொண்டு பாத்திரங்களைப் படைத்துள்ளார். ஆனால் பார்த்தசாரதியோ தந்திரபூமியில் நசிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு ஆய்வறிவாளனையே உருவாக்கியுள்ளார். இது சமுதாயத்தின் பிரதான முரண்பாட்டையும் இயக்கப்பாடுகளையும் தவறாகப் புரிந்து கொண்டது மட்டுமன்றி, புறநிலை உண்மை மறுப்புமாகும்.<br />எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும் இயக்கத்தில் ஏதோ ஒரு வகையிற் பங்கு கொண்டாலன்றி, இன்றைய காலகட்டத்தில் புறநிலைக்குப் பிசகாத நாவலைப் படைக்க இயலும் என நான் நம்பவில்லை. அதையே தந்திரபூமி சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்திருக்கிறது.<br />இந்நிலையில், தமிழர் சமுதாயத்திற் காணும் பல விஷயங்களின் அடிமுடியைத் தேடிக் காண வேண்டும் என்ற அவா பல இளைஞரிடத்தே காணப்படுகிறது. இது வெறும் கருத்தாக மட்டுமல்லாது செயலோடு இணைந்ததாகவும் காணப்படுகிறது. குலோத்துங்கன் என்ற கவிஞர் அண்மையில் எழுதிய ஒரு கவிதையில் இதைக் காணலாம்.</p> <blockquote><p>அறிவன்றி ஒளியெதுவும் அறியோம்; இன்றெம்<br />ஆய்வுக்குள் அடங்காத புதிர்கள் யாவும்<br />தெரிகின்ற நெறி காண்போம்; உண்மை தேடித்<br />திசையெங்கும் அலைபவர் நாம்; திறந்த நெஞ்சர்,<br />விரிகின்ற கொள்கையினர்; மாற்றம் இல்லா<br />விதியெதையும் எக்காலும் ஒப்போம்; சாலச்<br />சிறிதென்ற அணுவொன்றில் பார் புரக்கும்<br />செல்வமெலாம் காண்கின்ற திறத்தவர் யாம்<br />எண்ணுவதும் படைப்பதும் எம் பணிகள் யாங்கும்<br />எல்லோர்க்கும் சமவாய்ப்பு நிறைந்த தான<br />மண்ணுலகைச் சமைப்பதும் எம் குறிக்கோள்; நாளை<br />வருகின்ற தலைமுறையின் வாழ்வுக்காக<br />உண்ணுவதும் உறங்குவதும் தவிர்ந்தும், கூடி<br />உழைப்பதுமே யாம் மகிழும் இன்பம்; மற்றும்<br />விண்ணுலகம் உண்டெனினும் விழைவோமில்லை<br />மீளாத நரகெனினும் பயந்தோ மில்லை!</p></blockquote> <p>‘நாமார்க்குங் குடியல்லோம்’ என்ற அப்பரின் குரலையும் ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ எனத் தொடங்கிப் பாடிய இளம்வழுதியின் குரலையும் நினைவூட்டும் இப் பாடல், கொள்கையும் செயலும் (theory and practice) இணைய வேண்டும் என்பதனை எடுத்துரைக்கிறது.<br />அவ்வாறு கொள்கையும் நடைமுறையும் இணைந்தாலன்றிப் பன்னெடுங்காலமாக நிலைத்துள்ள அரசியல் பொருளாதார அமைப்பையும் அதிலிருந்து பிரிக்க முடியாத பண்பாட்டையும் ஒதுக்கி அப்புறப்படுத்த இயலாது. தூய சிந்தனை, சுத்த இலக்கியம் என்பன போன்ற குரல்கள் பழைய பொருளாதாரத்தையும் அரசியலையும் பண்பாட்டையும் அடிக்கல்லாகக் கொண்டவை. எனவே புதிய அமைப்பிலேயே புதிய பண்பாடும் இலக்கியமும் தோன்ற முடியும். அதைத் தோற்றுவிப்பதற்கான பணிக்கு அறிவாராய்ச்சியும் அதற்கு இன்றியமையாத அடிமுடி தேடலும் ஊக்கத்துடன் பயன்பட வேண்டும்.<br />(“அடியும் முடியும்” நூலிலிருந்து அதே தலைப்பிலான கட்டுரையின் ஒரு பகுதி நன்றியுடன் </p></div> <div id="stats"> <span><br /><br /></span></div> <!-- thamizmanam.com toolbar code Part 2, starts. Pathivu toolbar v1.1 (c)2005 thamizmanam.com --> <script language="javascript" type="text/javascript" src="http://services.thamizmanam.com/toolbar.php?date=11/10/2009&posturl=http://thulaa.net/home/archives/6&cmt=0&blogurl=http://thulaa.net/home&photo=http://thulaa.net/home/wp-content/plugins/tbToolbar/images/default.png"> </script><div class="entry clearfloat"><style> .tabheadingtext { font: bold 11px Verdana, Arial, Helvetica, sans-serif; background-color:#BEDAF8; color:#003366; text-align:center; padding: 3px; float:left; width: 300px; float:left }.input { border: 1px solid #006; background: #ffc;}.input:hover { border: 1px solid #f00; background: #ff6;}.button { border: 1px solid #006; background: #669966;}.button:hover { border: 1px solid #f00; background: #eef;}label { display: block; width: 150px; float: left; margin: 2px 4px 6px 4px; text-align: right;}br { clear: left; } </style><!-- ping Tamilmanam Starts --> <form name="blog_submit" method="post" action="http://tamilmanam.net/blog_home_update.php?url=http://thulaa.net/home&posturl=http://thulaa.net/home/archives/6"><br /></form> <!-- ping Block Ends --><!-- Line Height --> <br /><!-- thamizmanam.com toolbar code Part 2, ends. Pathivu toolbar (c)2005 thamizmanam.com --> <!-- blogdesam.com toolbar code Part 2, starts. Pathivu toolbar v1.1 (c)2005 thamizmanam.com --> <script language="javascript" type="text/javascript" src="http://services.blogdesam.com/toolbar.php?date=11/10/2009&posturl=http://thulaa.net/home/archives/6&cmt=0&blogurl=http://thulaa.net/home&photo=http://thulaa.net/home/wp-content/plugins/tbToolbar/images/default.png"> </script><!--warning test --> <!-- blogdesam.com toolbar code Part 2, ends. Pathivu toolbar (c)2005 thamizmanam.com --> <p>எண்ணற்ற வடிவங்களிலும் உருவங்களிலும் ஆராய்ச்சிக்கு விரோதமான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக எமது இலக்கிய உலகிலே தனியாட்சி செய்து வந்திருக்கின்றன. இவற்றை அறவே அகற்றிப் புறநிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடைய கருத்துக்களை வளர்த்தல் வேண்டும். இவ்வாறு வளர்த்தல் செயலாதலின், செய்கை இன்றியமையாததாகிறது. விஷயங்களின் அடிமுடி தேடிப் பெறும் அறிவு கேவலம் ‘ஞான’மாக மட்டுமன்றி ‘உலகினை மாற்றவும்’ ஊக்கத்துடன் உதவ வேண்டும். அது மட்டுமல்ல. நாம் ஆர்வத்துடன் தேடிக்கொள்ளும் அறிவு சரியானதா அன்றித் தவறானதா என்பதை நிச்சயிக்கவும் நடைமுறையே தலை சிறந்த மார்க்கமாகும். ஏனெனில் சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கும் போது எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை என்று பொதுவாகக் கூறலாம். எவை தோல்வியடைகின்றனவோ அவை தவறானவை என்பதிலும் தப்பில்லை. இயற்கையை எதிர்த்துப் போராடி அதனை வென்றடக்குவதிலேயே இது சிறப்பாகப் பொருந்துவதாயினும் சமுதாய இயக்கங்கட்கும் ஏற்புடையதே.</p> <p>ஆனால் இயற்கையுடன் நடத்தும் போராட்டத்திலும் சரி, அல்லது சமுதாயப் போராட்டத்திலும் சரி, இவ்வளவுகோல் யாந்திரீக மயமாய்ப் பரீட்சித்துப் பார்க்கக் கூடியதொன்றன்று. ஏனெனில் சில வேளைகளில் சரியான கருத்துக்களும் வெற்றி பெறுவதில்லை. தோல்வியும் அடைகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த குறைபாட்டினால் அன்று. புறக் காரணங்களினாலாகும். ஆயினும் நடைமுறையில் தவறுகள் திருத்தப்பட்டுச் சரியான கருத்துக்கள் வெற்றி பெறுகின்றன. இவ் வளர்ச்சி முறையைச் சுருள்வட்டத்துக்கு ஒப்புமை கூறுவர் சிலர். விஞ்ஞானக் கருத்துக்களில் தோய்ந்து நவ கவிதைகள் பல பாடியுள்ள முருகையன் இப் பொருளையே அடியும் முடியும் என்ற கவிதையிற் பாடுகிறார். நீண்ட அப் பாடலிற் சில பகுதிகளை மாத்திரம் இங்கே காட்டுவோம்.</p> <blockquote><p>இக்காலத் தியல் கொண்டு கணக்குப் போட்டோம்<br />ஏதிர்காலப் போக்குகளை முன் அறிந்தோம்<br />முற்கால மர்மத்தை ஒதுக்கி நீக்கி<br />முன்னேற லானோம் நாம்–முடிவில்லாமல்<br />அப்பாலும் அப்பாலும் நெடிது செல்ல<br />அதற்கப்பால்—அதற்கப்பால் திகைத்து நின்றோம்.<br />நிற்காமல் மிக மெதுவாய்ப் பின்னும் செல்வோம்<br />நிகழ்ச்சிகளின் திருவடியைக் காண எண்ணி.<br />எதிர்காலப் போக்குகளை அறிதலன்றி<br />இயன்றவரை அதை மாற்றும் போராட்டத்தும்<br />விதவிதமாய் முயலுகிறோம். விரும்பத்தக்க<br />விளைவுகளும் பெறுகின்றோம்….</p> <p>எட்டும் இனி என நினைத்தோம்; ஐந்தடிக்குள்<br />இருக்கும் என்று சென்றாலோ… இன்னும் சற்று<br />மட்டும் ஒரு சிறிது செலின், கைகளுக்குள்<br />வசப்படுதல் நிசம் என்று நிச்சயித்தோம்.<br />கிட்டுவது போல் இருந்து கிட்டாதாகி<br />கிடையாத தோற்றரவோ என ஐயற்று<br />நெட்டுயிர்த்தோம். ஆனாலும் மீண்டும் மீண்டும்<br />நிமிர்ந்தெழுந்து மறுபடியும் நகரலானோம்.</p></blockquote> <p>நீந்தப் பழகுவதற்குத் தண்ணீரில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. நீச்சல் அறிவு முழவதும் நேரடி அனுபவத்திலிருந்தே உண்டாகிறது. ஆனால் பல சமயங்களில் ’இயலாது’ ‘முடியாது’ என்ற ஐயறவுகளெல்லாம் தோன்றுவது இயற்கை. விடாப்பிடியாகத் தொடர்ந்து முயல்வதே இறுதி வெற்றிக்கு வழி. அயல்நாட்டுப் பழமொழியொன்று கூறுவது போல ‘தோல்வி என்பது வெற்றியின் தாய். இடறி விழுதல் அறிவில் எழுதல்’ என்பதாகும்.</p> <p>புறநிலை உலகத்தைப் பார்த்து அதன் பண்புகள் சிலவற்றை வருணித்தால் மட்டும் போதாது என மேலே காட்டினோம். ‘சுத்த இலக்கியவாதிகள்’ சிலர் தாம் நவீன உலகைக் கண்டவாறே வருணிப்பதாகக் கூறுவர். அதாவது எழுத்தாளனது ‘அரசியல்’ ‘பொருளியல்’ கருத்துக்களின் தலையீடு இன்றி ‘புறநிலை’ உலகை நேர்மையுடன் படைப்பதாகப் பெருமைப்படுவர். ஆனால் அவ்வாறு கூறுவதே ஒருவகையான அரசியற் கண்ணோட்டந் தானே. ஆண்மையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய தந்திரபூமி புறவுலகைப் புரிந்துகொள்ள மாட்டாத ‘சுதந்திர’ எழுத்தாளரது பிரலாபமாகவே முடிந்தது. மற்றோர்களைப் பார்க்கச் சிறந்த முறையில் உலகின் இயல்பை உணர்ந்து, தனது துன்பத்துக்கும் தன் போன்ற பிறரது துன்பங்களுக்;கும் நிவாரணங் காணக்கூடிய கஸ்தூரி நடைமுறைக்கும் ‘ஆன்மீக’த் தத்துவங்களிற் சரண் புகுவது பமைய பிரமஞானம். இன்றும் எத்துணை வலிமையுடையதாய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தந்திரபூமியை சி.பி. சினோ எழுதிய <span style="color: rgb(0, 60, 94);"><span style="font-family:Bamini,sans-serif;"><span style="font-family:Times New Roman,serif;">Corridors of Power </span></span></span>என்ற ஆங்கில நாவலோடு ஒப்புநோக்கினால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பல விஷயங்களைத் தெளிவுபடுத்துவதாயிருக்கும். அதிலும் பாலியல் வருகிறது. ஆனால் ஆன்மீகப் பாத்திரங்கள் புகலிடம் தேடும் போலி முடிவுகள் அதிற் காணப்படா. இந்திரா பார்த்தசாரதியின் பாஷையிற் சினோவின் இந் நாவலுக்குப் பெயரிடுவதானால் அதிகாரபூமி என்று சொல்லிக் கொள்ளலாம். அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் உள்ள பிணைப்பை ‘உள்ளிருந்து’ உயிர்த் துடிப்புடன் சித்தரிக்கிறார் ஆசிரியர் சினோ. ஆங்கே தத்துவ விசாரத்துக்கு இடமேயில்லை. Mechanics of Power எனப்படும் அதிகாரத்தின் இயக்கப்பாடுகளை இயன்றவரை புறநிலை உண்மையாகக் கொண்டு பாத்திரங்களைப் படைத்துள்ளார். ஆனால் பார்த்தசாரதியோ தந்திரபூமியில் நசிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு ஆய்வறிவாளனையே உருவாக்கியுள்ளார். இது சமுதாயத்தின் பிரதான முரண்பாட்டையும் இயக்கப்பாடுகளையும் தவறாகப் புரிந்து கொண்டது மட்டுமன்றி, புறநிலை உண்மை மறுப்புமாகும்.<br />எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும் இயக்கத்தில் ஏதோ ஒரு வகையிற் பங்கு கொண்டாலன்றி, இன்றைய காலகட்டத்தில் புறநிலைக்குப் பிசகாத நாவலைப் படைக்க இயலும் என நான் நம்பவில்லை. அதையே தந்திரபூமி சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்திருக்கிறது.<br />இந்நிலையில், தமிழர் சமுதாயத்திற் காணும் பல விஷயங்களின் அடிமுடியைத் தேடிக் காண வேண்டும் என்ற அவா பல இளைஞரிடத்தே காணப்படுகிறது. இது வெறும் கருத்தாக மட்டுமல்லாது செயலோடு இணைந்ததாகவும் காணப்படுகிறது. குலோத்துங்கன் என்ற கவிஞர் அண்மையில் எழுதிய ஒரு கவிதையில் இதைக் காணலாம்.</p> <blockquote><p>அறிவன்றி ஒளியெதுவும் அறியோம்; இன்றெம்<br />ஆய்வுக்குள் அடங்காத புதிர்கள் யாவும்<br />தெரிகின்ற நெறி காண்போம்; உண்மை தேடித்<br />திசையெங்கும் அலைபவர் நாம்; திறந்த நெஞ்சர்,<br />விரிகின்ற கொள்கையினர்; மாற்றம் இல்லா<br />விதியெதையும் எக்காலும் ஒப்போம்; சாலச்<br />சிறிதென்ற அணுவொன்றில் பார் புரக்கும்<br />செல்வமெலாம் காண்கின்ற திறத்தவர் யாம்<br />எண்ணுவதும் படைப்பதும் எம் பணிகள் யாங்கும்<br />எல்லோர்க்கும் சமவாய்ப்பு நிறைந்த தான<br />மண்ணுலகைச் சமைப்பதும் எம் குறிக்கோள்; நாளை<br />வருகின்ற தலைமுறையின் வாழ்வுக்காக<br />உண்ணுவதும் உறங்குவதும் தவிர்ந்தும், கூடி<br />உழைப்பதுமே யாம் மகிழும் இன்பம்; மற்றும்<br />விண்ணுலகம் உண்டெனினும் விழைவோமில்லை<br />மீளாத நரகெனினும் பயந்தோ மில்லை!</p></blockquote> <p>‘நாமார்க்குங் குடியல்லோம்’ என்ற அப்பரின் குரலையும் ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ எனத் தொடங்கிப் பாடிய இளம்வழுதியின் குரலையும் நினைவூட்டும் இப் பாடல், கொள்கையும் செயலும் (theory and practice) இணைய வேண்டும் என்பதனை எடுத்துரைக்கிறது.<br />அவ்வாறு கொள்கையும் நடைமுறையும் இணைந்தாலன்றிப் பன்னெடுங்காலமாக நிலைத்துள்ள அரசியல் பொருளாதார அமைப்பையும் அதிலிருந்து பிரிக்க முடியாத பண்பாட்டையும் ஒதுக்கி அப்புறப்படுத்த இயலாது. தூய சிந்தனை, சுத்த இலக்கியம் என்பன போன்ற குரல்கள் பழைய பொருளாதாரத்தையும் அரசியலையும் பண்பாட்டையும் அடிக்கல்லாகக் கொண்டவை. எனவே புதிய அமைப்பிலேயே புதிய பண்பாடும் இலக்கியமும் தோன்ற முடியும். அதைத் தோற்றுவிப்பதற்கான பணிக்கு அறிவாராய்ச்சியும் அதற்கு இன்றியமையாத அடிமுடி தேடலும் ஊக்கத்துடன் பயன்பட வேண்டும்.<br />(“அடியும் முடியும்” நூலிலிருந்து அதே தலைப்பிலான கட்டுரையின் ஒரு பகுதி நன்றியுடன் </p></div>angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-13296033115557149442010-08-11T13:06:00.001-07:002010-08-11T13:06:56.560-07:00<p style="text-align: center;"><span style="color: rgb(51, 153, 102);"><strong>திறனாய்வுத் துறையும் "கலாநிதி" க.கைலாசபதி</strong></span></p> <p style="text-align: center;"><span style="color: rgb(255, 102, 0);"><strong>பி. தயாளன்</strong></span></p> <p> </p> <p> </p> <ul><li>தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர்</li><li>ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர்</li><li>"கலை கலைக்காக" என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர்</li><li>இலக்கியத்துக்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர்</li><li>சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்</li><li>தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்று நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர்</li><li>ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர்</li><li>இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவர்</li><li>யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர்</li><li>இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்</li></ul> <p>இத்தனை பெருமைக்கும் உரியவர் "ஈழம் தந்த கொடை" கலாநிதி க.கைலாசபதி. </p> <p> </p> <p> </p> <p style="text-align: center;"><img alt="" src="http://www.tamilheritage.org/kidangku/tamilperiyar/images/kaila.jpg" width="202" height="227" /></p> <p><br /><br />மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் இளைய தம்பி கனகசபாபதி - தில்லைநாயகி நாகமுத்து தம்பதிக்கு 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி பிறந்தார். தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்ததால், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு இராயல் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.</p> <p><br />பல்கலைக்கழகக் கல்வி முடிந்தபின், தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.</p> <p><br />பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். "தமிழில் வீரயுகப் பாடல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து "கலாநிதி" (முனைவர்) பட்டம் பெற்றார். கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார். சங்க இலக்கியத்தைக் கிரேக்க, ஐரிஷ் முதலிய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார். வீரயுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்.<br />"தமிழில் வீரயுகப் பாடல்கள்" என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது. கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறி மரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல், தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.</p> <p><br />தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.<br />ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் யாழ் - வளாகத் தலைவராக இருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் செயல்பட்டார்.<br />அமெரிக்காவிலுள்ள "அயோவோ பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும்" சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார். அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் "புதியதைப் படைக்கும் எழுத்துகளுக்குரியர்" என இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.</p> <p> </p> <ul><li>யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு</li><li>இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு</li><li>இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக்கழகம்</li><li>இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு</li><li>இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு</li></ul> <p><br />முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.<br />"இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது; இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்; அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்" என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.</p> <p><br />"கலை, இலக்கியம் முதலியற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; சமூகவியலை பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும்; ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்" என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். "உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்" என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.</p> <p><br />"உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன; இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை" என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.</p> <p> </p> <ul><li>பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்</li><li>தமிழ் நாவல் இலக்கியம்</li><li>ஒப்பியல் இலக்கியம்</li><li>அடியும் முடியும்</li><li>இலக்கியமும் திறனாய்வும்</li><li>கவிதை நயம்</li><li>சமூகவியலும் இலக்கியமும்</li><li>நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்</li><li>திறனாய்வுப் பிரச்சினைகள்</li><li>பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்</li><li>இலக்கியச் சிந்தனைகள்</li><li>பாரதி ஆய்வுகள்</li><li>ஈழத்து இலக்கிய முன்னோடிகள்</li><li>இரு மகாகவிகள்</li><li>சர்வதேச அரசியல் நிகழ்வுகள்</li><li>முதலிய நூல்களைத் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.</li><li>இலங்கையில் இருந்து வெளிவந்த,</li><li>தொழிலாளி</li><li>தேசாபிமானி</li><li>செம்பதாகை</li><li>ரெட்பானர்</li></ul> <p>முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் வடித்துள்ளார்.</p> <p> </p> <p>பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் "இளங்கதிர்" இதழிலும், இலக்கிய இதழான "மல்லிகை"யிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.<br />தமிழ்நாட்டு இதழ்களான,</p> <ul><li>தாமரை</li><li>சாந்தி</li><li>சரஸ்வதி</li><li>செம்மலர்</li><li>தீக்கதிர்</li><li>ஜனசக்தி</li><li>ஆராய்ச்சி</li></ul> <p>முதலியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.</p> <p><br />இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான, தத்துவார்த்த நூல், கைலாசபதியின் "தமிழ் நாவல் இலக்கியம்". தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகிறது.</p> <p> </p> <ul><li>கல்வித்துறை நிபுணர்</li><li>இதழாளர்</li><li>எழுத்தாளர்</li><li>ஆய்வாளர்</li><li>கட்டுரையாளர்</li><li>விமர்சகர்</li><li>பேச்சாளர்</li></ul> <p>எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கினார் கைலாசபதி.</p><br />முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி கைலாசபதி 49 வயதில் 1982ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இயற்கை எய்தினார்.<br />தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழ நாட்டிலிருந்து எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு.<br /><br />தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலாநிதி கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றென்றும் விளங்குவார்!angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-30034438320894754542010-08-04T23:52:00.001-07:002010-08-04T23:52:19.133-07:00<h1>பொற்காலமும்-புதுயுகமும்!:பேராசிரியர் க. கைலாசபதி</h1> <p><img src="http://inioru.com/wp-content/uploads/2009/12/Kailasapathy-3.png" alt="Kailasapathy 3" title="Kailasapathy 3" class="alignleft size-full wp-image-8303" width="150" height="173" />(<em>பொற்காலத்தைப் பற்றிய உணர்வும் எண்ணமும் முற்றிலும் மூடநம்பிக்கையென்று கருதுதல் தவறு. அதனை யார், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டியது. இன்றைய ஆளும் வர்க்கத்தினர், மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற்காலமாகக் காட்டுவர். ஆனால் மக்களோ அடிமனத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடி வாழையாகப் பேணி வைத்துள்ளனர். ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்கள் இதய வேட்கை. அந்த வகையில் பொற்காலம் புனிதமான இலட்சியங்களைப் பாதுகாத்து வருகிறது என்றுங் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை உடையதாயிருப்பினும் மறைந்து போன வர்க்க பேதமற்ற சமூகத்தை நினைவு கூர்வதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டு.) </em></p> <p> சென்னை உயர்நீதிமன்றத்து நீதிபதிகளில் ஒருவராக இருந்த டி.எல். வெங்கட்ராம ஐயர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ‘வட துருவத்திலுள்ள பெரும் பனி மலைகளுக்குத் தீ வைத்துவிடலாம். தமிழிலே புதுமைப் புரட்சியேற்படுவது அதைவிடக் கடினம்’ என்று கூறினாராம். வாய்மொழியாக வழங்கும் இக்கூற்றின் உண்மை பொய் எவ்வாறாக இருப்பினும் அடிப்படையான ஒரு நம்பிக்கை வரட்சியை இக்கூற்று எடுத்து விளக்குவதாக உள்ளது. பழமைப் பற்றும் தன்னிறைவு உணர்வும் தமிழ்ச் சமுதாயத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன என்பதே பொதுவாகக் காணப்படும் கருத்து. மாற்றமடையாத, தேங்கி நிற்கும் சமுதாயங்களில் ( (Stagnant Society)) இத்தகைய பழைமையாதிக்கம் காணப்படுவது உலகெங்கும் பொதுவான நியதி. உண்மையான பொருளாதார மாற்றத்தை ஆதாரமாகக் கொண்ட சமுதாயப் புனரமைப்பினைத் தொடர்ந்தே புதுமை பூத்துக் குலுங்கும். அதுவும் ஒரு வரலாற்று நியதிதான். </p> <p>இவ்விடத்திலே எமது சமுதாயத்திற் காணப்படும் பழைமைப் பிடிப்பின் ஓர் அமிசத்தைச் சிறிது ஆராயலாம். பழைமையாதிக்கத்தைக் கருத்தளவில் ஆராய்ந்து பார்க்கின், அதன் ஊற்றை இனங்கண்டு கொள்ள முடியும். எமது வரலாற்றின் தொடக்கத்திலே மகோன்னதமான பொற்காலம் ஒன்று நிலவியது என்றும், அதன் பின் வரவர இழி நிலை வளர்ந்து வந்துள்ளது என்றும் ஐதீகம் ஒன்று கருத்துலகிலே ஆழப்பதிந்துள்ளது. உதாரணமாக, தமிழ் நூல் வரலாறு என்ற நூலிலே திருவாளர் பாலூர் கண்ணப்ப முதலியார் பின்வருமாறு எழுதுகிறார்: “பழங்காலம் பொற்காலம் ஆகும். அக்காலத்து மக்கள் நனிநாகரிகராய் வாழ்ந்தனர். தங்கள் வாழ்வை இயற்கையோடு இணைத்து வாழ்ந்தனர். இலக்கிய வளத்தில் சிறந்து விளங்கினர்”;. எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் இலட்சியவாதிகள் சிலர் குறைபாடெதுவுமற்ற கற்பனையுலகம் ஒன்றைப் பற்றுக்கோலாகக் கொள்வது போலச் சென்ற காலத்தின் ஒரு பகுதியை நிறைவான சமுதாயம் இயங்கிய பொற்றகாலமாகச் சிலர் கொள்வர்.</p> <p>இம் மனப்பதிவு அறிவின் துணையாற் பெறப்படுவதன்று. அரைகுறைச் செய்திகளின் அடிப்படையிலும், ஒரு வகையான மயக்க உணர்வின் அடிப்படையிலுமே பெறப்படுவது. ஆயினும் இதற்கும் கோட்பாட்டு அடிப்படை ஒன்றுள்ளது. அதனைச் சுருக்கமாக விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். </p> <p>பெரும்பாலான தமிழரைப் பொறுத்தளவில், ஈடிணையற்ற ஏகாதிபத்தியப் பெருமையுடன் ‘அவனி முழுதான்ட’ சோழப் பெருமன்னர் மதிப்புக்குரியவராயிருப்பினும், ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த’ முடியுடை <img src="http://inioru.com/wp-content/uploads/2009/12/mannar.jpg" alt="mannar" title="mannar" class="alignleft size-full wp-image-8304" width="219" height="235" />மூவேந்தர் அரசோச்சிய காலப் பகுதியே பொற்காலமாகக் கொள்ளப்படுகிறது. பழமைக்கும் பழமையானதே பாராட்டுக்குரியது போலும். அது மட்டுமன்று, பிற்காலத்திலே தென்னகத்தில் எழுந்த, சேர, பாண்டிய அரசுகளோடும், சோழப் பேரரசோடும் ஒப்பிடும்போது ‘சங்க கால’ முடியுடை மூவேந்தர் குறுநில மன்னராகவே காட்சி யளிக்கின்றனர். கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திலிருந்த செம்பியரான இடைக்காலச் சோழப் பெருமன்னரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் புறநானூற்றுப் பாடல்கள் புகழும் சோழமன்னர்கள் சிறுநிலக் கிழாராகவே தோன்றுவர். </p> <p>அதைப் போலவே திரிபுவனச் சக்கரவர்த்திகள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட இரண்டாம் பாண்டியப் பேரரசின் பெருமன்னரோடு ஒப்பிடுமிடத்து, சங்ககாலப் பாண்டிய மன்னர் மன்னராகவே தோன்றுகிறார்கள் அல்லர். அவ்வாறிருந்தும், இடைக்காலத்தில் புகழொடு விளங்கிய பாண்டிய, சோழப் பெருமன்னர்கள் வீரயுகத்தில் வாழ்ந்த தத்தம் மூதாதையரது ‘உலகளந்த சிறப்புக்குத்’ தாம் அருகதையற்றவர் என்றே கருதினர். அந்தளவுக்கு வீரயுகம் ஈடிணையற்றதொன்றாகப் பிற்காலத்தவர் கருத்தில் வேரூன்றியிருந்தது. இக் காலத்திலும் தமிழபிமானத்தோடு பெயர் மாற்றிச் சூட்டிக் கொள்பவர்கள் வீரயுக மன்னர் பெயர்களையும் அவை போன்றவற்றையுமே விரும்புவது கண்கூடு. சுருங்கக் கூறின், ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களாக வீரயுகம் “சான்றோர் வாழ்ந்த காலம்” கழிந்த பொற்காலமாகக் கருதப்பட்டு வருகிறது. </p> <p>இப்பழமைப் பற்று நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவாக உள்ளது. நியாயமான புராதனப் பெருமை, நியாயம் அற்ற அகங்காரம், அர்த்தமற்ற தூய்மை வாதம் முதலியவற்றிற்கும் ஆதாரமாக அமைந்து விடுகிறது. இதற்கு காரணம் பொற்காலத்தைப் பற்றிய பெருமித உணர்வேயாகும். </p> <p>கிரேக்க இலக்கியங்களிலும் இத்தகைய ஒரு நம்பிக்கையைக் காணலாம். தமது ‘இன’ வரலாற்றுத் தொடக்கத்தில் இயற்கையின் மத்தியில் மக்கள் இன்பமாக வாழ்ந்த பொற்காலம் ((Golden Age) ) ஒன்று இருந்தது எனக் கிரேக்க ஆதிக்கவிகளே நம்பினர். </p> <p><img src="http://inioru.com/wp-content/uploads/2009/12/aandan-adimy.jpg" alt="aandan adimy" title="aandan adimy" class="alignleft size-full wp-image-8306" width="175" height="163" />இறுதியாக ஒன்று கூறலாம். பொற்காலத்தைப் பற்றிய உணர்வும் எண்ணமும் முற்றிலும் மூடநம்பிக்கையென்று கருதுதல் தவறு. அதனை யார், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டியது. அரசியல் அதிகாரத்தை நாடும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் மொழி, இனம் ஆகியவற்றின் பழைய பொற்காலத்தை மக்களுக்குக் காட்டித் தம் கருமம் பார்க்கின்றனர். இலக்கிய சனாதனிகள் பொற்காலத்தைப் பிரமாணமாகக் கொண்டு ‘தொல்லாசிரியர் நல்லாணை’ என்ற பெயரில் தமது வலுவிழந்த கோட்பாடுகளை நிலைநாட்ட முயல்கின்றனர். இனவாதிகள், பொற்காலத்தைத் தமது சிறையில் அடைத்துக் காட்சிக்காக வைத்துப் பிழைக்கின்றனர்.</p> <p> <img src="http://inioru.com/wp-content/uploads/2009/12/Karl_Marx.jpg" alt="Karl_Marx" title="Karl_Marx" class="alignleft size-full wp-image-8305" width="270" height="317" />இவையெல்லாம் பொற்காலத்தைப் பயன்படுத்துவோர் பற்றியன. ஆனால் மக்களும் பொற்காலத்தைத் தமக்குப் பற்றுக்கோடாகக் கொள்வதுண்டு. முடியுடை மூவேந்தர் ஆட்சியும் உறந்தை போன்ற இடங்களிலிருந்த அறங்கூறவையங்களும் அக்கால மன்னர்கள் மக்கள் மீது திணித்த வர்க்க ஆட்சியையே காட்டுகின்றன. இரத்த உறவினராய் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த நேசபாசத்துடன் இயற்கையின் மத்தியில் வாழ்ந்த குலமரபுக் குழுக்களின் அழிவின் மீதே அரசுகள் ‘வர்க்க ஆட்சி’ ஏற்பட்டது. அந்த வர்க்கத்தின் வழிவழி வரும் இன்றைய ஆளும் வர்க்கத்தினர், மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற்காலமாகக் காட்டுவர். ஆனால் மக்களோ அடிமனத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடி வாழையாகப் பேணி வைத்துள்ளனர். </p> ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்கள் இதய வேட்கை. ஆகவே அந்த வகையில் பொற்காலம் புனிதமான இலட்சியங்களைப் பாதுகாத்து வருகிறது என்றுங் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை யுடையதாயிருப்பினும் மறைந்து போன வர்க்க பேதமற்ற சமூகத்தை நினைவு கூர்வதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டுangelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-45227891936505631092010-07-26T11:07:00.001-07:002010-07-26T11:07:31.495-07:00<h1>Prof. K Kailasapathy</h1> <h2>Evaluated with his peers</h2> <p>by<strong> </strong>R.S. Perinbanayagam and Sachi Sri Kantha </p> <table class="abstractimify" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr> <td> <p>A life so full of achievement as Kailasapathy’s was not without its critics. Once when one of his critics made a particularly petty observation I was moved to remark ‘He is the only genius we have in Tamil studies’. My friend demurred at genius, but was willing to concede ‘He thinks a lot, and reads a lot’, about Kailasapathy.</p> </td> </tr> </tbody></table> <p><strong>Front Note by Sachi Sri Kantha</strong></p> <p><img src="http://www.sangam.org/2008/12/images/ProfKKailasapathy.jpg" alt="Prof. K. Kailasapathy" vspace="10" width="253" align="right" height="400" hspace="10" />This year marks the 75th birth anniversary of Tamil scholar Professor K. Kailasapathy, the founding President of the then Jaffna Campus, University of Sri Lanka. Born on April 5, 1933, Kailasapathy admittedly had a short life span and died on December 6, 1982. Due to his political affiliations with the unpopular Sirimavo Bandaranaike rule from 1970 to 1977 and politicking for administrative positions, Kailasapathy (while alive) had his pro- and anti-constituencies among Tamils. That all trend-setters in their chosen disciplines have both the pro- and anti-constituencies is an established fact. And Kailasapathy was no exception. </p> <p>Some among the Tamil columnists/memoirists recently have attempted to eclipse the damage done by Kailasapathy in undermining the practioners of traditional Tamil scholarship by calling them antiquated by exaggerating the merits of Kailasapathy’s scholarship. In political pole-climbing contests, Kailasapathy was also not without blame. Kailasapathy’s crass ingratitude to one of his mentors, Prof. S. Vithiananthan has been placed on record four years ago by physician-literratur C. Sivagnanasundaram (Nandhi), who knew the principals somewhat intimately. This document deserves translation from Tamil.