Saturday, October 23, 2010

பண்டைய தமிழ் சமூகம் மற்றும் சரித்திரத்தின் பிரதானமான மறுசிந்தனைகளுக்கு கைலாசபதியே காரணம்.

பண்டைய தமிழ் சமூகம் மற்றும் சரித்திரத்தின் பிரதானமான மறுசிந்தனைகளுக்கு கைலாசபதியே காரணம்.

ஆக்கம்: கேசவன் வேலாயுதர்

kailasapathyகடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த முக்கிய திருப்பமாக சங்க இலக்கியங்கள் எனப் பிரசித்தி பெற்ற தமிழ் இலக்கியத் தொகுப்புகள் பலவும் மறக்கப் பட்ட நிலையிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் இதுவரை காலமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த தமிழ் இலக்கிய நெறிமுறைகள் யாவும் தலைகீழாக மாற்றம் பெற்றன. ஆயினும் தமிழ் நாட்டிலும் அத்தோடு இலங்கையிலும்(தற்போது ஸ்ரீலங்கா) ஓரளவுக்கு பழைய சைவ இலக்கியத் தொகுப்புகள் தொடர்ந்தும் பிரியத்துடன் போற்றப்பட்டு வந்தன. இது ஆரம்பகால தென்னிந்தியக் கலாச்சாரம் மற்றும் சரித்திரத்தை விளக்கும் புதியதோர் அத்தியாயத்தின் ஆரம்பத்தினை நிரூபித்தது. ஒரு உண்மையான புரட்சியாகத் தமிழ் மொழியினை ஏனைய செம்மொழிகளான சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுடன் சேர்த்துக் கொள்ளும் வழியமைந்தது.

இச்சிறப்பு வாய்ந்த செய்கையின் விளைவாக எப்படியாயினும் பண்டைய தென்னிந்தியாவின் வெட்கமற்ற சிறப்புகளின் ஒவ்வொரு ஆக்கக்கூறுகளையும் கொண்ட தேசிய எழுத்தாளர்களின் பாரம்பரிய அடையாளம் உருவாயிற்று. இந்நடைமுறையினால் சரித்திரத்தின் கடந்த காலம் நிகழ்காலத்தை விடச் சுருங்கியதுடன் சான்றுகள் யாவும் ஒரு தொல்லையாக ஒரு பொறுப்பாக ஆகின. எழுத்துக்களின் மாற்றம் அதன் சூழலுக்குத் தக்க வகையில் கேள்விப்படாத ஒன்றாயிற்று. ஓரு சரித்திர ஆசான் தீவிரமான ஆராய்ச்சியின் வெளித்தோற்றத்தை அல்லது இலக்கிய விமர்சனத்தை எழுதியிருந்தால் அது சில ஒப்புமையான இலக்கிய நயத்தைக் காட்டியிருக்கும். ஆனால் அவைகள் மிக அதிகமான காட்டிக் கொடுப்பனவாகவே உபசரிக்கப் பட்டதுடன், சரியான அறிவுசெறிந்த விமர்சனங்களையும் சந்திக்கத் தவறிவிட்டன.

ஒருவர் கனகசபாபதி கைலாசபதியின் பணிகளுக்கு காட்டவேண்டிய அளவுகடந்த பற்றுதலுக்கு சமீபமான பின்னணிக்கு இது முற்றிலும் எதிரானது. சங்க இலக்கியங்களின் கண்டுபிடித்தலுடன் கொண்டுவரப்பட்ட புரட்சியானது ஒருவகையான பழமைசார்ந்ததும், பண்டைய இலக்கிய ஆராய்ச்சிகளின் பயனாக ஆரம்பிக்கப்பட்ட தீவிர சிந்தனைகளுக்கும் அதன் அடிப்படையிலான சமூகப் படிப்பினைகளுடனும் பொருத்தப் படுகிறது. அநேகமாக பண்டைக்கால தென்னிந்திய சரித்திரக் கற்கைகளுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ள கல்விமான்களான இலங்கையைச் சேர்ந்தவர்களான கைலாசபதி, அதேபோல கார்த்திகேசு சிவத்தம்பி அல்லது சுதர்ஸன் செனவிரத்ன மற்றும் இத் தொகுப்பின் ஆசிரியர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்களாவார்கள். ஏனெனில் முற்றிலும் சங்க இலக்கியம் சாராத இலட்சியங்களின் பாரம்பரியத்துக்கு இவர்கள்தான் வாரிசுகள். கைலாசபதி ஆற்றியுள்ளவை ஓரளவே பழமை சாராதவை. 1968 ல் அவரது நூலான ‘வீர கவிதைகள்’ பிரசுரமானபோது அது சொல்லியது நரம்புகளை உறைய வைக்கும் தமிழக்;கால வீரர்களின் மகிமையை.”சங்கம் கவிதைகள் என்கிற தலைப்பு ஒரு தவறான சொல்வழக்கு” என்கிற ஓரளவு அதிர்ச்சியான அறிவிப்புடன் அவர் தனது நூலை ஆரம்பித்திருக்கிறார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை அதன் கட்டமைப்புக்குள் ஆராயும் போது வாய்வழி இலக்கிய நுட்பங்களைப் பயன்படுத்தி அவை விளக்குவது வீர கவிதைகளின் சிறப்பான உணர்வுகளை என்று காண்பிக்க முயன்றுள்ளார்.