</p> <p>I present below two evaluations. The first (pro-Kailasapathy) view was from Professor R.S. Perinbanayagam, then at Hunter College of the City University of New York. This item, appeared in the <em>Lanka Guardian</em> of March 15, 1983. Shortly after Kailasapathy’s death, I met Professor Perinbanayagam (son of Handy Perinbanayagam, renowned Eelam educationist) at his New York apartment. For a few hours, we exchanged information on the politics and literature of Sri Lanka. As of now, this happened to be our one and only meeting. I was not aware then that he was intending to contribute this Prof. Kailasapathy eulogy to the <em>Lanka Guardian</em>. The second (anti-Kailasapathy) view was from me. After reading Prof. Perinbanayagam eulogy, I wrote to Profesor Perinbanayagam, expressing my dissent on elevating Kailasapathy to the ‘only genius’ status in Tamil studies. I don’t remember that I received any response from Prof. Perinbanayagam for my letter. To remember Professor Kailasapathy’s deeds, I provide below both the pro- and anti- Kailasapathy evaluations.</p> <p style="text-align: center;"><strong> </strong></p> <p style="text-align: center;"><strong>Kailasapathy</strong></p> <p style="text-align: center;"><strong>by R.S. Perinbanayagam (Hunter College of the City University of New York)</strong> </p> <p style="text-align: center;">[courtesy: <em>Lanka Guardian</em>, March 15, 1983, pp. 17-18]</p> <p>A life so full of achievement as Kailasapathy’s was not without its critics. Once when one of his critics made a particularly petty observation I was moved to remark ‘He is the only genius we have in Tamil studies’. My friend demurred at genius, but was willing to concede ‘He thinks a lot, and reads a lot’, about Kailasapathy.</p> <p>It was not given to him to complete a full span of life, but within the short time allotted to him, he was not only a creative thinker and writer, but had a unique capacity to inspire others to write and create too. He was able to revitalise the Tamil literary culture from the moment he became editor of the <em>Thinakaran</em>, though he was ably assisted in this task by various gifted writers and critics. However, the vision of a progressive literative produced locally by the native sons and daughters and free from the silly romanticism and sentimentalism of the Tamil writers of the popular Madras journals and a critical sensibility to nourish it was his alone. In his student days at Jaffna Hindu College and Royal College, this vision began to take shape and it was clear to him that the emergence of a strong critical tradition was essential for the vision to be given reality. He began to train himself in the critical tradition of other literary cultures besides his own and inspired others to follow suit as well. In these tasks he was much ahead of his contemporaries and perhaps even of his teachers. When the opportunity came his way to put these ideas into effect, he seized it with alacrity. It was a bold venture in the late fifties and early sixties for an editor of a leading Colombo newspaper to publish work that was decidedly leftist in orientation. But boldness and the courage of his convictions were never wanting in Kailasapathy and with this gesture he launched forth a veritable literary renaissance in Tamil writing in Sri Lanka.</p> <p>It is not his administrative and cultural leadership that will be remembered in the years to come, however, considerable though his achievements in this field were. Rather, it is his own creative work that will be considered, in many ways as pathfinding ones. His early interest in the emergence of a critical tradition in Tamil eventually lead him to write one of the first books on literary criticism. I believe he also taught a course on practical criticism for a long time in both the Peradeniya and Jaffna campuses. This work is a very erudite and sensitive one and is notable for its capacity to intermarry the Tamil traditions of critical inquiry with European ones. There is no slavish imitation of the European tradition, but nonetheless a clear understanding of the work of the great George Lucasz is evident. This breadth of perspective he was to bring to the tasks of reviewing and criticism that he produced too. Many writers were assessed by him in many of his articles and books and though some were no doubt hurt by his comments, they were rendered with a full sense of responsibility. Both the particular judgements that he brought to the work as well as the general standards that he upheld are likely to have a lasting impact.</p> <p>The sense of an inner discipline and a sureness of touch that one finds in Kailasapathy’s work comes from a philosophical commitment that he made early in life. Historical materialism has within it a capacity to inspire unrealistic utopias and convert itself into creeds and dogmas. More significantly however it has generated a certain attitude to society and social change, to rights and obligations of society to its members, and above all a freedom from cant and hypocrisy. In many many parts of the world today, those who have been totally or partially touched by this philosophy of history and methods of analysis are in the forefront both of literary criticism and ‘culture criticism’. Kailasapathy’s work too derives a great deal of its strength and disciplines from a commitment to historical materialism. And it could be said that historical and literary studies in South Asia were crying to be rescued from the army of soothsayers and hosanna-mongers by such a discipline and commitment.</p> <p>He was committed to the modern spirit of analytical examination of texts and to the emergence of new forms in writing in Tamil, but such a commitment was not achieved at the expense of knowledge and study of the classical tradition. His familiarity with ancient Tamil texts was second to none but in analyzing them in his many writings he was once again to bring not only a very modern critical sensibility, but also to demonstrate a skill at socio-historical analysis that a normal historian could well envy. The careful attention to the contemporary meaning of the texts, the measured judgement of the available evidence and an unwillingness to accept the patriotic judgement of far too many commentators in Tamil are all evident in his work. Literature was not an epiphenomenon for Kailasapathy, not certainly to be read closely for its textual integrity and left there. Nor did he hope to ‘save civilization’ by hurting for imagery and searching for telling metaphors. Literature was an expression of the ethos of the society in which it was created and the function of the critic was to engage in ideological exposure as well in judgement of literary quality. While many of his essays could be cited here, his <strong>Tamil Heroic Poetry</strong> alone would suffice. It is ostensibly a work in comparative literature. Kailasapathy analyses certain ancient Tamil works here in comparison to the European (Greek, Irish, Welsh) bardic tradition and comes to a number of noteworthy conclusions. In addition, he is able to make a significant contribution to the discovery of the socio-historical circumstances under which these ancient Tamil writings were undertaken. The intimate relationship between the kings of the Tamil land and the major and minor poets of the time, the economic and social contexts in which they functioned and the particular occasions in which poets wrote/sang their compositions are all revealed here. One is able to obtain a complete explanation of the poems themselves as well as certain features within the poems by the sociological circumstances that he describes. The cultivated exaggerations of various kings in ancient Tamil texts, their emergence as mythic figures, it turns out, were both a prosodic convention as well as the fulfillment of a contractual responsibility between the poet as a ‘hired hand’ and his royal patron. One can even go a step further and wonder whether the prosodic conventions themselves could have arisen in response to the sociological situation of the poet itself.</p> <p>The informed and original analyses of ancient Tamil literary culture demonstrated Kailasapathy’s remarkable sociological competence. It was natural that this perspective and methodology should be used in other work too. It was indeed so used in nearly all his works, but two stand out in this regard, in my opinion. One, <strong>Adiyum Mudiyum</strong> (Foot and Head) is a fine philosophical/sociological analysis of certain Tamil religious texts and practices. The latter is a very instructive example of his methodological sophistication. The terms in the title refer to Root (<em>Adi</em>) and Crown or Head (<em>Mudi</em>) and become a ruling metaphor for the analyses of ‘substructures’ and ‘superstructures’. The root metaphors, so to speak, are imaginatively related to a famous Hindu myth where Vishnu and Brahma contend to discover the ultimate root and crown of Siva and conclude that Siva is both rootless and crownless. He writes, ‘The story of the search for head and root, whether it is fully believed or not, functions as a symbol in our society’s belief system. Various confusions and shortcomings in our art and literature are the result of a belief in the idea of search for feet and heads.’</p> <p>It is however in his <strong>Valvum Valipadum</strong> (Social Life and Religion among the Ancient Tamils) that one finds his most original and thought provoking contribution to the sociology of knowledge. In the preface to this work he wrote ‘I have tried to show that literary ideas as well as literary forms and techniques are outgrowths of given social forms.’ It is not only purely literary matters that concerned him in this work, but the larger gamut of religio-literary documents of the early Tamils. In many ways it is an exemplary analysis and if translated into English will undoubtedly obtain a very favourable response from the international sociological community. In the first chapter he traced the origins of the conceptions of god and religion among the ancient inhabitants of southern India with the aid of historical/archeological works and Tamil religio-literary texts. This is followed by chapters that very coherently interlace historical and anthropological data with the Tamil literary texts and tries to illuminate the latter.</p> <p>In all of his work, Kailasapathy tries to rescue Tamil studies from the mindless chauvinism and a historical hagiography into which far too many Tamil scholars had taken it. Not for him the comfortable self-congratulations of the DMK school of writers, or the easy essays in Dravidianist hyperbole and political partisanship; rather, in the words, he used to dedicate one of his works to his former teachers, Prof. K. Kanapathipillai, he continued in his work ‘the traditional culture of the East with the methodology of the West’ and found his métier in it.</p> <p style="text-align: center;">*****</p> <p style="text-align: center;"><strong>Prof. Kailasapathy Critiqued</strong></p> <p style="text-align: center;"><strong>by Sachi Sri Kantha</strong></p> <p style="text-align: center;">July 10, 1983</p> <p>Dear Dr. Perinbanayagam,</p> <p>Hope you won’t be surprised to receive this letter from me. Recently I had the opportunity to read your article on Prof. Kailasapathy, which appeared in the <em>Lanka Guardian</em> of March 15, 1983. Sometimes, I get these issues by airmail, but sometimes they arrive in surface mail; so only last week, I received the March issues. </p> <p>May I make some comments on your article? It is a thought-provoking contribution and I appreciate that you had sent it to <em>Lanka Guardian</em> for publication. However,</p> <p>(1) For me, it seems that your article seems to be an eulogistic one; and what was missing was that you haven’t touched some of the weak points of Kailasapathy’s studies. By omitting this aspect, I feel that you have not done credit to the stamp of quality which Kailas was trying to integrate into the Tamil literature. What happened to the ‘literary criticism’ aspect <u>of </u>Kailas’ works? Are they without any flaws? I hope, certainly not.</p> <p>(2) I question your remark, ‘He is the only genius, we have in Tamil studies.’ I personally feel that, it is more applicable to Fr. Thaninayagam, who contributed a lot of painstaking work for Tamil studies, on aspects of his,</p> <p>a) Organizational ability to build up an International Tamil awareness. And Kailas got international recognition only after participation at the International Conferences held in Kuala Lumpur, Madras and Paris.[And, the role played by Kailas and his co-workers in downgrading the Jaffna Conference (1974) should not be overlooked. And he, being a political appointee and an appendage of Srimavo’s government didn’t do good to maintain his integrity as a student of Tamil studies at this particular conference. I personally consider this as the low-ebb of his career.]</p> <p>b) Contribution to the educational literature in Tamil.</p> <p>c) Compilation of bibliographic work on Tamil studies.</p> <p>d) Editorial abilities to publish a reputed, research journal ‘<em>Tamil Culture</em>’ for a lengthy period.</p> <p>May be, since he aligned himself with the Federal Party in the mid 1950s, he may not be agreeable to you as a pioneer of Tamil research.</p> <p>How could you miss the pioneering aspects of Swami Vipulananda? What has Kailas produced, comparable to Swami’s ‘<em>Yaal Nool</em>’, which todate stands as the only evaluative piece of research work on Tamil music? And you could remember that Swami had the scientific background (with a B.Sc in physics), which none of the other Tamil scholars have not had.</p> <p>Even the diverse contributions of Vithiananthan are quite impressive, not to be neglected. In terms of versatility of scholarship, I feel that contributions of Swami Vipulananda and Vithiananthan score high points in the Tamil studies, than the literary output of Kailas. It is a pity that even scholars of repute, like Prof. Indrapala have omitted to record the contributions of Swami, in his chapter on Tamil literature, in the ‘<em>History of Ceylon</em>’, vol.3, edited by K.M. de Silva. He even doesn’t mention the name of <em>Yaal Nool</em> in his essay. Shame on him! May be that these Tamil scholars (Kailas included) have neglected the music literature in Tamil completely, due to their limited knowledge (or ignorance, if I put it strongly!) in this art. I consider this as a glaring piece of omission in the critical analysis of Kailas too! Has Kailas done anything comparable to the painstaking work of Vithi’s like collecting, compiling and editing the folk music literature of Tamil peasants of Ceylon?</p> <p>If we consider the traditional trichotomous classification of <em>Iyal </em>[prose] , <em>Isai</em> [music] and <em>Nadagam</em> [drama], I could see that Vipulananda contributed to <em>Iyal</em>and <em>Isai</em> aspects of Tamil literature. Vithi had contributed in all three aspects of Tamil literature; while Kailas’ works are limited only to the<em> Iyal</em> aspects of Tamil literature.</p> <p>May I know your comments on the views I’ve mentioned here? What I’m contesting is your categorical statement, “<u>only</u> genius”. May be, Kailas could be classified as one of the trend-setters of Tamil studies, but not to be elevated to the level of <u>only genius</u>. With kind regards.</p> <p>Yours sincerely,</p> <p>Sri Kantha</p> P.S: I’m sending to you, under separate cover, a copy of my book ‘<em>Tamil Isai Theepam</em>’ which had recently been selected for Sahitya Prize award (for research) for the year 1977, five years after its releaseangelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-41465052026063022982010-07-26T11:00:00.000-07:002010-08-12T09:42:41.853-07:00<div id="post-15211" class="post"> <h1>சோஷலிசத்திற்கான பாதை பற்றி பேராசிரியர் கைலாசபதி : லெனின் மதிவானம்</h1> <!-- thamizmanam.com toolbar code Part 2, starts. Pathivu toolbar v1.1 (c)2005 thamizmanam.com --> <script language="javascript" type="text/javascript" src="http://services.thamizmanam.com/toolbar.php?date=07/19/2010&posturl=http://inioru.com/?p=15211&cmt=28&blogurl=http://inioru.com&photo=http://inioru.com/wp-content/uploads/logo.png"> </script> <table class="pathivu" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr class="pathivu"> <td class="pathivu"> <table class="pathivu" bgcolor="#f0f0f0" border="0" bordercolor="#e0e0e0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr class="pathivu" valign="middle" height="26"> <td class="pathivu" style="border-right: 1px solid rgb(192, 192, 192); border-bottom: 1px solid rgb(192, 192, 192); padding: 0px;" nowrap="nowrap"><br /> <table style="display: inline;" class="pathivu" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr class="pathivu"> <td style="padding-top: 5px;" class="pathivu"> <a href="http://thamizmanam.com/" target="_blank"> 0 </a> </td> </tr> <tr class="pathivu"> <td class="pathivu" style="font-size: 7pt; line-height: 5%;"> <br /></td> </tr> </tbody></table> <a href="http://thamizmanam.com/services/pdf/single_pdf.php?url=http://inioru.com/?p=15211&a.pdf" target="_blank"> </a><a href="http://thamizmanam.com/services/select_posts.php?blogurl=http://inioru.com" target="_blank"><br /> </a> </td> </tr> </tbody></table> </td> </tr> <tr class="pathivu"> <td style="font-size: 8pt; line-height: 80%; font-family: verdana;" class="pathivu"> <div style="display: inline; float: right; color: rgb(144, 144, 144);" class="pathivu"> <b>Pathivu</b> Toolbar ©2010<a href="http://thamizmanam.com/" style="text-decoration: underline; color: rgb(128, 128, 128);">thamizmanam.com</a> </div> </td> </tr> <tr class="pathivu"></tr> </tbody></table> <!-- thamizmanam.com toolbar code Part 2, ends. Pathivu toolbar (c)2005 thamizmanam.com --> <p style="text-align: justify;"><a href="http://inioru.com/wp-content/uploads/2010/07/ProfKKailasapathy.jpg"><img class="alignleft size-full wp-image-15214" title="ProfKKailasapathy" src="http://inioru.com/wp-content/uploads/2010/07/ProfKKailasapathy.jpg" alt="" width="253" height="400" /></a>பேராசிரியர் கைலாசபதி மறைந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அவரது வயதினையொட்டி (14-ஏப்-1933) பார்க்கின்றபோது இவ்வாண்டு வெள்ளி விழாவுக்கான ஆண்டாக காணப்படுகின்றது. இவ்வேளையில் கைலாஸின் எழுத்துக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன என்பது உண்மையே. ஆயினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்க பதிப்பொன்று இதுவரை வெளிவராமை சிந்தனைக்குரியதே. அவ்வாறே கடந்த காலங்களில் இன்றைய நாளில் கைலாசபதியின் பங்களிப்பு குறித்த ஆக்கபூர்வமான முழு நிறைவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் பிரசுரமாகியுள்ளன என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.</p> <p style="text-align: justify;">அவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை முற்போக்கு மார்க்ஸிய முகாமைச்சார்ந்த அறிஞர்களாலேயே எழுதப்பட்டவை. இவ்வெழுத்து முயற்சிகள் பெரும்பாலும், இலக்கிய கதியில் கைலாசபதியின் ஆக்கங்கள் செலுத்தும் முக்கியத்துவத்தையும் அவற்றின் தாக்கங்களையும் இவர்கள் செவ்வனே உணர்ந்து எழுதியுள்ளனர். குறுகிய வரம்புகளை கடந்து தேசிய சர்வதேசிய நோக்கில் அவ்வாய்வுகள் வெளிவந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும்.</p> <p style="text-align: justify;">இவ்வாறாக கைலாசபதி குறித்த ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் காணலாம். இது ஒரு புறமிருக்க கைலாசபதியின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான தேசிய சர்வதேசிய அரசியல் குறித்த அவரது பார்வையும் சோசலிசத்துக்கான பாதையில் அவரது பங்களிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளிவராமை துரதிஸ்டமான ஒன்றே. அமரர் சுபைர் இளங்கீரன் அவர்கள் கைலாசபதியின் அரசியல்| என்ற கட்டுரையை எழுதியுள்ளார் என்ற போதிலும் அது ஒரு அறிமுக கபட்டுரையாகவே அமைந்திருந்தது என்ற வகையில் இவ்விடயம் குறித்து எழுத வேண்டியது சமகால தேவையாகும்.</p> <p style="text-align: justify;">கைலாசபதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கலை இலக்கிய பேரவை நான்கு நூல்களை வெளியிட்டது. (பன்முக ஆய்வில் கைலாசபதி – கட்டுரை தொகுதி, கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் – சி.கா செந்திவேல், பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துக்களும் – சுபைர் இளங்கீரன், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 – 1982) – க.கைலாசபதி) இவற்றுள் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 – 1982) என்ற நூல் கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வையை அறிந்து கொள்வதற்கு துணையாக அமைந்துள்ளது.</p> <p style="text-align: justify;">சோசலித்திற்கான பாதை பற்றி கைலாசபதியின் பார்வையை தெளிவாக்கிக் கொள்வதற்கு அன்றைய சூழலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்த ஸ்தாபன பிரச்சனைகள் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகின்றது.</p> <p style="text-align: justify;">உலக வரலாற்றில் மனித சமூகங்களின் வளர்ச்சியோடும் சமூக சிந்தனைகளின் உயர்ந்த பரிமாணமாகவும் மார்ஸியம் 19ஆம் நூற்றாண்டுகளிலே ஐரோப்பாவில் பிறப்பெடுத்தது. இத்தத்துவமானது மனித வாழ்வு, அவற்றுக்கிடையிலான உறவு குறித்து விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை முன்வைத்து. அது முழுமையானதாகவும் ஒருமையானதாகவும் உள்ளது. மூடநம்பிக்கை, பிற்போக்குவாதம், முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்கிச் செல்லாத ஒரு இணைக்கப்பட்ட உலக கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்கு வழங்குகின்றது|.</p> <p style="text-align: justify;">அந்தவகையில் அத்துவமானது சமூக வளர்சியையும் அதன் பக்க விளைவான சமூக இயக்கங்கள் குறித்தும் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நோக்கில் ஆய்வுக்குட்படுத்தியதுடன் கருத்து முதல்வாத சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி விஞ்ஞான பூர்வமான சிந்தனையை மனித குலத்திற்கு வழங்கியதுடன் அதன் பிண்யில் உழைக்கும் மக்களினதும் அவர் தம் இயக்கங்களினதும் விடுதலை மார்க்கமாக வர்க்கப் போராட்ட திசைவழியை காட்டி நின்றது அந்த வகையில் மார்க்ஸிய சித்தாந்தமானது உண்மையானதாகவும் இருப்பதனால் அது மிகுந்த வலிமை கொண்ட கோட்பாடாகவும் அமைந்து காணப்படுகிறது. உலகில் இதுவரை கால தத்துவங்கள் யாவும் உலகை பகுதியாகவோ முழுமையாகவோ விபரித்து நிற்க, மார்க்ஸியம் தான் அதனை மாற்றியமைப்பதற்கான உந்து சக்தியை மனித குலத்திற்கு வழங்கியது. இது தொடர்பில் ஏங்கல்ஸின் பின்வரும் கூற்று முக்கியமானதொன்றாகும்.</p> <p style="text-align: justify;">18ம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாய் இருந்தது. ஏனென்றால், அக்காலத்pல் இயற்கை விஞ்ஞானங்களை காட்டிலும் இயந்திர இயக்கஇயக்க விஞ்ஞானம் விஞ்ஞானம் ஒன்று தான் அதாவது பூமண்டலத்தை சேர்ந்த கனபொருட்களின் இயந்திர (சுருங்க சொன்னால் பூமியின் ஆகர்்ண சக்தியை பற்றிய ஒரு இயந்திர இயக்க விஞ்ஞானம் ஒன்று தான் திட்டமான முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தது. அக்காலத்தய இரசாயன விஞ்ஞானம் குழந்தை பருவத்தில் தான் இருந்தது. எரியும் காற்று என்று வர்ணிக்கப்பட்ட |பிளாஜிஸ்தான்| தத்துவரூபத்தில் அன்று இரசாயனம் இருந்து வந்தது.</p> <p style="text-align: justify;">உயிரியல் விஞ்ஞானமோ கட்டில் குழந்தையாய் கிடந்தது. தாவர மிருக ராசிகளை ஏதோ மேலோட்டமாக பரிசீலித்து வந்தார்கள், அவ்வளவு தான். இயந்திர இயக்கத்தின் காரணமாகத்தான் இவை (தாவர மிருகராசிகள்). உயிர் பெற்று ஜீவிக்கின்றன என்று விளக்கினார்கள். தெகார்த்தோவுக்கு மிருகங்கள் எவ்வாறு இயந்திரங்களாகத் தென்பட்டனவோ அதே மாதிரி 18ம் நூற்றாண்டின் லோகாயத வாதிகளுக்கு மனிதன் ஒரு இயந்திரமாக தென்பட்டான்.|2</p> <p style="text-align: justify;">மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் தோன்றிய காலம் முதலாளித்துவம் தமது வாலிப வயதை எட்டியிருந்த காலப்பகுதியாகும். அக்காலப் பகுதியானது மார்க்ஸிய சிந்தனை பிறப்பெடுத்து அது தன்னை ஸ்தாபனமாக நிலைநிறுத்திக் கொள்கின்ற ஆரம்ப காலப்பகுதியாக காணப்பட்டது.</p> <p style="text-align: justify;">இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்த காலப்பகுதில் மார்ஸிய சித்தாந்தமானது உலக வரலாற்று செல்நெறியில் பிரதான தாக்கத்தினை ஏற்படுத்தியதுடன் அது சமூக மாற்றத்திற்கான பலமான சித்தாந்த தளத்தினையும் ஸ்தாபன அமைப்புகளையும் உருவாக்கியிருந்தது. 1917 ஆம் ஆண்டு இரசிய புரட்சியானது உலக வரலாற்றில் உழைக்கும் மக்களுக்கும், அவர்களை சார்ந்து நின்ற நேச சக்திகளுக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும். அவ்வாறே சீன புரட்சியானது உலகில் பெருந்தொகையான மக்களை புரட்சிகரமான அரசியல் ஆளுமைக்குள் கொண்டுவந்தது. இதனையொட்டி உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த கோட்பாடுகளும் போராட்டங்களும் அதனடியாக எழுகின்ற ஸ்தாபன அமைப்புக்களும் அல்போனியா, வியட்நாம், வடகொரியா, கம்போடியா, லாவோஸ், தென் யேமன், நீக்கரகுவா ஆகிய நாடுகளில் புரட்சிகர அரசியல் ஆளுகையின் கீழ் வந்தது. இது மனிதனையும், சமுதாயத்தையும் புதிய கோணத்தில் இட்டுச்சென்றது.</p> <p style="text-align: justify;">உலகின் ஏனைய பாகங்களை பொறுத்த மட்டில் இக்காலப்பகுதியில் <a href="http://inioru.com/wp-content/uploads/2010/07/russian-revolution.jpg"><img class="alignleft size-medium wp-image-15215" title="russian-revolution" src="http://inioru.com/wp-content/uploads/2010/07/russian-revolution-300x205.jpg" alt="" width="300" height="205" /></a>முதலாளித்துவத்திற்கு எதிரான பலமான ஸ்தாபனங்கள் உருப்பெற்று வந்தன. ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் பாஸிசப் போக்குகளை எதிர்த்து 1934 ஆம் ஆண்டிலே மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் இயக்கங்களும் நடாத்தியது. ஸ்பெயின் தேசத்திலே 1936ல் உள்நாட்டு யுத்தத்தை கட்டவிழ்த்து விட்ட பாஸிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தையும் வெகுஜன முண்ணணியையும் கட்டி எழுப்புவதில் ஸ்பானிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மும்முரமாக உழைத்து வந்தது. எமது தலைமுறையில் வியட்நாம் எவ்வாறு உலக மக்களது மனச்சாட்சியை உலுப்பி ஜனநாயக வாதிகளையும் தேசபக்தர்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் ஒரு முகப்படுத்தியதோ அதே போன்று முப்பதுகளில் சின்னஞ்சிறிய ஸ்பெயின் உலகின் நல்லோரை நாலா திசைகளிலிருந்தும் ஈர்த்தது. எழுத்தாளர்கள் இலட்சிய பற்றுடன் ஸ்பானி் குடியரசை ஆதரித்தனர்.<br />…..<br />இக்காலகட்டம் அரசியல் விழிப்புணர்வை இலட்சக் கணக்கானோருக்கு ஏற்படுத்திய காலப்பகுதியாகும். ஸ்பானியப் போரில் சர்வதேசப் படைப்பிரிவு ஒன்றின் தளபதியாய்ச் சமர் செய்த பி.அலெக்சாந்தர் கூறியிருப்பது போல, இக்காலப்பகுதியிலே, தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் போராட்டங்களிலும் எத்தகைய பரீச்சயமும் இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் கூட திடீரென அரசியல் தெளிவும் செயல் ஊக்கமும் பெற்றவராய்ப் பாஸிஸத்துக்கு எதிரான மகத்தான போர்களத்தில் லட்சிய வெறியுடன் குதித்தனர்.</p> <p style="text-align: justify;">1930 களைத் தொடர்ந்து சோவியத் ர்யாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த பாதையிலிருந்து நீங்கி, பிறிதொரு வர்க்க நலனை பிரதிபலிப்பாக மாறியது. உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் நலனையும் பிரதிபலிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் மேல் அமர்ந்து ஆணையிடும் கட்சியாக தோற்றம்பெற்றது. சோவியத் ர்யாவால் வீழ்சியுற்ற முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளே இக்கால சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாக இருந்தனர். இதன் உடன் விளைவாக புரட்சியை அடுத்த சோசலிஸ சமூக வலையமைப்பில் சுரண்டப்படும் வர்க்க அமைப்பை முற்று முழுதாக ஒழிப்பதற்காக பிரயோகிக்கபட வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் மக்கள்மேல் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமாக மாறியது. மாஓ இத்தகைய போக்குகளை விமர்சனத்திற்கு உட்படுத்தியதுடன் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எவ்வாறு பொது எதிரிக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தமது எழுத்துக்களின் ஊடாக எடுத்துக்காட்டியுள்ளார்.</p> <p style="text-align: justify;">புரட்சிக்கு பின்னர் சோவியத் ர்யாவில் ஏற்பட்ட மாற்றங்களும் குருசேவ் முதல் கொர்பக்சோ வரையில் முன் வைக்கப்பட்டு வந்த தீவிர வாத சிந்தனைகள் யாவும் சோவியத் ர்யாவின் ஆட்சி தொழிலாள வர்கத்தின் கையிலிருந்து மாறி பூர்சுவா வர்கத்திற்கு மாறியதன் உடன் விளைவாக தோன்றியதே சோவியத் சமூக ஏகாத்தியமாகும்.</p> <p style="text-align: justify;">1962 ஆம் ஆண்டை தொடர்ந்து சோவியத் ர்யாவால் ஏற்பட்ட சமாதான முறையில் பாராளுமன்றத்தை கைப்பற்றல் என்ற நிலைப்பாடானது சர்வதேச தொழிலாள வர்க்கம் குறித்த எவ்விதமான அக்கறையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட சோவியத் ர்யாவின் சுயரூபத்தை காட்டி நிற்கின்றது. இது தற்செயல் நிகழச்சியல்ல, வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.</p> <p style="text-align: justify;">ஏறத்தாழ இதே காலப்பகுதியில் சர்வதேச ரீதியான <a href="http://inioru.com/wp-content/uploads/2010/07/mao.jpg"><img class="alignleft size-medium wp-image-15216" title="mao" src="http://inioru.com/wp-content/uploads/2010/07/mao-229x300.jpg" alt="" width="229" height="300" /></a>கம்யூனிஸ்டுகளின் தியாகங்களையும், உறுதிமிக்க போராட்டங்களையும் கூட நாம் உலக சரித்தத்தில் காணலாம். ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்த காலகட்டமும், சீனாவின் புரட்சிகர அரசியல் நிலைப்பாடுகள் தக்க எடுத்துக்காட்டுகளாகும். இவ்வணியினர் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் பிண்ணயில் உழைக்கும் மக்கள் தான் சார்ந்த பதாகையை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து செல்வதற்காக தத்துவார்த்த ஸ்தாபன வேலைத்திட்டங்களை முன் வைத்தனர்.</p> <p style="text-align: justify;">இந்தக் காலச்சூழலில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள் ஏனைய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பாதிக்க தொடங்கின. அதன் வெளிப்பாடாக தோன்றியதே மொஸ்கோ, சீன சார்பு முரண்பாடுகளாகும். அதன் எதிரொலியை நாம் இலங்கையிலும் காணக்கூடியதாகவிருந்தது. இலங்கை பொதுவுடைமை இயக்கத்தில் ஏற்பட்ட ஆழமான அரசியல் தத்துவார்த்த வாதங்கள் காரணமாக பொதுவுடைமை இயக்கம் 1964 இல் பிளவடைந்தது. இதன் விளைவாக அன்றைய சூழலில் முற்போக்கு அணியை வீறுடன் முன்னெடுத்த அறிஞர்களான பிரேம்ஜி ஞானசுந்தரன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, அகஸ்தியர் போன்ற சமாதான வழியில் பாராளுமன்ற பாதை என்ற தத்துவார்த்த நிலைப்பாட்டை முன்வைத்தது. மொஸ்கோ சார்பை ஆதரித்து நின்றனர்.</p> <p style="text-align: justify;">சர்வதேச ரீதியில் உழைக்கும் மக்கள் அரசியலிலும் கலை இலக்கியத்திலும் பல சவால்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கி நின்ற இன்றைய நாளில் இந்த முரண்பாட்டை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பல கருத்து மாறுபாடுகள் தோன்றின. இந்த சூழலானது பல புத்திஜீவிகளை அறிவு தடுமாற்றத்திற்குட்படுத்தியது. இவ்வாறானதோர் சூழலில் இத்தகைய சர்வதேச அரசியல் சித்தாந்த முரண்பாடுகளை கைலாசபதி அவர்கள் எவ்வாறு அணுகினார். சோலிசத்திற்கான பாதை குறித்து அவர் எத்தகைய நிலைப்பாட்டினை கொண்டிருந்தார் என்பது முக்கியமானதோர் வினாவாகும்.</p> <p style="text-align: justify;">கைலாசபதியின் பெரும்பாலான சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் 1979 – 1982 ஆண்டுகளின் காலப்பகுதியில் ஏற்பட்டவையாகும்.</p> <p style="text-align: justify;">அன்றைய நாளில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடன் இணைந்த பிற்போக்கு சக்திகளும் உலக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அக்காலச் சூழலில் சோலிச வேடமணிந்து சோவியத் ர்யாவும் உலக மேலாதிக்கத்திற்கெதிரான போட்டியில் ஈடுபட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் சோவியத் ர்யா குறித்த கைலாசபதி அவர்களின் பார்வை பின்வருமாறு பிரவாகம் கொண்டிருந்தது.</p> <p style="text-align: justify;">கடந்த சில வருடங்களாக உலனின் பல பாகங்களிலே சோவியத் யூனியன் ஊடுருவல் செய்து, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. சில இடங்களிலே தனது சூத்திர பாவைகளான கியூபா, கிழக்கு ஜேர்மனி, வியட்நாம் முதலிய நாடுகளின் படைகளையும் ஆலோசனைகளையும்| யுத்த தளபாடங்களையும் பயன்படுத்தி தனது செல்வாக்கினை ஸ்திரப்படுத்தி வந்திருக்கின்றது. மிக அண்மையில் ஆப்கானிஸ்தானில் தனது ஆதிக்கத்தை ரொம்பவும் அப்பட்டமாக, எதுவித ஒழிவு மறைவுமின்றி நடத்தி வருகிறது. பல நாள் ஏறிய குதிரை ஒருநாளைக்கு சறுக்கும்| என்பது போல, இப்போது ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் பரிதாபகரமான நிலையில் சிக்கி கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் சிறிது சிறிதாக ஆரம்பித்த சோவியத் எதிர்ப்பு நாளுக்கு நாள் வேகமடைந்து தற்சமயம் தலைநகரான காபூலுக்கே சென்றுவிட்டது. தொடக்கத்திலே எதிர்ப்பு காட்டியவர்களை பிற்போக்குவாதிகள் என்றும், மதவாதிகள் என்றும் அலட்சியமாக தாக்கித் தலைமையில் உள்ள பொம்மை அரசாங்கம் வர்ணித்தது. எல்லைப்புற மாவட்டங்களிலே பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் சீனாவும் கிளர்சியாளருக்கு உதவி வழங்குவதற்காக பழி சுமத்தியது. ஆனால் அந்த அபாண்டப் பழி எடு;படவில்லை. ஏனெனில் ஆப்கானிஸ்தானிய நகரங்களிலும், கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய தேச பக்தர்கள் நெஞ்சுரம் மிக்க மலைவாழ் மக்கள், தராக்கி ஆட்சியையும் அதற்கு பக்கபலமாக உள்;ள சோவியத் யூனியனையும் முழுமூச்சாக எதிர்க்கத் தொடங்கினர். அங்குள்ள சோவியத் ராணுவ ஆலோசகர்கள் அதிகாரிகள் பற்றி முன்னர் அப்பகுதியில் கூறியிருக்கின்றோம்.</p> <p style="text-align: justify;">சில நாட்களுக்கு முன் தலைநகரான காபூலிலேயே பட்டப்பகலில் சண்டை நடந்திருக்கின்றது. நகரின் எல்லையில் உள்ள பல – ஹிசார் கோட்டையில் நிலை கொண்டிருந்த அரசாங்க இராணுவப்படையினர் சில பிரிவுகள் கிளர்ச்சி செய்ததாகவும் அதற்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுந்ததாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் கூறுகின்றன. கோட்டையிலிருந்த கிளர்ச்சி படைகளை மடக்கி அடக்குவதற்காக சோவியத் மீ – 24 ஹெலிகெப்டர்கள் றொக்கெற்றுக்கள் தாக்கினவாம். அதே சமயத்தில் சோவியத் டாங்கிகள் கோட்டை மீது பீரங்கித் தாக்குதல்கள் நடத்தின. சுமார் நான்கு மணிநேரம் நடந்த கடும் சண்டையின் பின் கிளர்ச்சியாளர்கள் அகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இரு தரப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.</p> <p style="text-align: justify;">இன்று சோவியத் யூனியன் சிதைந்து சின்னாபின்னமாகியதற்கு அது கடந்த காலங்களில் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளே காரணமாகும். சோலிச போர்வையில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில், ஆசிய ஆபிரிக்க நாடுகளில் சோவியத் ர்யா தமது மேலாதிக்க நலனை முன்னிறுத்துவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயற்பட்டு வந்தமையை கைலாசபதி சிறப்பாகவே அடையாளம் காட்டியிருக்கின்றார். இது அவரது மார்க்ஸிய லெனினிய மாஓ சேதுங் சிந்தனை வழிப்பட்ட தெளிவை எடுத்துக் காட்டுகின்றது.</p> <p style="text-align: justify;">ஒரு காலச் சூழலில் சோவியத் ர்யாவின் மேலாதிக்க தன்மையானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விஞ்சு நிற்கும் அளவிலும் மாறியது. தோழர் மாஓ சேதுங் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் பயங்கரத் தன்மையை சுட்டிக்காட்டினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் அன்று தற்காப்பு நிலையிலும் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தாக்கும் நிலையிலும் அதாவது தனது உலக மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் போக்கிலும் வேகம் காட்டி நிற்பதாக கணித்துக் கொண்டார். அதன் அடிப்படையில் சோவியத் யூனியனது அபாயத்தை உலக மக்கள் புரிந்து கொள்ளும் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டிய சமூகக்கடமை மார்க்ஸிய புத்திஐPவிகளை எதிர்நோக்கியிருந்தது. கைலாசபதியின் சர்வதேச நிகழ்வுகள் பற்றிய அரசியல் விமர்சனங்கள் மேற்கூறிய நோக்கின் அடிப்படையிலேயே அன்று அமைந்திருந்தமை அக்கட்டுரையின் வாயிலாக இனங்கண்டு கொள்ள முடிகின்றது.</p> <p style="text-align: justify;">கம்பூச்சியா போன்ற நாடுகளின் விடுதலைப் போரின் அவசியம் குறித்து எழுதிய கைலாசபதி அவர்கள் அந்நாடுகளில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் அதற்கு கைக்கூலிகளாக தொழிற்பட்ட நாடுகளும்; எத்தகைய காட்டு மிராண்டி தனமான மிலேச்ச தாக்குதல்களை அந்நாடுகளில் நிகழ்த்தின என்பது குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.</p> <p style="text-align: justify;">இந்தோசீனத்தில் வியட்நாம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிய காலமுதல்ஈ அதாவது கம்பூச்சியா லும் <a href="http://inioru.com/wp-content/uploads/2010/07/vietnam-war-photo.jpg"><img class="alignleft size-medium wp-image-15217" title="vietnam-war-photo" src="http://inioru.com/wp-content/uploads/2010/07/vietnam-war-photo-300x200.jpg" alt="" width="300" height="200" /></a>லாவோசிலும் சீனாவின் எல்லை புறங்களிலும் இராணுவ தாக்குதல்களை நடத்த தொடங்கிய நாள் முதல் ஒரு செய்தி அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதுதான், வியட்நாம் புதியரக நச்சுப் புகையையும் ஒருவிதமான கதிர்வீச்சையும் பயன் படுத்துகிறது என்பதாகும். வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்க ஏகாதிபத்தி படைகளும் நச்சு திராவகக் குண்டுகளையும் பயிர் அழிப்பு விங்களையும் பெருமளவில் பயன்படுத்தின. அது பற்றி அறிந்த உலக மக்கள் மகா பாதகமான அச்செயலை கண்டித்தனர். அமெரிக்கா பயன்படுத்திய நச்சு திராவகங்கள் தென் வியட்நாம் வீழ்சியுற வட வியட்நாமிய படைகள் வசம் சேர்தன. அவற்றையும் வியட்நாமியர் அப்போது கம்பூச்சியா லாவோஸ் ஆகிய நாடுகளில் தேச பக்தி படைகள் தங்கியிருக்கும் பிரதேசங்களை அழிப்பதற்கும் பிரயோகிக்கின்றனர். வியட்நாமிய எல்லை பிரதேசங்களில் தற்பாதுகாப்பிற்காகச் சீன படைகள் பதிலடி கொடுக்க முற்பட்ட பொழுதும் இப்புதிய விக் கருவிகளை வியட்நாமியர் பரீட்சித்துப் பார்ததாகக் கூறப்படுகின்றது. இவற்றையெல்லாம் கவனமாக அலசி ஆராய்ந்த மேற்கு நாடுகளின் நிருபர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வியட்நாமியர் மூலமாக சோவியத் ராணுவத்தினர் சில நவீன நவீன கருவிகளை தென்னாசிய மக்கள் மீது பரீட்சித்துப் பார்க்கின்றனர். இந்தோனேசியா, விக் கருவிகளின் பரிசோதனை களமாக ஆக்கப்பட்டுள்ளதா? 5 என சோவியத் யூனியனின் எதேச்சிகார போக்குகளை தெளிவாக அடையாளம் காட்டியதுடன் சோவியத் ஆலோசனையின் பேரில் வியட்நாம் போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்ட பொருளாதார திட்டம் குறித்தும் அதன் தோல்வி குறித்தும் வெளிப்படுத்துகின்ற கைலாசபதி இந்நாடுகளில் ஆமலாதிக்க பேரரசை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தோ சீனா சமஸ்டி|என்ற பெயரில் ஏனைய நாடுகளை அடக்கி வைப்பதற்காக பெரியதோர் இராணுவப்படையை உருவாக்க நேர்ந்ததையும், அதன் பிண்ணணியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பின் தங்கிய சமூகத்தில் பலவந்தமாக சேர்த்துக் கொள்ளப்பட்டமை குறித்தும் அமெரிக்காவில் சி.ஐ.ஏ எவ்வாறு தமது மேலாதிக்க பணிகளுக்கு ஏதுவாக இருந்ததோ அதே போன்று சோவியத் ர்ய ரகசிய ஒற்றர் சேவையும் (கே.ஜி.பி) சோவியத் அடக்குமுறைக்கு ஏதுவாக அமைந்திருந்தது பற்றியும் எழுதியுள்ளார். இவை யாவற்றிற்கும் மேலாக இந்நாடுகளிலிருந்து சிறுபான்மையினர் வெளியேற்றப்பட்மை பற்றியும் அவர் சுட்டிக் காட்டத்தவறவில்லை.</p> <p style="text-align: justify;">கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வைகளில் முக்கியமுக்கியமானது இந்தியா பற்றியதாகும். சோவியத் யூனியன் – இந்திய உறவுகள் பற்றியும் அதனடியாக எழுகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் போக்;குகள், அதனால் உருவாக போகின்ற தீய விளைவுகள் பற்றியும் கைலாசபதியின் பார்வை பிரதானமானதாகும். உலக அரங்கிலே இந்தியா சோவியத் யூனியனின் ஊதுகுழலாக செயற்படுவதை உலகம் அறிந்துள்ளது. சர்வதேச மாநாடுகளில் ஏனைய மூன்றாவது உலக நாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து இந்திய நிலைப்பாடு வேறுபடுவதும் சோவியத் செல்வாக்கினாலேயாகும். இதற்கு அடிப்படை பொருளாதார பிடியே என்பது பலரும் அறிந்ததே. அத்துடன் இராணுவத்துறையில் சோவியத் யூனியனே இப்பொழுது முதலாம் நம்பர் சப்ளையராக விளங்குகின்றது. அண்மையில் இந்திய விமானப்படை சோவியத் யூனியனிலிருந்து முதலாவது தொகுதி மிக் – 23 ரக விமானங்களைப் பெற்றுள்ளது. அவற்றுடன் ர்யாவில் பயிற்சி பெற்ற விமானிகளும் திரும்பி உள்ளனர். பல கோடி பெறுமதியான மிக் – 23 ரக விமானங்களை இந்தியா அடுத்த சில வருடங்களுக்குள் பெற்றுக்கொள்வதற்கு உடன் பாடாகியுள்ளது. பிற நாடுகளிலுள்ள தளங்களை தாக்கவல்ல இவ்விமானங்கள் ர்யர்களின் ஆலோசனைப்படி பெறப்பட்டன.</p> <p style="text-align: justify;">இந்திய விமானப்படை இப்பொழுது முற்று முழுதாக ரஷ்ய விமானங்களை கொண்டதாகவே அமைந்துள்ளது. இத்தகைய கழுத்துப் பிடிப்புகளினாலேயே இந்தியாவின் குரல் உலக அரங்கில் ர்யாவின் எதிரொலியாக இருப்பதை பலரும் அவதானித்துள்ளனர். நடுநிலைமை பற்றி திருமதி இந்திரா காந்தி எவ்வளவு தான் உரக்க கூறினாலும் இந்தியா ர்யா பக்கம் சார்ந்திருப்பதை மூன்றாவது மண்டல நாடுகள் நாளுக்கு நாள் உணர்ந்து வருகின்றன 6 என விபரித்து விளக்குகின்ற கைலாசபதி இந்தியாவில்; சோவியத் யூனியன் மேற்கொண்டுள்ள அரசியல் வலிந்து தாக்குதலை இந்தியாவில் உருவாகிவந்த இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் எவ்வாறு இனங்கண்டு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.</p> <p style="text-align: justify;">சோவியத் ர்யாவின் சமூக ஏகாதிபத்தியம் குறித்து விமர்சிக்கின்ற கைலாசபதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் குறித்து விமர்சிக்க முற்படுவது அவரது தீட்சாண்யமிக்க பார்வையை எடுத்துக் காட்டுகின்றது. கைலாசபதி சோவியத் – அமெரிக்க மேலாதிக்க போட்டியால் யுத்த ஆபத்து குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.</p> <p style="text-align: justify;">அமெரிக்கா தனது இராணுவச் செலவுகளை என்றுமில்லாதவாறு திடீரென அதிகரித்துள்ளது. இவ்வாண்டு ஆயிரத்து எழுநூற்று எண்பது கோடி டொலர் அமெரிக்க பாதுகாப்புக்குச் செலவிடப்படும். அடுத்த வருடம் இரண்டாயிரத்து இருநூற்று இருபது கோடி டொலர் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீதத்தில் சென்றால் ஐந்து வருடத்தின் பதின்மூவாயிரம் கோடி டொலர் இராணுவத்திற்கு செலவிடப்படும்.<br />……..</p> <p style="text-align: justify;">ஏற்கனவே வலதுசாரி அரசாங்கங்கள் பதவியில் இருக்கும் நாடுகளில் கூட இராணுவ ஆட்சிகளை நிறுவுவதற்கு அமெரிக்க முனைந்துள்ளது. தென் கொரியா, பாகிஸ்தான், தாய்லாந்து, எல்சல்வடோர் முதலிய நாடுகளில் அமெரிக்காவின் கைங்கரியங்களைக் காணக்கூடியதாய் இருக்கின்றது. அணிசேரா நாடுகளின் ஒற்றுமையை குலைத்து தனக்கு வால்பிடிக்க கூடிய சில தேசங்களை தனது செல்வாக்கிற்குள் வைத்திருக்க ர்யா பெரும்பாடு படுகின்றது. இந்தியா, சிரியா, வியட்நாம், கியூபா முதலிய வால்பிடிகள் இதற்கு ஒத்தாசை புரிகின்றன.7 இரு மேலாதிக்க வல்லரசுகளின் போட்டியின் காரணமாக மூன்றாம் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு கலாச்சார ஊடுருவல் குறித்து எழுதுகின்ற பேராசிரியர் அவை மனித குலத்தையே அழிக்க கூடியதோர் விசமியாக மாறியுள்ள அபாயத்தையும் எடுத்துக் காட்டுகின்றார். அத்துடன் இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான போட்டியானது எவ்வாறு மூன்றாம் உலக போரை தோற்றுவிக்ககூடிய அபாயத்தை கொண்டுள்ளது என்பது பற்றியும் அதனை முறியடிக்க கூடிய மக்கள் இயக்கங்கள் எவ்வாறு உலகளாவிய ரீதியில் தோன்றி வருகின்றன என்பது பற்றிய அவரது பார்வை விசாலமானது.</p> <p style="text-align: justify;">இந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் இவ்வல்ரசுகளுக்கிடையில் சிக்காமல் தமக்கான பொருளாதாரத்தையும் சுதந்திரத்தையும் தாமே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதனையும் தமது கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கைலாசபதியின் ஈரான், ஈராக் யுத்தம் தொடர்பான பார்வை முக்கியமானது. சுருங்க சொன்னால் அமெரிக்க ர்ய (சோவியத்) போட்டா போட்டி ஈரானை வெகுவாக பாதிக்கிறது. அதிதீவிரமான மதவாதியாக தோற்றமளித்தாலும் அயதொல்லா கொமெனி நடைமுறையில் பல விசயங்களில் நடுநிலைமை வகித்து வந்திருப்பது கவனிக்க கூடியது. நாட்டின் ஸ்திரப்பாட்டில் கொமெனிக்கு மிகுந்த கவனம் உண்டு. அவர் தான் முரண்படும் சக்திகளையும் குழுக்களையும் பிரிவுகளையும் ஒருவாறு இழுத்து வைத்துக்கொண்டிருக்கின்றார். பலர் நினைப்பது போல கொமெனி அராஜகவாதியல்ல. தான் தந்திரம் மிக்க அரசியல் தலைவர் என்பதை கொமெனி தக்கவாறு காட்டியுள்ளார்.</p> <p style="text-align: justify;">ஆனால் ஈரானின் பிரச்சனைகளை முழுமையாக எதிர்நோக்கவும் நாட்டை முன்னெடுத்து செல்லவும் கொமெனி மாத்திரம் போதாது. அவரது மதியழகும் இராஜதந்திரமும் மாத்திரம் போதாது|8 என்ற வகையில் ஈரான் மேலாதிக்க வல்லரசு போட்டியில் சிக்காது சுதந்திரமாக செயற்பட்டு வந்தமையையும் ஈராக் அவற்றினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளதையும் அதன் இறுதி விளைவாக வளைகுடா யுத்தத்தை ஆதரிக்க நேர்ந்ததையும் கைலாசபதி தீட்சயணத்துடன் எடுத்துக் காட்டியுள்ளார்.</p> <p style="text-align: justify;">இதே காலப் பகுதியில் இவ்விரு வல்லரசுகளின் நடைமுறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் பிறப்பெடுத்த மக்கள் இயக்கங்களையும் அதன் உறுதிப் பாட்டையும் கைலாசபதி அடையாளம் காட்டத் தவறவில்லை. உதாரணமாக சீனா எத்தகைய தடைகளையும் தாண்டி பாட்டளி வர்க்க அரசியல் நலன்சார்ந்த பதாகையை எவ்வாறு முன்னெடுத்து செல்கின்றது என்பது குறித்தும், அரசியல் ஸ்தாபன நடைமுறையில் எத்தகைய நிதானத்தை கடைப்பிடித்து வருகின்றது என்பது பற்றியும் அழகுற விளக்குகின்றார். அத்துடன் சீனா தன்னை இழந்து கொள்வதாக வகையில் அமெரிக்காவுடன் எத்தகைய உறவுகளை வைத்திருந்தது பற்றியும் அது எத்தகைய நிதானமான தன்மையினை கொண்டிருந்தது பற்றியும் அவரது சீனாவின் அமெரிக்க உறவு நிதானமானது| என்ற கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.</p> <p style="text-align: justify;">இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகும். அதாவது நம்மில் பல புத்திஜீவிகள் தமது சூழலில் காணப்படும் பிரச்சனைகளிலிருந்து விலகி தொலைதூர தீர்வுகளுக்குள் ஒதுங்கி அதன் பிண்ணணியில் தமது கம்பீரத்தில் வயிற்றுப்பிழைப்புக்கும் வழிதேடிக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.</p> <p style="text-align: justify;">இவர்களின் போக்கில் சர்வதேசியம் என்பது தமது சமகால சூழலிலிருந்து தப்பியோடுகின்ற போக்காகவே காணப்பட்டது. அதனால் கைலாசபதியை பொறுத்தமட்டில் சர்வதேச அரசியல் குறித்த தெளிவான பார்வையை கொண்டிருந்ததுடன் அவை எவ்வாறு இலங்கை அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தது என்பது பற்றி தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றார்.</p> <p style="text-align: justify;">1977ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி பீடத்திற்கு வந்தது. அதற்கு முன் பதவியிலிருந்த ஐக்கிய முண்ணணி அரசு <a href="http://inioru.com/wp-content/uploads/2010/07/jr.gif"><img class="alignleft size-medium wp-image-15218" title="jr" src="http://inioru.com/wp-content/uploads/2010/07/jr-300x200.gif" alt="" width="300" height="200" /></a>இழைத்த மக்கள் விரோத தவறுகளை காரணமாக கொண்டும், உள்நாட்டு, வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் பலத்த ஆதரவுடனும் அக்கட்சி அதிகாரத்திற்கு வந்தது. விதேசிய சார்பும் உள்நாட்டு உயர்வர்க்கத்தினருக்கு பயன்மிக்க பொருளாதார அரசியல் கொள்கைகள் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன.9 அவ்வகையில் 1977இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் மேற்குறித்த இந்த போக்கு இலங்கை அரசியலில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பதனை கைலாசபதி அவர்கள் இன்று இந்து சமுத்திரத்தில் குறிப்பாக தென் இந்தியாவில் இலங்கை முக்கியமான பகடைக்காயாக அமெரிக்காவால் உருட்டப்படுகின்றது. சோசலி வாடையே இல்லாமல் இந்நாட்டை உருமாற்றி அமைக்கும் பரிசோதனையை உலக வங்கியின் பொருளாதார நிபுணர்கள் இலங்கையில் இப்போது மேற்கொண்டு வருகின்றார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோற்றத்தை முற்றாக மாற்றாமலும், தென்கொரியா, தாய்லாந்து போல ராணுவ சர்வாதிகார ஆட்சிமுறைகளை புகுத்தாமலும் நாசூக்காக தனியார்துறை மேலாதிக்கம் செய்யும் பொருளாதார அமைப்பையும் ஜனாதிபதி தனிசெல்வாக்கு வகிக்கும் பாராளுமன்ற முறையையும் வைத்துக்கொண்டு இலங்கையை அமெரிக்க ஏகாதிபத்திய வட்டத்திற்குள் இறுக்கமாய் பிடித்துக்கொள்வதே மேற்கூறிய பரிசோதனையின் குறிக்கோளாகும் என இலங்கை அரசியலில் எவ்வாறு விதே நலனும் உள்நாட்டு உயர் வர்க்கத்தினரின் நலனும 10 பேணப்பட்டு வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வாறே அன்று இலங்கை அரசியலில் துளிர்விட்டு கிளைகளாக மாறிக்கொண்டிருந்த ட்ரொட்ஸ்கியவாதம, சேகுவராவாதம,;நவீன திரிவுவாதம் முதலிய தத்துவார்த்த ஸ்தாபன நடவடிக்கைகளின் அம்மணமான சந்தர்ப்பவாதத்தையும் அதிகார பதவி மோகத்தiயும் தமது அரசியல் கட்டுரைகளின் ஊடாக தெளிவுபடுத்தியதுடன் மாறாக மார்க்;ஸிய லெனினிய மாஓ சேதுங் சிந்தனையின் அடியாக எழக்கூடிய அரசியல் போக்கினையும் அதன் மக்கள் சார்பு பண்பினையும் தமது ஆய்வுகள் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளார்.</p> <p style="text-align: justify;">ஆக கைலாசபதியின் தேசிய சர்வதேசிய அரசியல் பார்வை குறித்து நோக்கின்ற போது சமகால சர்வதேச அரசியல் பற்றிய அவரது பார்வையானது நவீன திரிபுவாதமாக உருவாகியிருந்த சோவியத் யூனியனது நிலைப்பாட்டில் நின்றோ அல்லது திருடி வாழும் பண்பு நீங்கலாக சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மார்க்;ஸிய கல்லறைக்கு சென்றுவிட்டது என்ற விரக்திமயப்பட்ட கோட்பாட்டை அமெரிக்க சிந்தனையின் பின்னின்று முன்வைக்கவோ அவர் முனையவிi;லை. மாறாக இந்த நெருக்கடியான சூழலை விமர்சனத்துக்குள்ளாகி அதனூடு மார்சிய லெனினிய மாஓ சேதுங் தத்துவார்த்தை அதன் ஸ்தாபன நடைமுறையுடன் அணுகி தீர்வுகளை முன்வைக்கின்றனர். இப்பின்னணியிலே கைலாசபதி சீனச் சார்பு அரசியல் பாதையை முன்னெடுத்தனர். அந்த வகையில் அன்று உழைக்கும் மக்கள் நலன் சார்ந்து நின்ற மக்கள் அரசியலுக்கான பலமான அடித்தளத்தை வழங்கியவர் கைலாசபதி என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.</p> <p style="text-align: justify;">இன்று பின்னோக்கிப் பார்க்கையில் கைலவாசபதியின் நிலைப்பாடு சரியானது என்பது நிருபனமாகியுள்ளது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் கெர்பச்செரல் என்பவரைத் தலமைக்கு வரவழைத்து, அவரூடாகதர் கட்சியைக் கலைக்கும் பிரகடனத்தை வெளிப்படுத்தியிருந்தது. குட்சித் கலைப்பு கொர்பச்சேல் என்ற தனிநபரின் துரோகமல்ல. கட்சிக்குள்ளே மூன்று தசாப்தங்களாக இலக்கிய முரண்பாட்டின் திரிபுவாதம் என்ற அம்சம் பிரதானமானதன் பேறு அது. அப்போதும் அதை முறியடிப்பதற்காகச் சரியான கம்யூனிஸ்ட் நிலைப்பாட்டிற்கான போராட்டம் இருந்தபடி நீடிக்கும். ஆந்தவகையில் கலைக்கப்பட்ட இறுதிவரை கூட அக்கட்சிக்கு சரியான கம்யுனீட்சுக்களின் இருப்புக்குச் சாத்தியமுண்டு.</p> <p style="text-align: justify;">அவ்வாறே பிறநாடுகளில் இயங்கிய சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியினுள் பலர் சரியான மார்க்சிய உலகப் பார்வையுடன் இயங்கியிருக்க இடமுண்டு. அத்தகையவர்களுடன் கைலாசபதிக்கு உறவிருந்துள்ளது. ஏந்தவொரு விடயத்திலும் முரண்பாடுகளுக்குரிய இரு அம்சங்கள் உள்ளன. என்பது இயக்கங்களின் அடிப்படை விதி நோவியத் சார்புக் கட்சியினருள் இந்த இரு அம்சங்களுக்குமான போராட்டத்தை அவர் கவனத்தில் எடுத்துக் கொண்டதன் விளைவாக அவர்களுடனான தொடர்பையும் நட்பையும் தொடர்ந்து பேணினார் எனக் கருதலாம்.<br />அதே வேளை சினசார்பு நிலைப்பாட்டில் எந்த ஒரு தவறுக்கும் இடமற்ற தூய்மை பேணப்பட்டிருந்தது எனக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. சுமூக மாற்றத்துக்கான முன்னெற்றத்திசையில் வளரும் சக்தியினுள்ளும் சரிக்கும் தவறுக்குமான போராட்டம் நீடித்துக்கொண்டே இருக்கும். சோவியத் சார்பினரின் பாராளுமன்றப் பாதையில் சோலிஸம் என்ற வலது சாதிச் சந்தர்ப்பவாதம் பாதகத்தை ஏற்படுத்தியதைப் பொல சீன சார்பினரும் ஆயுத வழிபாட்டில் மூழ்கிய இடது சாரி அதிதீவிர வாதச் சந்தப்பவாதம் மேலொங்கவும் வாய்ப்பிருந்தது. அதனையும் சுரண்டும் வர்க்கம் பயன்படுத்தியுள்ளது. புல சீனசார்புக் கம்யூனிஸ்டுக்கள் பாராளுமன்றத்தை பிரச்சார மேடையாகப் பயன்படுத்த வேண்டிய தேவையை மறுத்தது உட்படப் பல்வெறு போராட்ட வடிவங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதைக் கவனத்திற் கொள்ளாமல் ஆயுத மோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனாலேயே போராடுகிற ஆயுததாரிகள் மீது அலாதிப் பக்திப் பூண்டு கொள்கை மார்க்கத்தை இரண்டாம் பட்சமாகக் பார்க்கும் தவறைச் சிலர் செய்ய நேரிடுகிறது.</p> <p style="text-align: justify;">ஆயினும் சீன சார்பில் மாஓ சேதுங் சிந்தனை இத்தவறை நிராகரித்து மக்கள் போராட்டத்துக்கான பல்வேறு வடிவங்களையும் உள்வாங்கும் தத்தவார்த்த ஆயுதமாக இருந்தது. சோவியத் சார்பில் திரிபுவாதம் பிரதான அம்சமாகி, இறுதியில் அதன் அழிவுக்கு வழி கோலுவது. சீன சார்பினர் உட்கட்சிப் போராட்டத்தினூடாச் சரியான வழியைத் தேட ஏற்றதாக மாஓசேதும் சிந்தனை பிரதான அம்சமாக அமைந்தமை கவலனிப்புக்குரியது.</p> <p style="text-align: justify;">இத்தகைய நிலைப்பாட்டினை கொண்டிருந்த கைலாசபதி கம்யூனிஸ்டுகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த அவர் தன்னை பகிரங்கமாக எந்தவொரு கட்சி சார்ந்த நபராகவும் காட்டிக்கொள்ளவில்லை. அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் கூட புனைபெயர்களில் தான் எழுதப்பட்டன. அன்றைய சூழலில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டினை கொண்டிருந்தமையும் காலத்திற்கு பொருந்துவனவாகவே இருந்தது. அவரது பங்களிப்பு குறித்து நோக்குவதற்கு சீன புரட்சிக்கு லூசுனின் பங்களிப்பு குறித்து மாஓ சேதுங் கூறிய வரிகளை இங்கொரு முறை குறித்து காட்டுவது அவசியமான தொன்றாகும். லூசுன் கட்சியில் இல்லாத ஒரு கம்யூனிஸ்ட். அவர் சீன கலாசார இயக்கத்திற்கு மாபெரும் பங்களிப்பு வழங்கியவர். அவர் சிறிய காற்றுக்கு வளைந்து முறியும் புல் போன்றல்லாது பெரும் புயல் காற்றுக்கு ஈடுகொடுத்து நிற்கக்கூடிய பெருவிருட்சம் போன்றவர்.11 லூசுனிடம் காணப்பட்ட இந்த தெளிவு அர்ப்பணிப்பு பெரும்பாலும் கைலாசபதியின்; ஆய்வுகளில்; காணப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">சீனத்தரப்பு அரசியலை முன்னெடுத்த அவர் மக்களிலிருந்து விலகி நின்ற வரட்டு தத்துவ வாதியாக காணப்படவில்லை. அரசியல் துறையில் எவ்வாறு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமோ அவ்வாறே இலக்கிய துறையில் அத்தகைய ஐக்கிய முண்ணணியை வழிநடத்தியவர். இலங்கையில் 1940,1950 களில் பொதுவுடைமை இயக்கம் செல்வாக்கு பெற்றதன் விளைவாக தோன்றியதே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கிய கொள்கையை மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றிய இவ்வியக்கமானது 60 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட சர்வதேச சித்தாந்த போராட்டத்தின் போது அதில் தலைமை வகித்த முன்னணி நண்பர்களை பலர் சோவியத் யூனியனின் நவீன திரிவுவாதத்தை ஏற்றிருந்தமையினால் தத்துவார்த்த ஸ்தாபன ரீதியான சிதைவுக்குள்ளாகியது. கைலாசபதியை பொறுத்தமட்டில் இந்த சீரழிவை கோட்பாட்டு ரீதியாக உணர்ந்திருந்தார் என்ற போதிலும் அவர்; முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்புபட்டிருந்த பலரை சரியான மார்க்கத்தில் வென்றெடுப்பதற்காக தொடர்ந்து அவ்வியக்கத்தில் அங்கம் வகித்தார். அவ்வாறே மல்லிகை சஞ்சிகையிலும் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்தார். அவ்வகையில் இந்த ஐக்கிய முண்ணணிக்கான சிந்தனை கைலாசபதியிடம் காணப்பட்ட அதேசமயம் அவர் எக்காரணம் கொண்டும் தமது கொள்கைபிடிப்பில் இருந்து விலகியவராக அவர் காணப்படாமையே அவரது சிந்தனையின் பலமான அம்சமாகும்.</p> <p style="text-align: justify;">அவ்வகையில் கைலாசபதி என்பது ஒரு நாமம் அல்ல அவர் ஒரு இயக்க சக்தி. ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் நலன் சார்ந்த கம்யூனிஸ்ட் இயக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு தத்துவார்த்த பங்களிப்பினை வழங்கியதுடன் நேர்மையுடன் செயற்பட்ட இட்துசாரி இயக்கங்களுடன் எத்தகைய தொடர்புகளை கொண்டிருந்தார் என்பதனை சுபைர் இளங்கீரன்,<br />சி. கா. செந்திவேல் முதலானோரின் கட்டுரைகள் வெளிக்கொணர்ந்துள்ளன.<br />தொகுத்து நோக்குகின்ற போது அன்றைய சூழலில் பொதுவுடைமை இயக்கங்களில்; சர்வதேச ரீதியாக ஏற்பட்ட பிளவு உலகின் ஏனைய நாடுகளில் உருவாகியிருந்த பொதுவுடைமை இயக்கங்களை பாதிக்க தொடங்கியது. மார்க்ஸிஸம் அதன் புணர் நிர்மாணம் குறித்து விவாதத்திற்கான சூழலை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மார்ஸிஸ இயக்கங்கள் தொடர்பில் மீண்டு ஒரு புனரமைப்பிற்கான தத்துவார்த்த ஸ்தாபன நடைமுறை குறித்த பார்வை அவசியமானதொன்றாகியது, இந்த பிண்ணணியில் மக்கள் நலன் சார்ந்த இயக்கமொன்றினை கட்டியெழுப்புவதற்காக மார்க்ஸிஸத்தில் தம்மை அர்ப்பணித்து கொண்ட புத்தி ஜீவிகள் யாவரையும் பின்வரும் விடயம் தொடர்பில் தெளிவும் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் யூனியன் உட்பட புரட்சியை வென்றெடுத்த நாடுகளில் ஏற்பட்ட சமூக மாற்றமும், வர்க்க மாற்றமும் குறித்த ஆய்வுகள், ஏகாதிபத்தியத்தின் இன்றைய தோற்றம் அதன் ஊடுருவல், இதன் பிண்ணணியில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்த தெளிவு, சர்வதேச அரங்கில்</p> <p style="text-align: justify;">இரு வல்லரசுகளாக தோற்றம் பெற்றிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், சோவியத் சமுக ஏகாதிபத்தியம் முதலிய வல்லரசுகள் குறித்தும் ஏனைய நாடுகளின் அதன் ஊடுருவல் குறித்த தெளிவு, மாறாக உலகளாவிய ரீதியில் இதற்கு எதிராக மக்கள் இயக்கங்களும் போராளிகளும் எவ்வாறு பிரசன்னம் கொண்டு வருகின்றனர் என்பது பற்றிய பார்வை, அவற்றின் பின்னணியில் கம்யூனிஸ்ட் இயக்கம் இது தொடர்பில் செய்ய வேண்டியவை – செய்யக்கூடியவை பற்றிய ஆய்வுகள் காலத்தின் தேவையாக உள்ளன. இந்த ஆய்வுக்கான அடித்தளத்தையிட்டவர் கைலாசபதி ஆவார்.</p> <p style="text-align: justify;">அடிக்குறிப்புகள்:-<br />1.செந்திவேல் சி.கா மேற்கோள்,(1992) கைலைசபதியின் சமுக நோக்கும் பங்களிப்பும்,சவுத் ஏசியன் புக்ஸ் – சென்னை ப.3</p> <p style="text-align: justify;">2.ஏங்கல்ஸ்(1997) லுத்விக்போயர்பார்க்கும் மூலச்சிறப்புள்ள ஜேர்மன் தத்துவஞானத்தின் முடிவும், மொஸ்கோ .ப.36</p> <p style="text-align: justify;">3.கைலதசபதி.க.(1986) திறனாய்வுப்பிரச்சனைகள், சென்னை புக்ஸ், சென்னை,பக். 14,15</p> <p style="text-align: justify;">4……………….(1992) சர்வதேச அரசியல் நிழ்வுகள்(1979 – 1982) புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் – சென்னை ,பக். 21,22.</p> <p style="text-align: justify;">5. அதே நூல், ப.31.</p> <p style="text-align: justify;">6. அதே நூல், பக்.90,91.</p> <p style="text-align: justify;">7. அதே நூல், பக்.96,97.</p> <p style="text-align: justify;">8. உதயன்(கைலாசபதியின் புனைபெயர்;),(1981) செம்பகதாகை இதழ் யாழப்பாணம்</p> <p style="text-align: justify;">9. கைலாசபதி க. மேற்படி நூல் (சி.கா. செந்திவேல் எழுதிய முன்னுரை)</p> <p style="text-align: justify;">10……………….(ஜனமகன் என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை.) செப்பாதாகை – 1981.</p> <p style="text-align: justify;">11. செந்திவேல் சி.