எச்.எம் மற்றும் என்.கே.சாட்விக் ஆகியோரின் வியத்தகு பணியினால் உருவான “இலக்கிய வளர்ச்சி” நூலின் நினைவூட்டல் குறிகளையும் மற்றும் ரியோத்ரோனிக் ,கிரீக், ஐஸ்லாந்து,சல்வேனியா, சமஸ்கிருதம், சுமெரிய, ஆபிரிக்க, வாய்வழி கவிதை ஆய்வுகளின் முடிவுகளையும் எடுத்துக் கொண்டால் கைலாசபதி செயல்முறைப் படுத்தியிருப்பது தமிழ் கவிதைகளின் அடிப்படையிலான வாய்வழிக் கதாபாத்திரங்களையே. ஹோமரின் காவியங்களை ஆராய்ந்த மில்மான் பாரி என்பவரது ஆராய்ச்சி முடிவுகளையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். வீர கவிதைகளின் கற்கைகளில் அவை “உலகளாவிய கோட்பாட்டு” அந்தஸ்தினைக் கொண்டவை. சாட்விக் மற்றும் பாரியின் ஆராய்ச்சிகள் ஒருமுகமாக உதவியிருப்பது பண்டைய கவிஞர்கள் மற்றும் கவிதா பாரம்பரியங்கள் அத்தோடு அவர்களின் சமூக நடைமுறைகள் என்பனவற்றோடு இக் கவிதைகள் எழுதப்பட்ட கால மனஉணர்வுகளையும் விளங்கிக் கொள்ள கைலாசபதிக்கு உதவியுள்ளன.

கைலாசபதியின் முடிவுகள் தென்னிந்தியத் தமிழின் பெருமைக்கு மிகவும் அதிகம் என்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் கைலாசபதியின் நூலானது பல வருடங்களாகத் தென்னிந்தியாவில் இருட்டடிப்புச் செய்யப் பட்டிருந்தது. அவருக்கு 49 வயதானபோது புலமைத்துவ உலகம் அவரை இழந்துவிட்டது. பேராசிரியர் கைலாசபதியின் நினைவுப்பெட்டகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் அவரது 25ம் வருட நினைவஞ்சலியின் போது மீளாய்வு செய்யப் பட்டது. கைலாசபதியின் நெருங்கிய சகாவான கார்த்திகேசு இந்திரபாலாவினால் முன்வைக்கப்பட்ட இந்நூலில் குறுகிய சுயசரித வரைபுகளுக்கு அப்பாற்பட்ட புகழ்பெற்ற கல்விமான்களினால் ஐந்து கட்டுரைகளும் மற்றும் ஒரு பகுதி கைலாசபதியின் முதல்தர நூலாகிய தமிழ் வீர கவிதையின் சுருக்கிய வடிவமாகவும் உள்ளது. பண்டைய தென்னிந்திய வரலாற்று எழுத்தாண்மையில் சமகாலப் பகுதியினர் யார் யார் என்கிற உண்மையையும், கைலாசபதிக்கு நினைவாஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருக்கும் எழுத்தாளர்களின் பெயர்களின் எண்ணிக்கையும் உள்ளது.