கா மேற்படி நூல். பக் – 68</p> <div class="social-buttons"><br /></div> </div>angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-84305433999029523702010-06-01T00:06:00.000-07:002010-06-01T00:06:00.495-07:00SemMozhi |Tamil Anthem |AR.Rahman | [HD]<object style="background-image: url(http://i1.ytimg.com/vi/lRITPjraXgA/hqdefault.jpg);" width="480" height="295"><param name="movie" value="http://www.youtube.com/v/lRITPjraXgA&hl=en_GB&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/lRITPjraXgA&hl=en_GB&fs=1" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash" width="480" height="295"></embed></object>angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-6471924429518250302009-06-28T01:24:00.000-07:002009-06-28T01:31:50.536-07:00<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVCijqnkZJQo8dmg4bUAqFN66tbnSOfpn4dNc1AnyW_1urCsjB3HSkhucPAMxCwBgKZZUnQjDcUDusthTQ2i-Mha2W14Ebwg8rW3-aKhXXbeJJEfNX03hFE_4BvmNH69W24VWjVD_a2lo/s1600-h/aaa.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5352293280266272242" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 128px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVCijqnkZJQo8dmg4bUAqFN66tbnSOfpn4dNc1AnyW_1urCsjB3HSkhucPAMxCwBgKZZUnQjDcUDusthTQ2i-Mha2W14Ebwg8rW3-aKhXXbeJJEfNX03hFE_4BvmNH69W24VWjVD_a2lo/s320/aaa.jpg" border="0" /></a><br /><div></div>angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-67812746439216743082009-01-26T14:23:00.000-08:002009-01-26T14:27:18.631-08:00இணையத் தளங்களில் கைலாசபதிமுனைவர் க.கைலாசபதிஇலங்கை என்றதும் தமிழ் இலக்கிய உலகம் இரண்டு பேராசிரியர்களை இணைத்து நினைவு கூர்வது உண்டு.முதலாமவர் க.கைலாசபதி.மற்றவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். சைவ சமய அடியவர்களிடம் அடங்கியிருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி ஆவார்.இவர்தம் நூல்கள் தமிழகத்திற்கு அறிமுகமானதும் தமிழ் ஆய்வாளர்கள் இவரின் ஆய்வினை உற்று நோக்கத் தொடங்கினர்.இவர் பார்த்த பார்வையில் இலக்கியங்களைப் பார்க்கத் தொடங்கினர் என்றால் பொருத்தமாக இருக்கும்.இவர் தமிழகத்திற்கு வந்து அறிமுகம் ஆவதற்கு முன்பே இவரின் ஆய்வுத் தாக்கத்துக்கு ஆளான அறிஞர்கள் அதிகம்.சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும்,சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் கண்டுகாட்டிய ஆய்வு உண்மைகள் தமிழ் அறிஞர்களைச் சிந்திக்க வைத்தது. மேல்நாட்டினருக்குச் சங்க இலக்கியங்களை உரிய வகையில் அறிமுகம் செய்துவைத்தவர் இவர் எனில் சாலப் பொருத்தமாக அமையும்.இலக்கியத் துறையில் ஈடுபட்டு,இதழியல் துறையில் பணிபுரிந்து, கல்வி உலகில் பேசப்படும் அறிஞரான இவர்தம் தமிழ் வாழ்வை இங்கு எண்ணிப்பார்ப்போம்.இலங்கையின் தமிழ் அடையாளமாகக் கருதப்படும் கைலாசபதி அவர்களின் தந்தையார் இளையதம்பி கனகசபாபதி அவர்கள் மலேசியாவில் அலுவலராகப் பணிபுரிந்தவர்.எனவே க.கைலாசபதி அவர்கள் மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 இல் பிறந்தவர்.இவரின் அன்னையார் பெயர் தில்லைநாயகி நாகமுத்து ஆகும்.கைலாசபதிக்குத் தொடக்க கல்வி கோலாலம்பூரில் அமைந்தது.பதின்மூன்று அகவை வரை மலேசியாவில் இருந்தார்.இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில்(1946-47) இலங்கை வந்தார். கைலாசபதி அவர்கள் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும்,கொழும்பு இராயல் கல்லூரியிலும் தொடர்ந்தார்.பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) படிப்பில் சேர்ந்து சிறப்பிடம் பெற்றுத் தேர்ந்தார்(1957).இவ்வகுப்பில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார்.இப்படிப்பு இவருக்கு மேற்குலக அறிமுகத்திற்கும் வரலாற்றுப் பார்வைக்கும் வழிவகுத்தது.இவர்தம் ஆசிரியர் பெருமக்களுள் கணபதிபிள்ளை,வித்தியானந்தன் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.பல்கைலக்கழகக் கல்வி கற்ற பிறகு இலங்கையின் புகழ்பெற்ற ஏடான தினகரனில் உதவி ஆசிரியராக1959 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார்(1961-62).1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான் நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்.1964-66 ஆம் ஆண்டுகளில் சர்வமங்களம் அவர்கள் தம் கணவருடன் பர்மிங்காம் படிப்புக்கு உதவியாக அங்கு இருந்தார்.க.கைலாசபதி அவர்களின் ஆய்வுப்பணி 1966 ஆகத்து மாதம் நிறைவுற்ற உடன் இலங்கைப் பல்கலைக்கழகப் பணியில் மீண்டும் இணைந்தார்.பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இங்கிலாந்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.தமிழில் வீரநிலைப்பாடல்கள்(Tamil Heroic Poetry) என்னும் தலைப்பில் ஆய்வு செய்தவர்.இவருக்குக் கிடைத்த நெறியாளர் உலக அளவில் அறிவாற்றலால் மதிக்கப்படுபவர். இவர் தம் நெறிப்படுத்தலில் உருவான ஆய்வேடு க.கைலாசபதிக்கு முனைவர் பட்டம்பெற்றுத் தந்ததுடன் மேல்நாட்டாருக்குத் தமிழிலக்கியச் சிறப்பை உணர்த்தியது எனலாம்.அதன் பிறகே மேல்நாட்டார் தமிழ் இலக்கிய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளதைஅறியமுடிகிறது. ஆய்வுக்காலத்தில் பேராசிரியர் சார்ச் தாம்சன் மணிக்கணக்கில் கிரேக்க,தமிழ் நாகரிகம் பற்றி ஆர்வத்துடன் உரையாடுவது உண்டு.சார்ச் தாம்சன் அவர்களின் மனைவி காத்லின் அவர்களும் அவர்களின் மகளார் லிசு,மெக்(இவரும் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) ஆகியவர்களும் குடும்ப நண்பர்களாகப் பழகியதைச் சர்வமங்களம் கைலாசபதி அவர்கள் குறிப்பிடுவார்.பேராசிரியர் கைலாசபதியின் ஆசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்கள் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்.செஞ்சீனத்துத் தந்தை மாவோ அவர்களின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.மார்க்சிய,இலெனிய அறிஞர்களுடன் இணைந்து சீன ஆய்வுக்குழு அமைத்து, சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்.அவரிடம் பயின்றதால் க.கைலாசபதி அவர்கள் இக்கொள்கைத் தாக்கங்களைப் பெற்றார் என இராம.சுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.அந்நாளில் இலங்கை முழுவதும் இருந்த அரச கல்வி நிறுவனங்கள் யாவும் இலங்கைப் பல்கைலக்கழகம் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பெற்றது.பல பகுதிகளில் இருந்த கல்வி நிறுவனங்கள் அப் பல்கலைக்கழகத்தின் சார்பு வளாகங்களாகக் கருதப்பட்டன.தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் தேவை என்ற நிலை எழுந்தபொழுது திருகோணமலையில் பல்கலைக்கழகம் தொடங்கவும் யாழ்ப்பாணத்தில் தொடங்கவும் என இரு கருத்துகள் அரசியல்வாணரிடையே அந்நாளில் இருந்தது.திருகோணமலையில் தொடங்கப் படாமல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகமும் தொடக்கத்தில் இலங்கைப் பல்கலைக்கழகம் என்றும் அது யாழ்ப்பாண வளாகம் என்றும் பெயர் பெற்றிருந்தது.1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில் தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரை பணிபுரிந்துள்ளார்.இப்பதவிக்கு அவர் ஆசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும் விண்ணப்பித்திருந்தார். பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் மூத்த பேராசிரியர் என்ற அடிப்படையில் அவர்க்கு முதலில் துணைவேந்தர் பணி கிடைக்காமல் அவரைவிட இளையவரான கைலாசபதிக்குக் கிடைத்ததில் கருத்து வேறுபாடுகள் இன்றுவரை இலங்கையில் உண்டு.ஆயினும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய க.கைலாசபதி அப்பதவிக்குத் தகுதியானவர் என அறிஞருலகம் குறிப்பிடுவது உண்டு.பின்னாளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கல்லகழகத்தின் துணைவேந்தராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.தென் அமெரிக்கா,ஆத்திரேலியா தவிர்ந்த உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவந்த பெருமைக்கு உரியவர்.1958 இல் இதழாளராக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்.அப்பயண அனுபவத்தை நான்கு நாடுகளில் நாற்பத்தி நான்கு நாட்கள் என்னும் நூலாக எழுதியவர்.இவர்தம் நூல்கள்,பணிகள்,வாழ்வியல் முழுமைப்படுத்தி வெளிவருவது காலத்தின் தேவையாகும்.1950 இல் கல்கத்தாவில் நடந்த இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முதன்முதல் இந்தியா வந்தவர். அதன் பிறகு பலமுறை இந்தியா வந்துள்ளார்.செனைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ அவர்கள் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கைலாசபதி அவர்கள் தமிழ்த்துறையில் தமிழாய்வுகள் என்னும் பொருளில் ஆற்றிய உரை அனைவராலும் விரும்பப்பட்டது.க.கைலாசபதியின் நீண்ட நாள் நண்பர்களாகத் தமிழகத்தில் விளங்குபவர்கள் சிதம்பர ரகுநாதன்.குலோத்துங்கன்(வா.செ.கு),கு.அழகிரிசாமி,செயகாந்தன்.இலங்கையில் பணியாற்றியதுடன் அமையாமல் அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும்(1978-82) பணிபுரிந்து அறிவார்ந்த மாணவர்களை உருவாக்கியவர்.இவர் மாணவர்களுள் மௌனகுரு,சித்திரலேகா,அம்மன்கிளி முருகதாசு,மனோன்மணி சண்முகதாசு,நுஃமான் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.பல்கலைக்கழகப் பணிபுரிந்ததுடன் இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார்.யுனெசுகோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்(1970),இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்தவர்.இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர்.பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார்.தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் பணியிலும் ஈடுபாட்டுடன் உழைத்தவர்.க.கைலாசபதி அவர்களுக்குத் தொடக்கத்தில் திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதல் இல்லை.காலப்போக்கில் இவ்வியக்கத்தின் பணிகளை உணர்ந்து தம் கருத்துகளைச் செம்மைப் படுத்திக்கொண்டார்.க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.இவருக்கு இலக்கியம்,கர்நாடக இசை,பரத நாட்டியம்,நாடகத்துறைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு.தமிழகத்தில் மார்கழி மாதங்களில் நடைபெறும் இசைவிழாக்களுக்கு இவர் வந்து கண்டுகளிப்பது உண்டு.பழைய திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்பவர். தியாகராச பாகவதர்.சுப்புலட்சுமி,சிதம்பரம் செயராமன்,பி.யு.கிட்டப்பா,சீவானந்தம் பாடல்களை நாடாப் பதிவுக்கருவியில் விரும்பிக் கேட்பது உண்டு.இலங்கையில் வெளிவந்த தினகரனில் பணிபுரிந்த கைலாசபதி அவர்கள் ஜனமகன், உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி,அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். பல சிற்றிதழ்கள் இலங்கையில் வெளிவர உதவியுள்ளார்.பல்வேறு இதழ்களில் வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் கட்டுரை எழுதியவர்.எனவே இவருக்கு எனத் தனித்த நடை உண்டு. இதழ்களில் எழுதி நல்ல பயிற்சி பெற்றிருந்ததால் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபட முடிந்தது.அரசியல் இயக்கங்களில் ஈடுபாடு உடையவராக விளங்கினார்.இந்துக்கல்லூரி மாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய இலெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார்.சீன அரசின் அழைப்பில் இவர் தம் மனைவி சர்வமங்களம் குழந்தைகள் சுமங்களா,பவித்ரா ஆகியோருடன் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார்.இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்.பல தரமான படைப்புகள் இச்சங்கத்தின் வழியாக வெளிவந்தன.தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு தம் 49 ஆம் அகவையில் 06.12.1982 இல் இயற்கை எய்தினார்.சற்றொப்ப முப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதி அவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார். இன்னும் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் தமிழ் ஆய்வுலகத்திற்குப் பல அரிய ஆய்வு உண்மைகள் கிடைத்திருக்கும்.Tamil Heroic Poetry நூலும், பண்டைதமிழர் வாழ்வும் வழிபாடும்,அடியும் முடியும்,தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம் உள்ளிட்ட நூல்களும் க.கைலாசபதியின் பெருமையை என்றும் பேசிக்கொண்டிருக்கும்.பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்கள்01,பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,196602.தமிழ் நாவல் இலக்கியம்,196803.Tamil Heroic Poetry,Oxford,196804.ஒப்பியல் இலக்கியம்,196905.அடியும் முடியும்,197006.ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)197107.இலக்கியமும் திறனாய்வும்,197608.கவிதை நயம்(இ.முருகையனுடன்),197609.சமூகவியலும் இலக்கியமும்,197910.மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),197911.The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum12.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,198013.திறனாய்வுப் பிரச்சினைகள்,198014.பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)15.இலக்கியச் சிந்தனைகள்,198316.பாரதி ஆய்வுகள்,198417.The Relation of Tamil and Western Literatures18.ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,198619.On Art and Literature,198620.இரு மகாகவிகள்,1987(ஆ.ப)21.On Bharathi,198722.சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)23.Tamil (mimeo)(co-author A,Shanmugadas)நனி நன்றி :தமிழ் ஓசை (களஞ்சியம்)நாளேடு,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 15, 04.01.2009முனைவர் பொற்கோமுனைவர் இராம.சுந்தரம்,"கலாநிதி கைலாசபதி",சாகித்திய அகாதெமி வெளியீடுமுனைவர் நா.கணேசன்(அமெரிக்கா)திரு.அ.முத்துலிங்கம்திருநிறை சர்வமங்களம் கைலாசபதிதிரு.கணேசலிங்கம்,சென்னைangelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-18006376546789307742008-12-25T00:15:00.000-08:002008-12-25T00:21:47.510-08:00அக்டோபர் - டிசம்பர் 2006<br />நாடும் நாயன்மாரும் மூடுதிரை வி(ல)ளக்கமும்பிரகஸ்பதி<br />தமிழக சமூக வரலாற்றைப் பல வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளனர். அவர்களுள் முனைவர். க.கைலாசபதியே முதன் முதலில் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் சமூக வரலாற்றினைக் காண முற்பட்டார். அவர் “நாடும் நாயன்மார்களும்” என்ற கட்டுரையின் மூலம் பக்தி இயக்கத்தின் சமூக அடித்தளத்தைக் காண முயற்சித்துள்ளார். அவரை அடியொற்றி, சமூக வரலாற்றை மார்க்சீய அடிப்படையில் எழுத முற்பட்ட நா.வானமாமலை, “நாடும் நாயன்மார்களும்” என்ற கட்டுரையின் வரையறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி “மூடுதிரை” என்றதொரு அரியதோர் கட்டுரையை எழுதியுள்ளார். இவ்விரு கட்டுரைகளுமே பக்தியுகத்தின் தோற்றுவாய்க்கான சமூக அடித்தளத்தை மார்க்சீய அடிப்படையில் காண்பதற்கான சீரிய முயற்சிகளாகும்.பக்தி இயக்கத்தின் தோற்றுவாய்க்கான சமூக அடித்தளத்தைக் காண முனைகையில் தவிர்க்க இயலாதபடி அதற்கு முன்பாக நிலவிய சமூக நிலைமைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாகச் சொல்வதாயின் சங்ககாலம் மற்றும் சங்கம் மருவிய காலச் சமூக நிலைமைகளை வரையறை செய்து கொள்வது அவசியம். இக்காலக் கட்டத்தைப் பற்றிய க.கைலாசபதி மற்றும் நா.வானமாமலை, ஆகிய இருவரின் வரையறைகளிலுமே சில குறைபாடுகள் உள்ளன. இத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் மார்க்சீய நோக்கில் தமிழ் சமூக வரலாற்றை எழுதும் முயற்சியின் முன்னோடிகள் அவர்களே என்பது கேள்விக்கிடமற்ற உண்மையாகும். அவர்களது முயற்சியைத் தொடர்ந்து, சமீப காலங்களில் கிடைத்துள்ள சான்றுகளையும் இணைத்து, அவர்களின் ஆய்வில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, சங்ககாலம், களப்பிரர் காலம் மற்றும் பக்தியுகத்தின் சமூக அடித்தளங்களையும், அக்காலங்களில் தோன்றிய சமூக முரண்பாடுகளையும் சுருக்கமாக விளக்க முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.முனைவர்.க.கைலாசபதியின் “நாடும் நாயன்மாரும்” என்ற கட்டுரையின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.1. “சிறு சிறு குலங்களாகவும், குடிகளாகவும், குலங்களின் இணைப்புகளாகவும் சிதறிக் கிடந்த தமிழகத்து மக்கள் ஓயாத போரில் ஈடுபட்டிருந்தனர். ஓயாத போர், படையெடுப்பு, ஊழ், அழிவு, அரசுரிமைச்சண்டை ஆகியவற்றின் அடிப்படையிலேயே சங்க காலத் தமிழகத்திலே மெல்ல மெல்ல அரசுகள் தோன்றலாயின. சங்க காலத்தில் அரசு செலுத்திய பேரரசும் தொடக்கத்தில் சிறு கூட்டத்தினருக்குத் தலைவராக இருந்திருத்தல் வேண்டும். சங்க காலத்தின் நடுப்பகுதியில், அவர் அரசராய் மாறும் நிலையை அடைந்தனரென அக்கால நூல்கள் வாயிலாக அறிகிறோம். ஈற்றில் பொருளாதாரத்திலும் தொகையிலும் சிறந்த உழவர் (மருத நிலத்) தலைவனே தமிழ்நாட்டு அரசியலில் வலிமை சிறந்து விளங்கினான்.” (தமிழர் சால்பு, க.வித்யானந்தன். பக்.40 -41) புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள் அவற்றின் விரவாகவமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருதிய நிலையிலே அளவு மாறுபாடு குணமாறுபாடாக உருமாறியதே சங்ககால அரசியல் நிறுவனமாகும்.2. “சங்க காலத்தின் பிற்பகுதியிலும், சங்கம் மருவிய காலப்பகுதியிலும் பலம் வாய்ந்த அரசுகள் தோன்றியதன் விளைவாகத் தனியுடைமையின் பேரில் அரசுகள் நிலை நிறுத்தப்பட்டன.”3. பொன், பொருள் முதலான உடமைகள் மட்டுமின்றி பெருவாரியான நிலத்தையும் சமணர் (அவர்கள் சார்பில் வணிகர்) வைத்திருக்கவே, நிலவுடமைக்காரருக்கும், வணிகருக்கும் போட்டி, மோதல், முரண்பாடு, போராட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாயிற்று. அரசரது அங்கீகாரத்துடன் பழைய சைவ, வைணவன் கோயில்களின் நிலங்கள், புதிதாக சமணர்கள் தமதாக்கிக் கொண்ட நிலங்கள், உடமைகள், தமதாகுமாயின் உழவுத் தொழிலும் அதனை அடிப்படையாகக் கொண்டு கிராமத் கைத்தொழில்களும் செழித்து வளரும் என்னும் பொருளாதார உண்மையை உணர்ந்தனர். அவர்களை நிலக்கிழார்கள், நிலபிரபுக்கள் அல்லது வேளாளர்கள் என நாம் குறிப்பிடலாம்”.4. “பெரும்பாலும் சமணராயிருந்த வணிக வர்க்கத்தினருக்கும், வைதீகர்களாக (சிறப்பாக சைவர்களாக) இருந்த நிலவுடமை வர்க்கத்தினருக்குமிடையே ஏற்பட்ட இப்பொருளாதார முரண்பாட்டினை, அக்காலத்தில் தோன்றிய “பொருளாதார நெருக்கடி” என்று பொருளாதார வார்த்தைகளில் கூறிக் கொள்ளலாம்.”5. “பல்லவர் காலத்திலே சமணத்தைச் சாடுவதன் மூலம் வணிக வர்க்கத்தினரிடமிருந்து பொருளாதார தலைமையையும், சமுதாயச் செல்வாக்கையும் பிடுங்கிக் கொண்ட சைவர்கள்.”6. “சுருக்கமாகக் கூறுவதாயின் நகரங்களிலிருந்து கொண்டு வணிகம் முதலாய பொருளீட்டும் முயற்சிகளைத் தத்தமது ஏகபோக உரிமையாகக் கொண்டிருந்த ஒரு ஆட்சி குழுவிற்கும் (ளிறீவீரீணீக்ஷ£நீலீஹ்), நிலத்தில் அக்கறை கொண்டிருந்த, பண்ணையாட்கள் கிழார் ஆகியோருக்கிமிடையே தோன்றிய முரண்பாடே இப்பொருளாதாரப் போரின் அடிப்படை எனலாம்.”அறவழியில் ஒழுகிய சைவ நாயன்மார்கள், சமணத் துறவிகளின் பால் கொண்டிருந்த கொலை வெறிப்பிடித்த எதிர்ப்பின் அடித்தளத்தை ஆராய முற்பட்டே முனைவர்.க.கைலாசபதி இக்கட்டுரையை எழுதியுள்ளார். வணிக வர்க்கத்தினருக்கும், நில உடமை வர்க்கத்தினருக்குமான முரண்பாடே அக்காலத்தில் நிலவிய பிரதான முரண்பாடு என அவர் வரையறை செய்கின்றார். வணிக வர்க்கத்தினரை எதிர்ப்பதற்காகவே அடித்தட்டு உழைக்கும் மக்களை நிலக்கிழார் வர்க்கம் அணி சேர்த்து போராடியது என்பது அவர் அனுமானம். வணிக வர்க்கத்தின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடாகவே சமண துறவியருக்கெதிரான நாயன்மாரின் கடுமையான சாடல்கள் எழுந்தன என்ற முடிவுக்கும் வருகின்றார். அவர் தனது கட்டுரையில் எழுப்பிய வினாவிற்கு இது ஒரு சரியான பதில் போன்றத் தோற்றத்தைக் கொடுக்கின்றது.எனினும் சங்ககால வாழ்வியல் ஏவல் மரபினராக வாழ்ந்த வேளாளரை, அரச குடியான நிலப்பிரபுவாகக் கருதியதால் இவருடைய வரையறையெல்லாம், தவறாகிவிட்டன. சங்க காலப் பிற்பகுதியையும், சங்கம் மருவிய காலத்தையும் ஒன்றாக கூறுவதன் மூலம் களப்பிரர் காலம் என்ற ஒரு புதிய சமூக அடித்தளத்தையுடைய காலத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவும் தவறியுள்ளார்.இனி நா.வானமாமலை............. என்ற நூலில் எழுதிய “மூடுதிரை” என்ற கட்டுரையின் முக்கியக் கூறுகளைப் பார்ப்போம்.1. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவில் காணப்பட்ட நிலமையையும், தமிழ்நாட்டில் கி.மு. 2, 1, ம் நூற்றாண்டில் நிலவிய நிலைமையும் ஒன்றெனக் கொள்ள முடியாது. இக்காலத்தில் தென்னாட்டில் அரசுகள் நிலைத்துவிட்டன.2. முதலில் நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம் நிலக்கிழார்களின் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.3. மன்னர்கள் நிலக்கிழார் வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும், வணிக வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும் மாறி மாறிச் சேர்ந்து கொண்டார்கள். இதுதான் கி.பி.முதல் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை நிலவிய சமூகச்சித்திரம்.நா.வானமாமலை சங்க காலமாகிய கி.மு.2,1ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் அரசுகள் நிலைத்துவிட்டன என்பதை சரியாகக் குறிப்பிடுகின்றார். எனினும் மன்னர்களும் நிலக்கிழார் வர்க்கமும் தனித்தனி வர்க்கங்கள் எனத் தவறாக வரையறை செய்கின்றார். இது சங்ககால வாழ்வியலுக்குப் பொருத்தமற்றதாக உள்ளது.மேலும் சங்ககால இறுதியில் நிலவிய வர்க்க முரண்பாடுகளும், களப்பிரர் காலமாகிய கி.பி.3-கி.பி.6-ஆம் நூற்றாண்டில் நிலவிய வர்க்க முரண்பாடுகளும் ஒன்று என்றே கூறுகின்றார். இதுவும் தவறாகும்.இவ்விரு அறிஞர்களும் சங்க காலத்தில் வேளாளரே நிலக்கிழாராயிருந்தனர் என்றும், அவர்களிலிருந்து வலிமையுடன் வளர்ந்த தலைவர்களே வேந்தர்கள் என்றும் தவறாகக் கருதுகின்றனர். இத்தவறான கருதுகோள்தான் சங்ககாலம் மற்றும் களப்பிரர்கால சமூக அடித்தளத்தை இவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள காரணமாயிற்று. முனைவர். க.கைலாசபதியின் குறிப்பு 1-ல் கூறப்பட்ட கருதுகோள்தான் இத்தவறுதல்களுக்கு மூல காரணமாகும். சங்ககால தமழ்ச் சமூகத்தின் அனைத்து குடிகளும், தமிழகத்திலேயே பூர்வீகமாக வாழ்ந்து வந்த இனக்குழுக்களிலிருந்து பரிணமித்தன என்பதே இக்கருதுகோளின் சாராம்சமாகும். மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் போன்ற தமிழ் ஆர்வலர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எழுந்த இக்கருதுகோள்தான் இன்றுவரை தமிழ்ச் சமூக ஆய்வாளர்களிடையே செல்வாக்குப் பெற்றதாக உள்ளது.குஜராத்திலிருந்து கி.மு.800 வாக்கில் தமிழகத்திற்குள் குடியேறிய வேந்தர் குடியினர், கி.மு.3000-லேயே மேற்காசியாவில் தோன்றிய நிலபிரபுத்துவ அரசுகளின் சிறப்பான மரபுகளை தன்னகத்தே கொண்டவர்களாயிருந்தனர். சங்ககால அரசுகள் வேந்தர்களால் கட்டமைக்கப்பட்ட நிலமானிய அரசுகளாக விளங்கின. நானில தலைமக்களாகிய ஊரன்(மருதம்), மலை நாடன்(குறிஞ்சி) குறும்பொறை நாடன்(முல்லை), துறைவன்(நெய்தல்) ஆகியோர் வேந்தர்களின் கீழ் இயங்கிய மானிய பிரபுக்களாவர். இத்தலை மக்களும், தனி ஆட்சி அனுமதிக்கப்பட்டிருந்த வேளிரும் அரசர் குடி என்ற ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. சங்ககால நில பிரபுத்துவ சமூகம் வர்க்கங்களாக அல்லாமல் ‘குடி’களாகவே பிளவுபட்டு நின்றது. இந்திய சாதிய சமூக அமைப்பில் இந்த ஆரம்பக்கட்டத்தில் நாம் ‘குடி’ தவிர்த்து, வர்க்கங்களை அடையாளம் காணமுடியாது. சங்க காலத்தில் ஆளும் குடிகளான அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூன்று குடிகளையும் பெருங்குடி என்றும் ஏனைய உழைக்கும் குடிகளை சிறுகுடி என்றும் அழைத்துள்ளனர்.“பெருங்குடி வாணிகன் பெருமட மகளே”(சிலப்பதிகாரம் - மனையறம்படுத்த காதை-7)“இவளே காணல் நண்ணிய காமர் சிறுகுடிநீல்புறப் பெருங்கடல் கலங்க உள்புக்குமீனெறி பரதவர் மகளே நீயே” (அகம்-45)இவ்வாறு குடிகளாகப் பிரிந்திருந்த சங்ககால தமிழ்ச் சமூகத்தை குடிகள் தவிர்த்து வர்க்கங்களாகப் பார்த்தது தவறாகும். சங்க கால வாழ்வியல் நில உடமையாளர்களான வேந்தரும், நான்கு நில தலைமக்களும், வேளிரும் ஒரே குடியைச் சேர்ந்தவராயிருக்கும் பொழுது “மன்னர் நிலக்கிழார் வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும், வணிக வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும் மாறி மாறிச் சேர்ந்து கொண்டனர்” என வானமாமலைக் கூறுவது பொருளற்றதாகிவிடுகின்றது. இந்த ஆரம்பக் கட்டத்தில் சொந்த குடிகளுக்குள் கட்டுக்கோப்பான ஒற்றுமை நிலவியதன் வெளிப்பாடாக சாதியம் தோன்றி நிரூபித்துள்ளது. எனவே மன்னர்கள் தங்கள் சொந்த குடியைச் சேர்ந்த நிலக்கிழார் வர்க்கத்துடன் முரண்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. சங்ககால வாழ்வியலின் வர்க்க (சமூக) முரண்பாடுகளின் அடித்தளத்தை நாம் புதிய நோக்கிலேயே ஆராய வேண்டும்.சங்ககாலத்தில் அரசர்களிடையே ஓயாத போர் நடந்து வந்தது. சமுதாயத்தின் உற்பத்திக் கருவிகளும், உழைக்கும் சக்தியும் பெருவாரியாகப் போரில் வீணாகின. எனவே காடழித்து நாடாக்கும் பணி அருகியது. வேளாண் உற்பத்திப் பெருக வாய்ப்பில்லாத அதே வேளையில் உற்பத்தியின் பெரும்பகுதி போர்க்குடிகளைப் பராமரிப்பதற்கான வரியாக வசூலிக்கப்பட்டது. இப்போக்கு உழுகுடிகளாகவும், வாரக்குடிகளாகவும் இருந்த வேளாளருக்கும், மருத நில தலைமக்களான ஊரனுக்கும் (அரசு குடிக்கும்) இடையிலான முரண்பாட்டைக் கூர்மையாக்கியது. மேலும், ஓயாத போர், கடல் வணிகத்தில் ஈடுபட்ட வணிகக் குடிகளுக்குப் பெருந்தடையாக இருந்தது. இது அரசர் குடியினருக்கும் (நிலப்பிரபுக்கள்) வணிகக்குடியினருக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கியது.சமணப் புலவராகக் கருதப்படும் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரி தமிழகம் ஒரே நாடாக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். இது சமணத்தையும், பௌத்தத்தையும் ஏற்றுக் கொண்ட வணிகர்களின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது. சங்க காலத் தமிழ் புரோகிதர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்றனர். அக்கால கட்டத்தில் இந்தியா முழுவதும் செல்வாக்குடன் திகழ்ந்த வைதீகக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் ஏற்றுக் கொண்ட புரோகித வகுப்பனர் பார்ப்பார் என அழைக்கப்பட்டனர். சோதிடத்தில் சிறந்து விளங்கிய கணியன் என்ற புரோகிதச் சமூகமும், வேலன் வெறியாட்டு போன்ற பழங்குடி மந்திரங்களுடன் கூடிய சடங்குகளைச் செய்யும் புரோகிதச் சமூகமும் ‘அறிவர்கள்’ என அழைக்கப்பட்டனர். வேந்தர்கள் பார்ப்பார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், அறிவர்கள் வைதிகத்திற்கு எதிரான பௌத்த சமண மதங்களைத் தழுவயதன் மூலம் இம் மதங்களை ஆதரித்த வணிகருடன் அணி சேர்ந்தனர்.சங்கம் மருவிய கால சமண பௌத்த துறவிகள் ‘அறிவர்’ என அழைக்கப்பட்டதும் இங்கு கவனத்திற்குரியது. இச்சூழலில் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வந்த விவசாயக் குடியாகவும் போர்க்குடியாகவும் இருந்த களப்பாளர்கள் வேந்தர்களுக்கு எதிராக முரண்பட்டு நின்ற அறிவர், வணிகர் மற்றும் உழுகுடிகளுடன் அணி சேர்ந்து மூன்று வேந்தர்களையும் வீழ்த்தினர். இத்துடன் வேந்தர் குடியினர் ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டு, அறிவர்களின் மேலாண்மையின் கீழ் வணிகர்களின் பிரதிநிதிகளாகக் களப்பாள அரசர்களின் ஆட்சி தோற்றம் கண்டது. இக்காலகட்டத்தில் நடந்த அரசியல் மாற்றத்தை உலகில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகப் புரட்சி என்று கூடக் கூறலாம்.இந்தக் களப்பாள (களப்பிரர்) அரசர்களின் ஆட்சிக் காலத்தை கி.பி.250 முதல் கி.பி.560 வரை கூறலாம். சங்கம் மருவிய காலமும் இக்காலமும் ஒன்றே. இக்காலத்தின் சமுதாயச் சித்திரத்தை அறிந்துகொள்ள நேரடிச் சான்றுகள் இல்லை. எனினும் களப்பிரர்கால இலக்கியங்கள் மற்றும் வேள்விக்குடி, தளவாய்புரம், காசாக்குடி, செப்பேடுகள் கூறும் செய்திகம் மூலம், சில யூகங்களை நாம் முன் வைக்கலாம்.1. விவசாயத்திற்கு முன்னுரிமை தரப்பட்டு, காடழித்து நாடாக்கும் பணி பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது. புதிய பாசன முறைகள் இக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என சமூக வரலாற்று அறிஞர் திரு.எஸ்.ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். கீழ்க்கண்ட சங்கம் மருவிய கால இலக்கியமான “மணிமேகலை”யில் உள்ள பாடல் ஒன்று கைவினைஞர்கள் வெளி அரசுகளிலிருந்து தமிழகத்தில் குடியமர்த்தப்பட்டதற்கான சான்றினைக் கொடுக்கின்றது.“மகதவினைஞரும் மராட்டக் கம்மருமவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்”காடழிந்து நாடாக்கும் பணி களப்பிரர் காலத்தில் பெருவாரியாக நடைபெற்றது என்ற கருதுகோளை மேற்கண்ட பாடல் மறைமுகமாக கட்டுகிறது.2. அதிக நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டதனால் உழுகுடிகளின் தேவை அதிகரித்தது. எனவே பல புதிய இனக்குழுக்கள் விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டன. களப்பிரர் காலத்தில் போர்கள் நடந்தமைக்கான சான்றுகள் இல்லை. எனவே புதிய உழுகுடிகள், போர் அடிமைகளாக இல்லாமல் வாரக் குடிகளாகவே விவசாயத்தல் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.3. பௌத்தமும், சமணமும் செல்வாக்குடன் விளங்கின. அறிவர்களே பெரும்பாலும் பௌத்த சமணத் துறவிகளாக இருந்தனர்.களப்பிரர்கால நிலவுடமையின் தன்மையைப்பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. சங்ககாலத்தில் உழு குடிகளாக இருந்த வேளாளர் களப்பிரர் காலத்தில் வாரக்குடிகளாக (காராளராக ஏற்றம் பெற்றனர். வாரக் குடிகளான வேளாளரிடமிருந்து தானியங்கள் வரியாகப் பெறப்பட்டிருக்குமானால் போரில் அதிகம் ஈடுபடாத களப்பிரர் அரசு உபரி வருமானம் அதிகம் பெற்ற அரசாக திகழ்ந்திருக்க முடியும். அவ்வாறாயின் அக்காலக்கட்டத்தில் கட்டடக்கலையும் பிற கலைகளும் சிறப்பாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான தொல்பொருள் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே நிலத்திலிருந்து கிடைத்த வரி, வருவாய் முழுவதும் அரசுக்குச் சேர்ந்ததாகக் கொள்ள முடியவில்லை.சங்க காலத்திலேயே வலுப்பெற்றிருந்த வணிகக்குடியினரின் தலைமையில்தான் களப்பிரர் வேந்தர்களை வெற்றி கொண்டனர். எனவே களப்பிரர் காலத்தல் நிகழ்ந்த அரசியல் மாற்றம் வணிகக் குடியினர் அதிகம் பயன்பெறும் வகையிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? நிலவருவாயில் பெரும் பங்கினை வணிகக்குடிகள் பயன்படுத்துவதற்கான நிர்வாக ஏற்பாடு எதாவது களப்பிரர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கம் என யூகிக்கலாம்.புத்தர் ஏற்படுத்திய சங்கங்களைப் பற்றிய திரு.க.கைலாசபதி அவர்களின் குறிப்பு இத்தேடலுக்கு உதவுகின்றது.“தனியுடமை காரணமாகவும், தம் செல்வ சுகம் காரணமாகவும் புறவுலகில் பாதகங்கள் நடைபெற்றன. ஆனால் சங்கத்திலோ உடமைகள் யாவருக்கும் பொதுவாக இருந்தன. பொருளோடு, பணத்தோடு துறவிகளுக்கு தொடர்பில்லாமல் செய்தார் புத்தர். இவ்வாறான தத்துவத்தையும் நடைமுறையையும் வகுத்த புத்தர் தனது காலத்துக்கேற்ற பொய்ம்மை (illusion) ஒன்றினைச் சிருட்டித்திருந்தார். இந்த நிலையிலேயே அன்றைய வட இந்திய மக்கள் சங்கத்தில் சேரலாயினர். சாந்தியும், சமாதானமும், அமைதியும், ஒழுங்கும் வேண்டிய உலகிற்குப் பொய்மை வடிவிலேனும் அவற்றைக் கொடுத்தார் புத்தர்”.புத்தர் ஏற்படுத்திக் கொடுத்த பொய்மை வடிவம்தான் ஜனநாயக அரசு என நாம் கருதிய களப்பிரர் காலத்தில் வணிகர்களுக்கும் பயன்பட்டது. பெரும்பான்மையான நிலங்கள் பௌத்த சங்கங்களின் உடமைகளாக்கப்பட்டன. களப்பிரர் காலம் முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில் பௌத்த விகாரைகள் மிகவும் செல்வாக்குடன் இருந்ததற்கான பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப் பயணியான யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட திராவிட தேசத்தில் ஏறத்தாழ நூறு பௌத்த விகாரைகளும், பத்தாயிரம் பௌத்தத் துறவிகளும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட “மத்தவிலாசப் பிரகசனம்” என்ற நாடகத்தின் வாயிலாக பௌத்த பிக்குகளின் செல்வச் செழிப்பை அறிய முடிகிறது. சைவ சமய கபாலியான சத்ய சோமனுக்கும், பௌத்த துறவியான நாகசேனனுக்கும் இடையே சத்யசோமனின் பிச்சைப் பாத்திரம் தொலைந்து போனதன் பொருட்டு சண்டை ஏற்பட்டது. சத்திய சோமனை நியாயங்கேட்டு நீதிமன்றம் செல்லுமாறு சிலர் அறிவுறுத்துகின்றனர். அப்போது சத்யசோமனின் மனைவி தேவசோமா நீதிமன்றம் குறித்தும் பௌத்த பிக்குகள் குறித்தும் பின்வருமாறு கூறுகிறாள்.“பல விகாரைகளிலிருந்தும் கிடைக்கிற காணிக்கைப் பணத்தை இந்தப் பிக்கு தனது இராஜ விகாரையில் குவித்து வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இருக்கிறவர்களின் வாயில் அந்தப் பணத்தைப் போட்டு அவர்கள் வாயை அடக்கிவிடுவார். நானோ ஏழை கபாலிகை. எனக்கு என்ன இருக்கிறது? பாம்புத் தோலும் திருநீரும்தான் இருக்கிறது. நியாயமன்றம் போக எனக்கு காசு ஏது?”மேலே கூறப்பட்டுள்ள குறிப்பு பல செய்திகளை நமக்கு அளிக்கின்றது.1. பௌத்த விகாரைகள் செல்வச் செழிப்புடன் விளங்கின.2. புத்தப் பிக்குகள் விகாரைக்குச் சொந்தமான செல்வத்தை தனது சுய நலனுக்குச் செலவிட்டுள்ளனர். ஆரம்பத்தில் ஒருவிதமான கற்பனைப் பொதுவுடைமையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சங்கங்கள் (விகாரைகள்) பிற்காலத்தில் பிக்குகளின் சொந்த மடங்களாக மாறியுள்ளன. அதாவது ஆரம்ப காலத்தில் உழைக்கும் மக்களாகிய வேளாளரின் காவலர்களாக இருந்த மடாதிபதிகளான புத்தபிக்குகன், பிற்காலத்தில் ஆதிக்கச் சக்தியாக மாறி உழைக்கும் மக்களுக்கு எதிராக நின்றுள்ளனர்.3. பௌத்த சமண சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்த பல்லவ நாட்டில், நீதிமன்றங்களிலும் ஊழல் புரையோடியிருந்தது.4. எல்லாவற்றிற்கும் மேலாக இச்சீரழிவுகளைக் களைய வேண்டிய அப்பகுதியின் அரசனான மகேந்திரவர்மனே தனது சொந்த நாட்டில் நடக்கும் முறைகேடுகளைக் கிண்டல் செய்து எழுதியுள்ளான். இதிலிருந்து புத்த விகாரைகளும், புத்த பிக்குகளும் அரசனால் கூடக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, செல்வாக்குடன் விளங்கியது புலனாகிறது.முனைவர் திரு.க.கைலாசபதியும் பல்லவர் காலத்தில் சமணப் பள்ளிகளும் பாழிகளும் பெரும் நிலவுடமை நிறுவனங்களாக ஆட்சி செய்தன எனக் கூறுகிறார்.மேலே கூறப்பட்ட குறிப்புகளிலிருந்து பல்லவர் ஆட்சியில் பௌத்த சமண மடங்கள் பெரும் நிலவுடமை நிறுவனங்களாக ஆட்சி செய்தன என்பது புலனாகிறது. பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே இம்மடங்கள் மிகப் பெருமளவில் நிலங்களை நிர்வகித்தன எனவும், காடழித்து நாடாக்கும் பணியையும் இம்மடங்கள் மேற்கொண்டிருந்தன எனவும் யூகிக்கலாம். அறிவர்களாகிய பௌத்த, சமணத் துறவிகளின் நேரடி நிர்வாகத்திலிருந்த மடங்கள், வணிகச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது எனக் கொள்வதே சரியானதாக இருக்கும். நாட்டின் நலன் கருதி வெளிநாட்டு வாணிபத்தைப் பெருக்குவதாகக் கூறி வணிகச் சங்கங்கள் மடங்களின் செல்வங்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.இன்றும் கூட மக்கள் வங்கிகளில் சேமித்துள்ள பணத்தில் பெரும்பகுதி தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்காக தொழில் அதிபர்களால் கடனாகப் பெற்று பயன்படுத்துவதுடன் இது பொருந்தும். மேலும் சங்க காலத்தல் உழுகுடியாக இருந்த வேளாளர் வாரக்குடிகளாக ஏற்றம் பெற்றது மட்டுமல்லாது, அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டன என யூகிக்கலாம். அரசருக்கு ஆறில் ஒன்று கடமை என்றும், வேளாளருக்கு எட்டில் ஒன்று கடமை என்றும் பல குறிப்புகள் உள்ளன. கார்காத்த வேளாளரே, களப்பிரர் என்ற வரலாற்றறிஞர் எஸ்.இராமச்சந்திரன் கருதுகோள் சரியாக இருக்குமானால், அரசர் குடியினரின் காலமாகிய சங்ககாலத்தில் ஆறில் ஒன்று வரியும், களப்பிரர் காலமாகிய கார்காத்த வேளாளர் ஆட்சியின்போது எட்டில் ஒன்று வரியும் வசூலிக்கப்பட்டதெனக் கூறலாம். வரிக்குறைப்புச் செய்ததன் மூலம் ஆட்சி மாற்றத்திற்குத் தங்களுடன் அணி சேர்ந்த உழைக்கும் மக்களாகிய வேளாளரை திருப்திப்படுத்தியதுடன், புதிய இனக் குழுக்களை உழுகுடிகளாக (அல்லது வாரக்குடிகளாக) மாற்றுவதற்கு தூண்டுதலாகவும் அமைந்தது. சங்ககால நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் இக்காலத்தில் வேளாளரின் வாழ்க்கை மிகவும் சுபிட்சமடைந்தது என்றே கூறவேண்டும்.இக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் உழவுத் தொழிலைச் சிறப்பிக்கின்றன.“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அ•து ஆற்றாது,எழுவாரை எல்லாம் பொறுத்து”(குறள்.1032)“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்தொழுதுண்டு பின்செல்பவர்”(குறள்.1032)இவ்வாறு உழுகுடிகளைச் சிறப்பிப்பதை, வேட்டிடுவ மக்களாகவும் முல்லை குறிஞ்சி நில மக்களாகவும் இருந்த பல இனக் குழுக்களை உழுகுடிகளாக மாற்றம் செய்யும் முயற்சியாகவும் கருதலாம். களப்பிரரின் சம காலத்தில் வட இந்தியாவிலும் இது போன்ற சமூக மாற்றங்களே நிகழ்ந்துள்ளன என்பதை ராம்சரண் சர்மாவின் குறிப்பு உணர்த்துகின்றது.“வைசியர்கள் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் எனும் பரம்பரைக் கருத்தை, மௌரியர் காலத்துக்குப் பின்னரும் குப்தர் காலத்திலும் இயற்றப்பட்ட நூல்களில் மீண்டும் மீண்டும் காண்கிறோம். அமரகோசத்தில் வைசிய வர்க்கம் என்னும் பகுதியில்தான் உழவர்கள் என்று பொருள்படும் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சூத்திரர்களுள்ளும் பலர் உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்குச் சிறிது ஆதாரம் உள்ளது. விளைச்சலில் பாதியைக் குத்தகையாகச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், சூத்திரர்களுக்கு விளைநிலங்கள் தரப்பட்டன என்று பல நீதி நூல்கள் கூறுகின்றன. சூத்திரர்களுக்கு நிலத்தை வாரத்துக்கு விடும் பழக்கம் வளர்ந்து கொண்டே சென்றது என்பதை இந்த நீதி நூல்கள் காட்டுகின்றன...-----இவ்வாறு சூத்திரர்கள் விவசாயிகளாக மாறியது ஒரு முக்கியமான வளர்ச்சியாகும். சமுதாயத் துறைகளிலும், பொருளாதாரத் துறைகளிலும் ஏற்பட்ட இந்த மாறுதல் குப்தர் காலத்தில் தொடங்கியது. கி.பி.7ம் நூற்றாண்டின் முதற்பாதி முடிவதற்குள் சூத்திரர் அனைவருமே விவசாயிகள் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.”தமிழ்நாட்டில் களப்பிரர் காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம், வட இந்தியாவில் குப்தர் காலத்தில் ஆரம்பித்தது என்பதை மேலே உள்ள குறிப்புக்கள் உணர்த்துகின்றன. குப்தர்களை வைசியர் என்கின்றனர். எனவே வட இந்தியாவில் உழுகுடிகளான சூத்திரர்களுக்கும், நிலப்பிரபுக்களான சத்திரியர்களுக்குமிடையிலான முரண்பாட்டை வைசியர்களான குப்தர்கள் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஆட்சி மாற்றத்திற்கு குப்தர்களுடன் அணி சேர்ந் சூத்திரர்கள் வாரக்குடிகளாக (காராளராக) ஏற்றம் பெற்றனர். தமிழ்நாட்டில் வணிகர்கள் நேரடியாக அரசராகாவிட்டாலும் களப்பிரர்கள் வணிகர்களின் பிரதிநிதிகளாகவே ஆட்சி செய்துள்ளனர். இதனாலேயே இக்காலகட்டத்தை ஒரு வகையான ஜனநாயக காலகட்டம் என கருதுகின்றோம்.களப்பிரர் ஆட்சியின் ஆரம்ப காலங்களில் பௌத்த சமண மடங்கள் பல வகைகளில் புரட்சிகரமாகச் செயல்பட்டுள்ளன. மடங்களின் நிதியாதாரங்கள் காடுகளை அழித்து புதிய விளை நிலங்களை உருவாக்கும் பணிக்குப் பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், நில வாழ்நிலையிலும், வேட்டுவ நிலையிலும் இருந்த பல இனக்குழுக்கள் புதிய விவசாயக் குடிகளாகப் பரிணமித்தனர். மொத்தத்தில் அக்காலக் கட்டத்தில் பௌத்த, சமண மடங்கள் உழைக்கும் மக்களின் பாதுகாவலனாகவே செயல்பட்டன. ஆனால் காலப்போக்கில் நிறுவனமயமாகிவிட்ட மடங்களில் ஆயிரக்கணக்கான துறவிகள் எந்த வேலையும் செய்யாமல் உண்டு கொழுத்தனர். வேளாளரது வாழ்நிலையுடன் ஒப்பிடும்பொழுது, இந்த திகம்பர ஸ்வேதாம்பரத் துறவிகள் செழிப்புடன் வாழ்ந்தனர்.சங்க காலத்தில் தலைமக்களின் வாயில்களாக விளங்கிய செவிலித்தாய், தோழி மரபினர் களப்பிரர் கால சமூக மாற்றத்தில் மேல்நிலை பெற்றதை, களப்பிரர் கால பாடல் ஒன்று நிறுவுகின்றது.உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போற்கீழ்மேலாய் நிற்கும் உலகு.(நாலடியார்-368)இப்பாடல் உடைப்பெருஞ்செல்வராக பார்ப்பாரையும், சான்றோராக அரசகுடியினரையும் குறிப்பிடுகின்றது. சங்க கால வாழ்வியலில் தலைமக்களின் புடைப்பெண்டிராக செவிலித்தாய், தோழி மரபினர் பணி செய்தனர். இம்மரபினர் வேளாளரில் உயர் அடுக்கினராவர். இவர்களுக்குக் கீழ்நிலையிலும் உழுகுடிகளாக வேளாளர் வாழ்ந்தனர். புடைப்பெண்டிர் மக்களும், கீழும் பெருகி எனக் கூறப்படுவது, செவிலித்தாய், தோழி மரபினரும் அவருக்குக் கீழ்நிலையிலிருந்த வேளாளரும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிகழ்வைக் குறிப்பிடுகின்றது. இந்நிலையானது, குடையை விரித்து தலைகீழாகப் பிடித்தது போல், கீழ்மேலாய் உலக நடப்பு உள்ளது என புலவர் ஆதங்கத்துடன் கூறுகின்றார். களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட பழமொழி நானூறும் இக்கருத்தையே கூறுகின்றது.உறை சான்ற சான்றோர் ஒடுங்கி உறையநிறை உள்ளர் அல்லர் நிமிர்த்து பெருகல்வரைதாழ் இலங்கு அருவி வெற்பஅதுவே சுரை ஆழ அம்மி மிதப்ப.(பழமொழி நானூறு)நிறைந்த குணங்களையுடைய, அரசர்குடியான சான்றோர் ஒடுங்கி உறைய, நிறை உள்ளம் இல்லாதாரான வேளாளர் நிமிர்ந்து நிற்கும் நிலையானது, நீரில் சுரைக்காய் ஆழ்ந்துவிட, அம்மி மிதப்பது போல் உள்ளது என புலவர் புலம்பிகின்றார். மேலே கூறப்பட்ட இரு பாடல்களும் களப்பிரர்கால சமூக அடித்தளத்தை தெளிவாக்குவதுடன் சமணத்தை ஆதரித்த அறிவர் மற்றும் வணிகருக்கும், சைவ எழுச்சிக்கு அடித்தளமிட்ட வேளாளருக்கும் இடையில் தோன்றியிருந்த முரண்பாட்டினையும் இப்பாடல்கள் குறிப்பால் உணர்த்துகிண்றன எனலாம். களப்பிரர் காலத்தில் மேல்நிலை அடைந்துவிட்ட வேளாளரை ‘புடைப்பெண்டிர் மக்கள்’ என்றும், ‘கீழ்’ என்றும் சமண துறவிகள் கடுமையாக சாடியதிலிருந்து இவ்விரு பிரிவினருக்குமான முரண்பாட்டின் கூர்மையை உணர முடிகின்றது. இதன் எதிர் வினையாகவே சைவ நாயன்மார்களின், சமணத் துறவிகளுக்கெதிரான கொலை வெறிப்பிடித்த எதிர்ப்பு அமைந்தது எனலாம்.“மத்த விலாசப் பிரகசனம்” என்ற நாடகத்தில் குறிப்பிடப்படுவது போல் களப்பிரர் காலத்தில் நீதி, நிர்வாகம், ஊழல் மலிந்து புரையோடிப் போயிருந்தது. உழைக்கும் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டது. இச்சூழல் மீண்டும் ஒரு சமூக முரண்பாட்டிற்கு அடித்தளமிட்டது. அதாவது வாரக்குடிகளான வேளாளருக்கும், பெரும்பாணமையான நிலங்களை நிர்வகித்த பௌத்த, சமண மடங்களின் நிர்வாகிகளான “அறிவர்” மற்றும் “வணிகர்” கூட்டணிக்குமிடையே முரண்பாடு தோன்றியது. இம்முரண்பாட்டின் விளைவாகவே வாரக்குடிகளான வேளாளர் தலைமையேற்று ஏற்படுத்திய பக்தி இயக்கம் தோற்றம் கொண்டது. முனைவர் க.கைலாசபதி குறிப்பிட்டுள்ளது போலவே சமண, பௌத்த மதங்களுக்கு எதிராக தமிழ்த் தேசிய உணர்வையும், தமிழ்மொழி உணர்வையும், பக்தி இயக்கம் பயன்படுத்தியது.இச்சூழலைப் பயன்படுத்தி தெற்கில் போர்க்குடிகளான பாண்டியர்களும், வடக்கில் போர்க்குடிகளான பல்லவர்களும் களப்பிரர்களை வீழ்த்தினர். பின்னால் சேரர்கள் தாங்கள் இழந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதற்கும் பக்தி இயக்கமே உறுதுணையாக நின்றது. பக்தி இயக்கம் ஏற்படுத்திய தமிழ் மொழி உணர்வு, பல்லவர்களுக்கும் எதிராக நின்ற சூழலைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கீழ் குறுநில மன்னராக இருந்த சோழர்கள் அவர்களை வீழ்த்தி தங்களுடைய புதிய பேரரசை உருவாக்கிக் கொண்டனர். எனவே மத்திய கால சோழப் பேரரசின் தோற்றம் பக்தி இயக்கத்தின் ஒரு விளைபொருள் என்று கூறுவது மிகையாகாது.வேளாளர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட பக்தி இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக மாறியதனால் அரசுகள் சைவத்தை ஆதரிப்பதும், வேளாளருக்கு நிர்வாகத்தில் பங்கு அளிப்பதும் தவிர்க்க முடியாமல் போனது. எனினும் சோழர்கள் பேரரசு உருவாக்கத்திற்கு சைவத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை வரலாறு உணர்த்துகின்றது. மேலும் பக்தி இயக்கத்தின் வெற்றி காரணமாக பெரும் நிலவுடமை நிறுவனங்களாக இருந்த பல பௌத்த, சமண மடங்கள் சைவ மடங்களாக மாற்றப்பட்டன. இந்த மாற்றம் வேளாளரின் ஒரு பிரிவினரைப் பெரும் நிலவுடைமைகளை நிர்வகிக்கக்கூடிய செல்வாக்குப் பெற்றோராக்கியது. சோழர் காலத்தில், ஊர் ஆட்சியில் வேளாளருக்குப் பங்கு அளிக்கப்பட்டது. சித்திரைமேழிப் பெரியநாட்டார் போன்ற செல்வாக்கு மிகுந்த வேளாளர் குடிகள் தோன்றின. சங்ககாலத்தில் செல்வாக்கு மிகுந்த செவிலித்தாய், தோழி மரபினர் சோழர் காலத்தில், வளவர் சேனாதிபதிக் குடியாகவும், அமைச்சர் பதவிக்குரியோராகவும் ஏற்றம் பெற்றனர். இத்தகைய மேல்நிலையை வேளாளரில் மிகச் சிறு பிரிவினரே அடைந்திருந்தனர்.சோழர் காலத்திலும், பெரும்பான்மையான வேளாளர் பிரிவினர் கீழ்நிலையிலேயே வாழ்ந்துள்ளனர். 12-ம் நூற்றாண்டு சோழர்கால கல்வெட்டு ஒன்று கீழ்க்கண்ட செய்தியைக் கூறுகின்றது.“பெருங்குடிகள் பேரால் கடைமைக்கு வெள்ளாழரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அகங்களில்ஓடுக்குதல் செய்யக் கடவதல்லாதாகவும்”பெருங்குறி பெருமக்கள் ஊர் கணக்கர்கையெழுத்திட்ட கல்வெட்டாகம்.பெருங்குடிகள் செலுத்தத் தவறிய கடமைக்காக (வரிப்பாக்கிகள்) சம்மந்தப்பட்ட பெருங்குடிகளின், வாரக்குடிகளான வெள்ளாளரை சிறைப்பிடிக்கும் வழக்கம் இக்கல்வெட்டின் காலத்திற்கு முன்பிருந்ததை இது உணர்த்துகின்றது.13-ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு கூறும் செய்தியாவது,“அதலையூர் நாட்டு நாடாள்வான்கூலிச்சேவகன் திருவழுதி நாட்டுஸ்ரீகுருகூர் வெள்ளாளன்------------நாதன்----------”இங்கு வெள்ளாளன் கூலிச்சேவகனாகக் குறிப்பிடப்பட்டுள்ளான்.“பொன்மேய்ந்த சோழ பிரமராயர்வெள்ளாளடிமைகளில் சூடியார்மக்கள் குன்றியாந் பிற்றடியாந்நல்லாப் பிள்ளைப் பெற்றாந் விண்டாந்”இக்கல்வெட்டு வெள்ளாளரில் அடிமைகள் இருந்த செய்தியைக் குறிப்பிடுகின்றது.சோழர் காலத்தில் சில பிரிவு வேளாளர் மட்டுமே நில உடைமைச் சமுதாயமாக உயர்ந்துள்ளனர். பிற பிரிவு வேளாளர் வாரக்குடிகளாகவும், அடிமைகளாகவுமே இருந்துள்ளனர். எனவேதான், நாச்சினார்க்கினியார் உயர்குடிவேளாளர் மட்டுமே அரசர்களுக்கு “மகற்கொடைக்குரியோர்” எனக் குறிப்பிடுகின்றார்.சங்க காலத்தில் உழுகுடிகளாக இருந்த வேளாளர்கள், களப்பிரர் காலத்தில் காராளராக (வாரக்குடிகளாக) எற்றம் பெற்று பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் பெரும் நிலவுடமையாளராக மாறி அமைச்சர் பதவிக்குரியோராகவும், மாறிய இயக்கப் போக்கு இவ்வாறே நிகழ்ந்துள்ளது. angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-56207510949535105032008-12-24T23:46:00.000-08:002008-12-24T23:47:31.079-08:00காதிலே கேட்ட இசைகாதிலே கேட்ட இசை - அ. முத்துலிங்கம்<br /><br />கடந்த ஆண்டில் ஒரு நாள் அதிகாலை நான் வழக்கம்போல கணினியைத் திறந்தேன். ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. எழுதியவர் பெயர் சுமி. யாரென்று தெரியவில்லை. அது ஒரு சிறிய கடிதம். <br /><br />"நீங்கள் இணையதளங்களில் எழுதுவதைப் படித்து ரசிக்கிறேன். உங்களுக்கு என் அப்பா கைலாசபதியைத் தெரியுமா? என் அம்மா சொல்வார் அவர் உங்கள் நண்பர் என்று."<br /><br />என்னுடைய பதில் இன்னும் சின்னதாக இருந்தது. "எந்தக் கைலாசபதி?" அதற்கு வந்த பதில் என்னை திடுக்கிட வைத்தது. "பேராசிரியர் கைலாசபதி." என்னால் நம்பவே முடியவில்லை. சுமி அமெரிக்காவில் இருந்ததால் உடனேயே அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். நல்ல காலமாக கைலாசின் மனைவி சர்வமங்களமும் அவருடனேயே அப்போது தங்கியிருந்தார். அவருடனும் பேசினேன். 40 வருடங்களாக துண்டிக்கப்பட்ட உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இதிலே புதுமை என்னவென்றால் சுமியோ, சர்வமோ ஒருவித தங்குதடையுமின்றி பழைய நட்பைப் பாராட்டி வெளிப்படையாகவும் உள்ளன்புடனும் தயக்கமில்லாமல் பேசியதுதான். <br /><br />கைலாஸின் பழக்கம் நான் மாணவனாய்ப் படித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்டது. இன்றைய என்னுடைய எழுத்துக்கு அவர்தான் முழுக்காரணம். அவரே எனக்கு ஒரு புது உலகத்தைத் திறந்துவிட்டவர். புதுமைப்பித்தனையும், ஜேம்ஸ் ஜோய்ஸையும் அவர்தான் அறிமுகப்படுத்தினார். அவருடைய வீடு எனக்கு எப்பவும் திறந்திருக்கும். புத்தகங்களை நான் கேட்காமலே தூக்கிக்கொடுப்பார். "இதைக் கொண்டுபோய் படித்துப்பாரும்" என்பார். அதைப் படித்ததும் எனக்கு இன்னொரு கதவு திறக்கும். புத்தகத்தை திருப்பிக்கொடுக்கும்போது ஒரு விவாதம் நடைபெறும். அவருடன் சேர்ந்து தியேட்டருக்கு படம்பார்க்கப் போயிருக்கிறேன். அவருடன் சேர்ந்து பலதடவை உணவகத்தில் உணவருந்தியிருக்கிறேன். ஒரு முறையாவது என்னை உணவுக்கு பணம்கொடுக்க அவர் அனுமதித்ததில்லை. முதன்முதல் ஆறாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதிய போர்ட் கார் வாங்கினார். அதன் முன்இருக்கையில் அமர்ந்து அவருடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அவர் மேல்படிப்புக்காக வெளிநாடு போனார். நான் வேறுநாடு போனேன். அத்துடன் எங்கள் தொடர்பு முறிந்தது. தொலைபேசி இல்லை. கடிதம் இல்லை. பிரிந்த எங்கள் பாதைகள் மீண்டும் சந்திக்கவேயில்லை. <br /><br />இந்த இடைக்காலத்தில் கைலாஸ் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் Tamil Heroic Poetry என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றிருந்தார். இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றது அவர்தான். அதைத் தொடர்ந்து மனிதப்பண்பியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றினார். இருபதுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதினார். இன்று தமிழில் ஆய்வுசெய்யும் எந்த ஒரு மாணவரும் அவர் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, கைலாசபதியை புறக்கணித்து ஆய்வை முற்றுப்பெறச் செய்யமுடியாது. மரபு இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் ஆகியஇவற்றை மார்க்சிய கண்ணோட்டம் மூலம் விளங்கிக் கொள்வதற்கு ஒரு திசைகாட்டியாக செயல்பட்டவர் கைலாஸ். அவர் எனக்கு ஒரு காலத்தில் நண்பராக இருந்தார் என்பது எவ்வளவு பெருமையானது. <br /><br />சர்வம் தொலைபேசியில் நீண்டநேரம் பேசினார். பல்கலைக்கழக வாழ்க்கை, அவருடைய நண்பர்கள், இலக்கியம், இசை என்று பலதையும் தொட்டார். "அவருடைய கடைசி காலத்தைப் பற்றி சொல்லுங்கள்?" என்றேன். <br /><br />"கைலாசுக்கு சோர்வு என்பதே கிடையாது. புத்தகம் படிப்பார். நண்பர்களுடன் இலக்கிய விவாதம் செய்வார். இரவிரவாக எழுதுவார். ஒரு மணி, இரண்டு மணிக்கு முன்னர் அவர் படுத்ததில்லை. நல்ல ஒரு மாணவரைப்போல இடைவிடாது உழைத்தார். அடுத்த நாள் காலை ஒரு பரீட்சை எழுதவேண்டும் என்பதுபோலவே நடந்துகொள்வார். அவர் இரவிரவாக எழுதியதை அது ஆங்கிலமாக இருந்தால் நான் தட்டச்சு செய்து வைப்பேன். அது தமிழ் என்றால் அதை நான் நல்ல எழுத்தில் திருப்பி எழுதவேண்டும். அத்துடன் வேலை முடியாது. திருப்பிப்படிக்கும்போது அவருக்கு புதுப்புது எண்ணங்கள் முளைக்கும். என்னிடம் sorry sorry என்று மன்னிப்புக்கேட்டபடி நட்சத்திரக்குறி போட்டு வேறு ஒற்றையில் A,B,C என்று எழுதிவைப்பார். நான் அவற்றையெல்லாம் கட்டுரையில் சேர்த்து திரும்பவும் எழுதவேண்டும். ஆரம்பத்தில் ஆறு பக்க கட்டுரையாக இருந்தது முப்பது பக்கமாக மாறிவிடும். <br /><br />1982 நவம்பர் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. திடீரென்று களைத்துப்போய்க் காணப்பட்டார். ஒன்பது மணிக்கு போய் படுத்துக்கொள்ள துடங்கினார். அடுத்த நாள் காலை எழும்பும் போதும் அதே களைப்புடன் இருந்தார். முந்திய உற்சாகம் மறைந்துவிட்டது. எங்களுடைய மருத்துவ நண்பர் ஸ்ரீஹரன் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துவிடலாம் என்றார். சரி என்று செய்தோம். அன்று பின்னேரம் தொலைபேசியை அவரிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்தோம். நீண்ட நேரம் தொலைபேசி வரவில்லை ஆனால் அவர் நேரே வீட்டுக்கு வந்தார். அவருடன் இன்னும் சில நண்பர்களும் வந்தார்கள். "நீங்கள் இன்றே கொழும்புக்கு வெளிக்கிடவேண்டும். உங்கள் இருவருக்கும் டிக்கெட்டும் வாங்கிவிட்டோம்" என்றார். "இன்றா, என்ன விளையாடுகிறீர்களா? அது எப்படி முடியும்?" என்று மறுத்துவிட்டோம். "ஒன்றும் பயமில்லை. கொழும்பில் காட்டினால் ஒரு கிழமையிலேயே திரும்பிவிடலாம். எல்லாம் ஒரு மனத்திருப்திக்குத்தான்" என்றார். அவசர அவசரமாக ஒரு கிழமைக்கு தேவையான உடுப்பை பெட்டியில் அடைத்துக்கொண்டு புறப்பட்டோம். <br /><br />கொழும்பு போய் இறங்கியதும் அங்கே என்னுடைய அப்பா எங்களைச் சந்தித்தார். மருத்துவ மனைக்கு போனால் சிறப்பு மருத்துவர் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தது மேலும் ஆச்சரியமாக இருந்தது. எல்லா ஏற்பாடுகளையும் ஸ்ரீஹரன் யாழ்ப்பாணத்தில் இருந்தபடியே செய்துவிட்டார். நாங்கள் மருத்துவ மனையில் இருந்த முதல் ஐந்து ஆறு நாட்களும் கைலாஸால் மறக்க முடியாத நாட்கள். அவ்வளவு மகிழ்ச்சியாக அவர் இருந்தார். மருத்துவர்களும் தாதிகளும் அந்தப்பரிசோதனை இந்தப்பரிசோதனை என்று இழுத்தடித்தாலும் அவருடைய மகிழ்ச்சிக்குக் காரணமிருந்தது. எழுத்தாள நண்பர்கள் அவரை எப்பவும் சூழ்ந்தபடி இருந்தார்கள். ஒரு பெரிய இலக்கியப் பட்டறை அங்கே தொடர்ந்து நடந்தது. விவாதங்கள் சூடுபிடிக்கும்போதே சில வேளைகளில் இவர் கண்கள் மெல்ல மூடிவிடும். ஆனாலும் உதட்டிலே மெல்லிய புன்னகை வீசும். அவர் கண்கள் தூக்கத்தில் மூடிக்கொண்டிருந்தாலும் உள்ளே பெரிய விவாதம் இன்னமும் ஓடிக்கொண்டுதான் இருந்தது. நண்பர்கள் ஓசைப்படாமல் மெல்ல எழுந்துபோவார்கள். <br /><br />ஐந்தாவது நாள் என்று நினைக்கிறேன். இந்துப் பத்திரிகை என். ராம் இந்தியாவிலிருந்து நண்பர் மூலம் ஒரு புத்தகக் கட்டு அனுப்பியிருந்தார். அவை இவர் கேட்ட புத்தகங்களாக இருக்கலாம். புத்தகத்தை திறந்து பார்ப்பதும் தடவிக்கொடுப்பதுமாக இருந்தார். மருத்துவருடைய சோதனைகளும், தாதிமாருடைய தொந்திரவுகளும் இல்லாவிட்டால் அன்றே புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியிருப்பார். அதே நாள் இரவு நான் பேராசிரியர் ராமசாமியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் எதிர்பாராத விசயம் நடந்தது. "சர்வம், நீங்கள் வெளிநாட்டுக்கு போகப்போவதாக அறிந்தேன். இந்த மாதிரி லூக்கீமியாவில் நோயாளியின் வேதனைகளைக் குறைப்பதற்குத்தான்....." என்று ஆரம்பித்து அவர் பேசிக்கொண்டே போனபோது எனக்கு வேறு ஒன்றுமே கேட்கவில்லை. லூக்கீமியா என்ற வார்த்தையே காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்தது. நான் இடிந்துபோய் உட்கார்ந்து அழத்தொடங்கினேன். அதுவரைக்கும் மருத்துவர்கள் கான்சருக்குத்தான் வைத்தியம் பார்த்தார்கள் என்ற விசயம் எனக்குத் தெரியாது. <br /><br />அன்று என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகமில்லை. எல்லா மருத்துவர்களும் என்னை சூழ்ந்துகொண்டார்கள். "சர்வம், நீங்கள் தைரியமானவர் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் என்ன நோய் என்று கைலாசுக்கு தெரியாமல் இருப்பது நல்லது. அவர் மனம் உடைந்து போய்விடும். முன்புபோலவே அவருடன் சந்தோசமாய்ப் பழகுங்கள். அவர் ஐமிச்சப்படக்கூடாது." <br /><br />நான் கைலாஸின் படுக்கைக்கு போனபோது அவர் தான் யாழ்ப்பாணத்துக்கு திரும்பிப்போவது, அவசரமாக எழுதி முடிக்கவேண்டிய கட்டுரைகள், புதிய வேலைத் திட்டங்கள் பற்றி எல்லாம் ஆர்வமாகப் பேசினார். தன்னுடைய நோய் குணமாகி இரண்டு கிழமைகளில் திரும்பிவிடலாம் என்றே அவர் சிறுபிள்ளைத்தனமாக நம்பினார். <br /><br />ஒவ்வொரு நாளும் அவருக்கு ரத்தம் ஏற்ற ஆரம்பித்தார்கள். வேறு யாரோவுடைய ரத்தம் உள்ளே போனதும் கொஞ்சம் உசாராக இருப்பார். ஆனால் சில மணி நேரங்களில் செலுத்திய அவ்வளவு ரத்தமும் வலுவிழந்துபோய்விடும். மறுபடியும் சோர்ந்துபோவார். காலைகளில் பதற்றமாக இருப்பார். என்ன என்பேன். ராட்சசி வரப்போகிறார் என்பார். அவர் சொன்னது ரத்தம் எடுக்கும் தாதியை. அவர் அப்படியான வார்த்தையை உபயோகிப்பதே இல்லை. பார்க்க பரிதாபமாகவிருந்தது. நோகிறதா என்பேன். ஒரு குழந்தைப்பிள்ளை கொட்டாவி விடுவதுபோல வாயை திறப்பார். உள்ளே முழுக்க அவிந்துபோய் ரத்தமாயிருக்கும். இன்னும் ஒன்றிரண்டு நாளைக்குத்தான், பிறகு எல்லாம் சரியாய்ப் போகும் என்பேன். அவர் அப்படியே கண்ணயர்ந்துபோவார். <br /><br />அன்று பின்னேரம் பெரும் சோர்வுடன் காணப்பட்டார். என்னுடைய அப்பா அவரைப் பார்க்க வந்தார். என் அப்பாவிடம் அவருக்கு மரியாதை அதிகம். சிறுவயதிலிருந்து அப்பாதான் அவரைப் படிப்பித்து வளர்த்தெடுத்தவர். அவரைப் பார்த்ததும் கிட்ட வரச் சொன்னார். அப்பா போனார். இன்னும் கிட்ட என்றார். மேலும் இரண்டடி வந்ததும் கைலாஸ் கட்டிலில் உட்கார்ந்த நிலையில் அப்பாவைக் கட்டிப்பிடித்தார். இது கைலாஸ் வாழ்நாளில் செய்யாத ஒன்று. உணர்ச்சிகளை லேசில் காட்டமாட்டார். ஒரு வேளை இவருக்கு தெரிந்துவிட்டதோ, விடைபெறுகிறாரா என்றெல்லாம் யோசித்தேன். உண்மையில் கைலாஸ் இறக்கும் வரைக்கும் தனக்கு என்ன நோய் என்பது தெரியாமலேதான் இறந்துபோனார். <br /><br />இரண்டு நாள் முன்பாக நானும் அவரும் தனிமையில் இருந்தோம். அவர் என்னுடைய கையைப் பிடித்தார். ஒலிநாடாவில் அவருக்குப் பிடித்த பாடல் ஓடிக்கொண்டிருந்தது. கடந்த சில வருடங்களாக அவருக்கு இசையில் நாட்டம் அதிகமாயிருந்தது. ஒவ்வொரு வருடமும் நண்பர்களுடன் சென்னை இசைவிழாவுக்கு பயணமாகிவிடுவார். இசை பற்றிய நுணுக்கங்களை தாமாகவே கற்றார். நான் பத்து வருடமாக முறையாக வீணை கற்றிருந்தேன். ஆனால் எனக்குத் தெரியாத விசயங்கள் அவருக்குத் தெரிந்திருந்தன. ஒரு ராகத்தை பாடகர் பாட ஆரம்பித்தவுடன் அது என்னவென்று சொல்லிவிடுவார். எப்படி அந்த ஆற்றலை வளர்த்துகொண்டார் என்பது அவருக்குப் பக்கத்தில் எந்த நேரமும் இருந்த எனக்கே புரியவில்லை. <br /><br />அவர் மனதிலே பெரிய ஆசையிருந்தது. பாரதியாரைப் பற்றி நிறைய குறிப்புகளும், ஆராய்ச்சி முடிவுகளும் அவரிடம் இருந்தன. பாரதியாரைப் பற்றி எழுதும் எண்ணம். முன்பு ஒருவரும் எழுதியிராத வகையில் ஒரு முழு நூலை உருவாக்கவேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தார். நாலு தொகுதிகாளாக கொண்டுவருவதற்கு நிறைய விசயம் சேர்ந்திருந்தது. அவருடைய பீடாதிபதி வேலை, நிர்வாகத்தில் அதிக நேரத்தை விழுங்கியது. மாணவர்களும் கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் அவரிடமிருந்த மீதி நேரத்தைப் பங்குபோட்டுக் கொண்டார்கள். எப்படியும் நேரம் ஒதுக்கி முழுக்கவனத்தையும் செலுத்தித் தொகுப்பை முடித்துவிடவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தார். <br /><br />அத்துடன் இன்னொரு ரகஸ்ய ஆசை. ஒரு நாவல் எழுதுவது. அந்தக் காலத்தில் பல யாழ்ப்பாண மக்கள் பணம் சம்பாதிக்க மலேயா போனார்கள். அவருடைய பெற்றோர் அப்படிப் போனவர்கள்தான். இரண்டாம் உலக போர்ச்சூழலை வைத்து, மலேயாப் பின்னணியில் ஒரு நாவல் எழுதும் திட்டம். மருத்துவ மனையிலிருந்து திரும்பியதும் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அடுத்த வாரம் நிச்சயம் திரும்பிவிடலாம் என்பதே அவர் நினைப்பு. <br /><br />திடீரென்று "சர்வம், எங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?" என்றார். எனக்கு திக்கென்றது. "இது என்ன கேள்வி, இந்த நேரத்தில்" என்றேன். "உண்மையைச் சொல்லுங்கோ" என்றார். அவர் கை என்னுடையதை இறுகப் பற்றிக்கொண்டிருந்தது. நான் சொன்னேன். "இதனிலும் பார்க்க மகிழ்ச்சியான வாழ்க்கை வேறு எங்கேயிருக்கு. எனக்கு ஒரு குறையுமில்லை." "'எனக்கும் அப்படித்தான். உங்கட வாயாலே கேட்கவேணும்போல ஆசையாய் இருந்தது." அவர் வாய் முணுமுணுத்தது, "காலம் என்பது. கறங்குபோல் சுழன்று. கீழது மேலாய். மேலது கீழாய்..." அப்படியே அன்று தூங்கிப்போனார். <br /><br />அடுத்த நாள்தான் அவர் கடைசிமுறையாக என்னோடு பேசப்போகும் நாள். <br /><br />வழக்கம்போல அன்றிரவு நான் அவருடனேயே தங்கினேன். அடுத்த நாள் காலை நான் வீட்டுக்கு போய் உடுப்பு மாற்றிக் குளித்துவிட்டு அவருக்கு சூப் செய்துகொண்டு வரவேண்டும். புறப்பட்டேன். "சர்வம், கொஞ்சம் நில்லுங்கோ. இந்தப்பாட்டைக் கேளுங்கோ. இது வைணவ இசைபோல இருக்கு, இல்லையா?" என்றார். நான் திகைத்துப்போனேன். எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. ஒலிநாடா ஓடவில்லை. அந்த இசை அவர் கற்பனையில் மட்டுமே ஓடியது. நான் "நல்ல இசைதான். அருமையாயிருக்கு" என்றேன். அவருடைய வாயில் மெல்லிய புன்னகை. இசையை ஆழ்ந்து ரசிக்கும் பரவசம் முகத்தில் தெரிந்தது. நான் சற்று தயங்கி நின்றுவிட்டுப் புறப்பட்டேன். <br /><br />வீட்டுக்கு வந்த சில நிமிடங்களில் தொலைபேசி ஒலித்தது. மருத்துவமனையிலிஇருந்து என்னை உடனே வரும்படி அழைத்தார்கள். எனக்கு டக்கென்றது. ஏதோ நடக்கப்போகிறது என்று மனது பதைத்தது. நான் திரும்பி வந்தபோது அவர் கோமாவில் இருந்தார். அவர் கண்கள் என்னைப் பார்க்கவில்லை. அவர் வாய் என்னுடன் பேசவில்லை. ஓர் உடம்புதான் அங்கே படுத்திருந்தது. அவர் பிறகு கண் விழிக்கவேயிஇல்லை. அவரிடம் சற்று முன்னர் நான் பேசியதுதான் கடைசி. கேட்காத இசையை "அருமையாயிருக்கு" என்று சொன்னது கொஞ்சம் மனசுக்கு வருத்தமாயிருந்தது. கோமாவிலிருந்து மீளாமல் அன்று மாலையே அவர் உயிர்நீத்தார். <br /><br />அவர் இருக்கும்போது நண்பர்கள் எப்போதும் வீட்டை நிறைத்திருப்பார்கள். வழக்கமாக இரண்டு மூன்று விருந்தாளிகள் வீட்டிலே சாப்பிடுவார்கள். மாதத்திலே ஒரு தடவையாவது இருபது பேருக்கு எங்கள் வீட்டில் விருந்து நடப்பது சர்வ சாதாரணம். சனி, ஞாயிறுகளில் அதிகாலையிலேயே பண்ணை சந்தைக்குக்கு போய் மீன், நண்டு என்று வாங்கிக் கொண்டுவந்து போடுவார். நான் சமைப்பேன். அவருக்கு முட்டைப்பொரியலில் அப்படி ஒரு விருப்பம். அது கட்டாயம் இருக்கவேண்டும். மலேயாவில் சிறுவயதில் சண்டைக்காலத்தில் அவர் வாழ்ந்தபோது நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறார். பெற்றோர்கள் இருக்கும் உணவை அவருக்கு கொடுத்துவிட்டுப் பட்டினி கிடப்பார்கள். அந்தக்காலத்தில் ஒரு முட்டை அகப்பட்டால் விருந்து கிடைத்ததுபோல என்பார். அதை அவர் மறக்கவேயில்லை. நண்பர்களுடன் விவாதங்கள் சூடாக நடக்கும். நான் சமையலறையில் நெடுக நிற்பதும் பிடியாது. நானும் வந்து கலந்துகொள்ள வேண்டும். என்னுடைய அபிப்பிராயத்தை அடிக்கடி கேட்பார். <br /><br />அவர் இறந்த பிறகும் எழுத்தாள நண்பர்கள் தொடர்ந்து வந்து விசாரித்துப்போவார்கள். அதேபோல தமிழ்நாட்டில் வா.செ. குழந்தைசுவாமியும் குடும்பமும் தங்கள் அன்பினால் எங்கள் இழப்பை ஈடு செய்ய உதவினர். நீர்வை பொன்னையன் அடிக்கடி வந்து பார்ப்பார். மற்றது எழுத்தாளர் ரகுநாதன். அவர் வீட்டுக்கு போவதற்கு என் மகள்களுக்கு நிறையப் பிடிக்கும். ரகுநாதனின் மனைவி எனக்கு விருப்பம் என்று சண்டி வறை செய்துகொண்டு வந்து தருவார். ரகுநாதனை சைக்கிள் ஓட்டவேண்டாம் என்று மருத்துவர் கட்டளையிட்ட பிறகும் இரண்டு பஸ் பிடித்து வந்து எங்களைப் பார்ப்பார். <br /><br />கைலாஸ் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால்தான் நாங்கள் திருவையாற்றிலிருந்து திரும்பியிருந்தோம். அடிக்கடி விரிவுரைகளுக்காக இந்தியா போயிருந்தாலும் கடைசித்தடவை போனபோது என்னவோ அவருக்கு நடந்துவிட்டது. அடுத்த வருடமும் குடும்பத்துடன் திருவையாறு போகவேண்டும் என்றார். காவிரியும் அந்தக் காற்றும் வீதிகளில் கேட்கும் இசையும் அவருக்கு பிடித்துக்கொண்டது. அவர் விருப்பத்தை நான் நிறைவேற்றினேன். அவர் இறந்த அடுத்த வருடம் குடும்பத்தோடு திருவையாறு போய் அவருடைய சாம்பலைக் காவிரியில் கரைத்தேன். அவர் மிகவும் நேசித்த அந்தக் காற்றிலும் நீரிலும் இசையிலும் அவர் கலந்துகொண்டார் என்றுதான் நினைக்கிறேன். <br /><br />மருத்துவமனையில் படுத்திருந்தபோது அவரைச் சுற்றியிருந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அவருடைய எஞ்சிய வாழ்நாள் நிமிடம் நிமிடமாக கரைந்துவருவது தெரிந்திருந்தது. அவருக்கு அது தெரியவில்லை. தாம் திரும்பி யாழ்ப்பாணம் போய் பாரதி பற்றிய புத்தகத்தை தொடங்கிவிடலாம் என்றே நினைத்திருந்தார். எழுத்தாளர்கள் வந்து பேசிவிட்டுப்போன பின்னரும் அவருடைய சிந்தனைகள் ஓயாது, அவர் முகம் ஒரு பரவச நிலையிலிருக்கும். இதை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். அன்று கடைசியாக என் காதுகள் கேட்கமுடியாத ஒரு வைணவ இசை அவருக்கு கேட்கிறது என்று சொன்னபோது அவர் முகம் அப்படியான ஒரு பரவச நிலையையே எட்டியிருந்தது. அவர் மனதில் என்னவென்ன சிந்தனைகள் அந்தச்சமயம் ஓடிக்கொண்டிருந்தனவோ. அவையும் எனக்குக் கேட்கவில்லை.angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-56821082215792080862008-12-24T23:33:00.000-08:002008-12-24T23:38:56.615-08:00தமிழரிடையே மொழி, பண்பாடு பற்றிய உணர்வு-பேராசிரியர்.