ஆசிரியரின் அறிமுகத்தில் கைலாசபதியைப் பற்றிய மிகவும் தனிப்பட்டதான ஆனால் விளக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் அதைத் தொடர்ந்து சுருக்கமான விளக்கத்துடன் தற்போதுள்ள தகவல்களுடனும், இந்த விடயத்திற்கு தேவையான பெறக்கூடிய சகல பணிகளையும் உள்ளடக்கிய பண்டைய தென்னிந்திய வரலாறு மற்றும் திருத்தப்பட்ட மரபுவழி பற்றி படம் போடப்பட்ட மகிமைமிக்க பண்டைக்கால தமிழகவரலாறு இப்போது கிடைக்கக் கூடியதாகவுள்ளது. முந்திய கொண்டாட்ட நடைமுறைகளுக்குத் திரும்பும் வழமையான முயற்சிகள் இந்நிலையிலும் உண்டு. இந்த அருமையான வெளிப்பார்வையைத் தெடர்ந்து தொகுப்பு தணிக்கை செய்யப் பட்ட கைலாசபதியின் தமிழ் வீர கவிதையுடன் ஆரம்பிக்கிறது. கைலாசபதியின் சொந்த ஆக்கமான பழந்தமிழ் இலக்கியம் இந்தப்பகுதியில் இடம் பெற்றிருப்பதும் ஆச்சரியமான விடயம். ஒன்றோ இரண்டோ கேள்விகள் அந்தக் குறிப்பிட்ட பகுதியைப்பற்றி எழக்கூடும். அது பழந்தமிழரைப் பற்றிய ஒரு ஆய்வுத் தொகுப்பு. கைலாசபதியின் வழித்திரிவான வேலைகளை அது உண்மையில் எடுத்துக் கூறவில்லை. புத்தகத்தின் வேறு எந்தப் பாடமும் வாசகருக்கு அந்த முன்னோடி எழுத்தாளர் செய்தவைகளால் உண்மையில் ஒரு சுகந்த அனுபவம் கிட்டியிருக்கக் கூடும். விசேடமாக மூன்றாவது (கவியும் கவித்துவ பாரம்பரியமும்) நான்காவது (வாய்மொழிச் செய்யுள் உருவாக்கும் உத்தி) அல்லது ஆறாவது (வீரர்களின் உலகம்) அதில் சேர்;க்கப்பட்டுள்ள தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலையின் பகுதியினையும்பற்றிய கலந்தாய்வினை விட்டுவிடுவது சரியான காரணமாகாது.