க.கைலாசபதி"யாழ்ப்பாணத்து அறிஞர்கள்', தமது பிரசங்கம், கற்பித்தல், விவாதம், பதிப்பு, நூல் வெளியீடு போன்றவற்றால் தம்மை, தமிழ் நாட்டில் நிலைநிறுத்திக்கொண்ட அதேசமயம், அவர்கள் அங்கு நடந்துகொண்டிருந்த கலாசார தேசிய இயக்கத்தால் கவரவும்பட்டனர்.கோல்ட்வெல் பாதிரியாரின் (18141891)திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856, திருத்திய பதிப்பு 1958) என்னும் நூலால் நாவலர் பாதிப்புற்றவராகக் காணப்படாவிடினும் தாமோதரம்பிள்ளையும் ஏனையோரும் அந்நூலின் பாதிப்புக்கு உட்பட்டவராகக் காணப்படுகின்றனர். நான் இது பற்றி வேறொரிடத்தில் ஆராய்ந்துள்ளதால் இவ்விடத்தில் அதிகம் கூறத்தேவையில்லை. சமஸ்கிருதம், இந்தோ ஆரியமொழிகள், திராவிடமொழிகள் ஆகியவற்றின் எதிரெதிரான தனித்தன்மைகளையும் அம்மொழிகளின் பழமையையும் பற்றிக்கோல்ட்வெல் கூறுகிறார். இதன் மூலம் றொபட் கோல்ட்வெல்ட் ஏற்படுத்திய கருத்தோட்டங்கள், இயக்கங்கள் ஆகியவற்றின் பின்விளைவுகள் மொழியியற்துறைக்கு அப்பாற்பட்டவையாக அமைந்தன. <br /><br />தமிழ் மொழியின் பொற்காலம் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் கோல்ட்வெல் மாத்திரம் தனியே ஈடுபடவில்லை, வேறு ஐரோப்பிய மிஷனரிகளும் திராவிடம்பற்றிய கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் கொல்ட்வெல்வின் ஒப்பிலக்கணமே இக்கருத்தை மேலும் மேலும் வலுப்படுத்தியது. சி,வை.தாமோதரம்பிள்ளை தாம் பதிப்பித்த கலித்தொகை (1887) வீரசோழியம் (1895) போன்ற பழந்தமிழ் நூல்களுக்கு எழுதிய நீண்டவையும் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டவையுமான பதிப்புரைகளில் கோல்ட்வெல்லின் திராவிடம், தமிழ் பற்றிய உறுதியான கருத்துகளை எதிரொலிக்கிறார்.பண்டைய தமிழ் இலக்கிய இலக்கணங்கள் மாத்திரமன்றி, அவற்றின் ஊடகமான தமிழ் மொழியும் நன்மதிப்புக்கு உட்பட்டது. "தமிழரின்' நவீன மொழி உணர்வினை இக்காலப்பகுதியிலிருந்து காணமுடியும். இவ்வியக்கத்தின் போஷகர் ஒரு கிறிஸ்தவ மிஷனரியாகவிருந்தது ஒரு முரண்சுவை ஆகும். <br /><br />தென்னிந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் 1880 களில் வாழ்ந்த தமிழ் உயர் குழாத்தினர் தமது மொழி, பண்பாடு, வரலாறு பற்றிமிகவும் ஆர்வமுடையோராய் இருந்தனர், திருவங்கூர் பல்கலைக்கழகக் கல்லூரியில் தத்துவாப் பேராசிரியராகவிருந்த வி.சுந்தரம்பிள்ளையின் செய்யுள் நாடகமான மனோன்மணியம் (1891) இவ்வார்வத்தைக் குறிக்கும் ஒரு மைல்கல்லாகும். பெரிதும் புகழப்படும் இந் நாடக இலக்கியத்தில் ஆசிரியர் தமிழ் மொழியைத் தேவதையாக உருவாக்கினார். தமிழ் மொழி தெய்வத்தன்மை பொருத்தியதாகவும், புனிதமானதாகவும் கூறப்படுகின்றது. தென்னிந்தியாவில் ஏற்பட்ட இத்தகைய கருத்தோட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் இலங்கைத் தமிழரின் முழுமையான பங்குபற்றலும், பங்களிப்பும் காணப்பட்டன. மொழி, பண்பாடுபற்றி வளர்ந்து வந்த விழிப்புணர்வின் குறியீடுகளாக இரு சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. ஒன்று சித்தாந்த தீபிகை (18971914) மற்றையது தமிழியன் அன்றிகுவரி (Tamailin Antiquary 1907&1914) இவ்விரு சஞ்சிகைகள் பற்றி சமகால ஆராய்ச்சியாளர் ஒருவரின் அவதானிப்பு விடயத்தைத் தெளிவுபடுத்துகிறது. <br /><br />"தமிழ் மறுமலர்ச்சியின் மகோன்னத காலப் பகுதியான இரு தசாப்தங்களை இவ்விரு சஞ்சிகைகளும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.ஐரோப்பிய அறிஞர்களின் நுண்திறத்தாலும் உணர்ச்சியார்வத்தாலும் வழிநடத்தப்பெற்ற தமிழறிஞர்கள் தமிழ் இலக்கியத்திலும் தமிழ் மொழியிலும் வளர்த்துக்கொண்ட ஆர்வத்தை இக்காலப்பகுதி குறிக்கிறது.இவ்விரு சஞ்சிகைகளும் தமிழரிடையே அவர்களது மொழியிலும் இலக்கியத்திலும் அக்கறையையும் இலக்கிய பண்பாட்டுப் பாரம்பரியத்தில் சமூக நம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்தியதில் மிகப் பெரும் பங்காற்றின.' <br /><br />இங்கு நாம் கவனிக்கவேண்டிய விடயம் யாதெனில், ஈழத்துத் தமிழறிஞர் இவ்விரு சஞ்சிகைகளின் வெளியீட்டில் தீவிரமாகப் பங்குபற்றியமையாகும். சித்தாந்த தீபிகைக்கு ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளையும் (18641920) தமிழியன் அன்ரிக்குவரிக்கு டி.சவரிராயப்பிள்ளையும் (18541923) ஆசிரியராக இருந்தனர். முன்னையவர் மாவட்ட நீதிபதி, மற்றவர் திருச்சியில் சென்.ஜோசப் கல்லூரியில் விரிவுரையாளராகவிருந்தவர். இச்சஞ்சிகைகளை மேலோட்டமாகத் தன்னும் பார்க்கும்போது இலங்கைத் தமிழரின் பங்களிப்பின் இயல்பையும் அளவையும் கண்டுணரமுடியும். பொன்.அருணாசலம், பொன். இராமநாதன், எஸ்.டபிள்யூ.குமாரசாமி(18751936), அ.முத்துதம்பிப்பிள்ளை (18581917), வி.ஜே.தம்பிப்பிள்ளை, ரி.பொன்னம்பலப்பிள்ளை போன்றோரும் வேறு சிலரும் இச் சஞ்சிகைகளுக்கு தொடர்ந்து எழுதிவந்தனர். பி.ஏ.என்ற முதலெழுத்துக்களுடன் பொன்.அருணாசலத்தின் மொழிபெயர்ப்புகள் இச் சஞ்சிகைகளில் வெளியாகின. நல்லசாமிப்பிள்ளை நாவலரின் அபிமானி;இலங்கைத் தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சிகளை அருமையுடன் பாராட்டியவர், பண்டிதர் சவரிராயப்பிள்ளை தமிழ் நாட்டில் முக்கியமான பதவிகள் வகித்த இரு யாழ்ப்பாணத்தவரால் தூண்டப்பட்டவர். ஒருவர் திருவாங்கூர் ஆயத்துறை அத்தியட்சகராகவிருந்த தா.பொன்னம்பலபிள்ளை மற்றவர் இவரது சகோதரர் தா.செல்லப்பாபிள்ளை திருவாங்கூரில் நீதிபதியாகப் பதவி வகித்தவர். தா.பொ.மாசிலாமணிப்பிள்ளை பொன்னம்பலபிள்ளையின் புதல்வர். இவரும் தமிழியன் அன்ரிகுவரிக்கு கட்டுரைகள் எழுதினார். வேலையிலிருந்து இளைப்பாறி இலங்கைக்குத் திரும்பியபின் செல்லப்பாபிள்ளை சைவபரிபாலனசபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். <br /><br />பண்டிதர் சவரிராயர் பற்றிய செய்தி எமக்கு இன்னோர் உண்மையை உணர்த்துகிறது. பண்பாட்டு விழிப்புணர்வு , இந்து இயக்கமாகவே தொடங்கி சைவ அறிஞர்களால் முன்னெடுத்துச்செல்லப்பட்டாலும் அதனுடைய குணாம்சம் பின்வந்த ஆண்டுகளில் மாற்றமடைந்தது.கிறிஸ்தவ மிஷனரி அறிஞர்களும் (கோல்ட்வெல், பேர்சிவல், பவர், போப், எல்லிஸ்) சவரிராயர் போன்றோரும், கிறிஸ்தவர்களும் இவ்வியக்கத்தில் இணைந்தனர். மேலும் சமயத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் சமயத்திலிருந்து மொழிக்கு மாறியமையால் இதுவரை சைவசமயத்திற்கு இருந்த முதன்மையும் குறைந்தது (உண்மையில் சவரிராயப்பிள்ளையின் காலத்திலிருந்து இலங்கையிலும் இந்தியாவிலும் எல்.டி.சுவாமிக்கண்ணுபிள்ளை (18651925)ஞானப்பிரகாச சுவாமிகள் (18751947) டாக்டர் ரி.ஐசக் தம்பையா, சேவியர் தனிதாயக அடிகள் ஆகியோரின் தீவிர பங்களிப்பு தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் கிறிஸ்தவர் ஊடுருவிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு சில சமயம் எழுவதற்கு வழிவகுத்தது. <br /><br />மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிகள் இலங்கையில் ஐயத்துக்கிடமின்றிப் பல தாக்கங்களை ஏற்படுத்தின. தமிழ் மொழியில் இருந்த அக்கறை பல்வேறு வழிகளிலும் வெளிப்பட்டன. மொழிப்பாதுகாப்பையும் வளர்ச்சியையும் கருதிச் சங்கங்களும் சபைகளும் அமைக்கப்பட்டன. 1898 ஆம் ஆண்டு ஆறுமுக நாவலரின் மருமகரும் மாணாக்கருமாகிய த.கைலாசப்பிள்ளையால் (18821939) யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்டது, இதனாற் கவரப்பட்டே ராமநாத மாவட்ட பழவனந்தம் ஜமீந்தார் பாண்டித்துரைதேவரால் (18671911) 1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது என்னும் செய்தி சுவைப்பதாகும்.இப்போக்கு அடுத்த சில தசாப்தங்களில் பிரபல்யமடைந்தது. 1942 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது, தமிழ் மொழி,இலக்கியம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான மகாநாடுகளும் கூட்டங்களும் அடிக்கடி நடைபெற்றன. அத்தகைய ஒரு கூட்டம் யாழ்ப்பாணத்தில் 1922 இல் ரிட்ஜ்வே மண்டபத்தில் செ.கனகசபைப்பிள்ளையின் தலைமையில் நடைபெற்றது. இதுவே யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது பெரிய இலக்கிய மகாநாடாகும். இம் மகாநாட்டுக்காக சென்னையிலிருந்து சில பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கலாநிதி எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், கா.சுப்பிரமணியப்பிள்ளை (18891945) தமிழ் மறு <br /><br />மலர்ச்சியாளர் பி.வி.மாணிக்க நாயக்கர், (18711931) நாவலாசிரியர். அ.மாதவையா (18721925) போன்றோர். சேர். வைத்திலிங்கம் துரைசாமி இரண்டாம் நாள் மகாநாட்டுக்குத் தலைமைவகித்தார். மகாஜனாக் கல்லூரியின் ஸ்தாபகரும் புலவரும், நாடகாசிரியருமான தெ.அ.துரையப்பாப்பிள்ளை இம் மகாநாட்டில் தீவிரபங்கெடுத்தார். இதே வருடத்திலே யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமும் தொடங்கப்பட்டது. <br /><br />தமிழ் மொழியின் வளர்ச்சியைப் போன்ற சமாந்தரப் போக்கு தமிழரின் தேசிய சமய தத்துவமாகக் கொள்ளப்பட்ட சைவசித்தாந்தத்திலும் காணப்பட்டது. சைவசித்தாந்தம் நாவலரால் புனர்நிர்மாணம் பெற்றதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமயத்தை ஆதரிக்கும் பல்வேறு சபைகளும் தோன்றின. யாழ்ப்பாண சைவபரிபாலன சபைபற்றி ஏற்கனவே கூறப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் சைவ சித்தாந்த சமாஜம் ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் இது காலவரை சைவமடாலயங்களே சைவசமயம் தத்துவம் ஆகியவற்றுக்குப் பாதுகாவல்களாக விளங்கின. ஆனால், தற்போது சாமான்ய மனிதர்களும் சமயத்தைப் பாதுகாப்பதை தமது கட்டாய கடமை என எண்ணினர். சைவசித்தாந்தத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் ஒரேஒரு முக்கிய ஸ்தாபனமாகவும் சமாஜம் கருதப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த பல முக்கிய அறிஞர்கள் அதில் பிரதான பங்கு வகித்தனர். பல தமிழறிஞர்கள் சமாஜத்தில் விரிவுரையாற்றுவதற்கு அடிக்கடி அழைக்கப்பட்டனர். அதன் வருடாந்தக் கூட்டங்களுக்கும் தலைமைவகித்தனர். ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை இச்சமாஜத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராயிருந்தார். <br /> <br /> பண்பாட்டு விழிப்புணர்வு, மத்தியத்தர வர்க்கத் தமிழருடையது என்பதும் இதற்குத் தலைமை தாங்கியது உயர்மத்தியதர வர்க்கத்தினரே என்பது தெரியவரும். சமயத்துறையில் ஏற்பட்ட இவ்விழிப்பு பின்னர் மொழி பண்பாட்டுத்துறைகளுக்கும் பரவியது. அடிப்படையில் இது காலனித்துவ ஆதிக்கத்துக்கெதிரான கலாசார தன்னுறுதிப்பாடாகும். இக் கலாசார விழிப்புணர்வு, மத்தியதர வர்க்கத்து இலட்சியங்களினதும் விழுமியங்களினதும் அணைசுவராகவும் அவ்வகுப்புக்குத் தேவையான தலைமைத்துவத்துக்கு உரிய படிமத்தைக் கொடுப்பதாகவும் அமைந்திருந்தது. மேலும் தெளிவாகக் கூறுவதானால் இக்கலாசார நடவடிக்கைகள் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கியிருந்தன. இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது பழைய சமூகத்தில் நிலைப்பேறுற்ற அமைப்பின் பகுதியாகவிருந்த தமிழ் பண்பாட்டின் சில அம்சங்களையே மத்தியதரவர்க்கம் புனரமைத்தது என்பதை உணரமுடியும். நடைமுறைத் தேவைகளுக்கு ஒவ்வாதபோதும் (சேர்.பொன்னம்பலம் இராமநாதனும் அவருடைய மருமகனும் அரசியல் வாரிசுமாகிய எஸ்.நடேசனும் செந்தமிழிற் பேசும் பாணியைக் கையாண்டபோதும்) மொழியைப் பொறுத்தவரை செந்தமிழே அதிக அக்கறைக்கு உட்பட்டது. செந்தமிழே சங்கங்கள் தொடங்குவதற்கும் மாநாடுகள் கூட்டுவதற்கும் அடிப்படையாகவும் அமைந்தது. பரதநாட்டியம், கர்நாடகசங்கீதம் ஆகியவை ஒரு பண்பட்ட தமிழ்ப் பெண்ணுக்குரிய கலைத்தேவைகளாயிருந்தன. பரதநாட்டியமும் சங்கீதமும் தமிழரின் தனிப்பெரும் கலையாக்கங்களாகக் கருதப்பட்டன. இவை விரைவில் மத்தியதர வர்க்கத் தமிழரின் முழுக்கவனத்தையும் கவர்வனவாகவும் மாறின. குறிப்பாக 1920 களின் ஆரம்பத்தில் பரதஐயர், ருக்மணி அருண்டேல் போன்றோரின் முயற்சியால் பரதநாட்டியம் புனர்ஜன்மம் பெற்றது. ஜி.வேங்கடாசலம் என்பவரின் விமர்சனக் கட்டுரைகள் இந்நடனவடிவத்தின் மரபுகளுக்கு மேலும் வளம் சேர்த்தன. 18 ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் பரதநாட்டியத்தின் நிலை தாழ்வுற்றிருந்தது. "சதிர்' என்று அழைக்கப்பட்ட அதனைச் தாசிகளுக்கும் பொதுமகளிருமே ஆடினர். ஆனால் ஜி.வேங்கடாசலத்திலிருந்து பேராசிரியர் வி.ராகவன் வரை அறிஞர்களும் விமர்சகர்களும் பரதநாட்டியத்தின் புனர் எழுச்சிக்காக உழைத்தனர். ஆனந்தகுமாரசாமியின் எழுத்துக்களில் அது மேலும் வளர்ச்சியும் உயர்ச்சியும் பெற்றது. அவரது ஆரம்பகால நூல்களான The Mirror of Gesture (1917) Dance of Shiva (1918) ஆகியவை பரதநாட்டியம் பற்றி எழுதுவோருக்கு உந்துதலாக அமைந்தன. கர்நாடக இசையும் பரதநாட்டியத்துடன் சேர்ந்து தெய்வீகக் கலை என்ற அந்தஸ்தைப் பெற்றது. தமிழ்மொழி, பரதம், கர்நாடக இசை என்பவை ஏற்கனவே வரையறைகளைப் பெற்றிருந்ததால் இவற்றில் புதிய பரிசீலனைகளோ புத்தாக்கமோ இடம் பெறமுடியாமல் போனது. இக்கலையில் பயிற்சியும் ஞானமும் பெறவிரும்புவோர்க்கு முற்கூட்டியே சில தகுதிகளும் வசதிகளும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. உயர் வர்க்கத்தாரே இவற்றைப் பெற்றிருத்தல் கூடுமெனவும் கருதப்பட்டது. இதன் விளைவாக மக்களிடையே வழங்கிவந்த ஜனரஞ்சகமான கலைகள் ஆர்வலரும் ஆதரவாளரும் இன்மையால் அழியும் நிலை எய்தின. இதனால் ஐம்பதுகளின் பிற்பகுதி அறுபதுகளின் முற்பகுதி வரையிலும் நாட்டார்கலைகள் என விபரிக்கப்படும் ஜனரஞ்சககலைகள் பற்றி ஆராயவோ அவற்றை வளர்க்கவோ எத்தகைய இயக்கங்களும் இருக்கவில்லை, இவ்வாறு நாட்டார் இலக்கியத்திலும் கலைகளிலும் ஆர்வமற்ற நிலையானது கலை இலக்கியப் புரவலர்களின் வர்க்க அடிப்படையை ஐக்கியத்துக்குக்கிடமின்றி எடுத்துக்காட்டுகின்றது. ""புராதன தெய்வீகக்கலைகள்' எத்தகைய அரசியல் கலப்புக்கோ, சமூக சீர்திருத்தம் அல்லது சமூக மாற்றத்துடன் தொடர்புள்ள எத்தகைய கருத்துக்கோ உட்படாமல் பேணப்பட்டன. வேறுவகையிற் சொன்னால் புதிய புதிய கருத்துகளை உள்வாங்கியும் அவற்றுக்கு உருவம் கொடுத்தும் இதனால் காலத்துக்கு காலம் புத்துயிர் பெற்றும் வந்த கலை வடிவங்கள் உயர் மத்தியதர வர்க்கத்தினால் அந்தஸ்து சின்னங்களாகவும் இனத்தனித்துவத்தின் சிறப்புக்கூறுகளாகவும் முத்திரையிடப்பெற்றன எனலாம். <br /><br />1950 கள்வரை இதுவே தமிழரின் மொழி, பண்பாடு பற்றிய விழிப்புணர்வின் இயல்பாக இருந்தது, தமிழறிஞர்களும், இலக்கிய கர்த்தாக்களுமான ஏ.பெரியதம்பிப்பிள்ளை (18991978), சோமசுந்தரப் புலவர் (18781953), மு.நல்லதம்பிப்புலவர் (18961958), துரையப்பாபிள்ளை முதலியோர் எப்போதுமே சிங்களத்தையும் தமிழையும் ஒற்றுமைப்பட்ட தாய்நாட்டின் இரு கண்களாகவும் இரு சகோதரிகளாகவும் இரு தோழியராகவும் கண்டு போற்றினர். <br /><br />சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் விருத்திகள் இத்தகைய நிலைமையை மாற்றத்தொடங்கின. இந்திய வம்சாவழியினரான 900,000 தமிழர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதும், தொடர்ந்துவந்த பாராளுமன்றத் தேர்தல்களில் சிங்களவரிடைய பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக அதிகரித்ததும் தமிழர்கள் தம்மைத் தேசிய சிறுபான்மை இனமாக உணர வழிவகுத்தன. 1952 இல் கொழும்பில் தமிழர் பண்பாட்டுச் சங்கம் தொடங்கியது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. இச்சங்கத்தின் நோக்கம் தமிழர் பண்பாடு, வரலாறு முதலியவற்றை இலங்கையில் மாத்திரமன்றி, உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்புதலாகும். <br /><br />இக்காலத்துப் பண்பாட்டு விழிப்புணர்வின் சில அம்சங்கள் கவனத்தைக் கவர்வனவாகும். தென்னிந்தியா "சொந்த நாடாக'த் தொடர்ந்து கருதப்பட்டபோதும், அதன் முக்கியத்துவம் குறைந்து வந்தது. இலங்கைத் தமிழரின் பண்டைய சமகால வரலாற்றில் கவனம் செலுத்துதல் தவிர்க்கமுடியாத தேவையாகவிருந்தது. தென்னிந்தியத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையே பல பொதுமையான இணைப்புகள் இருந்தபோதும் இருநாட்டு மக்களும் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் வெவ்வேறு பிரச்சினைகளுக்குட்பட்டு வாழ்பவர்கள், இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள மொழிவழக்கு வேறுபாடுகளும் தெளிவானவை எனவே முதற்தரமாக இலங்கைத் தமிழர்கள் இந்நாட்டில் அதிக அக்கறை காட்டத்தொடங்கினர். இந்த அக்கறை தமிழர் கண்ணோட்டத்தில் அமைந்தது என்பதில் ஐயமில்லை. இலங்கைக்குத் தமிழர் எப்போது, எங்கிருந்து வந்தனர்? அவர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளா? தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான உறவு யாது? இந்நாட்டின் கலாசார பண்பாட்டுத் துறைக்கு தமிழரின் பங்களிப்பு யாது? இத்தகைய வினாக்கள் அடிக்கடி கேட்கப்பட்ட. இக்காலத்திற்கு முந்திய தஸாப்தங்களில் முதலியார் சி.இராசநாயகம் ( 18701940), ஞானப்பிரகாச சுவாமிகள், அ.முத்துத்தம்பி, கே.வேலுப்பிள்ளை(18101944) போன்றோரும் ஏனையோரும் தமிழர் வரலாற்றில் அக்கறை காட்டியிருந்தனர். ஆனால் அவர்கள் வரலாற்றைக் கல்விக் கண்ணோட்டத்திலேயே நோக்கினர். ஆனால் 50ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட வரலாறுகள் கல்விக் கண்ணோட்டத்திற்கு அப்பாலும் சென்றன. எழுதப்பட்டன வினாக்கள் உணர்வு பூர்வமான ஈடுபாட்டையும் காலத்தின் தேவையையும் உணர்த்தின. பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை(19031968) 1956 இல் சங்கிலி என்னும் நாடகத்தை வெளியிட்டார். இலங்கைத் தமிழர் வரலாறு என்ற தலைப்பில் அதற்கு ஒரு முன்னுரையும் எழுதினார். <br /><br />இதனையடுத்து 1958 இல் சி.எஸ்.நவரத்தினத்தின் Tamils and Ceylon என்ற நூல் வெளிவந்தது. 1959 ஆண்டு கே.நவரத்தினத்தின் Tamil Elements in ceylon Culture என்ற நூலும் வெளிவந்தது. இந்த ஆர்வம் வரலாற்றுத் துறையுடன் மட்டும் அடங்கிவிடவில்லை. ஆனந்த குமாரசுவாமியின் பக்தரும் அவரது நூல்களைத் தமிழில் பிரபலியப்படுத்தியவருமான கே. நவரத்தினம் (18981962) இலங்கையிற் கலைகளின் வளர்ச்சி என்ற தமிழ நூலை 1954 இல் வெளியிட்டார். இத்தகைய போக்கு தொடர்ந்து வளர்ந்தது. இக்காலத்து ஆராய்ச்சிகள் பல Tamil Culture (1952-1966) என்ற சஞ்சிகையில் வெளிவந்தன. இச்சஞ்சிகைக்கு இலங்கையரான சேவியர் தனிநாயகம் ஆசிரியராக இருந்தார். இது சென்னையில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. ஏ.ஜே.வில்சனுடைய Culture and Language Rights in the Multinational Socity (1953) தனிநாயகத்தின் Tamil Culture- It?s past it?s present and its future with special reference to Ceylon (1955) டபிள்யூ.பாலேந்திராவின் Trincomali Bronzes(1953),எஸ்.கே.குணசேகரத்தின் Early tamil cultural Influences in South East Asia (1957) முதலிய கட்டுரைகள் இச்சஞ்சிகையில் வெளியானவையே. இக்கால உணர்வுடுப் போக்கிற்கு ஏற்றவகையில் எச்.டபிள்யூ. தம்பையா The Laws and Customs of ceylon tamils என்ற நூலையும் 1954 இல் வெளியிட்டார். இவ்வகையில் சமீபகாலப் பங்களிப்பு என எம்.டி.ராகவனின் Tamil culture in ceylon என்ற நூலைக் கூறலாம். பொதுவாக கூறுவதானால் தமிழர் பண்பாடு பற்றிய கருத்தோட்டம் பரந்த விளக்கத்தையும் உட்பொருளையும் பெற்றது. சி.சிவரத்தினத்தின் The tamils in Early ceylon (1964) என்ற நூல் இதற்கு உதாரணமாகும். இது மாத்திரமன்றித் தமிழ் பகுதிகளின் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் புனரமைக்கவும் உலகத் தமிழரிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்றன. இக்காலப்பகுதியில் இருந்தே தமிழர் பண்பாட்டு இயக்கம் அரசியல் ரீதியானதாகவும் தனது வர்க்க குணாம்சத்தையும் தத்துவசார்பையும் வெளிக்காட்டுவதாகவும் மாறியது.angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-2385053463520724472008-12-13T01:06:00.000-08:002008-12-13T01:21:47.934-08:00Prof.K.Kailasapathy -75[12 - December - 2008]<br />-தெ. ஞா. மீநிலங்கோ-<br />ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் கைலாசபதியின் தடம் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது. ஈழத்தில் தேசிய இலக்கியம் பற்றியும் அதன் சேவை பற்றியும் பேராசிரியர் கைலாசபதி நிறையவே எழுதியுள்ளார். ஈழத் தமிழ் இலக்கியத்துக்குரிய தனியான தன்மையை எடுத்துக் காட்டியதோடு பல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் ஊக்குவித்து வளர்ப்பதற்கு கைலாசபதியின் பணி முக்கியமானது.<br />அதிலும் முக்கியமான அம்சம் ஏதெனில் ஈழத்து ஆக்க இலக்கியம் பற்றித் தமிழகத்தின் இலக்கியவாதிகள் சிலர் வெளியிட்ட தாழ்வானதும் தவறானதுமான எண்ணத்தை மறுதலித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்ததுதான். இது கைலாசபதி ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த அரும்பணி.<br />இவை இப்படி இருக்க, கைலாசபதியின் அடையாளத்தைச் சிதைக்கிற வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இல்லை. இவை வேறுபட்ட நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. கைலாசபதியின் அரசியல் சார்பையும் ஆக்கங்களையும் மறைக்கிற முயற்சிகள் இதில் பெரும்பாலானவை.<br />மற்றவை கைலாசபதி இப்போது உயிரோடு இருந்தால் தமிழ்த் தேசியவாதத்துக்குச் சார்பாக மாறி இருப்பார் என்பது. கைலாசபதியை யார் ஏன் போற்றுகிறார்கள் என்பதோ யார் ஏன் தூற்றுகிறார்கள் என்பதோ நமக்கு முக்கியமானதல்ல. கைலாசபதி ஆற்றிய பணிகளை எவ்வாறு வளர்த்து முன்னெடுப்பது என்பதே நமது அக்கறையாக இருக்க வேண்டும். இதைச் செயற்படுத்தும் முகமாகவே தேசிய கலை இலக்கியப் பேரவை கைலாசபதியின் பவள விழாவை இந்த ஆண்டு நடத்துகிறது.<br />""உலகை விரிவுபடுத்திக் கொண்டு போகிறோம். அப்போதெல்லாம் வெவ்வேறு அளவிலும், உருவிலும், சமூக, பொருளாதாரச் சக்திகளை இனங்கண்டு கொள்கிறோம். ஆனால், அந்தச் சக்திகளை மட்டும் கண்டு காட்டுவதல்ல இலக்கியம். அவற்றின் மத்தியில் மனிதனைக் காண்பதே இலக்கியம்.<br />தேசிய சக்திகளை மட்டும் கண்டு காட்டுவது நிகழ்கால வரலாறாகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் ஒரு குறிப்பிட்ட சரித்திர கால கட்டத்தில் வாழும் மனிதனைப் பூரணமாகவோ, குறையாகவோ காட்டுவதில்தான் இலக்கியத்தின் வெற்றி தங்கி இருக்கின்றது.<br />அவ்வாறு மனிதனைக் காணும் போதுதான் மனிதன் தேசிய வரம்பிற்குள்ளிருந்து தேசியக் கட்டுப்பாடுகளைக் கடக்கிறான். மனிதன் உலகப் பொதுவானவனாக இருப்பதால் அவன் வாழ்க்கை இலக்கியமாகப் படைக்கப்படும் போது தேசிய வரம்புகளைக் கடந்துவிடுகிறது.<br />வெறுமனே ஒரு நாட்டைப் பிரதிபலிப்பது தேசிய இலக்கியமாகாது. தேசிய இலக்கியம் என்று நாம் கூறும்போது இலக்கியம் படைப்பவர்களின் இலட்சியம், நோக்கம் முதலியவற்றையும் சேர்த்தே எடைபோடுகிறோம். சுருங்கக் கூறின் தேசிய இலக்கியமென்பது ஒருவிதப் போராட்ட இலக்கியமாகும்' என்று தேசிய இலக்கியம் பற்றிச் சொல்கிறார் பேராசிரியர் கைலாசபதி.<br />கைலாசபதி இலங்கையின் தேசிய இலக்கியம் என்ற கண்ணோட்டத்திலேயே இயங்கினார். அவரது கண்ணோட்டத்தில் இந்தியாவுடனான பகைமை உணர்வு இருக்கவில்லை. அதேநேரம், ஈழத்தில் தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறையாக இருந்தார். இரு நாடுகளுக்குமிடையில் ஒரு சமத்துவமான முறையில் இலக்கியப் பரிமாறல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். இது இன்றைய நிலையில் பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது.<br />ஈழத்துத் தமிழ்த் தேசிய இலக்கியம் என்னும்போது இந்தியாவோடு இருக்கின்ற சில பொதுவான பண்புகளைத் தூக்கி எறிய இயலாத அதேவேளை, ஈழத்தின் தனித்துவமான பண்புகளைக் கவனத்தில் எடுக்காமிலிருக்கவும் இயலாது. இலங்கையில் மற்ற சமூகங்களுடன் சேர்ந்து வாழ்கின்றோம் என்பதையும் புறக்கணிக்க முடியாது.<br />தமிழ் இனம் என்பதை தமிழ்த் தேசிய இனம் என அறிவித்து தமிழ்த் தேசிய இலக்கியம் என்று கொள்ளும் போது இதே பாதை இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கும், மலையகத் தமிழ் இலக்கியத்திற்கும் பொருந்தும். இங்கே ஒவ்வொன்றும் மற்றதுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்.<br />இந்த விடயத்தில் தேசியவாதம் தமிழ்த் தேசியத்தை மட்டும் முதன்மைப்படுத்தி முஸ்லிம் தமிழ் இலக்கியத்தையும் மலையகத் தமிழ் இலக்கியத்தையும் பகைமையாகப் பார்க்கிற தன்மை இருக்கின்றது. இவ்விடத்தில் தான் தேசியமும் தேசியவாதமும் வேறுபடுகின்றன.<br />தேசிய இலக்கியம் என்பது ஒரு தேசியவாத இலக்கியம் அல்ல. தேசிய இலக்கியம் என்பது ஒரு வகையில் ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்தக் கூடிய இலக்கியம் என்றே கொள்ள முடியும்.<br />இலங்கையைப் பொறுத்தவரையில் தேசிய இலக்கியம் எனப் பேசப்பட்டதெல்லாம் இலங்கையை ஒரு நாடாக ஏற்றுக்கொண்டு அதில் தமிழ்த் தேசிய இனத்தின் நிலைப்பாடு குறித்து தமிழில் எழுதப்பட்டவையே.<br />தேசியம் என்பதை பரந்த நோக்கிலேயே பார்க்க வேண்டிய தேவை உள்ளது. ஒரு இலக்கியத்தைத் தேசிய இனத்துக்குள்ளோ அல்லது ஒரு தேசத்துக்குள்ளோ மட்டும் இறுக்கமாக மட்டுப்படுத்த இயலாது.<br />தேசியம் பற்றியும் தேசிய இலக்கியம் பற்றியும் சொல்லும் போது கைலாசபதி பின்வருமாறு சொல்கிறார்; ""அரசியல் அரங்கில் ""தேசியம்' என்னும் சொல் குறித்த விதேசிய எதிர்ப்பு உணர்ச்சி, சுதேசிய நாட்டம் என்பனவற்றோடு சுதேசிய நாட்டத்தின் தன்மையையும் தகைமையையும் மண் வாசனை என்னும் தொடர் புலப்படுத்தியது. ஆனால், அந்தளவுடன் விடயம் முடிந்துவிடவில்லை. விதேசியத்தின் எதிர் நிலையான சுதேசியம் எத்தகையதாயிருத்தல் வேண்டும் என்பதிலும் தேசிய இலக்கியவாதிகளுக்கும் ஆழ்ந்த அக்கறை இருந்தது.<br />ஈழத்தவர் என்பதற்காக மட்டும் எழுத்தாளர்களைப் பாராட்டுதல் கூடாது என்னும் கருத்தும் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் முக்கியமான உட்கிடையாயிருந்தது. சுருங்கச் சொல்வதாயின் விதேசியச் செல்வாக்குகளையம் ஊடுருவல்களையும் வெளிப்படையாக எதிர்த்ததைப் போலவே, தமது மத்தியில் இச் செல்வாக்குகளுக்கும் ஊடுருவல்களுக்கும் வாயில்களாய் இருந்தவர்களையும் அவர்களது கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் தேசிய இலக்கியவாதிகள் எதிர்த்துப் போராடினர். இதனால் தொடக்கத்திலிருந்தே தேசிய இலக்கியம் என்பது போர்க்குணமிக்க இயக்கசக்தியாயும் விளங்கியது. போர்க்குணம் அதன் சிறப்பியல்புகளில் ஒன்றாய் அமைந்துவிட்டது'.<br />கைலாசபதி இன்று உயிருடன் இருந்தால் தமிழ்த் தேசியவாதம் பற்றி அவரது நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பதற்கான விடையை அவர் எந்தவிதமான அரசியல் சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டார் என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டியுள்ளது. கைலாசபதி மாக்ஸிய லெனினிய சிந்தனையை ஏற்றவர். பாராளுமன்றப் பாதையை நிராகரித்தவர். கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது தடுமாற்றமின்றித் தன்னை மாக்ஸிய லெனினியவாதிகளுடன் அடையாளப்படுத்தியவர். திரிபுவாதிகளுடன் நின்றவர்கள் அனுபவித்த, அனுபவித்திருக்கக் கூடிய சலுகைகளையும் வாய்ப்பு வசதிகளையும் அவர் அறியாதவரல்ல. அவரது தெரிவு அவரது அரசியல் பார்வையால் முடிவு செய்யப்பட்டது.<br />தமிழ்த் தேசியம் சிங்கள மக்களை எதிரிகளாக் கண்டு காட்டிய போதும் அதற்கு மாறாகச் சிங்கள மக்களை நண்பர்களாக மதித்தவர் கைலாசபதி. சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியவர். சினிமா நெறியாளர் தர்மசேன பத்திராஜவின் நெறியாள்கையில் "பொன்மணி' என்ற படம் எடுக்கப்பட்ட போது அதற்கு ஒத்துழைப்பு நல்கியவர்.<br />சிங்கள எழுத்தாளர்களுடன் இணைந்து சமூக விஞ்ஞானிகள் சங்கம் என்ற அமைப்பினூடாக "இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பித்தவர். கைலாசபதியின் சாதனைகளை விடவும் அவர் வகித்த பதவிகளை விடவும் முக்கியமானவை அவரது உலக நோக்கும் சமுதாயச் சார்பான தடம் புரளாத அவரது சிந்தனையுமாகும்.<br />தமிழ்த் தேசியத்தின் திசைமார்க்கத்தைக் கணிப்பதில் சர்வதேசத் தொழிலாளி வர்க்க சமூகத்தின் அங்கமாகவே தமிழ்ச் சமூகத்தைப் பார்த்தார் கைலாசபதி. குறுந் தமிழ்த் தேசியத்தை வெறுத்தொதுக்கி ஏகாதிபத்திய எதிர்ப்புடைய முற்போக்குத் தேசியத்தை முன்மொழிந்தார். எனவே தான் பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தின் போக்கையும் நோக்கையும் புறந்தள்ளி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை "தமிழர் வியாபாரக் கூட்டணி' என்று விமர்சித்தார். தமிழர்கள் பார்க்க வேண்டிய சர்வதேசம் என்பது அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, பிரித்தானியாவோ அல்ல. மாறாக மூன்றாம் உலகமே என்று திசைகாட்டினார்.<br />கைலாசபதி எழுதிய காலப்பகுதியில் எமக்குத் தெரிந்த அயல் இலக்கியமாக இருந்தது ஐரோப்பிய இலக்கியங்களே. ரஷ்யப் புரட்சியின் விளைவாக ஓரளவு ரஷ்ய இலக்கியங்களை தேடிப்படிக்கும் ஆர்வம் இருந்ததேயொழிய அநேகமாக அயல்நாட்டு இலக்கியங்களாக அறியப்பட்டது ஐரோப்பிய ஆங்கில இலக்கியங்களே. உலக இலக்கியங்கள் பற்றிப் பேசும்போது ஆங்கிலத்தை விட்டால் எமக்கு வேறு வாயில் இருக்கவில்லை. இன்றும் அந்த நிலைதொடர்கின்ற போதும் ஐரோப்பாவிற்கு வெளியில் ஒரு உலகம் இருப்பது பற்றிக் கொஞ்சம் கூடுதலாகவே எமக்குத் தெரியும்.<br />ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் நாம் தேடவேண்டிய ஒற்றுமைகளும் நாம் கற்க வேண்டிய பாடங்களும் ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்ட சமூகங்களிலிருந்துதான் வருகின்றன. பண்பாட்டு அடிப்படையில் பார்த்தால் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகின்ற நாடுகளான பாரசீகர், யௌவனர் என்று உலகம் முழுவதும் உறவுகள் நீண்டு கொண்டு போவதைக் காணலாம். ஆனால், கொலனித்துவத்திற்குப் பிறகு அந்த உறவுகளின் அக்கறையே விடுபட்டுப் போய்விட்டது. இன்றைய சூழலில் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய வேண்டிய தேவை இருக்கின்றது.<br />தேசிய இலக்கியத்தில் சர்வதேச இலக்கியத்தின் தேவை எங்கு வருகின்றது என்று நோக்குமிடத்து தேசிய இலக்கியத்தின் சர்வதேசத் தன்மை பற்றி கைலாசபதி சொல்கிறார்;<br />""கொங்கோ தேசத்திலே பிறந்து வளர்ந்து ஓர் உண்மைக் கொங்கோலியனாக வாழ முயன்ற லுமும்பா உலகப் பிரஜையாக மாறிவிட்டான்.<br />ஆங்கில சாம்ராஜ்யத்தை இழந்தாலும் ஷேக்ஸ்பியரை இழக்க மாட்டோமென்று ஆங்கிலேயர் போற்றிப் பாராட்டும் கவிஞன் உலக மகாகவியாக எண்ணப்படுகிறான்.<br />தேசிய இலக்கியம் என்னும் பொருள் பற்றி சிந்திக்கும் போது எனக்கு இந்த உதாரணங்கள் நினைவிற்கு வந்தன'.<br />தேசியமும் சர்வதேசியமும் முரண்படுகின்ற இடம் எது என்பதும் முரண்பாட்டை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதுவும் மிகவும் முக்கியமானது.<br />எந்தவொரு சமூகமும் தனக்குள்ளே முடங்கி இருந்ததாகச் சொல்ல இயலாது. எந்தவொரு மொழியும் எல்லாவற்றையும் தனது சமூகத்தில் இருந்துதான் பெறவேண்டும் என்கிறபோது மொழிக்குத் தேவையான அனைத்தையும் தனது சமூகத்தில் இருந்துதான் பெறவேண்டும் என்று நினைப்பதோ மற்ற சமூகங்களிலிருந்து பெற மறுப்பதோ மொழியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது. இது மொழிக்கு மட்டுமன்றி மொழியுடன் தொடர்புடைய அனைத்திற்கும் பொருந்தும்.<br />இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்து மதத்தால் எல்லோரையும் ஒன்றிணைக்க முடியவில்லை. சாதி என்ற அடிப்படையில் ஒவ்வொரு மக்களைப் பிரிவுபடுத்தி வைத்திருப்பதற்கு பிரதேச அடிப்படையில் இன்னொரு பிரிவாகவும் மொழியின் அடிப்படையிலான பிளவு என்று எல்லோரும் பிரிக்கப்பட்டே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.<br />இதனடிப்படையிலேயே எத்தனையோ விடயங்கள் வெளியில் இருந்து தமிழுக்கு வந்திருக்கின்றன. புதிய விடயங்களை உள்வாங்கும் போது மொழியும், இலக்கியமும் செழுமையடையும் என்னும்போது தாம் அவற்றை உள்வாங்குவதில் தயங்கவேண்டிய தேவை இல்லை.<br />உலகம் முழுவதும் நீதிக்கான போராட்டங்கள் நடக்கின்றன என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். இவ்வகையான போராட்டப் பரிமாறல்களுக்கு உரிய உறவுப்பாலங்கள் சினேக பூர்வமான உறவுகளையே பேணுவதன் மூலம் கட்டியெழுப்பப்பட முடியும். இன்று பலஸ்தீனத்தைப் பற்றியோ கியூபாவைப் பற்றியோ பேசும் போது அவை குறித்த புரிதல் 1960 களில் இருந்த புரிதலை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் நாங்களும் அதே துன்பங்களை அனுபவிக்கிறோம் என்பதனாலேயே.<br />இவ்விடத்தில் ஐரோப்பாவிலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ வரும் விடயங்களை நிராகரிக்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல. எதைப் பெற்றுக்கொள்வது எதை நிராகரிப்பது என்ற தெரிவு பற்றிய தெளிவு எம்மிடையே இருக்க வேண்டும் என்பதையே நினைவூட்ட விரும்புகிறேன்.