கே.இராஜனின் “தமினி வரைபுகள் மற்றும் குகைப் பதிவுகள்: தமிழ் நாட்டிலுள்ள பிரமிப் பதிவுகள்” என்கிற கட்டுரை, தமிழ் பிரமி அல்லது குகை வரி வடிவுகள் என அறியப்படும் தமிழ்நாட்டின் வெட்டெழுத்துக்களைப் பற்றிய ஒரு விரிவான கற்கையாகும்.அதன் முழுமையை எடுத்துக் கூறுவதற்கிடையில் இராஜன் மட்கல உடைசல்களில் பொறிக்கப் பட்டுள்ளவைகளை கல்வரைபுகளின் காலகட்டத்திற்கு ஏற்ற இடத்தில் பயன்படுத்தியிருப்பது, அந்தக் கட்டுரைக்கு குறிப்பிடத்தக்க பலத்தைக் கொடுத்துள்ளது. எப்படியாயினும் எழுத்தாளனின் முடிவுகளை ஒருவரால் முழவதுமாக ஏற்றுக்கொள்ள இயலாதிருக்கிறது, உதாரணத்துக்கு பண்டைய வரலாற்றுக் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்த முந்தைய சமூகத்தைப் பற்றி அவர் விமரிசிக்கும் அவரது கருத்தை. மௌரியான் அல்லது வட இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட வரிப்படிகளின் பதிவுகளுக்கு மற்றும் ஆழமான உட்பதிவுகளைக் கொண்ட பிரக்ரிட் போன்றவைகளுக்கு மேலும் சான்றுகள் தேவை, முக்கியமாக வற்புறுத்தப்படும் சாட’சியங்களுக்கு எதிராக. பிரதிகளின் தமிழ் தோற்றத்தைக் காட்டுவதில் ஒருவகை அதீத ஆர்வத்துடன் கூடிய சுவை தென்படுகிறது, அதாவது கைலாசபதி சார்ந்து நின்ற உணர்வுகளுக்கு எதிரான சிலவற்றில்.வை.சுப்பராயலுவின் ஆராய்ச்சி ஏட்டில் “விசாகி மற்றும் குவிரான்: தமிழ் பிரமி வெட்டெழுத்துக்களின் வரலாற்று நடைமுறை” எடுத்தியம்புவது பதக்கத்தின் மறுபக்கத்தை. அது அவரது முந்தைய கட்டுரையான மட்கல வெட்டெழுத்துக்களுடன் சேர்த்து வாசிக்கப் படவேண்டும்,அது தமிழ் வெட்டெழுத்தியலில் அனுபவம் மிக்க மூப்பரான ஐராவதம் மகாதேவனின் தொகுக்கப்பட்ட கட்டுihப் பாகங்களில் காணப்படுகிறது. விட்டுக்கொடுப்புகள் இல்லாத விரிவான கவனிப்பு,முறையான பகுப்பாய்வுகள், பிரச்சினைகளை அணுகும் நடுநிலமை, ட்டுரை முழுவதும் காணப்படும் துறைமைத்திறம் என்பன சுப்பராயலுவின் மற்றைய எழுத்துக்களில் காணப்படுவது போன்றே இதிலும் விளக்கமளிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அவரைப் பொறுத்தமட்டில் அவரது முடிவுகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க நடைமுறை, வெட்டெழுத்துக்களில் காணப்படும் பெயருள்ள ஆட்களை இனங்காணவும் பயன்பட்டிருக்கிறது. “பிரகிருது பேசிய வியாபாரிகள்தான் பிராமி வரிவடிவுகளை தமிழ் தேசத்தில் அறிமுகப்படுத்தத் தொடங்கிய ஆதி முதல் கருவிகள்” மௌரியர் ஆட்சிக்காலத்தில் மகதாப் பிராந்தியத்திலிருந்து கி.பி. 3ம் நூற்றாண்டளவில் பிரமி எழுத்துக்களின் முழுவடிவம் கிடைக்கப்பெற்றபின் உடனடியாக நடந்திருக்க வேண்டும். சுப்பராயலு மேலும் தீவிர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார், அது வியாபாரிகள் தமது இடையீட்டில் எழுத்தறிவை பரப்புவதற்குப் பயன்படுத்தியது.கையிலுள்ள பிரச்சினைகளின் நடைமுறைகளின் நோக்கத்துக்கு மறுபுறமாக ஒரு குறிப்பு. கே.இந்திரபாலா தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்தும் பிரச்சினையைக கையாளுகிறார்.இந்திரபாலா விவாதிப்பது தமிழ் அடையாளத்தின் இருப்புகளை இனம், அரசியல், அல்லது மத அடையாளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு.தமிழ் தன்னை அடையாளம் காட்டும் தனிச்சிறப்பை வேறு மொழிபெயர் Nதுசங்களிலும் ஏற்படுத்தியிருக்கிறது. இருந்த போதும் தெளிவாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்பேசும் பிராந்தியங்களில் பண்டைய வரலாற்றுக்கால ஆவணங்களில் தமழ்கூறும் நல்லுலகம் எனக் கூறப்பட்ட அடையாளம் காணப்பட்ட ஒரு தமிழ் பேசும் இனக்குழுவும் கிடைக்கவில்லை.

இந்த உலகம் நிச்சயப் படுத்திக் கொள்ளவேண்டியது யாதெனில் வித்தியாசமான இனக்குழுவினரின் தாயகம், அரசியல் பிரிவுகள் மற்றும் பல்வேறு மதநம்பிக்கையுள்ள மக்கள் என இவையாவும் தமிழின் அடையாளத்தை ஒருங்கிணைக்கும் வழியாக நிற்கப் போவதில்லை.இந்த வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து மாற்றி, பழங்குடித் தடைகள் யாவற்றையும் கடந்த ஒரு பெரிய குழு பண்டைத் தமிழ் வரலாற்றில் தமிழ் மொழியை தங்களை இனங்காட்டும் அடையாளமாகக் கொண்டிருந்திருக்கிறது. ஒரு சகாப்தத்தினை மாற்றியமைக்கும் ஒரு பிரிவின் பிரதிநிதிகளாக அவர்கள் கருதப்படுவதும் மற்றோர் காரணம். ஒரு தகுதிவாய்ந்தகண்ணோட்டத்தில் பண்டைய வரலாற்றுத் தமிழ்க்காலக் காட்சியின் வெளித்தோற்றம் ஆர். சம்பாலட்சுமியினால் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பிரச்சனைகளை வௌ;வேறு தரங்களில் ஆராய்வதோடு மட்டுமன்றி ஆய்வின் முடிவுகளைத் தொகையிட்டு பண்டைய தென்னிந்திய நடைமுறைகளை நம்பகமான சித்திரம் போல தன் வேலைகளில் எடுத்துக் கூறியுள்ளார். சிறப்பியல்பான ஒரு பணிவு அவரது கோரிக்கைகளில் உள்ளது.(அவர் கூறுவது: “ஆய்வுகளினால் பெறப்படும் அதியுயர் முக்கியத்துவமான அந்தக்கால தமிழ் சமூகத்தின் புதிய நுண்ணறிவுகளைத் திரும்பவும் மாற்றுவதற்காக எந்தக்கோரிக்கையும் எழுப்பப் படவில்லை”.) எப்படியாயினும் தமிழ்சமூகத்தின் பண்டைய சரித்திர காலப் பகுதியின் முந்திய காலப்பகுதியிலும் அதுமுதலான ஆரம்ப இடைக்காலப் பகுதியிலும் தோற்றம் கொண்ட உருமாற்றத்தை விளக்குவதற்கு மாற்றீடு செய்யக்கூடிய புதிய வெளித்தோற்றத்தை அறிமுகம் செய்யும்படி அவர் அழுத்தம் பிரயோகிக்கிறார். அவர் இதைச் செய்ய விரும்புவது, பண்டைய சமூகங்களைப் பற்றிய சமீபத்திய கற்கைகளின் செயல்முறைநுட்ப முன்னேற்றங்களினாலும் மற்றும் வரலாற்றியல் புவியியல் சேர்ந்த அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க மறுவாசிப்பு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டதையும் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக. தமிழ் ஆhவலர்கள் தமிழ் கலாச்சாரத்தின் பெருமையைப் பற்றி வாதிடுவதற்கான வழிகளில் ஒன்றாக சமஸ்கிருதம் மற்றும் இந்தோ – ஆரிய செல்வாக்கினைத் திராவிடன் என்ற பொருளில் மறுத்துரைக்கிறார்கள். வீ.சிவசாமியின் கட்டுரை “பிராமணர்கள் மற்றும் யாகர்கள்: வைதீக எண்ணங்களின் பரவல்” அதற்குக் குறிப்பிடத் தக்கதோர் திருத்தம். அவர் வழங்குவது தமிழ்நாட்டில் காணப்படும் வைதீக எண்ணங்களினதும்,செயற்பாடுகளினதும் ஐயத்துக்கு இடமில்லாத சான்றுகள். எம்.ஜீ.எஸ். நாராயணன் வேத – சாத்திர – புராண மூலகங்களை மூன்று தசாப்தங்களுக்கு முன்பே பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டிருந்தாலும்,இந்தக் கட்டுரை இந்தச் சூழ்நிலையில் மிக முக்கியமாக வழங்கியிருப்பது தமிழ் நாட்டு சமூக கலாச்சாரங்களுக்கு உண்மையான பாராட்டுகளை.இது சார்பாக அதன் முடிவுவரை பணியாற்றிய கைலாசபதியின் நினைவுகளுக்கு இக்கட்டுரை ஒரு புகழாரம்.

புத்தகத்தின் முடிவில் நான்கு இணைப்புக்கள் உள்ளன.பட்டினப்பாலை மற்றும் புறநானூற்றிலிருந்து ஒரு பாடல் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு.எழுத்துக்களும் மொழிபெயர்ப்புமான மூன்று தமிழ் - பிரமி குகை ஆவணங்கள்.பி.ரி.சிறினிவாச ஐயங்காரின் சங்ககாலப் புராணக்கதையின் மொழிபெயர்ப்பு, மற்றும் வனமார்பவன், தேவநம்பியா ஆகியோரைப் பற்றிய ஒரு குறிப்பும் உள்ளது. இவை யாவும் தொடர்பு பட்டவை.ஆயினும் வனமார்பவனின் தமிழ்பாடலை அசோகன் தேவநம்பியாவுடன் சமப்படுத்தி விவாதமொன்றுக்கு யாரும் அவ்வளவு தூரத்துக்கு போக இயலாது. அத்தோடு சமீபத்திய எழுத்துக்களுக்கான தெரிவு செய்யப்பட்ட ஒரு நூற்பட்டியலும் உள்ளது.அது மிகவும் உதவியானதாகவும், கைலாசபதியின் எழுத்துக்களுக்கு பொருத்தமான ஆதார நூற்பட்டியலாகவும் உள்ளது.பண்டைத் தமிழ் சரித்திர சமூக இயல்பினுக்கு கவனிக்கப் படவேண்டிய மறுசிந்தனைகளுக்குப் காரணமான ஒரு முன்னோடியின் ஞாபகத்துக்குப் பொருத்தமான ஒரு புகழ்மாலையைச் சூட்டுவதில் இந்நூலின் ஆசிரியர் மிகத் திறமையாகச் செயலாற்றியுள்ளார்.

(நன்றி : Frontline )
தமிழில் எஸ்.குமார்