<br />ஈழத்துத் தேசிய இலக்கியம் இன்னும் மக்கள் இலக்கியமாக வெகுஜன மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? இதற்காகத் தொடர வேண்டியவை எவை? இவை இன்று எம்முன்னுள்ள கேள்விகள். கைலாசபதி வலியுறுத்திய பண்பாட்டுத் தளத்தில் மக்கள் இலக்கியத்தை முன்னெடுப்பது பற்றி நாம் சிந்தித்தே ஆக வேண்டும்.<br /><br /><br /><br /><br />பண்பாட்டு அடிப்படையில் சமய, அடிப்படையில், மொழி அடிப்படையில் எனப் பல்வேறு அடிப்படைகளில் உறவுகள் பேணப்படுகின்றன. இங்கே கவனிக்கப்பட வேண்டியதொன்று என்னவெனில், சமய அடிப்படையிலான உறவுகள், சமய நிறுவனங்களின் ஊடாக உறவுகளாக மாறும் போது அது வேறொரு தளத்திற்குப் போகின்றது. மக்கள் நலன் சார்ந்த தேவைகளுக்கான உறவுகளாக இல்லாமல் ஆதிக்கப் போக்கும் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்குமான உறவாக அது மாறி விடுகின்றது. ""சர்வதேச இஸ்லாம்' என்ற அடிப்படையில் இயங்க ஆரம்பிக்கும் போது பல சினேக சமுதாயங்களைப் பகைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை இன்றைய நிலையில் தெளிவாகக் காணலாம். அதேபோல, ""இந்துத்துவா' என்ற அடிப்படையில் செயற்படும் போதும் சினேக சமுதாயங்களை பகைமைக் கண்ணோட்டங்களோடு பார்கின்ற ஒரு தன்மை வலுவடைகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் அடிப்படையில் மக்களைப் பலப்படுத்துகின்ற விடயங்கள் அல்ல. இவ்வாறானவற்றைக் கொண்டு வருபவர்களின் நோக்கம் மிகவும் வித்தியாசமானது. அவர்களின் தேவையும் மிகவும் வேறுபட்டது. அது மக்கள் நலன் சார்ந்தல்ல என்று மட்டும் உறுதியாகக் கொள்ள முடியும். இவர்கள் தங்கள் சமூகத்துக்குள் செலுத்தும் ஆதிக்கத்தை சமூகத்திற்கு வெளியேயும் செலுத்தும் முயற்சியே. இது இவர்கள் தங்கள் சமூகத்துக்குள்ளேயே கீழ்நிலையில் உள்ளோரை மேல் நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒருபோதும் முயற்சிப்பதில்லை.<br />நாங்கள் தூய்மைவாதத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதால் எவ்வித பலனும் இல்லை. வெளியில் இருந்து எத்தனையோ விடயங்களை நாம் உள்வாங்குகிறோம். ஒவ்வொரு சமூகங்களுக்குமிடையில் வெவ்வேறு மட்டங்களில் உறவு நீடிக்கிறது. இவ்வாறான உறவுகளை நாம் பகை முரண்பாடுகளைக் காண வேண்டிய தேவை இல்லை.<br />இந்த நிலையில் வெளியிலிருந்து எவ்வகையான உறவுகளை நாம் பேணவேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. ""பண்பாடு' , ""சமூக நீதி' என்ற அடிப்படையில் உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் பேணவும் வேண்டும்.<br />பிறநாட்டு இலக்கியங்களைப் பற்றிப் படிக்க வேண்டிய தேவையும் அறிந்திருக்க வேண்டிய தேவையும் இதனால் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆபிரிக்க இலக்கியங்களாட்டும் இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களாகட்டும் பழங்குடி இலக்கியங்களாகட்டும் இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் கற்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன.<br />பிறமொழிப் படைப்புகள் தமிழில் வருவதை எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறமொழியைச் சேர்ந்த சிறுகதையையோ நாவலையோ ஏன் கவிதையையோ கூட படைக்கப்பட்ட மொழியில் சொல்லப்பட்ட பெயர்களை எமது சூழலுக்குரிய பெயர்களாக மாற்றிவிட்டு பிரசுரிக்கும் போது அப்படைப்பு வேற்று மொழிப்படைப்பு என்பதை இனங்காணவே இயலாமல் போகிறது.<br />இது உண்மையில் உலகெங்கும் மக்கள் ஒத்ததன்மையுடைய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. பிறமொழி இலக்கியங்களை உள்வாங்கும் போது விளைகிற இன்னுமொரு பயன், ஒரு சம்பவத்தை ஒவ்வொருவரும் பார்க்கின்ற பார்வையும் வேறுபடும். ஒரு சம்பவம் எங்களுடைய பார்வைக்கு அப்பால் இன்னொரு பார்வையாக இலக்கியங்களோடு பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது அந்தப் பார்வை எமது பார்வையிலிருந்து வேறுபட்டதாகவே இருக்கும். இவை உண்மையில் எமது பார்வைக்கோணங்கள் விரிவடைய உதவுகிறது.<br />சர்வதேச இலக்கியத்தின் தேவை பற்றிச் சொல்லும் போது பேராசிரியர் கைலாசபதி சொல்கிறார்;<br />""இன்னொரு விதத்திலும் இலக்கிய சர்வதேசியத்துவம் எமக்குத் தேவையாயுள்ளது. எள்ளிலிருந்து எண்ணெயை பிழிந்தெடுப்பதுபோல, இலக்கியங்களிலிருந்தே அவை பற்றிய இலக்கணம் வரையறை செய்யப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக வழங்கிவரும் மரபுவழிப் பாடல்களுக்கும் ஏனைய இலக்கிய வடிவங்களுக்கும் விதிகளும் விளக்கங்களும் நிறைய இருக்கின்றன. கல்வி கேள்விகளில் வல்லவராயிருந்தவர்கள் தம்மைப் போன்றவர்களுக்காகப் படைத்த இலக்கியங்கள் அவை.<br />ஆனால், புரட்சிகர இலக்கியம் எழுச்சி பெறும் மக்களின் இதயத்துடிப்பினை எழுத்தில் வடித்து வழிகாட்ட முற்படுவன. ஆகையால் அவற்றுக்குப் போதிய முன்மாதிரிகளும் உதாரண விளக்கங்களும் ஒரு குறிப்பிட்ட மொழியிலேயே இருத்தல் சாத்தியமல்ல. உலகின் பல மொழிகளிலும் படைக்கப்படும் மக்கள் கலை இலக்கியமெல்லாம், முற்போக்கு ஆக்கங்களெல்லாம் பொதுச் சொத்துகள். அவை பொதுவான களஞ்சியத்தில் இருப்பவை. அவை ஒன்றுக்கொன்று முன்மாதிரியாயும் வழிகாட்டியாயும் அமைந்து பரஸ்பரம் ஒன்றையொன்று தழுவிச்செல்வன. அவற்றிலிருந்துதான் முற்போக்கு இலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்க முடியும்'.<br />கைலாசபதியின் விமர்சனக் கோட்பாடுகளும் நடைமுறையும் பற்றிப் பார்க்கும் போது அவர் கோட்பாடுகளை நிறுவிக் கொண்டு பின்னர் தமது நடைமுறையில் ஈடுபட்ட ஓருவரல்ல. அவர் தனது விமர்சன நடைமுறையின் ஊடாகவே தனது கோட்பாடுகளை நிறுவிக் கொண்டவர். இலக்கியக் கொள்கைகள் என்று வரும் போது "சமுதாயக்கொள்கையின்' முக்கியத்துவத்தையும் தேவைப்பாட்டையும் வலியுறுத்தியவர்.<br />திறனாய்வென்பது இலக்கியப் பயில்வின் இன்றியமையாத அம்சம் என்பதை வலியுறுத்திய கைலாசபதி தனது ""இலக்கியமும் திறனாய்வும்' என்னும் நூலில் ஒரு படைப்பின் உண்மையான இயல்புகளை இனங்கண்டு வாசகனுக்கு அறிமுகம் செய்வது திறனாய்வாளனின் இன்றியமையாத கடமை என்று சொல்கிறார். தமிழ் இலக்கிய விமர்சனம் விறைப்பான மரபு சார்ந்த பார்வையின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. இலக்கியத்தின் சமுதாயச் சார்பான பண்பையும் சமுதாய மாற்றத்தில் அதன் பணியையும் உணர்ந்த முற்போக்கு இலக்கியம் கைலாசபதியின் முந்தியதாக இருந்த போதும், விஞ்ஞானரீதியான விமர்சன முறையையும் இலக்கியத்தின் சமூகச் சார்பான தன்மையையும் தெளிவுபடுத்தித் தமிழில் பிரயோகித்த வரையில் கைலாசபதியின் பங்களிப்பு முன்னோடியானது.<br />கைலாசபதி தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கிய ஆலோகராக இருந்தார். அதை விடவும் செம்பதாகை போன்ற இடது கம்யூனிஸ்ட் கட்சி ஏடுகளில் ஒழுங்காக அரசியல் கட்டுரைகளும் எழுதி வந்தார். அக்கட்டுரைகளில் சில ஏற்கனவே நூல் வடிவம் பெற்றுள்ளன.<br />கைலாசபதி தன்னை ஒரு அரசியல்வாதியாகவோ எந்த ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராகவோ காட்டிக் கொள்ளவில்லை.<br />ஆனால், அவரது எழுத்துகளும் பல்துறை சார் செயற்பாடுகளும் அவரது மார்க்ஸிய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவே அமைந்தது. அவர் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்திலேயே நின்றார். அவர்களது போராட்டங்களை ஆதரித்தார். சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவின் போது அவர் மார்க்ஸிய லெனினிச வாதிகளின் பக்கத்திலேயே நின்றார்.<br />பரந்த நோக்கில் அவரது சமூகப் பார்வையும், தேசிய, சர்வதேசிய அரசியல் விவகாரங்கள் பற்றிய பார்வையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான மார்க்ஸியப் பார்வையே. தமிழ்த் தேசியம் தொடர்பில் மிகத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தார் என்பதை அவரது கட்டுரைகளின் வழி அறிய முடியும்.<br />எந்தவொரு கலை இலக்கியக் கோட்பாடும் அதனை முன்னெடுக்கும் கலை இலக்கிய அமைப்பும் அதன் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார வரலாற்றுச் சூழலை உள்வாங்கியே உருவாகிறது. படைப்பாளிகளும் தத்தமது நிலைக்களங்களுக்கு ஏற்பவே செயற்படுவர். வர்க்க சமூகத்தில் இலக்கிய நோக்கும் போக்கும் ஏதோ ஒரு வர்க்க அடையாளத்துடனேயே இருக்கும். இது கைலாசபதிக்கும் அவர் சார்ந்திருந்த தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் பொருந்தும்.<br />நமது நாட்டின் சமூக அமைப்பும் அது எதிர்நோக்கி நிற்கும் அடிப்படை முரண்பாடும் யாவை? மக்கள் என்போர் யார்? மக்கள் இலக்கியத்தின் அடிப்படைகள் யாது? அவற்றை முன்னெடுக்கும் வழிவகைகள் எத்தகையன என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை கைலாசபதியின் எழுத்துகள் ஊடு அறிய முடியும். மக்கள் இலக்கியம் என்பது இறுதி ஆய்வில் மக்களின் அங்கீகாரத்தை விட மேலாக ஒன்றையும் வேண்டி நிற்பதில்லை. இதைத் தெளிவாக உரத்துச் சொன்னவர் கைலாசபதி. சொல்லக் கூடியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இன்றைய காலத்திலும், சகல தளங்களிலும் கைலாசபதியின் கருத்துகள் வலிமையுடையனவாய் இருக்கின்றன. இளைய தலைமுறைக்கு வழிகாட்டுகின்றன.angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-41707095027057570222008-08-31T23:36:00.000-07:002008-09-01T11:34:57.475-07:00கைலாசபதி நினைவுகள்-சித்திரலேகா மெளனகுரு<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLI7QhRAFN_ncY-YaaGQ0ISaLQTT5mYx3yAAes67pHaFazVE3ZqGtLzB5ZLvkX4enXgyhyQghK1iG58PzbZMFDxXqElsN0nGhNu4H5kyXtEPryo3exO-z_y8zbDPFhxZGxKnzI0wqvATE/s1600-h/scan0069.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLI7QhRAFN_ncY-YaaGQ0ISaLQTT5mYx3yAAes67pHaFazVE3ZqGtLzB5ZLvkX4enXgyhyQghK1iG58PzbZMFDxXqElsN0nGhNu4H5kyXtEPryo3exO-z_y8zbDPFhxZGxKnzI0wqvATE/s400/scan0069.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5241123154894180994" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB_wgSuM1ih_1qBhOGX5qOkWGITiUG3myLZPwERjqb8PEmPW_NUN0ek5pokbV331r64IgzpJ9iQ1Vl9JdSdPsUs1HI_eM63W7qbVsToV_ngOCtafWxJT_Q8V7fHAmzslELKkmPYCiD0wM/s1600-h/scan0070.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB_wgSuM1ih_1qBhOGX5qOkWGITiUG3myLZPwERjqb8PEmPW_NUN0ek5pokbV331r64IgzpJ9iQ1Vl9JdSdPsUs1HI_eM63W7qbVsToV_ngOCtafWxJT_Q8V7fHAmzslELKkmPYCiD0wM/s400/scan0070.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5241123153286264338" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5_fHh0MkN-ioHbQRGWDUVKp6EKAdh_erEwNJhFWdYBKXKt1RIL_-StciW7Y4tylZMqZ66THw63VeZVYpBqxUgVJophZREQcNbTTe3LThYI32FJEhfyNzRGR5dEyJd1DwgyEDCCKZFq5Q/s1600-h/sep12-ph07%5B1%5D.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5_fHh0MkN-ioHbQRGWDUVKp6EKAdh_erEwNJhFWdYBKXKt1RIL_-StciW7Y4tylZMqZ66THw63VeZVYpBqxUgVJophZREQcNbTTe3LThYI32FJEhfyNzRGR5dEyJd1DwgyEDCCKZFq5Q/s320/sep12-ph07%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240941436588576642" /></a><br />பேராசிரியர் கைலாசபதி நம் மத்தியில் வாழ்ந்து,மாறைந்த பெரும் அறிஞராவார்.பல்கலக்கழகத்துடன் மாத்திரம் அவர் பணி அடங்கிவிடவில்லை.angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-57557885811090622382008-08-08T13:59:00.000-07:002008-08-31T23:35:09.372-07:00பேராசிரியர் க.கைலாசபதி நினைவுகள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKzjmwF9trgpvLUD4yr1CvnkPccegyuhLh5_usvq2IhuWoJ2QNx6jj4PT2LD9EmNGB2A2hvRSEBj_kBlUwS8XZBd4kTmXsQInEBSVLKfcN9dr2dT_fpno19VHNBgQDrjTkjDTHOj8Knhc/s1600-h/kailas%5B1%5D.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKzjmwF9trgpvLUD4yr1CvnkPccegyuhLh5_usvq2IhuWoJ2QNx6jj4PT2LD9EmNGB2A2hvRSEBj_kBlUwS8XZBd4kTmXsQInEBSVLKfcN9dr2dT_fpno19VHNBgQDrjTkjDTHOj8Knhc/s200/kailas%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5232257433274323602" /></a>யாழ் பல்கலைக் கழகத்தைப் பற்றிய கைலாசின் எதிர்பார்ப்பும் கற்பனையும் வேறாக இருந்தது.அவர் மாக்சிய இடதுசாரி சிந்தனையில் வேரூன்றியவர்.தேசிய வாதங்களுக்கு எதிராக,தேசிய ஒருமைப்பாடு,சர்வதேசியம் பற்றி கனவு கண்டவர்.யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு பலமான அடித்தளத்தில் ஒரு தேசிய பல்கலைகழகமாக,தென் ஆசியாவின் மிகச்சிறந்த உயர் கல்வி நிலயங்களுள் ஒன்றாக வளர்த்தெடுக்க ஆசைப்பட்டவர். ..... <br />கைலாஸ் யழ்ப்பாண வளாகத்துக்கு தலைவராக நியமனம் பெற்றமை பற்றிச் சிலர் பலவிதமான அவநூறுகளை பரப்பியுள்ளனர்.பல சிரேஷ்ட பேராசிரியர்கள் இருக்கும் போது தகுதியற்ற இவர் பின் கதவால் இந்தப் பதவியை பெற்றார் என்று எஸ்.பொன்னுத்துரை போன்றவர்கள் வாய் ஓயாமல் பேசுகின்றனர்.தகுதி என்பது பட்டங்களையும் பதவிகளையும் வைத்துத் தீர்மானிக்கப்படக்கூடிய ஒன்றல்ல.ஒன்றுக்கும் உதவாத சிரேஷ்ட பேராசிரியர்கள்,கலாநிதிகள் பலரை நாம் அறிவோம்.ஆழ்ந்த புலமையும் ,பரந்த பார்வையும் (vision)செயலாற்றலும் அக்காலத்தில் அப்பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கக் கூடிய யாருக்கும் குறந்ததல்ல.தவிரவும் கைலாஸ் பதவிக்காக ஆலாய்ப் பறந்தவரும் அல்ல. <br />கைலாஸ் இறந்து 23 வருடங்கள் கடந்துவிட்டன.கைலாஸ் பற்றிய அவநூறுகளும்,வசைபாடல்களும்,எத்ர்மறையான விமர்சனங்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.வலதுசாரிகளும்,இனத்தேசியவாதிகளும்,கைலாசின் அங்கிகாரத்தை எதிர்பார்த்து ஏமாந்தவர்களும் கைலாசுக்கு எதிர் அணியில் ஒன்றிணைந்திருக்கின்றனர்.எனினும் இவர்களில் யாருமே இதுவரை ஒரு அறிவார்ந்த தளத்தில் கைலாசின் எழுத்துக்களை எதிர்கொண்டதில்லை.கையறு நிலையில் தனிப்பட்ட தாக்குதல்களிலேயே ஈடுபட்டுள்ளனர். <br />இவர்களுள் முன்னணியில் இருப்பவர் எஸ்.பொன்னுத்துரை.கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக அலுப்புச் சலிப்பின்றி கைலாசின் பிம்பத்திற்கு சாணி அடிப்பதையே இவர் தன் சத்திய இலக்கிய வேள்வியாக நடத்தி வருகிறார்.கைலாஸ் இருந்தவரை அவரை பிறாண்டிக்கொண்டே இருந்தார்.இன்ருவரை பிறாண்டுகிறார்.ஆனால் கைலாஸ் இருந்தவரை எஸ்.பொவின் இருத்தலை கண்டு கொள்ளவே இல்லை.கைலாசின் இலக்கியக் கோட்பாட்டை பொறுத்தவரை எச்.பொ பொருட்படுத்தத்தக்க எழ்த்தாளன் அல்ல.எஸ்.பொவின் பிறாண்டல் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.எஸ்.பொவின் மன உலகம் ஆரோக்கியமானதல்ல. அதனால் கைலாஸ் அவருடைய பிறாண்டலை முற்றாக புறக்கணித்தார். <br />பேராசிரியர் எம்.ஏ.நுகுமான்-கைலாசபதி:தளமும் வளமும்-2005 இலங்கைangelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-64142011849890010912008-08-04T23:19:00.000-07:002008-08-04T23:21:32.697-07:00Prof K.KailasapathyA paper presented at a Social Scientists Association Seminar in Colombo, Sri Lanka in 1979 <br /><br />Professor Kailasapathy's paper traces the growth of Tamil consciousness in Eelam from the time of British rule, through independence and upto 1979. It affords many insights into the continuing growth of Tamil Consciousness today, not only in Eelam but in the Tamil diaspora as well... "Both the reformers and the revivalists came from the Hindu upper castes, but while the former were not only English educated but also used that language for their livelihood and for acquiring social status, the latter were primarily traditional in their education and used their mother tongue for their livelihood and social communication.. .most of them wrote in English...In doing so they probably had a particular audience in mind, an audience to whom they wanted to prove the antiquity and greatness of their tradition...In contrast the revivalists were mainly highly erudite in their mother tongue and wrote in it..."<br /><br />The cultural and linguistic consciousness of the Tamil community in Sri Lanka has always been influenced by developments in India in general and South India in particular...<br />In describing the growth of cultural and linguistic consciousness of the Tamil community in Sri Lanka, one cannot treat it in isolation, especially from the political and economic factors that formed the bases for such a consciousness and the inevitable interplay of the two. I propose to limit the scope of this paper to the cultural and linguistic aspects. <br /><br />One preliminary observation ought to be made at the outset. The cultural and linguistic consciousness of the Tamil community in Sri Lanka has always been influenced by developments in India in general and South India in particular. This applies to politics as much as to culture; accordingly, the major events in India during the last hundred years or so have had their impact on the Tamil community: the rise of the neo-Hindu movements - Arya Samaj and the Ramakrishna Mission - the founding of the Indian National Congress (1885), the partition of Bengal (1905), the Swadeshi Movement (1906- 1915), the different regional movements that arose in South India which eventually crystallized in the emergence of the Dravida Munetra Kalagam , and the movement for the formation of linguistic states are some of the more significant events that have contributed to the cultural and linguistic consciousness of the Sri Lankan Tamils. <br /><br />Although there have been, and there continues to be, certain avowed socio-cultural differences between 'Sri Lankan Tamils - who have been living in this country for centuries-and the 'Tamils of Indian origin'- those who came here during the heyday of the plantations - both sections have shared the common characteristic of looking up to India for cultural and spiritual sustenance. <br /><br /><br />Language, religion, myth and history have doubtless contributed to the survival of this feature, which is deeply embedded in the consciousness of the average Tamil.<br />Along with these may be considered the individual influences of personalities like Swami Vivekananda (1863- 1902), Mahatma Gandhi (1869-1948), both of whom visited Sri Lanka and especially Jaffna, where they were accorded rousing receptions and Ananda K. Coomaraswamy (1877-1947), who also visited Jaffna on more than one occasion. <br /><br /><br />(Special mention must be made of Coomaraswamy's address at the Jaffna Hindu College in 1906, in which he referred with pride to his Tamil ancestry and having spoken highly of the Tamil language emphasized the need 'to preserve and protect the national ideals and Eastern traditions.')<br />The evolution of the cultural and linguistic consciousness among the Tamils should be seen in this general background. Having delineated the general scene, one has to see the phenomenon more closely. <br /><br /><br />Reformists and revivalists<br />It is generally accepted by most scholars on the subject that in many Asian countries political nationalism was preceded by religious awakenings that arose in response to Christian missionary activities. The point needs no elaboration. However, what should be pointed out is that this religious awakening was, at least on the surface, of a dual nature. <br /><br />In their response to the proselytizing activities of the Christian churches, the indigenous religions reacted in two different ways; one reaction appeared to concede the necessity for reform in the traditional religions and thereby obliquely accommodated some of the stances of the Christian church. This attitude was pronounced among the English educated middle classes who were exposed to westernisation. The other reaction was essentially revivalist in character and argued for upholding traditional beliefs and practices. <br /><br />In the case of Indian history it has become customary to cite the Brahmo Samaj and the Arya Samaj respectively for the reformist and revivalist trends. It is of course, arguable, and rightly so, that the two trends were never mutually exclusive and the differences were more apparent then real. Both the reformers and the revivalists came from the Hindu upper castes, but while the former were not only English educated but also used that language for their livelihood and for acquiring social status, the latter were primarily traditional in their education and used their mother tongue for their livelihood and social communication . <br /><br />From this one may postulate another hypothesis: the religious awakening and the activities connected with it took place at two levels or planes. The reformists were, because of their broader vision and greater exposure to non-traditional cultures, and higher social position in their society, prone to take a liberal and compromising position. Besides most of them wrote in English. <br /><br /><br />(One may illustrate this by the writings of Sir Mutu Coomaraswamy, Sir P. Ramanathan and Sir P. Arunachalam all of whom took a keen interest in Hinduism and Indian philosophy and wrote in English. They translated from Tamil into English. In doing so they probably had a particular audience in mind, an audience to whom they wanted to prove the antiquity and greatness of their tradition).<br />In contrast the revivalists were mainly highly erudite in their mother tongue and wrote in it. Their audience was the local intelligentsia engaged in the professions and the self employed who were of respectable stock and generally landowners. In other words, the religious awakening and fervour can be seen at the larger national level and the local level each with their adherents and their followers. If one might use the term 'elites' to describe these people, then a distinction can be drawn between the national and local elites. Bearing in mind the fact that such a distinction is never mutually exclusive we may adopt it for our analysis. <br /><br /><br />Religious revival and the pioneering efforts of Arumuga Navalar<br />The religious revival among the Hindus in Sri Lanka was largely due to the pioneering efforts of Arumuga Navalar (1822-1879). This is not the place to narrate in detail the crucial and seminal role played by him in kindling a consciousness among the Tamils in Sri Lanka and South India about their spiritual heritage. In many ways Navalar could be compared to Dayananda Saraswathi (1824-1883) who founded the Arya Samaj in North India. What Dayananda did for the Vedic religion in the North, Navalar accomplished for the Saiva-Agamic faith in South India and Sri Lanka. <br /><br />Hailed as the father of modern Tamil prose, originator of public speaking, the first non-Christian to write and publish Tamil text-books for primary and secondary schools, pioneer textual critic, an innovator in grammar, and founder of Saiva schools, Navalar bestrode like a collosus, the Hindu -Tamil world of his day. Utilising the profound knowledge he had acquired while helping Rev. Peter Percival with the Tamil translation of the Bible, Navalar counter attacked the Christian missionaries who were publishing tracts ridiculing the Hindu gods and scriptures. Navalar started publishing pungent pamphlets against the Christians and initiated a movement to win back those who had been converted to Christianity. (Here again one can see a parallel between Navalar and Dayananda Saraswathi whose concept of Shuddhi 'reclamation or reconversion' helped to fortify the cracks in Hinduism). <br /><br />As a writer of polemics Navalar had few equals. He was followed in this by almost all his disciples, among whom the notable ones were Siva Sangara Pandithar (1829-1891). Senthinatha Iyer (1848-1924), and N. Kathiravel Pillai (1874-1907). The activities of Navalar led to the founding of the Saiva Paripalana Sabhai (Society for the Preservation of Saivism) in 1888, and the Jaffna Hindu High School in 1890 which was later renamed Hindu College. An editorial in the Hindu Organ (July, 1899) makes the point clear. <br /><br /><br />"The idea of a college founded by the Hindus for the Hindus was conceived about thirty years ago by the late lamented Sri La Sri Arumuga Navalar Avergal, whose distinguished labours in the field of Saiva religion and literature mark an epoch in the history of Jaffna. Owing to want of cooperation which, we are sorry to say, is a blot on our national character, the proposal made by Navalar fell through, though he made a beginning and started a high-school at Vannarponnai which owing to the opposition of the Wesleyan missionaries, the government refused to register for grant. The idea conceived by Navalar was given practical shape to by the Sabhai which in the year 1890, founded the Jaffna Hindu College."<br /><br />Paramount role played by Navalar was not confined to the religious and educational fields<br />The paramount role played by Navalar was not confined to the religious and educational fields. No doubt his contributions to the two were unique and far reaching. But Navalar had a social outlook that went beyond that of any other Tamil religious reformer of his time. He had unhesitatingly thrown his weight behind the campaign against the Government Agent of Jaffna, W.C. Twynam whose measures were extremely unpopular. He organised relief measures providing meals for the needy during the severe famine in 1876; he was the force behind the founding of the Jaffna and Batticaloa Commercial and Agricultural Company Limited, whose prime purpose was to develop agriculture in the Trincomalee District. He pioneered the temperance movement; just before his death he campaigned for the selection of P. Ramanathan as the Tamil representative to the Ceylon Legislature in 1879 to fill the vacancy created by the death of Sir M Coomaraswamy in May 1879. <br /><br />Convening a meeting of the prominent personalities in Jaffna, among whom were merchants, public notaries, engineers, vidans, udayars and a sub-magistrate, Navalar drew up a memorial to be sent to the Governor (Sir James R. Longdon), requesting that Mr. P Ramanathan be appointed 'a member of the legislative Council to represent the interests of the community'. Thus Navalar created the climate for Ramanathan to enter active politics and influence public life. Navlar was able to combine his interests in the religious field with practical actions that were vital to the community and mingle both socio-politics and religion. This was a major contribution to the subsequent cultural awakening among the Tamils. <br /><br /><br />Jaffna scholars in Tamil Nadu<br />But there was another aspect to this. Navalar, it may be remembered, spent several years in Madras, in lecturing and publishing. But many others C.W. Thamotheram Pillai (1932-1901), V. Kannagasabhai Pillai (1855-1906), T. Chellappah Pillai, T A. Rajaratnam Pillai, T. Kanagasundaram Pillai (1863 1922), T. Saravanamulllu Pillai, Sabapathy Navalar (1843-1903) and N. Kathiravel Pillai (1874-1907) virtually spent their lives in South India holding positions in government service and publishing their works with a sense of dedication rarely seen in later times. <br /><br />They did visit Jaffna off and on and founded schools in their villages or helped others to find avenues of advancement in Madras. Such close links between Jaffna and Madras were something new. <br /><br />It was true that there had been traditional connections between the two regions populated by people speaking a common language and cherishing a common cultural tradition. But the earlier links were sporadic and few and far between. Probably there were more traders soldiers and adventurers than scholars and poets. The opportunities under British rule to travel to India freely not only revived earlier bonds, but also established new relationships that were different in quality. By living and working in the midst of the Tamils in South India, who were themselves experiencing tremendous changes, these scholars from Sri Lanka engaged in a two way traffic of ideas and movements that. ushered ha a new era. <br /><br />These scholars considered themselves part of the mainstream of Tamil culture and contributed to it as much as they received. In fact, during the time of Navalar and about three decades after his death it was the 'Jaffna School' that dominated the literary scene in Madras. The late A.V. Subramania Ayyar (1900-1976) has rightly remarked that the most eminent Tamil scholar in the last quarter of 19th century was perhaps C.W. Thamotharam Pillai, 'He belongs to the band of Jaffna Tamil scholars and is next in importance only to Arumuga Navalar, who exercised considerable influence over him and his literary work'. <br /><br />In passing it may be noted that Thamotharam Pillai was one of the first two graduates of the Madras University passing the degree in 1858; the other, Viswanatlha. Pillai (1820-1880) was also from Jaffna Later Thamotharam Pillai was a member of the Madras University Syndicate and also 'appears to have been advisor to the Madras government on matters relating to Tamil . <br /><br /><br />Robert Caldwell's 'Comparative Grammar of Dravidian Language' set in motion a train of ideas that went beyond the field of philology<br />While the "Jaffna Scholars" were making their presence felt in South India - lecturing, teaching, debating, editing and publishing - they were also witnessing the nascent stirrings of the cultural nationalism in Tamilnadu. Although Navalar seems to have missed the impact of the publication of Bishop Caldwell's (1814 -1891) Comparative Grammar of Dravidian Language ( 1856; revised edition 18 75), Thamotharam Pitlai and others unmistakably show the influence of that work. I have elsewhere dealt with the subject and need not delve into it here. Suffice to say that by theorising about the antiquity and independence of the Dravidian languages vis-a-vis Sanskrit and the Indo-Aryaln languages, Robert Caldwell 'set in motion a train of ideas and movements whose repercussions and consequences went beyond the field of philology.' <br /><br />Of course Caldwell was not entirely alone in postulating a glorious history for the Tamil language. There were other European missionaries who put forward the Dravidian case. But it was Caldwell's Comparative Grammar that summed it up Already in the lengthy and controversial prefaces to the critical editions of ancient Tamil classics brought out by Thamotharam Pillai -Virasoiyam (1895) and Kalitokai (1887), we hear echoes of Caldwell's assertions about Dravidian and Tamil. Not only the classical works - both literary and grammatical - but also the medium of those creations had become an object of veneration. The modern linguistic consciousness of the Tamils can be traced to this period. The patron saint of the movement was ironically enough a Christian missionary . <br /><br />By about 1880s, the Tamil elite, both in South India and Sri Lanka had become quite enthusiastic about their language, culture and history. The landmark was of course the publication of a verse play Manonmmaniyam (1891) by P. Sundaram Pillai (1855-1897) who was professor of philosophy at the Trivancore University College. In that celebrated work he had described Tamil as 'Goddess'. The language had been declared divine and thereby sacrosanct. <br /><br />These events were taking place in South India with the full participation and contribution of Sri Lanka Tamils. An indication of the growing awareness of languages and culture was the commencement of the publication of two journals; Siddhanta Deepika, 'The Light of Truth' (1897-1913), and the Tamilian Antiquary (1907-1914) . A recent researcher's observation on the two journals clinches the point. <br /><br /><br />"The two journals cover roughly two decades the period of the flowering of Tamil Renaissance. This period represents an awakened interest of Tamil scholars in Tamil language and literature benignly guided by the flair and persuasive enthusiasm of the European scholars. These two journals have done yeoman service in creating in the minds of the Tamils an abiding interest in their language and literature, and in infusing a spirit of social confidence with regard to their literary and cultural heritage."<br />What is pertinent here is the fact that Tamil scholars of Sri Lanka actively participated in the publication of these journals. The Siddhanta Deepika was edited by J. M. Nallaswami Pillai (1864-1920), and the Tamilian Antiquary was edited by Pandit D. Savariroya Pillai (1854-1923). The former was a district magistrate and the latter a lecturer at St. Joseph's College, Trichy. A perusal of the pages of the volumes of these journals will demonstrate both the quantity and quality of the contributions by Sri Lankan Tamils: P. Arunachalam, P. Ramanathan , S. W. Coomaraswamy (1875- 1936), A . Muthutamby Pillai (1858 1917), V. J Tamby Pillai, T. Ponnambala Pillai and a few others seem to have been regular contributors to these Journals. Arunachalam's translations appeared under the initials P. A. <br /><br />Nallaswami Pillai was an ardent admirer of Navalar and cherished the writings of Sri Lankan Tamil scholars. Pandit Savariroya Pillai was encouraged by two well-placed Tamils from Jaffna who held responsible posts. T. Ponllambala Pillai was Commissioner of Excise in Travancore. His brother T. Chellapah Pillai was a justice in Travancore. T. P. Masilamani Pillai was the son of the former who also wrote articles in the Tamilian Antiquary. On his return to Sri Lanka after his retirement, T. Chellapah Pillai was elected President of the Saiva Paripalana Sabhai. <br /><br />The case of Pandit Savariroyan brings us to another point. Although the cultural awakening began as a Hindu movement and was predominantly led by Saiva scholars, its character changed over the years. The prestige accorded to Christian missionary scholars, (Caldwell, Percival, Bower, Pope, Ellis) and the endeavours of scholars like Savariroyan brought the Christians into the mainstream. Furthermore, with the shifting of focus from religion to language, the importance hitherto attached to Saivism became less significant. (In fact, the active role played by local Christian scholars both in India and Sri Lanka, from the time of Savariroya Pillai -- L.D. Swamikannu Pillai(1865-1925), Fr. S. Gnanapiragasar (1875-1947), Dr. T. Isaac Tambyah (1869-1941) and Rev. Fr. X.S. Thani Nayagam - in the cause of Tamil has, at times, led to the allegation by some Hindus that the Christians have infiltrated the Tamil cultural movement.) <br /><br /><br />Concern for Tamil manifested itself in the number of societies and associations that were formed for its protection and development<br />The events mentioned above had, without doubt, their effect in Sri Lanka. The concern for the Tamil language manifested itself in various ways. A number of societies and associations were formed for its protection and development. As may be expected, Jaffna led the way. As early as 1898 a Tamil Academy was established in Jaffna by the efforts of T. Kailasapillai (1852-1939), a nephew of Arumuga Navalar on whom had fallen the mantle of the great savant. It is interesting to note that Pandi Thurai Thevar (1867-1911), the zamindar of Palavanantham, Ramnad District, founded the Madurai Tamil Sangam. in 1901, inspired by the Jaffna Tamil Academy. <br /><br />This trend gathered momentum during the next few decades and a number of associations were formed. (The Colombo Tamil Sangam was formed in 1942). Conferences and meetings were held to celebrate different aspects of Tamil language and literature, one such meeting was held at the Ridgeway Hall in Jaffna in 1922, presided over by A. Kanagasabai. This was the first major literary conference in Jaffna and to befit the occasion, leading personalities from Madras were invited. Among them were Dr. S. Krishnaswamy Iyengar (1871-1947), K. Subramania Pillai (1889-1945) a staunch Tamil revivalist, P.V. Manicka Naicker (18711931) a language enthusiast and A. Madaviah (1874-1925) the novelist. Sir Vaitilingam Duraiswamy presided over the proceedings of the second day. T.A. Thuraiappa Pillai (1872-1929) who was the founder of Mahajana College and himself a poet and playwright took an active part in this conference. In the same year the Arya-Dravida Basha Development Society was inaugurated. <br /><br /><br />Pattern of development seen in the case of the Tamil language was paralleled in the case of Saiva Siddanta philosophy<br />The pattern of development seen in the case of the Tamil language was paralleled in the case of Saiva Siddanta philosophy, characterized as the indigenous religious thought of the Tamils. Following the early lead given by Navalar in restoring its prestige and strength, numerous associations sprung up in different parts to foster it. Reference has already been made to the Jaffna Saiva Paripalan Sabhai. In South India the Saiva Siddhanta Samajam was founded in 1905. <br /><br />Hitherto the Mutts or Saiva monasteries were the sole custodians of Saiva religion and philosophy. But now laymen considered it their bounden duty to preserve them. The Samajam became the association par excellence for the propagation of Saiva Siddhanta and several prominent Tamils from Sri Lanka took a leading part in its activities: distinguished Sri Lankans were often invited to deliver lectures at the Samajam and also preside over its annual sessions. J.M. Nallaswami Pillai was closely associated with the Samajam. <br /><br /><br />Sociologically speaking, the linguistic and cultural awakening was essentially that of the middle-class Tamils with the upper middle-class providing the leadership<br />Sociologically speaking, the linguistic and cultural awakening described above was essentially that of the middle-class Tamils with the upper middle-class providing the leadership. The awakening which began in the religious sphere extended to the linguistic and literary fields. Basically it was a form of cultural self-assertion in the face of colonial domination The point is that this cultural consciousness was limited in scope and in effect, designed to buttress the middle-class values and aspirations and also provide that class with the necessary image for leadership. <br /><br />In concrete terms, the cultural activities were confined to a few conspicuous areas: being backward looking in its orientation, the middleclass sought to revive and cultivate certain features of Tamil culture that had become part of the established order in the old society. <br /><br />In so far as language was concerned, the zeal for Sen-Tamil, 'Cultured Tamil' or 'Classical Tamil' which for all practical purposes was moribund, (although Sir P. Ramanathan and his son in-law and political successor S. Natesan created a vogue for speaking in the classical style), was the basis for the founding of societies and the holding of conferences. <br /><br /><br />Bharata Natyam and Carnatic Music were the two forms that came to be considered the necessary artistic acquirements for a cultured Tamil girl<br />Bharathanatyam and Carnatic Music were the two forms that came to be considered the necessary artistic acquirements for a cultured Tamil girl. Both were extolled as 'Tamilian arts and achievements' and soon became the preoccupation of middle-class Tamils. Bharata Natyam in particular had been resuscitated in the early twenties by the efforts of people like Bharata Iyer, Rukmani Arundale (who founded the Kalakshetra, which has remained the outstanding dance academy in Madras) and G. Venkatachalam whose critical essays helped propagate the traditions and ideals of that dance form. During the 18th and 19th centuries, Bharata Natyam had become degraded, and called a 'nautch-dance', performed by courtesans and prostitutes. <br /><br />While scholars and critics from G. Venkatachalam to the late Professor V. Raghavan contributed immensely to the resurgence of Bharata Natyam, it was perhaps, in the writings of Ananda Coomaraswamy that the dance form found its greatest champion. Two of the earliest monographs of Coomaraswamy were The Mirror of Gesture (1917) and The Dance of Shiva (1918) both of which have inspired almost all subsequent writers on Bharata Natyam. Likewise Carnatic music had been brought from the court and temple to the concert hall and along with the dance form, acclaimed as divine arts. <br /><br />Thus we see that Tamil language, Bharata Natyam and Carnatic music were deified and thereby denied the possibility of experimentation and innovation. It goes without saying that considerable affluence was the precondition for the cultivation of these arts and it was the upper classes that could afford them. <br /><br /><br />As a result, popular arts suffered and became even more debased and deprived of support. It is therefore not surprising that until the late 1950s and early 1960s there was hardly any significant movement for studying and cherishing the popular arts or what is often described as 'folkarts'. This lack of interest in folk literature and arts was no doubt a reflection of the intrinsic class bias of the patrons of art and culture.<br />Needless to say the 'ancient and divine arts' were carefully guarded against any political intrusions, especially of any ideas tinged with social reform or change. To put it differently, artistic forms which are periodically revitalized by the absorption of radical ideas and giving expression to them, were kept hermetically sealed by the upper middle class Purely as status symbols and ethnic identity characteristics. <br /><br />This was the nature of the linguistic and cultural consciousness of the Tamils until the 1950s. The most sensitive Tamil scholars and creative writers like the late A. Periyathambi Pillai (1899-1978), S. Somasundra Pulavar (1878- I 953), N. Nallathambi Pulavar (1896-1951) and Thuraiappa Pillai always conceived Sinhala and Tamil as two eyes or two sisters or two companions and sang of a united happy home. <br /><br /><br />Post-independent political development began to change this picture...the disfranchisement of about 900,000 Tamils of Indian origin and other events increased the awareness of the Tamils as a national minority<br />Post-independent political development began to change this picture. The disfranchisement of about 900,000 Tamils of Indian origin and the constant increase of Sinhalese seats in successive parliamentary elections and other events increased the awareness of the Tamils as a national minority. It is not fortuitous that in 1952, the Tamil Cultural Society was formed in Colombo. Its programme included not only the propagation of the history and culture of the Tamils in Sri Lanka, but also in other parts of the world. <br /><br />Some aspects of the cultural consciousness at this period merit attention. Although South India continued to be looked upon as the 'mainland', it was nevertheless gradually receding in to the background. The past and present history of the Tamils in Sri Lanka was unavoidably becoming increasingly important and experientially immediate. Whatever common links and bonds there were between the Tamils in Sri Lanka and South India, the two peoples ware living under different governments and facing different problems. <br /><br /><br />Sri Lanka Tamils began to manifest a keen interest in questions such as: were they autochthonous to the land?<br />The dialectal differences too were becoming more evident. Thus for the first time, Sri Lanka Tamils began to manifest a keen interest in this land. No doubt the interest was mostly from the Tamil point of view. Questions such as when and from where did the Tamils come here? Are they autochthonous to the land? What is their relationship to the Sinhala people? What is their contribution to the culture and civilization of this country? These and other questions protruded to the forefront in ever increasing frequency and intensity. <br /><br />It is true that in the preceding decades Mudaliyar C. Rasanayagam (1870-1940), Fr. Gnanapiragasar, A. Muthuthamby, K. Velupillai (18601944) and others had shown interest in the history of the Tamils. Their attempts were basically academic in character. But in the fifties, the historical writings were more than academic. There was an urgency and involvement in the quests. Professor K. Kanapathi Pillai (1903-1968) published his historical play Sankili (1956) which he prefaced with a 'history of Tamils in Sri Lanka ' <br /><br />This was followed by C.S. Navaratnam's Tamils and Ceylon (1958), and K. Navaratnam's Tamil Element in Ceylon Culture (1959). Nor was the interest confined to history. K. Navaratnam (1898-1962) who was a devotee of Ananda Coomaraswamy and had popularised some of his books in Tamil, brought out in Tamil the Development of Arts in Sri Lanka (1954). <br /><br />This trend continued to grow with the voices becoming more shrill and the tone overtly polemical. Some of the academic writings of this period found an outlet in the journal Tamil Culture (1952- 1966) which was being edited by a Sri Lankan, Xavier S. Thani Nayagam. It was printed and published in Madras. It carried academic articles like A.J. Wilson's 'Cultural and Language Rights in the Multinational Society' (1953), Thani Nayagam's 'Tamil Culture - its past, its present and its future with special reference to Ceylon' (1955) and also amateurish pieces like W. Balendra's 'Trincomali Bronzes' 11953) and S.J. Gunasegram's 'Early Tamil Cultural Influences in South-East Asia' (1957). H.W. Tambiah published his The Laws and Customs of the Tamils of Ceylon (1954) probably responding to the prevalent mood. A recent contribution to the subject is Tamil Cullure in Ceylon by M.D. Raghavan. <br /><br /><br />Concept of Tamil culture was given a wider significance and interpretation<br />Generally speaking, the concept of Tamil culture was given a wider significance and interpretation. C. Sivaratnam's ‘The Tamils in Early Ceylon’ (1964) reflects this tendency. There were also plans for the economic reconstruction and development of Tamil areas and world Tamil unity. From this period, the Tamil cultural movement becomes overtly political and begins to show up its class character and ideological leaning. <br /><br />It is at this stage that for the first time, the literary and cultural movement touches the traditionally oppressed sections of the Tamil people who had hitherto been beyond the pale. Both in South India and Sri Lanka, post-independence problems created the conditions for the emergence of a band of writers who came from the traditionally oppressed sections of Tamil society, that is, the lower castes. Many of them were attracted by Marxism and communist organisations which provided them with a world view and also the confidence to struggle against exploitation and articulate their thoughts and feelings freely . <br /><br />As might be expected, their level of literary education was somewhat low. But they ushered in new experiences and visions into fiction, poetry and drama using hitherto unheard of dialects, idioms and expressions. They were indifferent to 'correct' Tamil itself as taught by school teachers; classical Tamil was of no concern to them. They in fact openly despised it and ridiculed its proponents. To them linguistic restrictions or restraints were akin to social and political oppression and all such barriers had to be broken down. <br /><br />Harrison's general observation in a slightly different context seems applicable here:<br /><br />"Where language differences tend to coincide with class distinctions, language conflict is apt to coincide accordingly with the lines of social conflict greatly increasing it. And if the language of the lower classes is spoken by them at a time when they increase in numbers, or when they gain a bigger share in political and economic power in the society, then the language quarrels will be part of a general process of their elevation in the society and of their gradual bid for increasing social power."<br /><br />The cultural nationalism of the Tamils is today at the cross roads. It has two options before it. To tread the path of cultural isolation and chauvinism or to identify those features that are also common to the majority community and work out a democratic way of life. The choice would appear to be obvious. But to do that would also mean a national struggle by both communities obfuscating the veil of narrow ethnic interests and marching towards a social order in which there will be no exploitation of man by man.angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-10601728591930571842008-08-04T12:16:00.000-07:002008-08-04T12:24:39.644-07:00பேராசிரியர் க.கைலாசபதிபேராசிரியர் க.கைலாசபதிக.கைலாசபதி (ஏப்ரல் 5 1933 - டிசம்பர் 6 1982) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.வாழ்க்கைக் குறிப்புஇவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி அக்காலத்தில் மலேயா என்று அழைக்கப்பட்ட இன்றைய மலேஷியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் பிறந்தார். சிறுபராயத்திலேயே யாழ்ப்பாணம் வந்த இவர் வண்ணார்பண்ணையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவரது தாய் மாமனும் தமிழறிஞரும் அரசாங்க அதிகாரியுமான மாணிக்க இடைக்காடர் என்பவருடைய கவனிப்பில் இவருக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. கொழும்பு சென்று அங்கே றோயல் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக் கழகம் புகுந்தார்.இலங்கையின் கண்டி நகருக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் வி. செல்வநாயகம் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.தொழில்பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து "Tamil Heroic Poetry " என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.இலக்கியப் பணிஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர் அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.இவரது ஆக்கங்கள்இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள் தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி சமயம் பண்பாடு சமுதாயம் அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல் "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்" "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்" "தமிழ் நாவல் இலக்கியம்" "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.மிக இளம் வயதிலேயே மாணவர்கள் அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர் 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார்.இவரது நூல்கள்அடியும் முடியும் பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும் தமிழ் நாவல் இலக்கியம் இலக்கியச் சிந்தனைகள்தமிழ் தமிழர் பற்றிய வரலாற்று ஆய்வுக்குப் பல்துறைச் சங்கம் ஆய்வு முதன்மை பெற்று வரும் காலம் இக் காலம். தமிழ் பற்றிய ஆழமானதும் அகலமானதுமான அறிவும் ஆய்வும் துவக்கம் பெற்றுத் தமிழாய்வு என்பது தமிழியல் ஆய்வாக விரிவடைந்துள்ளது. ஆக, தமிழியல் ஆய்வு என்பது வெறும் இலக்கிய ஆய்வாக மட்டும் அல்லாமல் தமிழில் வெளிப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த விரிந்த ஆழமான தளத்தில் தமிழியல் ஆய்வு புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு தமிழியல் ஆய்வு ஆழ அகலப்பட்டு, அறிவு நிறுவப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சியாக நடந்த அரை நூற்றாண்டுகளில் இருந்து முனைப்புற்று புதிய தடங்களை ஏற்படுத்தி வளர்ந்து வருகின்றன. பல்வேறு கோட்பாடு சார்ந்த கருத்து நிலை நின்ற ஆய்வுப் பாரம்பரியம் வளர்ச்சியுறுகின்றன. தமிழில் மார்க்சியக் கருத்து நிலை நின்ற ஆய்வுப் பாரம்பரியம் தமிழில் அறிமுகமாகி ஆழ அகலமான புலமைத் தொழிற்பாடுகள் முன்னரை விட அதிகரித்தன. விமர்சனப் பயிர்வும் விமரிசன செயற்பாட்டு முறைமையியலும் வளர்ச்சியுறச் செய்து ஆராய்ச்சிப் பணி புரியும் புலமையாளர்கள் பலர் தோன்றினர். இவர்களுள் தனித்துவ ஆய்வுச் சுவடு பதித்தவர் பேராசிரியர் கைலாசபதி. இதுவரையிலான தமிழியல் ஆய்வு வளர்ச்சியில் வரலாற்றில் புலமையாளர்கள் சிலருடைய பாத்திரம், செயற்பாடுகள் முக்கியமானவை. ஆக இவர்களைத் தவிர்த்துப் புறக்கணித்து ஆய்வியல் வரலாறு எழுதப் பட முடியாது. அத்தகையதொரு வரலாற்றுக்குள் வருபவரே பேராசிரியர் கைலாசபதி. இன்று தமிழில் இலக்கிய வரலாற்று ஆய்வியல் வரலாற்று வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்ட முனையும் பொழுது இதுவரை அவ் விடயங்கள் சம்பந்தமாக எழுதப் பெற்ற நூல்கள் பற்றிய ஒரு விரிவான புரிதலுக்கும் அறிதலுக்கும் விவரத்தினைத் தருவதற்கு முயலுதல் வேண்டும். ஆனால், தமிழ் மொழியில் வெளி வந்துள்ள நூல்கள் யாவற்றையும் உள்ளடக்கிய விரிவான நூற்பட்டியல் எதுவும் தமிழில் இல்லையென்றே கூறலாம். சிலரால் சில முயற்சிகள் ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்டாலும் அவை கூட பூரணப்படுத்தப் படாமலேயே உள்ளன. இன்னொரு விதத்தில் தமிழியல் ஆய்வு மேலும் சிறக்க, விரிவடைய, ஆழப்படுத்த முன்னைய நூல்கள் பல மீண்டும் மீள் பதிப்புச் செய்யப்பட வேண்டும். இன்றைய அறிவு வளர்ச்சி, ஆய்வுத் தேவைகளில் பெருக்கம், மேலும் மேலும் பல்வேறு துறைகள் சார்ந்தவற்றை மீள் நோக்கி மறுவாசிப்புக்கு உள்ளாக்கும். இவற்றுக்கு முந்தைய நூல்கள் ...... பல புதிய செய்திகள், பார்வைகள், வெளிச்சங்கள் ..... பல்வேறு புதிய பிரச்சினைகளும் கிளப்பப்படும். ஆக தமிழியல் ஆய்வு விரிவுபடும். இப் பகைப் புலத்தில் வைத்தே கைலாசபதி புரிந்து கொள்ளப்பட வேண்டும். கைலாசபதி பல்கலைக்கழகப் பேராசிரியராகத் திகழ்ந்ததோடு முற்போக்கு இயக்கச் செயல்பாடுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். 1950 களின் நடுப்பகுதியிலிருந்து 1982 ல் இறக்கும் வரை தீவிரமாகப் புலமைத் தளத்தில் செயலாற்றி வந்தவர். ஈழத்தில் இருந்து கொண்டே தமிழகச் சிந்தனை ஆய்வு புலமைத் தாக்கங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தியவர். கைலாசபதியின் ஆக்கங்கள் என்ற வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல் வடிவம் பெற்றவை 20. இவற்றுள் இரு நூல்களுக்கு இணையாசிரியர். தமிழ்ச் சூழலில் கைலாசபதியின் நூல்கள் 60, 70 களில் இளந் தலைமுறையினர் மட்டத்தில் அதிக தாக்கம் செலுத்தின. தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966) தமிழ் நாவல் இலக்கியம் (1968), ஒப்பியல் இலக்கியம் (1969) ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. இன்று மேற்குறித்த நூல்களுக்கான மீள் பதிப்புகள் 1999 இல் வெளி வந்துள்ளன. இந் நூல்கள் மீளவும் மின் பதிப்புப் பெறுவதனால் தமிழியல் ஆய்வில் ஈடுபாடு கொண்டோருக்கு இது மகிழ்ச்சிக்குரிய விடயமே. இந் நூற்றாண்டின் முடிவுறும் தருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இந்த நூற்றாண்டின் தமிழியல் ஆய்வு வரலாறு, வளர்ச்சி பற்றி உரத்துச் சிந்திக்கும் பொழுது கைலாசபதியைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது. மேற்குறித்த நூல்களின் வருகை எமக்குப் புதிய பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பக் கூடும். பல்வேறு உரையாடல்களை எம்மிடையே ஏற்படுத்தும். இதுகாறுமான எமது வரலாற்றுக்குள் கொண்டு வரப்படாத புறக்கணிக்கப்பட்ட பகுதிகளும் உண்டு என்பதை இன்றைய எமது வாசிப்பு ஆய்வு எமக்கு உணர்த்தியுள்ளன. ஆக இதுவரையிலான ஆய்வுப் போக்குகள் குறித்த அக்கறை, தேடல் அவசியம். இவற்றுள் கைலாசபதியின் நூல்கள் மீளப் பதிப்பித்தல் எனும் செயற்பாடு ஆய்வியல் செயற்பாட்டின் ஓர் இணையாகவே பார்க்கப் பட வேண்டும். புரிந்து கொள்ளப் பட வேண்டும். 'தமிழியல் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி' எனும் நூலைக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதி 1999 ல் வெளியிட்டுள்ளார். இது தமிழியல் ஆய்வு வரலாற்று வளர்ச்சியில் கைலாசபதியின் விகிபாகம் பற்றிய சிரத்தையை ஆய்வு நிலை நோக்கில் வெளிப்படுத்தும் முயற்சியாக இந் நூல் அமைந்துள்ளது. ஆக, கைலாசபதியின் மூன்று நூல்களின் மீள் பதிப்பு, கைலாசபதி பற்றிய சுப்பிரமணியத்தின் நூல் ஆகியவற்றின் வருகை கலாநிதி கைலாசபதி பற்றிய பார்வைக்கும் தெளிவுக்கும் உதவுபவையாக உள்ளன. தமிழியலாளர்கள் −வற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழியல் ஆய்வு மேலும் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். கைலாசபதி நூல்கள் ஒப்பியல் இலக்கியம் 246 பக்கங்கள் விலை ரூ. 65 தமிழ் நாவல் இலக்கியம்(திறனாய்வுக் கட்டுரைகள்) 278 பக்கங்கள் விலை ரூ. 70 பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் 175 பக்கங்கள் விலை ரூ. 48 வெளியீடுகுமரன் பப்ளிஷர்ஸ்3, மெய்கை விநாயகர் தெருகுமரன் காலனி 7 வது தெருவடபழனிசென்னை - 600 026. கலாநிதி நா. சுப்பிரமணியன் தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி 123 பக்கங்கள் விலை ரூ. 50 வெளியீடுசவுத் விஷன்6, தாயார் சாகிப் 2 வது சந்துசென்னை - 600 002.- தெ. மதுசூதனன்.angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541354202317651717.post-67125097872070386722008-08-04T11:10:00.000-07:002008-08-04T11:19:32.471-07:00பேராசிரியர் க.கைலாசபதி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwQJcIguO3gBrGJyR9Z7W1ewOTVuyJ-OsorZQXrmXDMPN24BQXER4jX5vBDBhpwy8pcGK5HQwgGJAGI_-3ou_f1vGBpeAivg8MGqwcZSakE6Q_QWcR_8y8OOv4B6Td6TjTjHEVkFFbF3A/s1600-h/scan0003.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5230728810588314434" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwQJcIguO3gBrGJyR9Z7W1ewOTVuyJ-OsorZQXrmXDMPN24BQXER4jX5vBDBhpwy8pcGK5HQwgGJAGI_-3ou_f1vGBpeAivg8MGqwcZSakE6Q_QWcR_8y8OOv4B6Td6TjTjHEVkFFbF3A/s200/scan0003.jpg" border="0" /></a><br /><div></div>angelanamika அனாமிகா ஏஞ்சல்http://www.blogger.com/profile/17220189920589146467noreply@blogger.com1